தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அரசியலுக்கு வருவது உறுதி என தெரிவித்து 3 ஆண்டுகளில் (2018-2020) தமிழகத்தை பரபரப்பாக்கினார் ரஜினிகாந்த்.
திடீரென சினிமா சூட்டிங் போவார். பின்னர் சில தினங்களில் அரசியல் பேசுவார்.
இப்படியாக 3 ஆண்டுகளில் ரஜினியை சுற்றியே சினிமா & அரசியல் இருந்தது.
ரஜினி ரசிகர்களும் தங்கள் பங்குக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பூத் கமிட்டி வேலைகளில் ஈடுப்பட்டனர்.
ஆனால் 2020 டிசம்பர் 29ல் தன் உடல்நிலை மற்றும் கொரோனாவை காரணம் காட்டி “இப்போதைக்கு அரசியலுக்கு வரப் போவதில்லை” என்றார்.
ஆனாலும் ரஜினி ரசிகர்களின் மனக்காயம் ஆறவில்லை. ரஜினி போட்டியிடாத தேர்தலில் நாங்கள் ஓட்டு போட மாட்டோம் என சிலர் பேசினர்.
ஓட்டுன்னு போட்டி அது ரஜினிக்கு மட்டும்தான் என சொல்லி திரிந்தனர்.
இதன்பின்னர் கொரோனா & தேர்தல் அரசியல் பரபரப்புக்கிடையிலும் ‘அண்ணாத்த’ சூட்டிங் கிளம்பினார் ரஜினிகாந்த்.
கொரோனாவை காரணம் காட்டி அரசியலுக்கு வராத ரஜினி சினிமா சூட்டிங்கில் மட்டும் கலந்து கொள்வது என்ன நியாயம்.? என ரஜினி ரசிகர்களே நொந்து கொண்டனர்.
நேற்று மே 2 சட்டமன்ற தேர்தல் முடிவும் வந்துவிட்டது. திமுக ஆட்சியமைக்க ஸ்டாலின் முதல்வராகவுள்ளார். ரஜினியும் வாழ்த்து சொல்லிவிட்டார்.
இந்த நிலையில் இன்னும் சில தினங்களில் ‘அண்ணாத்த’ சூட்டிங் முடிந்து ரஜினி வீடு திரும்புகிறார்.
தற்போது கொரோனா இரண்டாவது அலை முடிந்ததும் மீண்டும் புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளராம் ரஜினி.
இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது.
கார்த்திக் சுப்பராஜ் மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகிய இருவரிடமும் ரஜினி கதை கேட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே ஆகஸ்டில் ரஜினி தன் அடுத்த படத்தை அறிவிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி தன் ட்விட்டரில்…
“என் அடுத்த பட குறித்த தகவல் உண்மையில்லை” என தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகிய இருவரும் ரஜினி வெறியர்கள்.
இதில் ஒருவர் ரஜினியை இயக்கவில்லை என தெரிவித்துவிட்டார். அடுத்தவர் என்ன சொல்வாரோ..??
Rajinikanth to act in his fan direction