தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சில வருடங்களுக்கு முன்பு வரை இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் ஷங்கரிடம் இருந்தது.
ஆனால் அவரை மிஞ்சும் வகையில் பாகுபலி, பாகுபலி 2 என பிரம்மாண்ட படங்களை எடுத்து, வசூலிலும் மிரட்டிவிட்டார் இயக்குநர் ராஜமௌலி.
எனவே தற்போது ரஜினியை வைத்து இயக்கிவரும், 2.0 படத்தில் மிகப்பிரம்மாண்டத்தை காட்ட முடிவு செய்து, அதற்கான பணியில் முழு மூச்சியில் இறங்கிவிட்டாராம் ஷங்கர்.
எனவே படத்தின் ரிலீஸையும் இந்தியாவே வியக்கும் வகையில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம் இதன் தயாரிப்பு நிறுவனம் லைக்கா.
அடுத்த 2018 வருடம் ஜனவரி 26ஆம் தேதி இப்படத்தை உலகம் முழுவதும் 15 மொழிகளில் 80க்கும் அதிகமான நாடுகளில் வெளியிட உள்ளனர்.
அன்றைய தினமே சீனாவிலும் வெளியிட திட்டமிட்டு இருப்பதால், உலகம் முழுவதும் தியேட்டர்களின் எண்ணிக்கை மட்டும் 15,000த்தை தாண்டும் என சொல்லப்படுகிறது.
Lyca production plans to release 2pointO movie in 15 languages