அழகிய லைலா.. மீண்டு வரும் அழகிய புயலாய்.; ரீ-என்ட்ரீயாகும் ரம்பா

அழகிய லைலா.. மீண்டு வரும் அழகிய புயலாய்.; ரீ-என்ட்ரீயாகும் ரம்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் குமார் என அத்தனை முன்னணி நடிகர்களுடன் கலக்கியவர் நட்சத்திர நடிகை ரம்பா.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் தன் நடிப்பாலும் தொடை அழகாலும் ரசிகர்களை கவர்ந்தவர் ரம்பா.

இவர் திருமணமாகி தற்போது கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார்.

அவரோடு வந்த சிம்ரன், லைலா, ஜோதிகா போன்ற நடிகைகள் இன்று பல முக்கிய படங்களில் நடித்து வருவதால் ரம்பாவுக்கும் நடிப்பின் மீதான ஆர்வம் மீண்டும் வந்துள்ளது.

ஏற்கனவே தெலுங்கு படத்தில் வாய்ப்புகள் வந்தாலும், தமிழில் மீண்டும் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறார்.

திரையுலகில் 20 வருடங்கள் 100 படங்களுக்குமேல் நடித்து திரையுலகின் நட்சத்திர நாயகியாக இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரம்பா. 90 கிட்ஸ்களின் உறக்கத்தை கெடுத்தவர், முன்னணி நடிகையாக கோலோச்சியவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றவுள்ளார்.

தனது 15 வயதிலேயே நடிகையாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா, 1993 ல் உழவன் படம் மூலம் தமிழ் சினிமவில் கால்பதித்தார். அடுத்த 20 வருடங்கள் இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக தென்னிந்திய முழுதும் நட்சத்திரமாக ஜொலித்தார்.

20 வருடங்களாக திரையுலகில் கோலோச்சிய இவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் திரையுலகில் தன் நடிப்பு பயணத்தை தொடரவுள்ளதாக தெரிவுத்துள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து நடிகை ரம்பா கூறுகையில்…

“திரையுலகில் வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கனவுக்கன்னி அடையாளமும் புகழும் எனக்கு கிடைத்தது. அதை நினைத்து எப்போதும் எனக்கு பெருமை தான். நான் நடிக்கும் காலத்தில் மிக ஜாலியாக சுட்டிப்பெண்ணாக இருந்தேன்.

திருமணத்திற்கு பிறகு கூட எல்லோரும் கேட்டார்கள் என டிவிக்களில் ஷோ செய்தேன், ஆனால் குழந்தைகள் என்னை மிஸ் செய்கிறார்கள் எனத் தெரிந்த போது, நடிப்பதை நிறுத்தி விட்டேன். இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன் என அழகான குடும்பம், ஒரு நடிகையாக நான் உணர்ந்ததே இல்லை, ஒரு நல்ல அம்மாவாக மனைவியாகவே இருந்தேன்.

இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். இப்போதும் ரசிகர்கள் என்னை ஞாபகமாக கேட்பதும் பாராட்டுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் அன்புதான் மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டியது.

சினிமாவை தொடர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கிறேன், இப்போது சினிமாவின் டிரெண்ட் மாறியிருக்கிறது. ஆனால் சினிமா என்றுமே மாறாது. இப்போதும் சினிமா நண்பர்கள் உடன் பல விசயங்கள் பேசிக்கொண்டு இருப்பேன், என் வயதுக்கேற்ற வித்தியாசமான கதாப்பாத்திரங்களில், நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். ரசிகர்கள் என்னை விரைவில் திரையில் பார்க்கலாம் என்றார்.

Actress Rambha re entry in Cinema like Simran and Jothika

‘லியோ’ வெற்றி விழாவுக்கு ஆதார் கார்டு அவசியம்.; கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ.?

‘லியோ’ வெற்றி விழாவுக்கு ஆதார் கார்டு அவசியம்.; கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை.

போலியான டிக்கெட் அதிகமாக விற்கப்பட்டதால் இந்த விழா ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ‘லியோ’ படம் உலக அளவில் 400+ கோடிக்கு மேல் வசூலித்துள்ளதால் இதன் வெற்றி விழாவை கொண்டாட படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் முடிவு செய்துள்ளார்.

அதன்படி நாளை நவம்பர் 1ம் தேதி மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ வெற்றி விழா நடைபெற உள்ளது.

ஏற்கனவே பல சர்ச்சைகளால் லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானதால் தற்போது கடும் நிபந்தனைகளை படக்குழுவும் காவல் துறையும் விதித்துள்ளது.

அதன்படி மொத்தம் 5000 + 500 நபர்களுக்கு மட்டுமே விழா அரங்கில் அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் என்ட்ரீ பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் கேட் எண் 6 வழியாக உள்ளே வர வேண்டும். 4 மணிக்கு மேல் தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் ரசிகர்கள் தொந்தரவு செய்யக்கூடாது. அரங்கிற்குள்ளே வண்டிகள் நிறுத்த போதுமான இட வசதி உள்ளது. வண்டிகளை வெளியே நிறுத்தினால் அந்த வண்டிகள் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் என்ட்ரி பாஸ் உடன் ஒவ்வொரு ரசிகரும் ஆதார் அடையாள அட்டை ஜெராக்ஸ் காப்பியை எடுத்து வர வேண்டும் என ரசிகர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்களுக்கும் திரையுலக பிரபலங்களுக்கும் போதுமான பாதுகாப்புகளை தயாரிப்பு நிறுவனம் செய்திருக்க வேண்டும் என பல்வேறு அறிக்கைகளை காவல்துறையும் விதித்துள்ளது.

எத்தனையோ இசை & சினிமா விழாக்கள் தமிழகத்திலும் இந்தியாவில் நடைபெற்று உள்ளது. ஆனால் ரசிகர்கள் ஆதார் கார்டுடன் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Aadhar card must for Leo success event entry

ரஜினிக்கு மெகா ஹிட் கொடுத்த இயக்குனரை தூக்கிய கமல்.; தனுஷுடன் கூட்டணி

ரஜினிக்கு மெகா ஹிட் கொடுத்த இயக்குனரை தூக்கிய கமல்.; தனுஷுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் திரைக்கு வர தயாராகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’.

இந்த படம் டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 50வது படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. தனுஷே இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார் தனுஷ். இந்தப் படங்களின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தயாரிக்க உள்ள புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்தப் படத்தை ‘ஜெயிலர்’ மெகா வெற்றிக்குப் பிறகு நெல்சன் இயக்க உள்ளார்.

நெல்சனின் ராசியான இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம்.. சிலம்பரசன் நடிப்பில் ஒரு படம் என இரண்டு படங்களை தயாரித்து வருகிறார் கமல்ஹாசன்.

தற்போது தனுஷ் படத்தையும் தயாரிக்க உள்ளார் குறிப்பிடத்தக்கது.

Kamal Dhanush Nelson Anirudh combo project

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும் ‘ஹரா’.; அனுமோலை மோகனுக்கு ஜோடியாக்கிய விஜய் ஸ்ரீஜி

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும் ‘ஹரா’.; அனுமோலை மோகனுக்கு ஜோடியாக்கிய விஜய் ஸ்ரீஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

15 வருடங்களுக்கு பிறகு நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ திரைப்படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது சிகிச்சையின் காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையே, ‘ஹரா’ திரைப்படத்தின் அதிரடி முதல் பார்வை மற்றும் டீசர் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ திரைப்படத்தில் எதிர் நாயகனாக நடிக்க மோகன் ஒப்பந்தமானார்.

இதன் காரணமாக, ‘ஹரா’ படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கிய போது தேதிகள் ஒத்துழைக்காததால் ஏற்கனவே ஒப்பந்தமான பிரபல நடிகைக்கு பதில் மோகன் ஜோடியாக அனுமோல் நடித்துள்ளார். சிறப்பான பங்களிப்பை அனுமோல் வழங்கி உள்ளதாகவும் அவரது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “கோத்தகிரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இறுதி கட்ட படபிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பண்டிகை வெளியீடாக விரைவில் திரையரங்குகளில் ‘ஹரா’ வெளியாகும் என்று கூறினார்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஐபிசி சட்டங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘ஹரா’ திரைப்படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிக்கிறார்.

‘ஹரா’ திரைப்படத்தில் யோகி பாபு, ‘பவுடர்’ நாயகி அனித்ரா நாயர், சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

Anumol opposite Mohan in Haraa directed by Vijay Sri

ஒரே நாளில் கமல் ரசிகர்களுக்கு 3 விருந்தளிக்கும் மணிரத்னம் & ஷங்கர்

ஒரே நாளில் கமல் ரசிகர்களுக்கு 3 விருந்தளிக்கும் மணிரத்னம் & ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவம்பர் 7ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் தன் பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

இதனை முன்னிட்டு நவம்பர் 3ஆம் தேதி கமல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க இருக்கின்றனர் அவரது பட இயக்குனர்கள்.

கமல் நடிப்பில் விரைவில் திரைக்கு வர தயாராகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’.

லைக்கா தயாரித்துள்ள இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் நவம்பர் 3ம் தேதி ‘இந்தியன்2’ படத்தின் வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 36 ஆண்டுகளுக்கு முன் கமல் – மணிரத்னம் இணைந்து பணியாற்றிய ‘நாயகன்’ படமும் இதே தேதியில் (நவம்பர் 3ல்) ரீ-ரிலீஸ் ஆகிறது.

கமலின் மற்றொரு படமான #KH234 கமல் 234 ஆவது படம் படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். இந்த படத்தை கமல்ஹாசன் உதயநிதி மற்றும் மணிரத்னம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோவும் நவம்பர் 3ம் தேதி வெளியாக உள்ளது.

ஆக ஒரே தினத்தில் கமல் ரசிகர்களுக்கு 3 மெகா விருந்து கொடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kamal fans will have triple treat on 3rd November

டிடிஎஃப் வாசன் ரசிகர்களே.. மனசு திடப்படுத்திக்குங்க.; மீண்டும் காவல் நீட்டிப்பு

டிடிஎஃப் வாசன் ரசிகர்களே.. மனசு திடப்படுத்திக்குங்க.; மீண்டும் காவல் நீட்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் பைக் ரேசர் டிடிஎஃப் வாசன். இவர் அதிவேகமாக பைக் ஓட்டி அந்த வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றி பிரபலமானார்.

இதனையடுத்து இவரை லட்சக்கணக்கான சிறுவர்கள் பின் தொடர்ந்தனர் . இவர் பலமுறை விபத்து ஏற்படுத்தி சர்ச்சைக்கு உள்ளானார். ஆனாலும் காவல்துறை நடவடிக்கை மற்றும் கட்டுப்பாட்டுகளை மீறி அடிக்கடி அதிவேகமாக பைக் ஓட்டி விபத்துக்குள்ளானார்.

சமீபத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் ஓட்டி தனக்குத்தானே விபத்து ஏற்படுத்தினார்.

இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாகி கோர்ட்டில் வழக்கானது.

அவரது பைக்கை பறிமுதல் செய்ய வேண்டும்.. லைசென்ஸ் வழங்கக் கூடாது.. இவரால் பல சிறுவர்களும் அதிவேகமாக பைக் ஓட்ட ஆசைப்படுகின்றனர்.. அவர்களும் சாகசங்கள் செய்ய ஆசைப்படுகின்றனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து செப்டம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார் டி டி எப் வாசன். அதன் பின்னர் மூன்று முறை அவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 30ஆம் தேதி 4வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்…

டிடிஎஃப் வாசன் யூடியுப்பில் பிரபலமானதை தொடர்ந்து ‘மஞ்சள் வீரன்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ஆனால் அந்த படம் எடுக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே அவர் விபத்துக்குள்ளானதும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Bike racer and Actor TTF Vasan arrested news updates

More Articles
Follows