‘தளபதி 68’ படக்கதை இதானா.? விஜய்க்காக ஏஐ தொழில்நுட்ப பணியில் வெங்கட் பிரபு

‘தளபதி 68’ படக்கதை இதானா.? விஜய்க்காக ஏஐ தொழில்நுட்ப பணியில் வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் இசை அமைத்து வருகிறார்.

இதில் விஜய் உடன் பிரசாந்த், மோகன், ஜெயராம், பிரபுதேவா, சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்ற வருகிறது. இந்த படமும் ‘மாநாடு’ படத்தைப் போல டைம் ட்ராவல் கதை என தெரியவந்துள்ளது.

இந்த படத்தில் விஜய் இரண்டு விதமான தோற்றங்களில் தோன்ற உள்ளார்.

24 வயது மற்றும் 54 வயது ஆகிய ஙயதில் விஜய் நடிக்கிறாராம். இது ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட உள்ளது.

எனவே தான் அமெரிக்கா சென்று அங்கு ஸ்கேனிங் பணியில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் ஈடுபட்டனர் என்பது தெரிய வந்துள்ளது.

Venkat Prabu used AI technology for Thalapathy 68

OFFICIAL விக்ரம் – ரஞ்சித் இணைந்த ‘தங்கலான்’ பட ரிலீஸ் அப்டேட்

OFFICIAL விக்ரம் – ரஞ்சித் இணைந்த ‘தங்கலான்’ பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களை தொடர்ந்து ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார் பா ரஞ்சித்.

சீயான் விக்ரம் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க முக்கிய வேடத்தில் பசுபதி நடித்திருக்கிறார்.

ஸ்டூடியோ கீரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படம் ‘கேஜிஎஃப்’ பாணியில் கோலார் தங்கவயல் பற்றிய கதைக்களம் ஆகும்.

‘தங்கலான்’ பட டீசர் நவம்பர் 1ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 27ஆம் தேதி மாலை 5 மணிக்கு ‘தங்கலான்’ பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்து ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை நடிகர் விக்ரம் வெளியிடுவார் எனவும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

‘தங்கலான்’ டீசர் குறித்து ஜிவி பிரகாஷ் சொல்லும்போது சம்பவம் உறுதி என தெரிவித்திருந்தார். அதுபோல ‘தங்கலான்’ படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு புதிய மைல் கல்லை எட்டும் என்றும் விக்ரம் நடிப்புக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் எனவும் தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்திருந்தார்.

மேலும் திட்டமிட்ட பட்ஜெட்டை விட மிகப் பெரிய பட்ஜெட்டில் ‘தங்கலான்’ உருவாகி உள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Thangalaan release date will be unveiled by Vikram

கமல் பிறந்தநாளை முன்னிட்டு ‘நாயகன்’ ரீ-ரிலீஸ்..; அட புதுப்பட ரேஞ்சுக்கு இருக்கே.!

கமல் பிறந்தநாளை முன்னிட்டு ‘நாயகன்’ ரீ-ரிலீஸ்..; அட புதுப்பட ரேஞ்சுக்கு இருக்கே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில வருடங்களாக கமல்ஹாசனின் உத்தமவில்லன், விஸ்வரூபம் 2, தூங்காவனம் உள்ளிட்ட பல படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தன.

எனவே கமல் பீல்டு அவுட் ஆகிவிட்டார் என பரவலான பேச்சு எழுந்தது.

ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான ‘விக்ரம்’ படம் தமிழ் சினிமாவில் புதிய சாதனையை படைத்தது. மீண்டும் கமல் தன் விஸ்வரூபத்தை எடுக்க ஆரம்பித்தார்.

விரைவில் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம், வினோத் இயக்கத்தில் ஒரு படம், ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம் என நிறைய படங்களை ஒப்புக்கொண்டு நடிக்க உள்ளார்.

ஒரு பக்கம் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் & சிலம்பரசன் நடிக்கும் படம் என தயாரித்தும் வருகிறார் கமல்.

இதனிடையில் கமல் ரசிகர்களுக்கு விருந்து அளிக்க ‘வேட்டையாடு விளையாடு’ ரீ-ரிலீஸ் செய்திருந்தனர்.

ஒரு புது படம் ரிலீசானால் ரசிகர்கள் மனநிலை எப்படி இருக்குமோ அதுபோல உற்சாகமான வரவேற்பு இருந்தது.

இந்த நிலையில் தற்போது ‘நாயகன்’ படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.்கமல் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி வரும் நிலையில் இதனை முன்னிட்டு நவம்பர் 3 தேதி ‘நாயகன்’ ரீ-ரீலிஸ் ஆகிறது.

ஒரு புது படத்தைப் போல 130+க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இது வெளியாகியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

36 வருடங்கள் ஆன பின்னும் மணிரத்னம் – கமல் – இளையராஜா இணைந்த ‘நாயகன்’ படம் இன்றளவிலும் மைல்கல்லாக உள்ளது. எனவே ரீ-ரிலீஸ் நிச்சயமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என நம்பலாம்.

நாயகன்

Will Kamals Nayagan rerelease create magic in kollywood

ரவி – இந்துஜா இணையும் RT4GM.; தெலுங்கில் செல்வராகவன் அறிமுகம்

ரவி – இந்துஜா இணையும் RT4GM.; தெலுங்கில் செல்வராகவன் அறிமுகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிக்கூட்டணியான மாஸ் மகாராஜா ரவி தேஜா மற்றும் மாஸ் மேக்கர் கோபிசந்த் மலினேனி நான்காவது முறையாக இணைந்துள்ளனர்.

இப்படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் #RT4GM படத்தை, பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

திரையில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரவி தேஜா இப்படத்தில் நடிக்கிறார்.

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, செல்வராகவன், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் இதர படக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில், இன்று பூஜையுடன் படம் பிரம்மாண்டமாக துவங்கியது. இப்படத்தின் ஸ்கிரிப்டை அல்லு அரவிந்த் தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தார்.

படத்தின் முதல் காட்சிக்காக ஆன்மோல் சர்மா கேமராவை இயக்க, VV விநாயக் கிளாப்போர்டு அடித்தார். K ராகவேந்திரா ராவ் முதல் காட்சிக்கு இயக்கம் செய்து கௌரவித்தார்.

நடிகரும் திரைப்படத் இயக்குநருமான செல்வராகவன், தெலுங்கு மொழியில் இப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார்.

RT4GM

இப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதாநாயகி பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

#RT4GM திரைப்படம் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த திரைக்கதையுடன் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர் ஆகியோர் மிகப்பெரிய பட்ஜெட்டில் திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர், மேலும் திரைத்துறையின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களின் கைவண்ணத்தில் உயர்தரமான படைப்பாக இப்படம் உருவாகவுள்ளது.

முன்னணி இசையமைப்பாளர் S தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ரவி தேஜாவுடன் தமனுக்கு இது 12வது படம், கோபிசந்த் மலினேனியுடன் 7வது படமாகவும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூலம் 4வது படமென்பதும் குறிப்பிடத்தக்கது.

பிகில், மெர்சல் போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும், சமீபத்தில் இந்தியாவெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய ஜவான் படத்தினை காட்சிப்படுத்திய திறமை மிகு ஒளிப்பதிவாளரான GK விஷ்ணு, #RT4GM இன் மாபெரும் உலகத்தை காட்சிப்படுத்தவுள்ளார்.

தேசிய விருது பெற்ற டெக்னீஷியன் நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, AS பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். வசனங்களைச் சாய் மாதவ் புர்ரா எழுதியுள்ளார், மயூக் ஆதித்யா, ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, M விவேக் ஆனந்த் மற்றும் ஸ்ரீகாந்த் நிம்மகத்தா ஆகியோர் மற்ற எழுத்தாளர்களாக பணியாற்றுகின்றனர்.

RT4GM

நடிகர்கள்: ரவி தேஜா, செல்வராகவன், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு:
கதை மற்றும் இயக்கம்: கோபிசந்த் மலினேனி
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர்
பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்
CEO: செர்ரி
நிர்வாக தயாரிப்பாளர்: தினேஷ் நரசிம்மன்
இசை: S தமன்
ஒளிப்பதிவு : GK விஷ்ணு
எடிட்டர்: நவீன் நூலி
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
தயாரிப்பு வடிவமைப்பாளர்: AS.பிரகாஷ்
ஆடை வடிவமைப்பாளர்: அனிருத்/தீபிகா
எழுத்தாளர்கள்: மயூக் ஆதித்யா, ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, M விவேக் ஆனந்த் மற்றும் ஸ்ரீகாந்த் நிம்மகத்தா
விளம்பர வடிவமைப்பாளர்: கபிலன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங்க் : ஃபர்ஸ்ட் ஷோ
பப்ளிசிட்டி : பாபா சாய் (மேக்ஸ் மீடியா)

RT4GM

Ravi Teja Selvaragavan starrer RT4GM Launched

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே வாரத்தில் அதிக வசூலை அள்ளிய ‘லியோ’

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே வாரத்தில் அதிக வசூலை அள்ளிய ‘லியோ’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘லியோ’.

இந்த படத்திற்கு அதிகாலை காட்சிகள் வேண்டும் என ரசிகர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

ஆனால் லியோ படத்திற்கு கேரளா ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு காட்சிகள் தொடங்கப்பட்டது.

படத்திற்கு ஒரு பக்கம் கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும் 5 நாட்கள் விடுமுறை தினம் ஆன நிலையில் உலகம் முழுவதும் வசூல் வேட்டை ஆடி வருகிறது ‘லியோ’.

தற்போது படம் வெளியாகி ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி ரூ.461 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிகமான வசூலித்த படங்களில் லியோ முதலிடத்தில் இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

லியோ

Leo highest collection of Tamil cinema in 1 week

விஜய்யை அடுத்து ரஜினி – கமல் – அஜித்துடன் மீண்டும் இணையும் திரிஷா

விஜய்யை அடுத்து ரஜினி – கமல் – அஜித்துடன் மீண்டும் இணையும் திரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை திரிஷா. இவர் 40 வயதை நெருங்கினாலும் தற்போதும் தமிழ் தெலுங்கு படங்களில் முன்னணி ஹீரோயினாக கருதப்படுகிறார்.

காரணம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கும் த்ரிஷாவின் அழகும் திறமையும் தான்.

‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் சரி பட பிரமோஷனலும் சரி ஐஸ்வர்யா ராயை விட த்ரிஷா அழகாக காணப்பட்டார் என நாடெங்கிலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

சமீபத்தில் த்ரிஷா நடிப்பில் ‘லியோ’ மற்றும் ‘தி ரோடு’ ஆகிய படங்கள் வெளியானது.

இந்த நிலையில் அடுத்த வருடம் அஜித்துடன் விடாமுயற்சி, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் & கதையின் நாயகியாக த்ரிஷா 2 படங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அஜித்துடன் ஜி, கிரீடம், கமலுடன் மன்மதன் அம்பு, ரஜினியுடன் பேட்ட ஆகிய படங்களில் த்ரிஷா நடித்திருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆக.. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு த்ரிஷாவின் கால்ஷீட் புக்கிங் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Actress Trisha movies line ups updates

More Articles
Follows