தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைக்கா நிறுவனம் சார்பில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இவ்வீடுகளை வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருந்தார்.
ஆனால் ரஜினி இலங்கை செல்லக்கூடாது என்று எதிர்ப்புகள் தமிழகத்தில் உருவாகியதால், தன் இலங்கை பயணத்தை ரத்து செய்து, அறிக்கை வெளியிட்டார் ரஜினி.
இந்நிலையில் இதுகுறித்து, லைக்கா நிறுவனத்தின் துனைத்தலைவர் பிரேம் சிவசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…
‘தமிழக அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினியின், இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசியல்வாதிகள் எதுவும் செய்யவில்லை.
நாங்கள் வழங்கப்போகும் வீடுகள் திட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை.
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்குதான் வீடுகளை வழங்க நினைத்தோம்.
மேலும் ரஜினியின் வருகையின்போது பல நலத்திட்டங்களை தொடங்க இருந்தோம்.
ஆனால் தற்போது ரஜினிகாந்துக்கு தர்மசங்கடமான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
எங்களது தொழில் போட்டியாளர்களும் எங்களுக்கு எதிரான கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர்.
ரஜினி கலந்துக் கொள்ளவில்ல என்பதால், தற்போது ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டோம்.
ஆனால் ஏப்ரல் 10ஆம் தேதி திட்டமிட்டபடி இலங்கை தமிழர்களுக்கு வீடு வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளனர்.
Lyca Cancelled the house donation function due to Rajinis decision in Srilanka issue