தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி, ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ என்ற பெயரில் சென்னையில் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை நடிகரும்மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 28-இல் திறந்து வைத்தார்.
பின்னர் அந்தப் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு முதல்வர் மு க ஸ்டாலினை வாழ்த்தி பேசியிருந்தார்.
இந்த கண்காட்சியை மாணவா்கள், பொதுமக்கள், திமுகவினா் என ஆயிரக்கணக்கானோா் பாா்வையிட்டு வருகின்றனா்.
நாளை மாா்ச் 12-ஆம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) இந்த புகைப்படக் கண்காட்சி நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் இன்று சனிக்கிழமை பார்வையிட்டார்.
அப்போது இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது.., அமைச்சர் சேகர்பாபு ரொம்ப விசுவாசமானவர், அன்பானவர். அதே சமயம் அமைச்சர் சேகர்பாபுவுக்கு இன்னொரு முகம் இருக்கு, பாட்ஷா மாதிரி.”
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
Sekar babu has another face like baasha says rajinikanth