லேட்டா தொடங்கினாலும் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்.; அதிகாலை காட்சிகள் தேவையில்லை.. தாணு அதிரடி விளக்கம்

லேட்டா தொடங்கினாலும் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்.; அதிகாலை காட்சிகள் தேவையில்லை.. தாணு அதிரடி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோ மற்றும் வில்லன் என தனுஷ் இரு வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’.

இந்த படத்தை செல்வராகவன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை தாணு தயாரித்துள்ளார்.

செப்டம்பர் 29ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்திற்கு போதுமான புரமோஷன் இல்லை என தனுஷ் ரசிகர்கள் கூறி வந்தனர்.

ஆனால் திடீரென லேட்டாக தொடங்கினாலும் லேட்டஸ்டாக தொடங்கி அதிரடி ப்ரோமோஷன் செய்து வருகிறார் தாணு.

‘நானே வருவேன்’ பட தொடர்பான செய்திகள் வெளியாகி ட்ரெண்டிங்கில் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்த படத்திற்கு அதிகாலை காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அதிகாலை காட்சிகள் தேவையில்லை என தாணு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில்… “நான் தயாரித்த அசுரன் & கர்ணன்.. இரண்டையுமே நான் காலை 8 மணி காட்சிக்குத்தான் வெளியிட்டேன்.

தமிழகத்தில் சில ஊர்களில் மட்டும்தான் அதிகாலை 4 & 5 மணிக்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

மற்ற ஊர்களில் பொதுவாக 8 மணிக்கு தான் காட்சிகள் தொடங்குகின்றன.

அப்போதுதான், உலகம் முழுக்க அனைவராலும் ஒரே நேரத்தில் படத்தை பார்க்க முடியும்.

மற்றொரு காரணம்.. அதிகாலை 4 மணி காட்சிக்கு நள்ளிரவே திரையரங்குக்கு ரசிகர்கள் வந்துவிடுகின்றனர். அது தேவையில்லை என நினைக்கிறேன்.

எனவே தான் அதிகாலை 4 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது” என நியாயமான காரணத்தை கலைப்புலி எஸ் தாணு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Why early morning shows cancelled for Dhanush mivies

செல்வராகவன் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின்

செல்வராகவன் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் நடிப்பு..ஒரு பக்கம் இயக்கம் என பிசியாக இருந்து வருகிறார் செல்வராகவன்.

இவர் தனது தம்பி தனுஷை வைத்து தற்போது இயக்கியுள்ள படம் ‘நானே வருவேன்’. மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் செல்வராகவன்.

தனுஷ் இரு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இந்துஜா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

செப்டம்பர் 29ல் வரும் வியாழன் அன்று உலகம் முழுவதும் இப்படம்வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செல்வராகவன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இது நட்பு ரீதியான சந்திப்பு தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியான தருணம் ” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Tamilnadu CM Stalin surprise visit to Selvaraghavan home

படைப்பு சுதந்திரம் இல்லாமல் ஓடிடி பக்கம் சாயும் டைரக்டர் மாரி செல்வராஜ்.?!

படைப்பு சுதந்திரம் இல்லாமல் ஓடிடி பக்கம் சாயும் டைரக்டர் மாரி செல்வராஜ்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் படைப்பாளிகளுக்கு சுதந்திரம் இல்லை என பல ஆண்டுகாலமாகவே இயக்குனர்கள் சொல்லி வருகின்றனர்.

ஆனால் இதற்கு தீர்வு அளிக்கும் விதமாக சமீப காலமாக வெப் சீரிஸ் மூலமாக ஓடிடி தளங்கள் இவர்களுக்கு உதவியாக உள்ளன.

இந்த தளங்களில் தான் சொல்ல வரும் கருத்தை மிகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் சென்சார் போன்ற எந்த கட்-களும் இல்லாமல் எந்த காட்சிகளையும் நீக்காமல் இவர்களால் சொல்ல முடிகிறது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் தற்போது புதிதாக வெப்சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அதை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தன் கருத்தை முழுமையாக இந்த தளத்தில் சொல்ல முடியும் என நம்புகிறாராம் இயக்குனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தில் உதயநிதி, பகத்பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

மாமன்னன்

உதயநிதி தன் சொந்த பேனரில் இந்த படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mari Selvaraj will direct Web series for OTT

சிம்புவுக்கு கார்.. கௌதம் மேனனுக்கு பைக்.; கூல் சுரேஷுக்கு ஐசரி கணேஷ் கொடுத்த கிஃப்ட் இதோ..

சிம்புவுக்கு கார்.. கௌதம் மேனனுக்கு பைக்.; கூல் சுரேஷுக்கு ஐசரி கணேஷ் கொடுத்த கிஃப்ட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.

இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான நிலையில் இந்தப் படத்தின் வெற்றிக்காக பத்திரிகையாளர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர் படக்குழுவினர்.

செப்டம்பர் 24ல் சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவினர் வெ. த. கா. பட வெற்றி விழாவை கொண்டாடினர்.

கூல் சுரேஷ்

இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சுந்தர் சி நடிகர் வைபவ், மகத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனை கொண்டாடும் விதமாக இயக்குனர் கௌதம் மேனனுக்கு புல்லட் பைக் ஒன்றை பரிசாக கொடுத்தார் ஐசரி கணேஷ். இந்த பைக்கின் மதிப்பு இரண்டு லட்சம் இருக்கும் என்கிறார்கள்.

நடிகர் சிம்புவுக்கு 1 கோடி மதிப்பிலான சொகுசு கார் ஒன்றையும் ஐசரி கணேஷ் பரிசாக வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் பிரமோஷனுக்கு தீவிரமாக கடந்த 1 வருடமாக பணியாற்றிய கூல் சுரேஷிற்கு ஒன்றுமே கொடுக்கவில்லை என நெட்டிசன்கள் மற்றும் சிம்பு ரசிகர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

சிம்புவுக்கு கார்.. கௌதமுக்கு பைக் என்று கொடுத்தது போல அட்லீஸ்ட் கூல் சுரேஷ் அவர்களுக்கு ஒரு சைக்கிள் ஆவது கொடுத்திருக்கலாம் என நெட்டிசன்கள் மீம்ஸ் போட தொடங்கினர்.

கூல் சுரேஷ்

இந்த நிலையில் நடிகர் கூல் சுரேஷிற்கு ஐபோன் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

மேலும் கூல் சுரேஷ் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பான படங்கள் & வீடியோக்களை கூல் சுரேஷ் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூல் சுரேஷ்

Ishari Ganesh gifted IPhone to Cool Suresh for VTK success

கூல் சுரேஷுக்கு காஸ்ட்லி கிஃப்ட் தந்த ஐசரி கணேஷ் l VTK Success: Ishari Ganesh gifted Cool Suresh STR
❤‍? filmistreet??

https://youtube.com/shorts/hVEia-6MCUU?feature=share

சிம்பு பட தயாரிப்பாளரை பூஜை அறையில் வைத்து வணங்கும் கூல் சுரேஷ் VTK Simbu Cool Suresh Ishari Ganesh ? filmistreet??

https://youtube.com/shorts/96rP7BLuBhM?feature=share

வெங்கட்பிரபு இவ்ளோ சொல்றாரே.; விஜய் – அஜித் கொஞ்சம் கேட்டாதான் என்னவாம்.?

வெங்கட்பிரபு இவ்ளோ சொல்றாரே.; விஜய் – அஜித் கொஞ்சம் கேட்டாதான் என்னவாம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மங்காத்தா’ படம் நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு ஆகிய இருவரின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக அமைந்திருந்தது. இது நடிகர் அஜித்தின் 50 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து ‘மங்காத்தா 2’ ரெடி ஆகுமா? அந்த படத்தை இயக்குவது எப்போது? என பல கேள்விகளை இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் அஜித் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இதற்கு பலமுறை பதில் அளித்து விட்டார் வெங்கட் பிரபு.

தற்போது சமீபத்தில் “அஜித் விஜய் இருவரும் இணைந்து நடித்த சம்மதித்தால் நான் இயக்க தயாராக இருக்கிறேன். அது மங்காத்தா 2 படமாக இருக்கும். அதற்கான கதை ரெடியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

அஜித் விஜய் இருவரும் வழக்கம் போல மௌனம் காத்து வருகின்றனர்.

20 வருடங்களுக்கு முன்பு விஜய்யுடன் ‘ராஜாவின் பார்வையிலே.’ என்ற படத்தில் அஜித் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Will Ajith and Vijay listen Venkat Prabu request

உங்களை பார்க்க எனக்கு பிடிக்கல.; கமல் வார்த்தைக்கு மதிப்பளித்த பாரதிராஜா.?!

உங்களை பார்க்க எனக்கு பிடிக்கல.; கமல் வார்த்தைக்கு மதிப்பளித்த பாரதிராஜா.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆகஸ்ட் மாதம் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார் இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா.

சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற அவர் சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார்.

அப்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில் தான் வீடு திரும்பியதை கமல்ஹாசனுக்கு போன் செய்து தெரிவித்துள்ளார் பாரதிராஜா.

இது குறித்து கமல்ஹாசன் தன் ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளதாவது…

“நலம் பெற்று வீடு திரும்பிய திரு. பாரதிராஜா, அம்மகிழ்ச்சியான செய்தியை இன்று என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டார்.

மருத்துவமனையில் நலம் விசாரிக்கச் சென்றபோது, ஆஸ்பத்திரியில் உங்களைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை.. சீக்கிரம் வீடு திரும்புங்கள், நான் புறப்படுகிறேன் என்று சொன்னேன்.

Ok see you later for sure, Bye என்று ஆங்கிலத்தில் சொல்லி வழியனுப்பினார். சொன்ன வாக்கைக் காப்பாற்றிய என் தேனிக்கார நண்பருக்கு இந்தப் பரமக்குடியானின் வாழ்த்துக்கள்.

இவ்வாறு தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே & சிகப்பு ரோஜாக்கள் & ஒரு கைதியின் டைரி உள்ளிட்ட படங்களில் கமலஹாசன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamalhassan tweet about Bharathiraja

More Articles
Follows