தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்த மார்ச் 2018ல் ஒரு தமிழ் படம் கூட வெளியாகவில்லை.
தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஒட்டு மொத்த திரையுலகினரும் ஆதரவு கொடுத்துள்ளதால் பெரும்பாலான படங்கள் ரிலீசுக்கு தயாராகியும் வெளியாகவில்லை.
இந்நிலையில் பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகிய காலா திரைப்படம் அறிவித்தப்படி ஏப்ரல் 27ல் வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் இப்படத்தை வெளியிடும் லைகா நிறுவனம், தயாரிப்பாளர்கள் சங்க நடவடிக்கைக்கு நாங்கள் கட்டுபட்டு நடப்போம் என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் காவிரி நீர் விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால் கன்னட அமைப்பை சேர்ந்த வட்டாளு நாகராஜ் என்பவர் தலைமையில் ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் காலா படத்தை கர்நாடாகவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து வருகின்றனர்.
இதனால் காவிரி பிரச்சினையால் காலா ரீலீஸ் மேலும் சிக்கல்கள் உருவாகும் எனத் தெரிகிறது.
இதுவரை உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.
இதனால் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கடை அடைப்பு உள்ளிட்ட பல போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.