தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் ஆகியோர் இணைந்துள்ள படம் ‘இரும்புத்திரை’.
ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் எடிட்டராக பணிபுரிந்து வருகிறார். யுவன் இசையமைத்து வரும் இப்படம் 2018 ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ளது.
‘இரும்புத்திரை’ குறித்து இயக்குநர் மித்ரன் கூறியிருப்பதாவது:
‘இரும்புத்திரை’ கதையை முதலில் விஷாலிடம் சொல்லும் போது, கதை பிடித்தால் வேறு யாரையாவது வைத்து தயாரிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் கேட்டார். கதையைக் கூறி முடித்தவுடன் நானே நடிக்கிறேன். ஆனால் வில்லனாக நடிக்கிறேன் என்றார்.
எனவே விஷாலுக்காக நாயகன் கதாபாத்திரத்தை ராணுவ வீரராக மாற்றினேன்.
சமூக வலைதளத்தில் நமக்கு தெரியாமல் நடக்கும் நிறைய மர்மங்களைப் பற்றியும் அது ஏற்படுத்தும் விளைவு பற்றியும் இப்படத்தில் தெரிவித்துள்ளேன்.
இன்னும் நாம் அறியாத பல விஷயங்களை பற்றிப் பேசும் படமாக இருக்கும்.
படத்தில் சமந்தாவுக்கு முக்கியமான கதாபாத்திரம். அதைப் பற்றி இப்போது கூற முடியாது.
விஷால் சாரிடம் பிடித்தது அவருடைய பன்முகத் திறமை.
ஒரே நேரத்தில் இங்கு படத்தில் நடித்துக்கொண்டிருப்பார் பின்பு நடிகர் சங்க வேலை, தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்து, செக் கையெழுத்திடுதல் என ஒரு மனிதனால் இத்தனை வேலைகளைச் செய்ய முடியுமா என்று வியக்க வைப்பார்.” இவ்வாறு மித்ரன் தெரிவித்திருக்கிறார்.
Mithran talks about Vishal hardwork and Irumbu Thirai movie