தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினியை நேசிக்கும் அவரது ரசிகர்கள் அவர் உடல் நிலை சரியில்லாத போது அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.
அப்படிப்பட்ட ரசிகர்கள் கபாலி படத்தில் நெகட்டிவ்வான க்ளைமாக்ஸ் இருக்கும்போது விட்டு விடுவார்களா என்ன?
கபாலி ரிலீஸ் முதல் நாள் இடம் பெற்றிருந்த க்ளைமாக்ஸை மாற்ற சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
எனவே தற்போது மலேசிய காவல்துறையினரிடம் கபாலி சரணடைந்தார் என மாற்றம் செய்து திரையிட்டு வருகின்றனர்.
ஆனால் இக்காட்சி மலேசியாவில் மட்டும்தான் மாற்றமடைந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை மாற்றம் கொண்டு வரப்படவில்லை. ஒருவேளை தமிழகத்திலும் மாற்றம் செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
படத்தின் வெளியீட்டின் போதே செளந்தர்யா ரஜினி மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் க்ளைமாக்ஸை மாற்ற சொல்லியிருந்தார்கள்.
ஆனால் ரஞ்சித் பிடிவாதமாக இருந்து மாற்றாமல் இருந்தார்.
தற்போது ரசிகர்களுக்காக க்ளைமாக்ஸ் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.