‘மெரி கிறிஸ்மஸ்’ கதை கேட்டேன் எனக்கு பயம் எட்டி பார்த்தது.. – விஜய்சேதுபதி

‘மெரி கிறிஸ்மஸ்’ கதை கேட்டேன் எனக்கு பயம் எட்டி பார்த்தது.. – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மெரி கிறிஸ்மஸ்’.

இதில் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார்.

தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தௌராணி, சஞ்சய் ரௌத்ரே, ஜெயா தௌராணி, கேவல் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகிறது.
இதை முன்னிட்டு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், பட தொகுப்பாளர் பூஜா லதா ஸ்ருதி, நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் சண்முகராஜன், நடிகர் கவின் பாபு, பாடலாசிரியர் யுகபாரதி, பின்னணி குரல் கலைஞர் தீபா வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் பேசுகையில்…

” இந்த திரைப்படத்தைத் தொடங்கும் போது இந்தியில் மட்டும் இயக்குவது என்றும், விஜய் சேதுபதியை இந்தியில் அறிமுகப்படுத்தலாம் என்பது மட்டுமே என்னுடைய எண்ணமாக இருந்தது.

மும்பையில் இருந்தாலும் தமிழ் படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணமும், கனவும் இருந்தது. அது ஏன் இந்த படமாக இருக்கக் கூடாது..! என்று சிந்தித்தேன். விஜய் சேதுபதியை வைத்து எப்போதாவது ஒரு தமிழ் படத்தை இயக்க வேண்டும் என்ற திட்டமும் இருந்தது. இப்படத்தினை தொடங்கும் போது கோவிட் காலகட்டமாக இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் என்னுடைய நண்பரான இயக்குநர் தியாகராஜன் குமாராஜாவை சந்தித்தேன். அவர் மும்பை வந்திருந்தபோதும் சந்தித்து உரையாடினோம். இந்த கதையை தமிழிலும் உருவாக்கலாமே..! என அவர் கேட்டார். அதற்கு நான் தமிழ் மொழி மீதான ஆளுமை எனக்கு இல்லை என்றேன். அதற்கு அவர் நான் உதவி செய்கிறேன் என்று சொல்லி எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் இதனை உருவாக்கலாம் என்று திட்டமிட்டோம். திட்ட மிட்டபடி சற்று கடினமாக உழைத்து இப்படத்தை தமிழிலும், இந்தியிலும் உருவாக்கி இருக்கிறோம்.

நானும் நிறைய தமிழ் படங்களை பார்த்திருக்கிறேன். தற்போது அனைத்து தமிழ் படங்களும் மும்பையிலும் வெளியாகிறது. இதனால் என்னுடைய படங்களும் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு உங்களது கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். இதற்கிடையே மராத்தி மொழியில் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற கனவும் இருக்கிறது.

மெல்பெர்னில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் நானும் விஜய் சேதுபதியும் சந்தித்து பேசினோம். அவருக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்ததற்காக அவர் விருதினை பெற்றார்.

என்னுடைய இயக்கத்தில் வெளியான படத்தில் நடித்த தபுவிற்கும் விருது கிடைத்தது. ஐந்து நிமிட சந்திப்பிலேயே நாங்கள் நண்பர்களாகி விட்டோம். அந்த தருணத்தில் இந்த திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க கத்ரீனா கைஃப் மட்டுமே உறுதியாகி இருந்தார். விஜய் சேதுபதியை சந்தித்த பிறகு மும்பைக்கு திரும்பி, என்னுடைய குழுவினருடன் விஜய் சேதுபதி குறித்தும், விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விவாதித்தோம். அனைவருமே இந்த ஜோடி குறித்து வியப்புடன் சம்மதம் தெரிவித்தனர். அதன் பிறகு தான் இவர்கள் இருவரும் இந்த திரைப்படத்தில் இணைந்தனர்” என்றார்.

விஜய் சேதுபதி பேசுகையில்,…

‘ எனக்கு இந்தப் பட வாய்ப்பு கிடைத்தது கூட ஆச்சரியமாக இருக்கிறது. சில தருணங்களில் நம்முடைய வாழ்க்கையில் சொல்லாமல் கொள்ளாமல் சில விசயங்கள் நடைபெறுவதுண்டு. அது போன்றது தான் ஸ்ரீராம் ராகவனின் சந்திப்பு. மெல்பெர்னில் சந்தித்தோம்.

பிறகு மும்பையில் இருந்து காணொளியில் பேசுவார். அவருடைய சிறப்பம்சமே காணொளி வாயிலான உரையாடலை வீடியோவாக எடுத்து அனுப்புவது தான்.

அவரது இயக்கத்தில் உருவான முதல் படம் ‘ஏக் ஹசீனா தி’. அது 2004 ஆம் ஆண்டில் என்னுடைய பிறந்தநாளன்று வெளியானது. அப்போது என்னுடைய நண்பர் ஒருவர் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் ஸ்ரீராம் ராகவன் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார். படம் நன்றாக இருக்கிறது. பார் என்றார்.

நான் அந்தப் படத்தை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது இவரது இயக்கத்தில் நாம் நடிக்க முடியுமா? என்று எண்ணினேன். அதன் பிறகு ஐநாக்சில் அவர் இயக்கத்தில் வெளியான ‘பட்லாபூர்’ எனும் திரைப்படத்தை பார்த்தேன். அந்த படமும் எனக்கு பிடித்திருந்தது.

அதன் பிறகு என்னை சந்தித்து ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் கதையை சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது செப்டம்பர் மாதம் நடந்தது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. எனக்குள் சிறிய பயம் எட்டிப் பார்த்தது. பிறகு தயாரிப்பாளர் சஞ்சய் அவர்களை தொடர்பு கொண்டு.. ஜனவரி மாதம் என்னுடைய பிறந்தநாள் வருகிறது. அப்போது ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா? என கேட்டேன். உடனே அவர்கள் சரி என்று ஒப்புக் கொண்டார்கள். அதன் பிறகு சற்று நம்பிக்கை வந்தது.

அதனைத் தொடர்ந்து அவரை சந்தித்தது.. பேச்சுவார்த்தை நடத்தியது.. அவரது அலுவலகத்தில் அமர்ந்து பல விசயங்களை உரையாடியது.. அனைத்து சந்திப்பின் போதும் எனக்கு ஒரு நடிகனுக்கான சுதந்திரத்தை நிறையக் கொடுத்தார். படப்பிடிப்பு தளத்தில் எங்களிடமிருந்து அவர் வேலை வாங்குவது சௌகரியமானதாக இருக்கும். அவருடன் செலவிடும் நிமிடங்கள் அனைத்தும் இயல்பாக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து அவரது உதவியாளரும், கதாசிரியரும், பட தொகுப்பாளருமான பூஜா மேடம். அவர்கள் ஒரு காட்சிக்கு என்ன தேவை என்பதற்கு எளிமையாக விளக்கம் கொடுப்பதும் வியப்பைத் தரும்.

கத்ரீனா கைஃப்பை நேரில் பார்த்ததும் எனக்குள் சிறு ஆச்சரியம். அவர் நம்மை விட சீனியர் ஆர்டிஸ்ட்.

இரண்டு தசாப்தங்களாக திரைத்துறையில் இருக்கிறார்.. என்ற பயமும் இருந்தது. படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்ததும் அவருக்கான காட்சி குறித்த விசயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். அவர் அந்த சூழலை மிகவும் இயல்பாக சௌகரியமாக மாற்றினார்.

இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர் கவின் பாபு கூத்துபட்டறையில் பயிற்சி பெற்றவர். அவரும் நன்றாக நடித்திருக்கிறார்.

நான் துபாயில் மூன்றாண்டு காலம் பணியாற்றிய போது தான் முதன் முதலாக இந்தியை என்னுடைய பாஸ் பேச கேட்டிருக்கிறேன். அதில் பிறகு சின்ன சின்ன வார்த்தைகளை பேசி இருக்கிறேன். அதன் பிறகு இந்தி பேசி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. ‘ஃபார்ஸி’ படத்தில் பணியாற்றும்போது இந்தி பேசுவதற்கு கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு சற்று சரளமாக பேசத் தொடங்கினேன். இந்த படத்தில் நான் தான் இந்தி பேசியிருக்கிறேன். அது எப்படி பேசி இருக்கிறேன் என்பதை படம் வெளியான பிறகு தான் தெரிய வரும்.

பணியாற்றும் இடத்தில்தான் மொழிகளுக்கு ஏற்ற ஒலி இருக்கும். அதை கேட்டு பேசுவதில் மட்டும் தான் வேறுபாடு இருக்கும், மற்ற அனைத்தும் ஒன்றுதான். தற்போது டிஜிட்டல் தளங்கள் வந்துவிட்ட பிறகு மொழிகளுக்கு இடையே எந்த சுவரும் இல்லை.

இந்த திரைப்படம் ஜனவரி 12-ம் தேதி அன்று வெளியாகிறது. இப்படத்தை நாங்கள் அனைவரும் பார்த்து விட்டோம். எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ” என்றார்.

விஜய்சேதுபதி

Vijay Sethupathi shares his experience of Merry Christmas movie

அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே’ என்பதை ‘மிஷன் சாப்டர்1’ ஆக மாற்றிய லைக்கா

அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே’ என்பதை ‘மிஷன் சாப்டர்1’ ஆக மாற்றிய லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன் சாப்டர்1’ ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.

நடிகர் பரத் கோபன்னா பேசியதாவது…

“இந்தப் படம் வெளியாகும் நாளுக்காகதான் இத்தனை நாள் காத்திருந்தேன். தமிழில் எனக்கு இது முதல் படம். எனக்கு இந்த சந்தோஷத்தைக் கொடுத்த விஜய் சாருக்கு நன்றி.

அருண் விஜய் சார் போல கடினமாக உழைத்த யாரையும் நான் பார்த்ததில்லை. இந்தப் படத்தில் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன். படம் ஜனவரி 12 அன்று வெளியாகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகர் அபிஹாசன்…

“படம் ஜனவரி 12 அன்று வெளியாகிறது. உங்களைப் போலவே நானும் ஆவலோடு காத்திருக்கிறேன். விஜய் சார் ஆஃபிஸூக்கு சும்மா போனேன். அவர் என்னைப் படத்தில் நடிக்க வைத்து விட்டார். வாய்ப்புக்கு நன்றி விஜய் சார். படத்தில் யாருக்கும் என்னை அடையாளம் தெரியாது என நினைக்கிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள் “.

நடிகர் நாசர்…

“இந்தப் படம் உருவாக முக்கிய மூலகாரணம் விஜய். நான் மதிக்கிற சில இயக்குநர்களில் விஜயும் ஒருவர். இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதனால் அவர் மீது தனி மரியாதை உண்டு.

இந்த இளம் தலைமுறை மீது எனக்கு பெரிய நம்பிக்கை உண்டு. புதிது புதிதாக எதையாவது முயற்சி செய்வார்கள். அதே சமயம் அவர்களைப் பார்த்து எனக்கு பயமும் உண்டு.

ஏமி ஜாக்சன் இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை அற்புதமாக செய்துள்ளார். படத்திற்காக லண்டன் ஜெயில் செட் அற்புதமாக செய்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ், ஆண்டனி என சிறப்பான தொழில்நுட்பக் குழு உள்ளது. உங்களைப் போலவே நானும் படத்திற்காக காத்திருக்கிறேன். ஆக்‌ஷன் என்பதையும் தாண்டி படத்தில் அழகான எமோஷன் உள்ளது. தியேட்டரில் படம் பாருங்கள்”.

குழந்தை நட்சத்திரம் இயல், “அருண் விஜய் அங்கிள், விஜய் அங்கிள் ரொம்ப தேங்க்ஸ். ஷூட்டிங் ரொம்ப ஜாலியாக இருந்தது. லண்டன், சென்னையில் ஷூட் செய்தோம்”.

காணொலி வாயிலாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது….

“லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘மிஷன் சாப்டர்1’ படத்தின் புரோமோஷன் நடக்கிறது. படத்திற்கு வாழ்த்துகள். அங்கு விழாவில் நானும் இருக்க வேண்டியது.

ஆனால், முக்கிய வேலையாக இங்கு ஊருக்கு வந்திருக்கிறேன். அதனால், வரமுடியவில்லை. நிச்சயம் விழாவை மிஸ் செய்வேன். படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். படம் நிச்சயம் பெரிய வெற்றிப் பெறும்” என்றார்.

இயக்குநர் விஜய்…

“விழாவிற்கு வந்ததற்காக நாசர் சாருக்கு நன்றி. மிஷன் படம் எனக்கு ரொம்பவும் முக்கியமானது. படம் உருவாகக் காரணமாக இருந்த ராஜசேகர் சாருக்கு நன்றி.

லைகா உள்ளே வந்ததும் படம் இன்னும் பெரிதானது. நான்கு மொழிகளில் வெளியிட வேண்டும் எனச் சொல்லி ‘அச்சம் என்பது இல்லையே’ என்பதை ‘மிஷன் சாப்டர்1’ ஆக மாற்றினார்கள். அருண் விஜய் கரியரில் பெரிய பட்ஜெட்டில் உருவான படம் இது.

இந்தப் படம் எமோஷனலாக எனக்கு முக்கியமானது. ஏமிக்கு கோவிட் என்பதால் வர முடியவில்லை. சரிதா, ஷோபா போல நிமிஷாவும் முக்கியமான நடிகை. ‘மிஷன் சாப்டர்1’ படம் ஷூட்டிங்காக லண்டன் சென்றபோது அங்கு குயின் இறந்துவிட்டார். அதனால், அதிகம் ஷூட் செய்ய முடியவில்லை.

பின்புதான் சென்னையில் செட் போட்டோம். பல பிரச்சினைகள் தாண்டிதான் இந்தப் படம் உருவானது. இயலும் ஜிவி பிரகாஷூம் இந்தப் படத்தின் ஆன்மா. இயலுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. படத்தைத் தாண்டி எனக்கும் ஜிவிக்கும் நல்ல நட்பு உள்ளது.

விழாவிற்கு அவர் இன்று வரமுடியாத ஒரு சூழல். அவர் சார்பாக எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என் மொத்தக் குழுவுக்கும் நன்றி. பொங்கலுக்கு என் படம் வருவது இதுவே முதல் முறை. ‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’, ‘மெரி கிறிஸ்துமஸ்’ என பொங்கலுக்கு வரும் எல்லாப் படங்களும் வெற்றிப் பெற வேண்டும்”.

காணொலி வாயிலாக கலந்து கொண்ட நடிகை ஏமி ஜாக்சன்…

” இந்த வாய்ப்புக் கொடுத்த லைகா புரொடக்சன்ஸ், விஜய் சாருக்கு நன்றி. அருண் விஜய் சாருடன் ஆக்‌ஷன் காட்சிகள் செய்தது எனக்கு மகிழ்ச்சி. கோவையில் நடக்கும் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களை சீக்கிரம் சந்திக்கிறேன்”.

நடிகர் அருண் விஜய்…

“விழாவிற்கு வந்திருக்கும் நாசர் சாருக்கு நன்றி. என் அப்பாவைப் போலதான் இவரையும் பார்க்கிறேன். பண்டிகைக்கு வரும் என்னுடைய முதல் படம் ‘மிஷன் சாப்டர் 1’ என்பதால் இது எனக்கு இன்னும் ஸ்பெஷல். விஜய் சார் சொன்னது போல இந்தப் படப்பிடிப்பின் போது மழை, செட் சேதமானது என நிறைய சவால்களை சந்தித்தோம்.

லண்டன் சிறையை போல இங்கு நாலரை ஏக்கரில் பிரம்மாண்ட செட் அற்புதமாக உருவாக்கினார்கள். ஆர்ட் டிரைக்டருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

எல்லா பார்வையாளர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். வேறு மாதிரியான ஒரு ஆக்‌ஷனை இதில் முயற்சி செய்திருக்கிறோம். என்னை வேறு மாதிரி இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். டிரெய்லரில் பார்க்காத பல எமோஷன் படத்தில் இருக்கிறது. ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

மிஷன்- சாப்டர்1

Arun Vijay starring Mission Chapter 1 Pre Release event highlights

உண்மை சம்பவத்தை திரைப்படமாக்க இணைந்த விஷ்ணு விஷால் – கோகுல்

உண்மை சம்பவத்தை திரைப்படமாக்க இணைந்த விஷ்ணு விஷால் – கோகுல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2022 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான கட்டா குஸ்தி படத்திற்குப் பிறகு, எங்களின் அடுத்த திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் அறிவிப்பதில் மகிழ்ச்சி. இந்த புதிய திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார் மற்றும் ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா போன்ற வெற்றிப்படங்களையும் மற்றும் விரைவில் வரவிருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தையும் இயக்கியுள்ள இயக்குநர் கோகுல் இப்படத்தை இயக்கவுள்ளார்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்காலிகமாக ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – புரடக்சன் நம்பர் எண் 10’ என்று அழைக்கப்படும்.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் வெளிவந்த ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், கட்டா குஸ்தி , எஃப் ஐ ஆர் போன்ற வெற்றிப் படங்களின் தொடர்ச்சியாக அடுத்து வரவுள்ள “ஆர்யன்” படமும் அதிக பொருட்செலவில், ஆக்சன் மற்றும் அசத்தலான பொழுது போக்குத் திரைப்பபடமாக உருவாகி வருகிறது.

விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் கோகுல் கூட்டணியில் உருவாகவுள்ள விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – புரடக்சன் நம்பர் 10 திரைப்படம் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, மிகப்பெரும் பட்ஜெட்டில், மிரட்டலான ஆக்சன் எண்டர்டெயினராக உருவாக்கப்படவுள்ளது.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – புரடக்‌ஷன் நம்பர் 10′ திரைப்படம், நடிகர் விஷ்ணு விஷால் நடித்துவரும், தற்போதைய திரைப்படங்களின் பணிகள் முடிந்தவுடன் துவங்கும். தற்போது இப்படத்தின் முதல்கட்ட முன் தயாரிப்பு பணிகளை துவக்கியுள்ளோம்.

விரைவில் இப்படத்திற்கான நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும்.

எங்களின் இந்த புதிய பயணத்தில் எப்போதும் போல், உங்கள் ஆதரவையும் அன்பையும் வழங்க வேண்டுகிறோம்.

விஷ்ணு விஷால் - கோகுல்

Vishnu Vishals Production 10 movie will be directed by Gokul

கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மிரட்டும் ‘தேவரா’

கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மிரட்டும் ‘தேவரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாஸான புதிய அவரதாரத்தில் நடிகர் என்டிஆர் மிரட்ட உள்ள ஆக்‌ஷன் டிராமா திரைப்படம் ‘தேவரா’.

இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். சயிஃப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இயக்குநர் கொரட்டாலா சிவா திட்டமிட்டுள்ளார்.

இதன் முதல் பாகமான, ‘தேவரா பார்ட்1’ உலகெங்கிலும் ஏப்ரல் 5, 2024 அன்று தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தினை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். ‘தேவரா’வின் உலகை அறிமுகப்படுத்தும் வகையிலான கிளிம்ப்ஸ் இன்று வெளியாகியுள்ளது. விஷூவல்ஸ், இசை என சர்வதேச தரத்துடன் இந்த பான் இந்தியா கிளிம்ப்ஸ் உருவாகி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கடல், கப்பல் எனத் தொடங்கும் இந்த கிளிம்ப்ஸின் காட்சிகள் ரத்தத்தால் நிரம்பியுள்ளது. தேவராவாக வித்தியாசமான அவதாரத்தில் என்டிஆர் இந்த கிளிம்ப்ஸில் மிரட்டியுள்ளார். இந்த கிளிம்ப்ஸில் உள்ள ஒவ்வொரு ஃபிரேமையும் மாஸாக அதே சமயம் கவனத்துடன் கொரட்டாலா சிவா உருவாக்கியுள்ளார்.

இந்த கிளிம்ப்ஸ் ‘தேவரா’வின் பிரம்மாண்டத்தையும் தேவராவின் கதாபாத்திரத்தையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. குறிப்பாக, என்டிஆரின் வசனங்கள், பாப்பவர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் தருவதாக அமைந்துள்ளது. அதிலும், ’டி’ வடிவத்திலான ரத்தம் தோய்ந்த ஆயுதம் ஒன்றை கடலில் கழுவிக் கொண்டே, ‘இந்தக் கடல் இங்குள்ள மீன்களை விட அதிக ரத்தம் பார்த்துள்ளது. அதனால்தான் இது ‘ரெட் சீ’’ என ஏன் அந்தக் கடல் ‘ரெட் சீ’ எனப்படுகிறது என்பதை பவர்ஃபுல்லான வசனங்களோடு உரத்தக் குரலில் என்டிஆர் பேசுவது பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

அனிருத்தின் சர்வதேச இசை இந்த கிளிம்ப்ஸை போலவே படத்தையும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது. இவரது இசை டீசருக்கு மிகப்பெரிய பலம். என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸின் தயாரிப்பு மதிப்புகளும் படத்தின் கதை மற்றும் தரத்திற்கு ஏற்ற வகையில் மிகப்பெரியதாக அமைந்துள்ளது.

விஎஃப்எக்ஸ் குழுவின் அட்டகாசமான பணி படம் பார்க்கும்போது ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரியும். சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.

இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மேகா, டாம் ஷைன் சாக்கோ, நரேன் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்ட ’தேவாரா’ படத்தை நந்தமுரி கல்யாண் ராம் வழங்குகிறார். மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா கே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

ஸ்ரீகர் பிரசாத் இந்தப் படத்தின் படத்தொகுப்பாளர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்க, தயாரிப்பு வடிவமைப்பை சாபு சிரில் கையாண்டுள்ளார்.

Devara starring Junior NTR and Janvi Kapoor

ஒரே ஆண்டில் எந்த சூப்பர் ஸ்டாரும் செய்யாத சாதனை படைத்த ஷாருக்கான்

ஒரே ஆண்டில் எந்த சூப்பர் ஸ்டாரும் செய்யாத சாதனை படைத்த ஷாருக்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2023 ஆம் ஆண்டில் ஷாருக் கான் பாக்ஸ் ஆபிஸில் ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறார்.‌ ‘பதான்’- 1050. 30 கோடி ரூபாய் வசூலித்தது. ‘ஜவான்’- 1148.32 கோடி வசூலித்தது.

ஆண்டு இறுதியில் வெளியான ‘டங்கி’ உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது. ஒரே வருடத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டுகளை ஷாருக் கான் தொடர்ந்து வழங்கி இருக்கிறார்.

அவரின் நடிப்பில் வெளியான இந்த மூன்று படங்களும் இணைந்து 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 117 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கிறது.

இது சீனாவை தவிர்த்து பாரம்பரிய சர்வதேச சந்தைகளில் ஒரே ஆண்டில் எந்த இந்திய சூப்பர் ஸ்டாரும் அடையாத மிகப் பெரும் சாதனையாகும்.

2023 ஆம் ஆண்டில் இந்திய திரையுலகில் ஷாருக்கான் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார் அவர் நடிப்பில் வெளியான ‘பதான்’, ‘ஜவான்’ மற்றும் ‘டங்கி’ ஆகிய திரைப்படங்கள் வசூலில் வெற்றி பெற்று, உலக சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். அவரது வெற்றி.. எப்பொழுதும் பழைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைத்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மட்டுமல்ல.. உலகளவிலான திரைத்துறைக்கு புதிய வரையறைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால்… ஷாருக் கான் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படங்களும்.. தற்போது ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சாதனையை புரிந்த நட்சத்திர நடிகரான ஷாருக்கானை அவரது ரசிகர்கள்.. மிகப்பெரிய அளவில் காட்சிப்படுத்தி, தங்களது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஷாருக்கான் இந்த ஆண்டில் ‘பதான்’ மூலம் உளவாளிகளின் உலகத்தை பிரம்மாண்டமாக ரசிகர்களுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து ‘ஜவான்’ படத்தில் அதிரடியான ஆக்சன் காட்சிகளை வழங்கி ரசிகர்களை பரவசப்படுத்தினார். பின்னர் அவரது நடிப்பில் ‘டங்கி’ வெளியானது.

இது ஒரு மகத்தான இதயத்தை வருடும் கதையை திரையில் காட்சிப்படுத்தியது. ஆக்ஷன் இல்லாத படைப்பாக இருந்தாலும்… ‘டங்கி’ திரைப்படமும் குறிப்பிடத்தக்க அளவில் புகழை பெற்றதுடன், பாக்ஸ் ஆபீசிலும் வெற்றியை பெற்றது. ராஜ்குமார் ஹிரானியின் உணர்வு பூர்வமிக்க சினிமாவிற்கு இந்த திரைப்படம் பொருத்தமான சான்றாகவும் அமைந்தது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கமான லு கிராண்ட் ரெக்ஸில் ‘டங்கி’ திரையிடப்பட்டது. இத்திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் இந்தி திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது.

இதனுடன் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் டவர் மற்றும் ஆர்க் டி ட்ரையம்ப் போன்ற நினைவுச் சின்னங்களுக்கு முன்பாக இத்திரைப்படத்தில் இடம் பெற்ற ‘லீ புட் கயா’ மற்றும் ‘அன்பான..’ பாடல் காட்சி திரையிடப்பட்டது. உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் இதயங்களை ‘டங்கி’ மூலம் ஷாருக்கான் கவர்ந்துள்ளார்.

ஷாருக்கான்

Shahrukhs Dunki making huge records

நாலரை ஏக்கரில் போட்ட ஜெயில் செட்டு வேஸ்டாச்சு.; ‘மிஷன்- சாப்டர்-1’ குறித்து அருண் விஜய்

நாலரை ஏக்கரில் போட்ட ஜெயில் செட்டு வேஸ்டாச்சு.; ‘மிஷன்- சாப்டர்-1’ குறித்து அருண் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’.

பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது…

“இயக்குநர் விஜய் என்னுடைய வீட்டில் ஒருவர் போலதான். அவருடன் நான் பத்து படங்கள் வேலை செய்துவிட்டேன். என்னுடைய இரண்டாவது படத்தில் இருந்து பல ஹிட் பாடல்கள் விஜயின் படங்களில்தான் அமைந்தது.

எங்கள் காம்பினேஷனில் முத்துகுமார் சாரை மிஸ் செய்கிறோம். அருண் விஜய் சாருடன் ‘யானை’, ‘மிஷன் சாப்டர் 1’, அடுத்து பாலா சார் படம் எனத் தொடர்ந்து மூன்று படங்கள் செய்து கொண்டிருக்கிறேன். இந்தப் படம் படக்குழுவுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். இந்தப் பொங்கலுக்கு ‘கேப்டன் மில்லர்’, ‘மிஷன் சாப்டர்1’ என நான் இசையமைத்த எனது இரண்டு படங்களும் வருகிறது” என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா…

“இந்தப் படத்தில் வேலைப் பார்த்தது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி. ஏனெனில், ஃபைட் மாஸ்டர் விஜய் சாருடனும், ஃபைட்டர் அருண் சாருடனும் வேலைப் பார்த்திருக்கிறேன். முழுக்க முழுக்க சண்டைப் படமாக விஜய் சாருடன் இரண்டாவது படம் இதை செய்கிறேன்.

பார்வையாளர்கள் படத்தில் நிச்சயம் சண்டையை என்ஜாய் செய்வீர்கள். இந்த சண்டைக்காக நிறைய பயிற்சி எடுத்து கை, கால்களில் அருண் விஜய் சார் அடி வாங்கினார். அந்தக் கட்டோடுதான் இப்போதும் வந்துள்ளார். படக்குழுவினரின் உழைப்புக்காகப் படம் நிச்சயம் வெற்றி பெறும் ”.

இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மஹாதேவன்…

“இது ஒரு நல்ல கதை. என்ன நினைத்து எழுதினேனோ அது அப்படியே விஜய் படமாக எடுத்துள்ளார். அதற்கும் எனக்குக் கொடுத்த வாய்ப்புக்கும் நன்றி. முதல் முறையாக தமிழில் நான் வேலைப் பார்க்கிறேன். இதற்கு முன்பு தெலுங்கில்தான் வேலை பார்த்திருக்கிறேன். படத்தை வெளியிடும் லைகா புரொடக்ஷனுக்கு நன்றி! நான் முதல் முறை தமிழில் எழுதியுள்ள இந்த ஆக்ஷன் கதையில் அருண் விஜய் சார் நடித்திருக்கிறார். அது மிகவும் சந்தோஷம். ஏனெனில், எனக்கு எமோஷனுடன் ஆக்ஷன் கதை எழுதுவது பிடிக்கும். அதை திரையில் சரியான நபர் கொண்டு வந்திருப்பதை நாம் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கும். அருண் விஜய் அதை சரியாக செய்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி!”.

நடிகர் பரத் கோபன்னா…

“2017 ஆவது வருடம் விஜய் சாரின் ஒரு படத்தில் நான் நடிப்பதாக இருந்து அது மிஸ் ஆனது. அதில் எனக்கு பெரிய வருத்தம். ஆனால் இப்பொழுது ‘மிஷன் சாப்டர்1’ படம் மூலம் அந்த வாய்ப்பு மீண்டும் வந்திருப்பதில் மகிழ்ச்சி. விஜய் சார் இயக்கத்தில் அருண் விஜய் சாரோட லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் அறிமுகமாவதில் மகிழ்ச்சி. ஏமி, நிமிஷா என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். தமிழ் பார்வையாளர்கள் படத்திற்கு வரவேற்பு கொடுப்பார்கள் என நம்புகிறேன்”.

மிஷன்- சாப்டர் 1

நடிகர் அபிஹாசன்..

“இந்தப் படத்தில் அசிஸ்டெண்ட்டாக வேலை செய்ய தான் போனேன். ஆனால், விஜய் சார் எனக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்தார். அவருக்கு நன்றி. டிரைய்லரில் நிறைய ஆக்ஷன் இருப்பது போல தோன்றும். ஆனால் அதோடு படத்தில் நிறைய எமோஷன்களும் உள்ளது. படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்”.

பாடகி உத்ரா உன்னி கிருஷ்ணன், “‘மிஷன்’ படத்தில் ஒரு அழகான பாடல் பாட வாய்ப்பு கொடுத்த விஜய் அங்கிளுக்கும், ஜிவி அங்கிளுக்கும் நன்றி”.

குழந்தை நட்சத்திரம் இயல், “இந்தப் படத்தில் அருண் விஜய் அங்கிள் மகளாக நடித்துள்ளேன். இயக்குநர் விஜய் அங்கிள் அவருடைய பொண்ணு போல என்னைப் பார்த்துக் கொண்டார். அருண் விஜய் அங்கிள் ஃபைட் பண்ணும் போது பார்த்துப் பண்ணுங்க. ஏமி ஜாக்சன் ஆண்ட்டி அழகாக இருந்தாங்க”.

ஹெட் ஆஃப் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஜிகே தமிழ்க்குமரன் பேசியதாவது, “இந்த வருடத்தின் முதல் படமாக ‘மிஷன் சாப்டர்1’ஐ வெளியிடுகிறோம். படம் நிச்சயம் வெற்றிப் பெறும். படம் நன்றாக வந்திருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்”.

விநியோகஸ்தகர் மற்றும் தயாரிப்பாளரான, ஸ்ரீகோகுலம் மூவிஸ் கோகுலம் கோபாலன், “தமிழ், மலையாளம் என இரு தரப்பு பார்வையாளர்களும் விரும்பிப் பார்க்கும்படியாக இந்தப் படம் வந்துள்ளது. லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் படம் என்றால் தானாகவே ஒரு ஆர்வம் பார்வையாளர்கள் மத்தியில் வந்துவிடுகிறது.

இந்தப் படத்திலும் திறமையான கலைஞர்களும் நடிகர்களும் இருக்கின்றனர். இந்தப் படத்தை வெற்றிப்படமாக பார்வையாளர்கள் மாற்றித் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

நடிகர் அருண்விஜய் பேசியதாவது…

“பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்னுடைய முதல் படம் ‘மிஷன் சாப்டர்1’ என்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். நாம் என்னதான் உழைப்பைக் கொடுத்திருந்தாலும் படம் சரியான தேதியில் வெளியாவது என்பது முக்கியமான விஷயம். அதை செய்து கொடுத்த லைகாவுக்கு நன்றி. நான் இதுவரை நடித்தப் படங்களிலேயே ‘மிஷன் சாப்டர்1’ தான் அதிக பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்ட படம்.

இந்த ஸ்கிரிப்ட் கொடுத்த விஜய்க்கு நன்றி. ஆக்‌ஷன், எமோஷன் என எல்லாமே இதில் சரியாக வந்திருக்கிறது. சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். ஏமி ஜாக்சன், நிமிஷா எனப் பலரும் இதில் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷின் இசை இந்தப் படத்திற்குப் பெரிய பலம். லண்டன், சென்னை ஆகிய இடங்களில் இதை படமாக்கினோம். நாலரை ஏக்கரில் மிகப்பெரிய ஜெயில் செட்டை இங்கு உருவாக்கினோம். சில காரணங்களால் அது சேதமானது. அப்போது கூட செலவைப் பற்றி பொருட்படுத்தாது லைகா புரொடக்‌ஷனஸ் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தார்கள். தொழில்நுட்பக்குழுவும் படத்திற்குப் பெரிய பலம். படப்பிடிப்புத் தளத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், விஜய் அதற்கான நேரமே தரமால் திட்டமிட்டபடி சரியாக வேலை செய்து முடித்தார்.

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்தில் 1500 பேர் நிச்சயம் இருப்பார்கள். அவர்களை எல்லாம் விஜய் அழகாக மேனேஜ் செய்திருக்கிறார். என்னை வேறொரு கோணத்தில் இந்தப் படம் காட்டும். ஆக்‌ஷன், எமோஷன் என அனைத்து விஷயங்களிலும் புதிதாக முயற்சி செய்திருக்கிறோம்.

இப்படியான கதையைக் கொடுத்த மகாதேவன் சாருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பொங்கல் அன்று உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். எங்களுடன் வெளியாகும் அனைத்துப் படங்களும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்றார்.

இயக்குநர் விஜய் பேசியதாவது…

“நிறையப் படங்கள் இயக்கி இருக்கிறேன். ஆனால், இது புது அனுபவமாக இருந்தது. படத்தின் தயாரிப்பாளர்கள் சுவாதி, ராஜசேகர் சாருக்கு நன்றி. எங்களைப் போலவே இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்த லைகா புரொடக்‌ஷன்ஸூக்கும் நன்றி. தமிழ்க்குமரன் சார் இந்தப் படத்தைப் பார்த்ததும் உடனே இணைத் தயாரிப்பு செய்கிறேன் என்று சொன்னார்.

அதன்பிறகுதான் இந்தப் படம் அடுத்தக் கட்டத்திற்குச் சென்றது. ‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ என இரண்டு அசுரத்தனமான படங்கள் வருகிறது. இந்த வரிசையில் நாங்களும் வருகிறோம். பல சிரமங்களைத் தாண்டிதான் இந்தப் படத்தை வெளியிடுகிறோம். அருண் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தார். சினிமாவில் உள்ள திறமையான நடிகைகள் பட்டியலில் நிச்சயம் நிமிஷாவும் இருப்பார். ஏமி,இயல் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இயல் கதாபாத்திரம் தான் படத்தின் ஆன்மா. தொழில்நுட்பக்குழுவினரும் சிறப்பாக செய்துள்ளனர். இப்போது சினிமா தியேட்டருக்கான படங்கள், டிஜிட்டல் சினிமா எனப் பிரிந்துள்ளது. நிச்சயம் ‘மிஷன் சாப்டர்1’ உங்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும். எல்லாப் படங்களுமே சேர்ந்து ஜெயிக்க வேண்டும்” என்றார்.

மிஷன்- சாப்டர் 1

Arun vijay speech at Mission Chapter 1 Trailer Launch event

More Articles
Follows