தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முதன்முறையாக கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் கடந்த 2016ல் வெளியானது.
இந்தியாவே இதுவரை கண்டிராத விளம்பர யுக்தியை கலைப்புலி தாணு கையாண்டு இருந்தார்.
படமும் இந்தியளவில் நல்ல வசூல் செய்திருந்தாக தாணு குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் கபாலி’ படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை திருப்பித் தரவில்லையெனில், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விநியோகஸ்தர் செல்வக்குமார் என்பவர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ‘கபாலி’ குறித்த விநியோகஸ்தர் செல்வக்குமாரின் குற்றச்சாட்டுகளுக்கு தயாரிப்பாளர் எஸ்.தாணு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
அவர் இந்த சந்திப்பில் கூறியதாவது:-
‘கபாலி’ மாபெரும் வெற்றி படம். சென்னையில் மட்டுமே ரூ.13 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
அந்த படம் நஷ்டம் எனக் கூறுவது முற்றிலும் பொய்.
ஜி.பி.செல்வக்குமாருக்கும், ‘கபாலி’க்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
அவர் கபாலி படத்தை வாங்கவே இல்லை. விநியோகஸ்தர் வேணுகோபால் என்பவருக்கு சாட்சி கையெழுத்து போட வந்தவர் தான் செல்வக்குமார்.
வேணுகோபால் தான் வாங்கினார். அவருக்கும், எனக்குமான பணப் பரிவர்த்தனைகள் நேர்மையாக நடந்துள்ளன.
சேலத்தில் அவர் தியேட்டர் எடுத்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், அவருக்கு நான் ரூ 60 லட்சம் பணம் கொடுத்து உதவியிருக்கிறேன்.
Kabali is mega hit movie No loss in it says Producer Thanu