‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு தன் ரசிகரின் இயக்கத்தில் ரஜினி.?; அவரு செம தெளிவாத்தான்யா இருக்காரு…

‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு தன் ரசிகரின் இயக்கத்தில் ரஜினி.?; அவரு செம தெளிவாத்தான்யா இருக்காரு…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthஅரசியலுக்கு வருவது உறுதி என தெரிவித்து 3 ஆண்டுகளில் (2018-2020) தமிழகத்தை பரபரப்பாக்கினார் ரஜினிகாந்த்.

திடீரென சினிமா சூட்டிங் போவார். பின்னர் சில தினங்களில் அரசியல் பேசுவார்.

இப்படியாக 3 ஆண்டுகளில் ரஜினியை சுற்றியே சினிமா & அரசியல் இருந்தது.

ரஜினி ரசிகர்களும் தங்கள் பங்குக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பூத் கமிட்டி வேலைகளில் ஈடுப்பட்டனர்.

ஆனால் 2020 டிசம்பர் 29ல் தன் உடல்நிலை மற்றும் கொரோனாவை காரணம் காட்டி “இப்போதைக்கு அரசியலுக்கு வரப் போவதில்லை” என்றார்.

ஆனாலும் ரஜினி ரசிகர்களின் மனக்காயம் ஆறவில்லை. ரஜினி போட்டியிடாத தேர்தலில் நாங்கள் ஓட்டு போட மாட்டோம் என சிலர் பேசினர்.

ஓட்டுன்னு போட்டி அது ரஜினிக்கு மட்டும்தான் என சொல்லி திரிந்தனர்.

இதன்பின்னர் கொரோனா & தேர்தல் அரசியல் பரபரப்புக்கிடையிலும் ‘அண்ணாத்த’ சூட்டிங் கிளம்பினார் ரஜினிகாந்த்.

கொரோனாவை காரணம் காட்டி அரசியலுக்கு வராத ரஜினி சினிமா சூட்டிங்கில் மட்டும் கலந்து கொள்வது என்ன நியாயம்.? என ரஜினி ரசிகர்களே நொந்து கொண்டனர்.

நேற்று மே 2 சட்டமன்ற தேர்தல் முடிவும் வந்துவிட்டது. திமுக ஆட்சியமைக்க ஸ்டாலின் முதல்வராகவுள்ளார். ரஜினியும் வாழ்த்து சொல்லிவிட்டார்.

இந்த நிலையில் இன்னும் சில தினங்களில் ‘அண்ணாத்த’ சூட்டிங் முடிந்து ரஜினி வீடு திரும்புகிறார்.

தற்போது கொரோனா இரண்டாவது அலை முடிந்ததும் மீண்டும் புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளராம் ரஜினி.

இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது.

கார்த்திக் சுப்பராஜ் மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகிய இருவரிடமும் ரஜினி கதை கேட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே ஆகஸ்டில் ரஜினி தன் அடுத்த படத்தை அறிவிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி தன் ட்விட்டரில்…

“என் அடுத்த பட குறித்த தகவல் உண்மையில்லை” என தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகிய இருவரும் ரஜினி வெறியர்கள்.

இதில் ஒருவர் ரஜினியை இயக்கவில்லை என தெரிவித்துவிட்டார். அடுத்தவர் என்ன சொல்வாரோ..??

Rajinikanth to act in his fan direction

கமலை தோற்கடிச்சதால முட்டாள் கோவையன்ஸ்..; திமுக வை ஜெயிக்க வைச்சதால முட்டாள் சென்னையன்ஸ்..; தமிழர்கள் புது சண்டை

கமலை தோற்கடிச்சதால முட்டாள் கோவையன்ஸ்..; திமுக வை ஜெயிக்க வைச்சதால முட்டாள் சென்னையன்ஸ்..; தமிழர்கள் புது சண்டை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal stalinகோவை தெற்கு தொகுதியில் பாஜக வானதி சீனிவாசனிடம் வெறும் 1600 வாக்குகளில் தோற்றார் மநீம தலைவர் கமல்ஹாசன்.

கமலை தோற்கடித்து பாஜக-வை வெற்றி பெற செய்துவிட்டதால் கோவை மக்களை கமல் ரசிகர்களும் ஏராளமான தமிழர்களும் திட்டி தீர்த்தனர்.

மேலும் #முட்டாள்_கோவையன்ஸ் என மீம்ஸ் போட்டு ட.விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.

இதனால் கடுப்பாகி போன கோவை மக்கள் தங்கள் பங்குக்கு #முட்டாள்_சென்னையன்ஸ் ட்ரெண்ட் செய்தனர்.

இவர்களின் பதிவில் திமுக வை ஜெயிச்ச வச்சி தமிழக மக்கள் தலையில் மண்ணை வாரி போட்டு விட்டீர்கள் என மீம்ஸ் போட்டனர்.

இதனால் நேற்று இரவு முதல் தற்போது வரை ட்விட்டரில் இந்த சண்டை ஓயவில்லை.

Chennai and Kovai people on twitter fight

தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை..; வாழ்த்திய OPS & EPS-க்கு முக ஸ்டாலின் நன்றி

தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை..; வாழ்த்திய OPS & EPS-க்கு முக ஸ்டாலின் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mk stalinதமிழகத்தில் திமுக 6வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.

முக ஸ்டாலின் முதல்வர் ஆகிறார். மே 7ல் அவரது பதவியேற்பு விழா மிக எளிமையாக நடக்கிறது.

இந்த நிலையில், திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன் ட்விட்டரில்…

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் @mkstalin

ஓ பன்னீர் செல்வம் அவர்கள் தன் ட்விட்டரில்…

தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் மாண்புமிகு திரு.ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் இருவருக்கும் தன் நன்றியை தெரிவித்துள்ளார் முக ஸ்டாலின்.

அவர் தன் ட்விட்டரில்..

மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை!

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!.

மாண்புமிகு @OfficeOfOPS அவர்கள் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அவருக்கு எனது இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக கழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அனைவர் ஒத்துழைப்பும் தேவை எனக் கேட்டுக் கொள்கிறேன்.

MK Stalin thanked EPS & OPS for their wishes

Operation Success Patient Died.; மேற்கு வங்கத்தில் 3வது முறை மம்தா பானர்ஜி ஆட்சி..; தோல்வியடைந்த மம்தா ஆட்சியமைக்க உரிமை கோரல்

Operation Success Patient Died.; மேற்கு வங்கத்தில் 3வது முறை மம்தா பானர்ஜி ஆட்சி..; தோல்வியடைந்த மம்தா ஆட்சியமைக்க உரிமை கோரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mamata banerjeeமேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்தது.

மேற்கு வங்க கருத்துக் கணிப்புகளில் பாஜக-வே வெல்லும். ஆட்சி அமைக்கும் என்றனர்.

இதனையடுத்து பிரபலமானஅரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோர் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது,.

மேற்குவங்கத்தில் மீண்டும் மம்தா ஆட்சி தான். இது நடக்காது என்றால் இந்த தேர்தல் பணியில் இருந்தே ஒதுங்கிவிடுகிறேன் என்று சவால் விடுத்தார் பிகே.

(திமுகட்சிக்கு இவர் தான் 350 கோடி ரூபாய்க்கு தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

தன் மீது ஒருவர் தாக்குதல் நடத்திய போதிலும், சக்கர நாற்காலில் அமர்ந்தவாறு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் மம்தா பானர்ஜி.

இந்த நிலையில் கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி வெற்றி பெற்றுள்ளார் மம்தா பானர்ஜி.

(மேற்கு வங்கத்தின் பெண் புலி என வர்ணிக்கப்படுபவர் மம்தா பானர்ஜி என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.)

இவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

210க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

எனவே தொடர்ந்து 3வது முறையாக மேற்கு வங்கத்தின் முதல்வராக ஆக இருக்கிறார் மம்தா.

ஆனாலும் Operation Success Patient Died என்பது போல தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியை தழுவினார் மம்தா பானர்ஜி.

ஒரு முதல்வருக்கே இந்த நிலைமையா ? என நீங்கள் எண்ணலாம்.

இதற்கு முக்கிய காரணம்… மம்தாவுக்கு வலதுகரமாக இருந்த முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி என்பவர் சமீபத்தில் பாஜகவுக்கு பக்கபலமாக மாறினார்.

எனவே நந்திகிராம் தொகுதியில் இவர்கள் இருவரும் போட்டியிட்டனர்.

அதன்படி சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றுள்ளார். சுமார் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியை வீழ்த்தியிருக்கிறார்.

இதனிடையில் “நந்திகிராமில் தோல்வியை ஒப்பு கொள்கிறேன். இந்திய தேர்தல் ஆணையம் என்னை வெற்றியாளராக அறிவித்து, பின்னர் பின்வாங்கியது. இந்த விஷயத்தை நான் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வேன்” என்றார் மம்தா.

மறு வாக்கு எண்ணிக்கை கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டதால் மம்தா நீதிமன்றம் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனாலும் தற்சமயம் முதல்வராகிவிட்டு பின்னர் 6 மாதங்களுக்குள் தன் கட்சி எம்எல்ஏ ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து விட்டு அந்த தொகுதியில் அவர் போட்டியிடலாம். அந்த இடைத்தேர்தலில் எம்எல்ஏ ஆகியே தீர வேண்டும்.

இந்நிலையில் இன்று மே 3 மாலை 7 மணிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்தித்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார்.

Mamta Banerjee Has Lost In Nandigram But Can Still Become Chief Minister

கூட்டணியே இல்லாமல் சாதித்த சீமான்.: பேச்சாடா பேசுனீங்க.; நாம் தமிழரை நசுக்கிய தமிழர்கள்.; வாய்ப்பில்ல ராஜா-ன்னு சொன்னாரே அது அவருக்கா?

கூட்டணியே இல்லாமல் சாதித்த சீமான்.: பேச்சாடா பேசுனீங்க.; நாம் தமிழரை நசுக்கிய தமிழர்கள்.; வாய்ப்பில்ல ராஜா-ன்னு சொன்னாரே அது அவருக்கா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seeman (1)தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ல் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்டார்.

எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் 117 ஆண் + 117 பெண் வேட்பாளர்களை தேர்தலில் நிற்க வைத்து அவர்களுக்கு ஆதரவாக 234 தொகுதிகளிலும் அனல் பறக்க பிரச்சாரங்களை செய்தார்.

வேட்பாளர்கள் தேர்விலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கியது மற்ற கட்சியினரை ஆச்சர்யப்படுத்தியது.

சீமானின் பேசிய வீடியோக்கள் தேர்தல் சமயத்தில் வைராலனது. இதனால் நாம் தமிழர் தம்பிகளும் சில இடங்களில் ஓவராகவே பேசி திரிந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கே.பி.சங்கரிடம் 39588 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ளார் சீமான்.

நாம் தமிழரில் யார் வெற்றி பெறவில்லை என்றாலும் சீமான் சிக்ஸர் அடிப்பார் என மக்களே எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் எல்லாம் முடிந்துவிட்டது.

வாய்ப்பில்ல ராஜா… வாய்ப்பில்ல ராஜா-ன்னு சொன்னாரே அது அவருக்காக அவரே சொன்னாரா? எனவும் சிலர் கிண்டலடித்தனர்.

நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் முன்னிலையே பெறவில்லை.

ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்று திமுக & அதிமுகவை அடுத்து 3வது இடத்தில் உள்ளது.

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பெற்றுள்ளது எனலாம்.

இந்த வாக்கு வங்கி வளர்ச்சி அடுத்த தேர்தலுக்கு நாம் தமிழருக்கு உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மேலும் பெரிய பெரிய கட்சிகளே கூட்டணியை நம்பிய போதும் தன் கட்சியை மட்டுமே நம்பி தேர்தல் களமிறங்கிய சீமானை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சீமான்..

Seeman wins no seats but his party makes a mark

புதுச்சேரி 30 MLA லிஸ்ட்.: முன்னாள் முதல்வர் ரங்கசாமி தோல்வி.; 6 சுயேட்சைகள் வெற்றி..; CM சீட்டுக்கு ஆசைப்படும் பாஜக.!

புதுச்சேரி 30 MLA லிஸ்ட்.: முன்னாள் முதல்வர் ரங்கசாமி தோல்வி.; 6 சுயேட்சைகள் வெற்றி..; CM சீட்டுக்கு ஆசைப்படும் பாஜக.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pondy election results 2021புதுச்சேரி மாநிலம் (காரைக்கால் மாஹி ஏனாம்) 30 தொகுதிகளைக் கொண்டது.

இம்மாநில சட்டசபைத் தேர்தலில்… காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

அதே போல என்.ஆர்.காங்கிரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

நேற்று மே 2 மூன்று கட்டங்களாக நடைபெற்ற புதுச்சேரி வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது.

இதில்… 15 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான தி.மு.க 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இந்தக் கூட்டணியில் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்ட வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்வியை தழுவின.

எதிரணியில் 16 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

9 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க 6 இடங்களிலும் வெற்றிபெற்றது.

5 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க அனைத்திலும் தோல்வியைத் தழுவியது.

என்ஆர். காங். தலைவரும் முன்னாள் முதல்வருமான ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் 12,978 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் ரங்கசாமி.

ஏனாம் தொகுதியில் 646 வாக்குகள் வித்தியாசத்தில் ரங்கசாமியை வீழ்த்தியிருக்கிறார் சுயேட்சை வேட்பாளரான கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்.

இந்த நிலையில் ரங்கசாமி முதல்வர் ஆவார் என அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் முதல்வர் பதவிக்கு பிஜேபி ஆசைப்படுகிறதாம்..

வெற்றி பெற்ற MLAக்கள் முதல்வரை முடிவு செய்வார்கள் என பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் கரானா தெரிவித்துள்ளார்.

இதனால் யார் முதல்வர்? என்ற குழப்பம் புதுச்சேரி அரசியலில் நீடிக்கிறது.

வெற்றி பெற்றவர்கள் விவரம் இதோ…

காங்கிரஸ்:

1. வைத்தியநாதன் – லாஸ்பேட்

2. ரமேஷ் பரம்பத் – மாஹே

திமுக:

1. அனிபால் கென்னடி – உப்பளம்

2. சிவா – வில்லியனூர்

3. நாஜிம் – காரைக்கால் தெற்கு

4. சம்பத் – முதலியார் பேட்டை

5. நாக தியாகராஜன் – நிரவி பட்டினம்.

6.செந்தில் – பாகூர்.

சுயேட்சை வெற்றியாளர்கள்:

1. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அஷோக் – ஏனாம்

2. நேரு – உருளையன்பேட்டை

3. பிரகாஷ் குமார் – முத்தியால்பேட்டை

4. சிவா – திருநள்ளாறு

5. அங்காளன் – திருபுவனை

6. சிவசங்கரன் – உழவர்கரை.

என்ஆர். காங்கிரஸ்..

1. தேனீ.ஜெயக்குமார் – மங்கலம்

2. கே.எஸ்.பி. ரமேஷ் – கதிர்காமம்

3. லட்சுமிகாந்தன் – ஏம்பலம்

4. ராஜவேலு – நெட்டப்பாக்கம்

5. தட்சிணாமூர்த்தி (எ) பாஸ்கர் – அரியாங்குப்பம்

6. ஏ.கே.டிஆறுமுகம் – இந்திரா நகர்

7. ரங்கசாமி – தட்டாஞ்சாவடி

8. திருமுருகன் – காரைக்கால் வடக்கு

9. சந்திர பிரியங்கா – நெடுங்காடு

10. லட்சுமி நாராயணன் – ராஜ்பவன்

பாஜக:

1. ஜான்குமார் – காமராஜ் நகர்

2. ரிச்சர்ட் ஜான்குமார் – நெல்லி தோப்பு

3. நமச்சிவாயம் – மண்ணாடிப்பட்டு

4. கல்யாண சுந்தரம் – காலாப்பட்டு

5. ஏம்பலம் செல்வம் – மணவெளி

6. சாய் ஜெ.சரவணன் – ஊசுடு

Puducherry Election Result 2021

More Articles
Follows