திரையுலகையே மிரள வைக்கும் கபாலி ரிலீஸ்…!

திரையுலகையே மிரள வைக்கும் கபாலி ரிலீஸ்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali movie stillsகபாலி படத்திற்கு சென்சார் கிடைத்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தயாரிப்பாளர் தாணு.

அந்த நொடி முதல், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் மீடியாவை ஆக்ரமித்து வருகின்றன.

ஒவ்வொரு மொழியிலும் எத்தனை அரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கிடக்கின்றனர்.

உலகம் முழுவதும் சுமார் 10,000 தியேட்டர்களில் இப்படம் வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதுவரை தமிழ் மொழியே தெரியாத நாடுகளிலும் இப்படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.

இதனால் கபாலி ரிலீஸை திரையுலகினரே ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

கபாலி கன்பார்ம் ஆச்சு…. தனுஷ் படத்தின் ரிலீசும் உறுதியானது.?

கபாலி கன்பார்ம் ஆச்சு…. தனுஷ் படத்தின் ரிலீசும் உறுதியானது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor dhanushகபாலி படத்திற்கு முன், கபாலி படத்திற்கு பின் என படங்களின் ரிலீசை பிரித்து விடலாம்.

அப்படி ஒரு எதிர்பார்ப்பின் உச்சமாக சுனாமி அலையை எழுப்பியது கபாலி.

கபாலி படம் ஜீலை இறுதிக்கு தள்ளிப்போகவே, இம்மாத முதல் பாதியில் மட்டும் பத்து படங்கள் வெளியாகிவிட்டன.

தற்போது கபாலி ஜீலை 22ஆம் தேதி ரிலீஸ் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனவே நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த தனுஷின் தொடரி படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

ஆந்திராவில் அதிக விலைக்கு போன சூர்யாவின் சிங்கம் 3

ஆந்திராவில் அதிக விலைக்கு போன சூர்யாவின் சிங்கம் 3

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

s3 movie stillsதமிழகத்தை போன்றே ஆந்திராவிலும் சூர்யாவிற்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.

எனவே ஆந்திராவிலும் இவரது படங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

இவர் தற்போது ஹரி இயக்கத்தில் எஸ் 3 படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது விசாகபட்டினத்தில் இதன் சூட்டிங் நடந்து வருகிறது.

இந்நிலையில் இதன் தெலுங்கு உரிமையை தயாரிப்பாளர் மல்காபுரம் சிவகுமார் என்பவர் ரூ. 18 கோடிக்கு வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அழகான நயன்தாராவுக்கு ஜோடி கிடையாதாம்..!

அழகான நயன்தாராவுக்கு ஜோடி கிடையாதாம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress nayantharaநயன்தாராவின் கால்ஷீட் கிடைக்காதா? என ஒவ்வொரு ஹீரோக்களும் காத்திருக்க, ஹீரோவே வேண்டாம் என சோலாவாக இறங்கியிருக்கிறார் நயன்தாரா.

தற்போது இயக்குனர் சற்குணம் தயாரிக்கும் டோரா படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

தாஸ் ராமசாமி இப்படத்தை இயக்கி வருகிறார்.

இதில் நயன்தாராவுடன் போலீஸ் அதிகாரியாக ஹரிஷ் உத்தமன் நடிக்க, முக்கிய வேடத்தில் தம்பி ராமையா நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எதையும் விடாத கபாலி… முதன்முறையாக தங்கத்தில் தலைவர்..!

எதையும் விடாத கபாலி… முதன்முறையாக தங்கத்தில் தலைவர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajiniஉலக திரையுலக வரலாற்றில் இப்படியொரு புரோமோசன் வேறு எந்த படத்திற்காகவது கிடைக்குமா? எனத் தெரியவில்லை.

அப்படியான முதன்முறை சாதனைகளை ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி நிகழ்த்தி வருகிறார்.

ஏர் ஏசியா விமான விளம்பரம், பைவ் ஸ்டார் சாக்லேட் விளம்பரம், மலேசியாவில் நடைபெறவுள்ள கபாலி மாரத்தான் போட்டி, ஏர்டெல் விளம்பரம் என விதவிதமான புரமோஷன்களில் களை கட்டி வருகிறது.

இதனையடுத்து, பிரபல முத்தூட் நிறுவனம் ரஜினியின் ‘கபாலி’ உருவத்தை தங்கள் தங்க நாணயங்களில் பதிக்க திட்டமிட்டுள்ளனர்.

தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களில் சுமார் ரூ.40 கோடி மதிப்பில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘பிச்சைக்காரன்’ நாயகி சாதனா டைட்டஸின் அடுத்த படம்.!

‘பிச்சைக்காரன்’ நாயகி சாதனா டைட்டஸின் அடுத்த படம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சில கதாநாயகிகளுக்கு மட்டுமே அறிமுக படம் அசத்தல் ஆரம்பமாக இருக்கும்.

அப்படியான ஒரு நாயகிதான் ‘பிச்சைக்காரன்’ நாயகி சாதனா டைட்டஸ்.

அப்படியொரு ஒரு அருமையான படத்தில் அழகான நடிப்பை கொடுத்திருந்தார்.

இதனையடுத்து, அறிமுக இயக்குநர் சாய் சுதர்சன் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.

இதில் ஐடி துறையில் வேலை செய்யும் இளைஞராக நடிக்கிறார் கயல் சந்திரன்.

இவரின் சித்தப்பாவாக நடிக்கிறார் பார்த்திபன்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் ரகு கூறியதாவது…

”சிலை திருடும் கும்பலுக்கு தலைவனாக நடிக்கிறார் பார்த்திபன். பெரியளவில் ஒரு திருட்டை நடத்தும் போது நடக்கும் நிகழ்வுகளை காமெடியாக சொல்லி இருக்கிறோம்” என்றார்.

இதன் படப்பிடிப்பு ஜூலை 15ம் தேதி துவங்குகிறது.

More Articles
Follows