‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் பிரசாந்த்..; ஜோதிகா பட இயக்குனருடன் இணைகிறார்

‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் பிரசாந்த்..; ஜோதிகா பட இயக்குனருடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jj fredrick‘அந்தாதூன்’ . அனைத்து மொழிகளிலும் ஏற்றவாறு கலகலப்புடன் கூடிய த்ரில்லராக அமைத்திருப்பார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது மட்டுமன்றி சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை என தேசிய விருதுகளையும் வென்றது. இதில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கினை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் தியாகராஜன். ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டு பணிகளைத் தொடங்கினார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். இதற்காக உடலிழைத்து முழுமையாக மாறியுள்ளார் பிரசாந்த். இந்தப் படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் மூலம் முத்திரை பதித்த ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். முன்னதாக இந்தப் படம் மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது.

இதன் பணிகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தபு கதாபாத்திரத்துக்கு மிகப்பிரபலமான நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் – நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைத்தும் ஒப்பந்தமாக முடிவானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்கள். இந்தப் படம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார் தியாகராஜன். டிசம்பர் முதல் வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காக படப்பிடிப்பு இடங்கள் தேர்வு, நடிகர்கள் – தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் என அனைத்து பணிகளையும் மும்முரமாக கவனித்து வருகிறார் ஜே.ஜே.பிரட்ரிக்.

இந்திய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘அந்தாதூன்’ இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கும் அதே போன்றதொரு வரவேற்பைப் பெற வேண்டும் என்று அனைத்து வழிகளிலும் படக்குழு பணியாற்றி வருகிறது. ரசிகர்களுக்கு காமெடியான ஒரு த்ரில்லர் படம் 2021-ம் ஆண்டு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

Ponmagal Vandhal fame JJ Fredrick to direct ‘Andhadhun’ Tamil remake

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் காலமானார்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தாயார் தவசாயி அம்மாள், சேலம் மருத்துவமனை,

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக சேலம் தனியார் (லண்டன் ஆர்த்தோ) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அக்டோபர் 13 நள்ளிரவு 12.15 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 93.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்று இருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அப்போது தனது தாயாரின் மறைவு செய்தி கேட்டு சாலை மார்க்கமாக சேலம் விரைந்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்திற்கு தவசாயி அம்மாளின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், கோவை ஐஜி பெரியய்யா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

TN Chief Minister Edappadi Palanisamy mother passed away

சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க த்ரிஷா ஐடியா

சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க த்ரிஷா ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

trishaயுனிசெஃபின் தூதுவர் நடிகைதிரிஷா, சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் குழந்தைகளுடன் ஆன்லைன் மூலமாக கலந்துரையாடினார்.

அப்போது அவர் செய்திகளில் வரும் பொள்ளாச்சி சம்பவம் போன்ற நிகழ்வுகள் மிகுந்த மன வேதனை அளிப்பதாக குழந்தைகள் மத்தியில் பேசினார்.

இவற்றையெல்லாம் மாற்ற குழந்தைகளையும், இளைஞர்களையும் வழிநடத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

இதன் மூலம் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றும் திரிஷா பேசினார்.

Actress Trisha’s ideas to develop better society

விஜய ராஜே சிந்தியாவின் நினைவாக 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட பிரதமர்

விஜய ராஜே சிந்தியாவின் நினைவாக 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட பிரதமர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PM Modiஜனசங்கத்தை நிறுவிய தலைவர்களில் முக்கியமானவர் விஜயராஜே சிந்தியா.

இவர் 1919ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பிறந்தார்.

இன்று அவரின் நூற்றாண்டு நாள்.

அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் வியயராஜே உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை காணொளி வாயிலாக வெளியிட்டார் பிரதமர் மோடி.

இந்த விழாவில் விஜயராஜே குடும்பத்தினர் காணொளி மூலம் பங்கேற்றனர்.

PM Narendra Modi Releases Special 100 Rs Coin To Honour Vijaya Raje Scindia

‘எங்கிருந்தாலும் வாழ்க’.. பாஜக-வில் குஷ்பூ இணைந்தது பற்றிய கேள்விக்கு அமைச்சர் பதில்

‘எங்கிருந்தாலும் வாழ்க’.. பாஜக-வில் குஷ்பூ இணைந்தது பற்றிய கேள்விக்கு அமைச்சர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Minister JeyaKumarஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க செல்லும் முன் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசியதாவது…

அதிமுக கூட்டணியில் பா.ஜ.க இருப்பதால் எங்களுடைய முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியை பாஜக ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்

மாநிலத்தை பொறுத்தவரை மத்திய அரசு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பை கோரி இன்றை கூட்டத்தில் வலியுறுத்த உள்ளோம்.

மேலும் காங்கிரசில் இருந்து குஷ்பு விலகியது குறித்த கேள்விக்கு குஷ்பு ‘எங்கிருந்தாலும் வாழ்க…’ என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

TN minister Jeyakumar reaction on Khushboo joining BJP

பாலாவின் தம்பி சந்திரமெளலி தயாரிப்பில் டைரக்டர் முருகானந்தம் ஹீரோவாகும் ‘கபாலி டாக்கீஸ்’

பாலாவின் தம்பி சந்திரமெளலி தயாரிப்பில் டைரக்டர் முருகானந்தம் ஹீரோவாகும் ‘கபாலி டாக்கீஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali Talkies‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “கபாலி ” .

இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படத்தின் பெயர் ” கபாலி டாக்கீஸ் “.

இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். இவர், விஷ்ணு விஷால் , கேத்தரின் தெரேசா, சூரி இவர்களுடன் கவுரவ வேடத்தில் விஜய்சேதுபதி நடித்து வெளிவந்த ” கதாநாயகன்” படத்தின் இயக்குனராவார்.

ஏற்கனவே இவர் ” இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ” “மரகத நாணயம்” படங்களில் காமெடியில் நடித்து கலக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் கதாநாயகியாக மேக்னா ஹெலன் மற்றும் கே.பாக்யராஜ், ஜி.எம்.குமார், இமான் அண்ணாச்சி, சார்லி, மதன் பாப், டான்சர் டியாங்கனா, பி.எல்.தேனப்பன். வேலு பிரபாகரன், வர்ஷன், நவீன், ராஜ்குமார், சக்ரி ஷீலா, சாய்பிரியா இன்னும் பலர் நடித்துள்ளனர்.

ஜெயசீலன் – முனிகிருஷ்ணன் இருவரும் கலையையும், ராதிகா – சங்கர் இருவரும் நடன பயிற்சியையும், தவசி ராஜ் சண்டை பயிற்சியையும், சினேகன், மதுரகவி, தமிழ் இயலன், விஜயசாகர் நால்வரும் பாடல்களையும் எழுத, ராஜேஷ் கண்ணா படத்தொகுப்பையும் சபேஷ் – முரளி இரட்டையர் இசையையும் கவனிக்க, ஆர்.சுரேஷ்குமார் இணை தயாரிப்பில் மெளலி பிக்சர்ஸ் சார்பில் பி.சந்திரமெளலி தயாரித்துள்ளார்.

கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து ரவிசீனிவாசன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இவர்
ஜி.எம்.குமார், வேலு பிரபாகரன் உட்பட முன்னனி இயக்குனர்களிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ள ரவி சீனிவாசன் படத்தை பற்றி கூறுகையில்…

” .அண்ணன், அண்ணி, அவர்களின் மகள் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் முருகானந்தம். ஒரு கட்டத்தில் அண்ணன் இறந்து விடுகிறார்.

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு வலம் வந்த முருகானந்தத்திற்கு அண்ணனின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது.

அதிலிருந்து மீண்டு தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் தடம் பதித்து சாதிக்க நினைக்கிறான்.

பல தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொல்லி இயக்குனர் வாய்ப்பு கேட்டு அலைகிறான். கிடைக்கவில்லை. இந்த நிலையில் முருகானந்தம் தன் பால்ய நண்பனை சந்திக்கிறான்.

இவன் நிலை உணர்ந்து ‘ உனக்கு நானே வாய்ப்பு தருகிறேன் என்று கூறி முருகானந்தத்தை இயக்குனராக ஒப்பந்தம் செய்து நண்பனே படத்தை தயாரிக்கிறான். படம் முடிவடைந்தது.

எந்த நண்பன் இவனுக்காக படத்தை தயாரித்தானோ அவன் மூலமே முருகானந்தத்திற்கு பேரிடி விழுந்தது. அது என்ன? பல அதிர்ச்சிகளையும் , பேரிடர்களையும் சந்தித்து திரை உலக வாழ்க்கையிலும், நிஜ வாழ்க்கையிலும் முருகானந்தம் வென்றானா?” என்பதை வெகுஜனங்கள் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான பொழுது போக்கும் அம்சங்கள் நிறைந்த படமாக இயக்கி உள்ளேன்.

குறிப்பாக 1980ல் ஆரம்பிக்கும் கதை 2020 ல் முடியுமாறு திரைக்கதை அமைத்துள்ளேன். இந்தப் படம் முழுக்க முழுக்க சென்னையில் மந்தைவெளி மற்றும் மைலாப்பூர் பகுதிகளில் படமாக்கி உள்ளேன்.

அன்றைய சென்னை எப்படி இன்று உருமாறி உள்ளது என்பதனையும் அழகாக படம் பிடித்துள்ளேன். இதில் நிறைய சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் தான் காட்சிகள் அமைத்து இருக்கிறேன்.

சினிமாவை நேசித்து சுவாசிக்கும் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் சிறு வேடங்களில் நடித்துள்ள இயக்குனர் முருகானந்தத்தை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தி உள்ளேன்” என்றார்.

“விரைவில் வெளிக்கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தாகி விட்டது. மக்கள் தங்கள் கவலை மறந்து குடும்பத்தோடு ரசிக்கும் படமாக இருக்கும் ” என்கிறார் தயாரிப்பாளர் பி.சந்திரமெளலி.

Director Bala’s brother Chandramouli turns producer

More Articles
Follows