இந்த ஸ்டைல் கூடவே பிறந்தது; வைரலாகும் ரஜினியின் அமெரிக்கா போட்டோஸ்

இந்த ஸ்டைல் கூடவே பிறந்தது; வைரலாகும் ரஜினியின் அமெரிக்கா போட்டோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth in USAரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன் 7-ம் தேதி ரிலீஸாகிறது.

தற்போது அவர் வழக்கமான உடல்பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். 2 வாரம் அவர் தங்குகிறார்.

இதனிடையில் அவர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கு ஹாயாக தனியாக சுற்றி வருகிறார்.

அங்கு அவர் ஒரு எஸ்கலேட்டரில் ஸ்டைலாக போஸ் கொடுத்தப்படி உள்ள ஒரு படம் வைரலாகி வருகிறது.

இதே போன்ற ஒரு போஸ் சிவாஜி படத்தில் ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்பும் ஒரு காட்சியில் இருக்கும். எனவே அதையும் இந்த போட்டோவும் வைத்து… தலைவருக்கு ஸ்டைல் கூடவே பிறந்தது என ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் கூறி வருகின்றனர்.

மேலும் அங்குள்ள மெட்ரோ ரயிலில் ரஜினி பயணித்த புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரன்ட்டாகி உள்ளது.

மத்திய அரசின் அநீதியை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்… கமல் கண்டனம்

மத்திய அரசின் அநீதியை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்… கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்திய மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது தமிழக அரசு.

இந்நிலையில், காவிரி வழக்கில் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் போதவில்லை, மேலும் இரண்டு வாரம் காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.

இதற்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அவர் தன் டுவிட்டரில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு. “தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்” என பதிவிட்டிருக்கிறார்.

பாலியல் கொடுமைகளை தடுக்க சொந்த கையில் சொர்க்கம்; இருட்டு அறையில் முரட்டு குத்து டைரக்டர் ஐடியா

பாலியல் கொடுமைகளை தடுக்க சொந்த கையில் சொர்க்கம்; இருட்டு அறையில் முரட்டு குத்து டைரக்டர் ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IAMK director santhosh p jeya kumar‘ஹரஹர மஹாதேவகி’ படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி இருக்கும் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

இதில் கவுதம் கார்த்திக் நாயகனாகவும், வைபவி சாண்டில்யா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இப்படம் மே 4ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் பேசும்போது, ‘இப்படம் முழுக்க முழுக்க அடல்ட் படம். ஏ சான்றிதழ் பெற்று முற்றிலும் இளைஞர்களுக்காக உருவாக்கி இருக்கிறேன்.

இப்படத்தின் கதையை உருவாக்கிய பிறகு, கவுதம் கார்த்திக்கிடம் சொன்னேன். ஒரு கட்டத்தில் அவரிடம் என்ன சொன்னேன் என்றே எனக்கு தெரியவில்லை.

அவருக்கும் என்ன கேட்டார் என்றே தெரியவில்லை. அப்படியே சூட்டிங் போய் படத்தை எடுத்து முடித்து விட்டோம்’ என்றார்.

இந்த மாதிரி படங்களில் கவுதம் கார்த்திக் நடித்தால் அவருடைய இமேஜ் பாதிக்காதா என்று இயக்குனரிடம் கேட்டதற்கு, கவுதம் கார்த்திக்கு இது போன்ற படங்கள் வருவதில்லை. வித்தியாசமான கதையம்சம் படங்கள்தான் அவரைத் தேடி வருகிறது’ என்றார்.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்து வரும் நிலையில் இதுபோன்ற படத்தை எடுத்தால் அதை அதிகப் படுத்துவதுபோல் இருக்காதா என்று கேட்டதற்கு, இந்தப் படத்தில் சொந்த கையில் சொர்க்கம் காணுங்கள், அதாவது தன் கையே தனக்கு உதவி என்ற மெசேஜை சொல்லி இருக்கிறோம்’ என்றார்.

மீண்டும் மன்சூரலிகான் உடன் இணைந்த கே.ஆர்.விஜயா

மீண்டும் மன்சூரலிகான் உடன் இணைந்த கே.ஆர்.விஜயா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mansoor Alikhan again teams up with KR Vijaya for Kadamaan Paaraiதனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார் மன்சூரலிகான்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார்.

மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் மன்சூரலிகானிடம் கேட்டோம்…

இந்த படத்தில் ஒரு கண்ணியமான அம்மா வேடம் ஒன்று இருந்தது அந்த வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த போது, கே.ஆர்.விஜயா நினைவுக்கு வந்தார்.

ஏற்கனவே நான் தயாரித்த வாழ்க ஜனநாயகம் படத்தின் போது நான் வளந்து வரும் நடிகன் நான் கேட்ட உடனே கே.ஆர்.விஜயா எனக்கு நடித்துக் கொடுத்தார்.

இப்போதும் கடமான் பாறை படத்திலும் திருப்புமுனை கதாபாத்திரத்தில் கண்ணியமான எளிமையான அம்மாவாக நடித்துக் கொடுத்தார். பெரிய நடிகை என்ற எந்த ஒரு கர்வமும் இல்லாமல் அப்போது போல இப்போதும் இருக்கிறார்.” என்றார்.

இந்த படத்தில் மன்சூரலிகான் ஜோடியாக ருக்க்ஷா என்ற கேரள பெண் மிரட்டலான கேரக்டரில் நடித்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

ஒளிப்பதிவு – மகேஷ்.T / இசை ரவிவர்மா பாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான்
ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ்,
தயாரிப்பு நிர்வாகம் J.அன்வர் ஆக்கம், இயக்கம் மன்சூரலிகான்.

Mansoor Alikhan again teams up with KR Vijaya for Kadamaan Paarai

சிவகார்த்திகேயன் சொன்ன அந்த வார்த்தையை இழந்து நிற்கும் மைம் கோபி

சிவகார்த்திகேயன் சொன்ன அந்த வார்த்தையை இழந்து நிற்கும் மைம் கோபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Mime Gopi missed out Seyal movie chanceவேலைக்காரன் படத்தில் உலகின் தலை சிறந்த சொல் செயல் என அடிக்கடி சொல்வார் சிவகார்த்திகேயன்.

தற்போது அந்த செயல் என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது. அந்த படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவற விட்டதை எண்ணி வருந்தி நிற்கிறார் நடிகர் மைம் கோபி.

அது பற்றிய செய்தி பின் வருமாறு…

பிரசன்னா நடிப்பில் மாரிமுத்து இயக்கத்தில் உருவான “கண்ணும் கண்ணும்“ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானேன்.

அதை தொடர்ந்து மெட்ராஸ், மாரி, கபாலி, மாயா, கெத்து, பைரவா, உறியடி, கதகளி, விஜயகாந்த் மகன் நடித்த மதுரைவீரன் போன்ற படங்களில் நடித்திருக்கிறேன்.

வளர்ந்து வரும் நடிகனான எனக்கு எனது வாழ்கையில் இழந்த மிகபெரிய இழப்பாக நினைப்பது “செயல்“ படத்தில் நடிக்க முடியாமல் போனது தான்.

செயல் படத்தில் தண்டபாணி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்னிடம் பேசினார்கள்.

அருமையான வேடம் அது அனால் அவர்கள் சொன்ன தேதியில் நான் வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன் அதனால் நடிக்க முடியாமல் போனது அதற்காக அவர்களிடம் வருத்தம் தெரிவித்தேன்.

படம் ரெடியாகி ரிலீசுக்கு தயாராக உள்ளதை தெரிந்து கொண்டு நான் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடமும், இயக்குனரிடமும் கேட்டேன். போய் படம் பார்த்தேன்..நான் தவற விட்ட அந்த தண்டபாணி கேரக்டர் மிக மிக அருமையான கேரக்டர்.

நான் நடிக்க முடியாமல் போன அந்த கேரக்டரில் சந்திரன் என்பவர் நடித்திருந்தார். அவரும் சிறப்பாக நடித்திருந்தார் இருந்தாலும் நான் தவறவிட்ட மிகபெரிய வாய்ப்பு இது.

எல்லா படத்திலும் ஹீரோவுக்குதான் அறிமுகம் பில்டப்பாக இருக்கும் ஆனால் இந்த படத்தில் மாறுபட்டு வில்லன்னுக்குதான் பில்டப் அதிகமாக இருந்தது.

அதனால் இனி எந்த வாய்ப்பும் என் கைநழுவி போகாமல் கவனமாக பார்த்துக் கொள்வேன்” என்றார் மைம் கோபி.

Actor Mime Gopi missed out Seyal movie chance

sivakarthieyan seyal

அடுத்த வாரம் இருட்டு அறையில் முரட்டு குத்து பாக்க ரெடியா.?

அடுத்த வாரம் இருட்டு அறையில் முரட்டு குத்து பாக்க ரெடியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Adult Horror movie Iruttu Araiyil Murattu Kuththu release on 4th May 2018‘ஹரஹர மஹாதேவகி’ படம் எந்த மாதிரியான படம் என்பது தங்களுக்னு நினைவிருக்கலாம்.

அந்த படம் வெற்றியை தொடர்ந்து டைரக்டர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் நாயகன், நாயகியாக கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா நடித்துள்ளனர்.

அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இதில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தை மே 4ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

என்ன ரசிகர்களே இருட்டு அறையில் முரட்டு குத்து பார்க்க தயாராக இருக்கீங்களா?

ஹரஹர மஹாதேவகி படம் பிடிக்கலேன்னா இந்த படமும் நிச்சயம் பிடிக்காது என கவுதம் கார்த்திக் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Adult Horror movie Iruttu Araiyil Murattu Kuththu release on 4th May 2018

More Articles
Follows