தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏப்ரல் 28ஆம் தேதி ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் உலகமெங்கும் வெளியாக உள்ளது.
இதனை முன்னிட்டு படக்குழுவினர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து படத்தை பிரமோஷன் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஏப்ரல் 17ஆம் தேதி சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது நடிகர் கார்த்தி பேசும்போது…
“இந்த PS2 படத்தை பத்திரிக்கையாளராகிய நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள்.
தினமும் படத்தைப் பற்றியும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாறு பற்றியும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். எனவேதான் இந்த படம் மக்களை சென்றடைந்து வருகிறது.
முதல் பாகம் வெற்றி பெற முக்கிய காரணம் நீங்கள்தான். தலைவர் (ரஜினி) ஸ்டைலில் சொன்னால் நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி.. நீங்கள் ஒருவர் எழுதினால் அது ஒரு லட்சம் (மக்களை சென்றடையும்) தடவை சொன்ன மாதிரி” என பேசினார் கார்த்தி.
Karthi spoke rajini dialogue at PS2 event