தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலி படத்தையடுத்து ஷங்கர் இயக்கும் 2.ஓ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
இதனையடுத்து மீண்டும் கபாலி இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இப்படத்தை ரஜினியின் மருமகன் தனுஷே தயாரிக்கிறார்.
இப்படத்தை கபாலி படம் போல் இல்லாமல் பாட்ஷா படம் போல் அதிரடியாக உருவாக்கவிருக்கிறாராம் ரஞ்சித்.
அதாவது ரஜினியின் கேரியரில் பாட்ஷாவை மிஞ்ச ஒரு படம் வரவில்லை என ரசிகர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைக்க போகிறார் ரஞ்சித் என சொல்லப்படுகிறது.
கடந்த வாரம் இப்படத்தின் லொக்கேஷன் காண மும்பை சென்று வந்தாராம் ரஞ்சித்.
எனவே, பாட்ஷாவை போல் இதுவும் மும்பை பின்னணியில் எடுக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.