தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டியும், உலக அமைதிக்காகவும் அவரது அண்ணன் சத்யநாராயணா தமிழக கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்.
கும்பகோணம், திருநாகேஸ்வரம் மற்றும் தஞ்சை கோயில்களில் அவர் வருகை தந்தபோது சத்யநாராயணா அளித்த பேட்டியை நாம் முன்பே பார்த்தோம்.
இந்நிலையில் கபாலி வெளியாகும் என கூறப்படும் ஜூலை 15ம் தேதியில்தான் மீண்டும் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைக்கு செல்லவிருக்கிறாராம்.
இதுகுறித்து சத்யநாராயணா கூறியதாவது….
“உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றிருக்கிறார்.
மீண்டும் பரிசோதனை செய்வதற்கு ஜூலை 15ம் தேதி அப்பாயிண்மெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
விரைவில் அவர் திரும்பி வருவார். மக்கள் ரஜினியின் வருகையை எதிர் நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவருக்காக உயிரை கொடுக்கவும் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். ரஜினியை வாழ வைத்து கொண்டிருப்பது தமிழக மக்கள்தான்.
அதற்கு ரஜினி எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
மேலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேட்டதற்கு…
“அரசியலுக்கு வருவதை பற்றி ரஜினிகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும்”. என்று தெரிவித்தார்.