தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2005 இல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி’.
பி வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா ஜோதிகா பிரபு நாசர் வடிவேலு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
வித்யாசாகர் இசையமைத்திருந்த இந்த படத்தை சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பில் பிரபு தயாரித்திருந்தார்.
பிரபுவின் ஒரு பேட்டியில்..
“சந்திரமுகி சமயத்தில் நடந்த ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
சந்திரமுகி படம் எங்கள் நிறுவனத்திற்கு பெரும் வெற்றியை கொடுத்தது. ஒரே திரையரங்கில் 816 நாட்கள் ஓடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
நானும் ரஜினியும் சூட்டிங்க்கு ஒன்றாக தான் செல்வோம். நாங்கள் செல்வதற்கு முன்பு மேக்கப் போட்டு ரெடியாக இருப்பார் ஜோதிகா.
எனவே ஜோதிகாவிடம் நாங்கள் லேட்டாக வந்துட்டோம் எங்களை மன்னிச்சிடுங்க அப்படி ரஜினி சொல்லிடுவார்.
நானும் சாரீ ஜோ.. நாங்க லேட்டா வந்தோம் என்போம்” இப்படியாக அந்த சம்பவத்தை ஜாலியாக குறிப்பிட்டுள்ளார் பிரபு.