மம்மூட்டியுடன் தன் மனைவி நடித்த மலையாள படத்தை பாராட்டிய சூர்யா

மம்மூட்டியுடன் தன் மனைவி நடித்த மலையாள படத்தை பாராட்டிய சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமணத்திற்குப் பிறகு தன் வயதிற்கு ஏற்ப நல்ல கேரக்டர் உள்ள கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா.

36 வயதினிலே, தம்பி, ஜாக்பாட், உடன்பிறப்பே உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார் ஜோதிகா.

மம்மூட்டியுடன் இணைந்து ‛காதல் தி கோர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஜோ பேபி என்பவர் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் டீசர் ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளியானது.

இந்த டீசரை பார்த்து பாராட்டி இருக்கிறார் நடிகர் சூர்யா. அவரின் பதிவில்…

கடினமான கதையை எளிதாக மலையாள சினிமா துறையினர் கொடுப்பதை பார்த்து எனக்கு வியப்பாக உள்ளது.

‘காதல் தி கோர்’ படத்தை நவம்பர் 23ம் தேதியில் பார்ப்பதற்கு காத்திருக்கிறேன். மம்முட்டி – ஜோதிகா – ஜோ பேபி குழுவிற்கு வாழ்த்துக்கள்’ என்று சூர்யா பதிவிட்டுள்ளார்.

Suriya appreciated Kadhal and Malayalam movie making

மோடி பெஸ்ட் ஆக்டர்.. காஸ்ட்யூம் டிசைனர் வரை வைத்திருக்கிறார்.; பிரகாஷ்ராஜ் தாக்கு

மோடி பெஸ்ட் ஆக்டர்.. காஸ்ட்யூம் டிசைனர் வரை வைத்திருக்கிறார்.; பிரகாஷ்ராஜ் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் மிரட்டல் வில்லனாக நடிகர் பிரகாஷ்ராஜை பல படங்களில் பார்த்திருக்கிறோம். அவர் நிஜத்தில் பாஜக கட்சிக்கு வில்லனாகவே தெரிகிறார்.

காரணம் பாஜக-வின் நடவடிக்கைகளை எதிர்த்து பல பேட்டிகளில் குரல் கொடுத்து கடுமையான விமர்சனங்களை செய்து வருவதை பார்த்திருக்கிறோம்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியில்..

“நீங்களும் கமல்ஹாசனும் சிறந்த நடிகர்களாக இருந்தும், அரசியலில் தோல்வி அடைந்து இருக்கிறீர்கள்.

அப்படியெனில் உங்களை விட சிறந்த நடிகர்கள் நம் அரசியலில் இருக்கிறார்களா?” என கேட்கப்பட்டது.

அதற்கு சாதுர்யமாக பதில் அளித்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ். அவரின் பதிலில்..

மோடி சிறந்த நடிகர், மிகச்சிறந்த பெர்ஃபார்மர், காஸ்ட்யூம் & ஹேர்ஸ்டைல் டிபார்ட்மென்ட் வரை எல்லாவற்றையும் வைத்திருக்கிறாரே” என பேசியுள்ளார்.

Indian PM Modi is best Actor says Prakashraj

காமெடியன்… விஜய்யின் அரசியல்.. துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு.; ஆனந்தத்தில் ஆனந்தராஜ்

காமெடியன்… விஜய்யின் அரசியல்.. துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு.; ஆனந்தத்தில் ஆனந்தராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990 ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த முக்கியமான வில்லன்களில் ஒருவர் நடிகர் ஆனந்தராஜ். ‘என் தங்கச்சி படிச்சவ’ என்ற படத்தில் இவரது வில்லத்தனம் பெரிய அளவில் பேசப்பட்டது.

ஒரு கட்டத்தில் ‘பாட்ஷா’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் ஆனந்தராஜ். அந்த படத்தில் ரஜினியை கட்டி வைத்து அடிக்க முதலில் மறுத்தவர் ஆனந்தராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் வில்லன் வேடங்களை மறந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் நாயகனாக பெரிதாக ஜொலிக்கவில்லை.

தற்போது எல்லாம் நிறைய படங்களில் ஆனந்தராஜை ஒரு காமெடி நடிகராகவே பார்க்கலாம்.

இந்த நிலையில் நவம்பர் 10ஆம் தேதி தன் பிறந்த நாளை கொண்டாடினார் ஆனந்தராஜ். அப்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டருகே உள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு புத்தாடை மற்றும் தீபாவளி பரிசுகளை கொடுத்து மகிழ்ந்தார் ஆனந்தராஜ்.

கூடுதல் தகவல்..

மேலும் ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சி கலந்து கொண்ட ஆனந்தராஜ் பேசும்போது..

“என்னை மக்கள் வில்லனாகவே பார்த்தார்கள். தற்போது அவர்கள் என்னை நகைச்சுவை நடிகராகவும் பார்க்கும்போது எனக்கே வியப்பாக உள்ளது அவர்கள் முதலில் ஏற்றுக் கொள்வார்களா? என்ற தயக்கம் இருந்தது என்றார்.

மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்டபோது.. “விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்பதாகவும் மக்களுக்கு நல்லது செய்யட்டும்” என்றும் பேசினார் ஆனந்தராஜ்.

Anandraj speech about his comedy role and Vijay politics

ஆர்யா நடிக்கும் ‘தி வில்லேஜ்’ சீரிஸின் 11 பாடல்கள் வெளியானது

ஆர்யா நடிக்கும் ‘தி வில்லேஜ்’ சீரிஸின் 11 பாடல்கள் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் திகில், ஒரிஜினல் வெப்சீரிஸ் ​​தி வில்லேஜ் சீரிஸுக்கு, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

பாடல் வரிகளை மதுரை சொல்ஜர் (சியான் சாஹீர், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை மற்றும் ஷில்பா நடராஜன் எழுதியுள்ளனர். முத்து சிற்பி(காளிமுத்து), சிந்துரி விஷால், மதிச்சியம் பாலா(ஜி. முருகன்), குரு அய்யாதுரை, மதுரை சோல்ஜர் (சியான், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, கிரிஷ் கோபாலகிருஷ்ணன், டி.பிரதிமா பிள்ளை, ஷில்பா நடராஜன் ஆகியோர் பாடியுள்ளனர்.

ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், B.S.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள தி வில்லேஜ் தமிழ் ஒரிஜினல் சீரிஸை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.

​தி வில்லேஜ் சீரிஸின் இசை ஆல்பத்தை இன்று வெளியிட்டது பிரைம் வீடியோ.

இந்த ஆல்பத்தில் ஆழமான மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் 11 பாடல்கள் உள்ளன, ஒவ்வொரு பாடல்களும் சமூகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த இசை ஆல்பத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை மதுரை சோல்ஜர் (சியான் சாஹீர், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை மற்றும் ஷில்பா நடராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

தி வில்லேஜ்

ஆல்பத்தின் டிராக்லிஸ்ட் இதோ –
1. திருவிழா – பாடியவர்: முத்து சிற்பி (காளிமுத்து), சிந்துரி விஷால், மதிச்சியம் பாலா (ஜி.நந்தபாலா முருகன்) ; பாடலாசிரியர்: சினேகன்

2. தாயி பாடல் (பாரம்பரிய வகை டியூன்) – பாடியவர்: மதிச்சியம் பாலா(ஜி.நந்தபால முருகன்), குரு அய்யாதுரை, சிந்துரி விஷால் ; பாடலாசிரியர்: சினேகன்

3. தாயி பாடல் (திகில் வகை டியூன்) – பாடியவர்: குரு அய்யாதுரை ; பாடலாசிரியர்: சினேகன்

4. மெமெண்டோ மோரி – பாடகர் & பாடலாசிரியர்: மதுரை சோல்ஜர் (சியான், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி

5. மியூட்டேசன் தீம் (தி வில்லேஜ் டைட்டில் டிராக்) – பாடியவர்: சிந்துரி விஷால் , குரு அய்யாதுரை ; பாடலாசிரியர்: சினேகன்

6. கண்ணுறங்கு கண்மணியே (சகோதரியின் மரணப் பாடல்) – பாடியவர்: கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ; பாடலாசிரியர்: சினேகன்

7. மண்ண வெட்டி (தொழிலாளர் பாடல்) – பாடியவர்: குரு அய்யாதுரை ; பாடலாசிரியர்: குரு அய்யாதுரை

8. ஜிகும்-வா – பாடியவர்: டி.பிரதிமா பிள்ளை , ஷில்பா நடராஜன் ; பாடலாசிரியர்: ஷில்பா நடராஜன்

9. நீல குகை

10. வேட்டையன் தீம்

11. தாயி பாடல் (பேய் டுயூன்) – பாடியவர்: கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ; பாடலாசிரியர்: சினேகன்

தி வில்லேஜ் சீரிஸ், அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ்குப்தாவின் ஆகியோர் எழுதிய கிராஃபிக் ஹாரர் நாவலிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இந்த கிராஃபிக் திகில் நாவல் nயாழி ட்ரீம் ஒர்க்ஸ் வெளியீடாக வெளிவந்தது.

தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஒருவனின் அபாரமான போராட்டக் கதையைச் சொல்வது தான் தி வில்லேஜ் சீரிஸ்.
ஸ்டுடியோ சக்தி நிறுவனத்தின் சார்பில், இந்தத் தொடரை B.S. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

சீரிஸுக்கான திரைக்கதையை மிலிந்த் ராவ், தீரஜ் வைத்தி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்தத் சீரிஸில், பிரபல தமிழ் நடிகர் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என். சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நவம்பர் 24 தேதி முதல் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

தி வில்லேஜ்

11 songs out from The Village web series

ஜிகர்தண்டா XX – நடிகவேள் SJ சூர்யா..; லாரன்ஸ் & கார்த்திக் சுப்புராஜ் MY BOYS.; ரஜினி பாராட்டு

ஜிகர்தண்டா XX – நடிகவேள் SJ சூர்யா..; லாரன்ஸ் & கார்த்திக் சுப்புராஜ் MY BOYS.; ரஜினி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து இயக்கியிருந்த இந்த படத்தில் லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சஜயன், விது, இளவரசு, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க திரு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தனுஷ் இந்த படத்தை பாராட்டி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் ‘ஜிகர்தண்டா2’ படம் பார்த்து இந்த படம் ஒரு குறிஞ்சி மலர் எனப் பாராட்டி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

அதில்… இன்றைய திரையுலகில் நடிகவேள் எஸ் ஜே சூர்யா என பாராட்டியுள்ளார்.

மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இது ஒரு மகுடம் எனவும் பாராட்டி இருக்கிறார். சந்தோஷ் நாராயண இசையை குறிப்பிட்டு தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என நிரூபித்துள்ளார் என பாராட்டியுள்ளார்.

இதுவரை பார்க்காத லாரன்ஸ் இந்த படத்தில் பார்க்கிறோம். மேலும் கலை இயக்குனர், திலீப் சுப்புராயனின் சண்டைக்காட்சி ஆகியவற்றையும் குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தை நினைத்து பெருமைப்படுவதாக குறிப்பிட்டு ப்ரவுட் ஆஃப் யூ மை பாய் என தெரிவித்துள்ளார்.

My boys Rajini praises Jigarthanda xx movie team

ரஜினியின் பாராட்டு அறிக்கை இதோ

ரஜினியின் பாராட்டு அறிக்கை

‘கிடா’ படம் சூப்பராக இருந்தும் தியேட்டர் கிடைக்கல.; இயக்குனர் ஆதங்கம்.! மக்கள் ஆதரவளிக்கலாமே.!?

‘கிடா’ படம் சூப்பராக இருந்தும் தியேட்டர் கிடைக்கல.; இயக்குனர் ஆதங்கம்.! மக்கள் ஆதரவளிக்கலாமே.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளி வெளியீடாக நவம்பர் 11ஆம் தேதி ரா வெங்கட் என்பவர் இயக்கிய ‘கிடா’ படம் வெளியானது.

இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே சினிமா பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி போடப்பட்டது. அப்போதே ‘கிடா’ படத்தை பத்திரிக்கை விமர்சகர்கள் கொண்டாடினர்.

இந்த படத்தில் பூ ராம் & காளி வெங்கட் உள்ளிட்டோ நடித்திருந்தனர்.

தீபாவளிக்கு புத்தாடை வாங்கி கேட்கும் ஒரு பேரனின் ஆசையை நிறைவேற்ற தாத்தா பாட்டி படும் சிரமங்களை உணர்வுபூர்வமாக சொல்லி இருந்தார் இயக்குனர் ரா வெங்கட்.

இத்துடன் கறி வெட்டும் தொழிலாளியாக காளி வெங்கட் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார்.

நம் FILMISTREET இணையதளத்திலும் ‘கிடா’ படத்திற்கு சிறப்பான விமர்சனம் கொடுத்திருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எனவே இயக்குனர் தன் படைப்பின் மீது நம்பிக்கை வைத்து ரிலீசுக்காக காத்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு குறைந்தபட்ச தியேட்டர்களே தமிழகத்தில் கிடைத்தன.

அப்படி இருந்தும் நிறைய திரையரங்குகளில் கிடா படத்திற்கு குறைந்த எண்ணிக்கையில் ரசிகர்கள் வந்ததால் காட்சிகள் நிறுத்தப்பட்டது. இது குறித்து இந்த படத்தின் இயக்குனர் ரா வெங்கட் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில்.. “என் நண்பர்கள் இருவர் கிடா படம் பார்க்க சென்னை காசி டாக்கீஸ் போயிருக்கிறார்கள். கூடவே ஒரு எட்டு பேரும் கிடா படம் பார்க்க போயிருக்காங்க.

ஆனால் தியேட்டர் நிர்வாகம் 15 பேர் இருந்தால் தான் படம் போடுவோம் என்றிருக்கிறார்கள். நண்பர்கள் பரவாயில்லங்க பதினைஞ்சு டிக்கெட் தானே. நாங்களே இன்னும் அஞ்சு டிக்கெட் எடுக்கிறோம்னு சொல்லியும் படம் போடல.

ஷோ கேன்சல்… எங்கோ ரிவியூ படிச்சிட்டு படம் பார்க்க வர்றவங்ககிட்ட என்ன பதில் சொல்றதுன்னு எனக்கும் தெரியல.. நல்ல படம்னு தேடி வந்தோம்னு சொல்றாங்க.. ஆனா ஷோ கேன்சல்.. இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் சின்னபடங்கள் வருதுன்னு நீங்க சொல்ல வர்றது தெரியுது.. ஆனா ஆதங்கத்த எங்க கொட்டுறது.? அதான் இத ஷேர் பண்றேன்..

மதுரையில ஒரு ஷோ தான் குடுத்தாங்க அங்கயும் இப்ப ஷோ காட்டல. மக்களே உங்களின் அருகே எதோ ஒரு ஷோ கிடா ஓடுச்சுன்னா போய் பாருங்க.. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.. நன்றி,” என பதிவிட்டுள்ளார் ரா வெங்கட்.

இது போன்ற நல்ல படைப்புகளுக்கு மக்களாகிய நாம் ஆதரவளித்தால் மட்டுமே நல்ல கலைஞர்களும் நல்ல படைப்புகளும் வெளியாகும். எனவே தியேட்டரில் சென்று ‘கிடா’ படத்தைப் பார்த்து ஆதரவு கொடுப்போம்.

கிடா

Kida movie director Venkat emotional statement

More Articles
Follows