தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த்-தனுஷ்-ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள காலா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.
இதையடுத்து காலா படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசியபோது,
‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம்.
காவிரி மேலாண்மை பிரச்னையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல்படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு.” என ரஜினி பேசினார்.
காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது. கன்னட மக்கள் காலா படத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தற்ப்போது இப்படம் 130 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் காலா படத்தின் கர்நாடக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள சி நிறுவனத்தின் அலுவலகத்தை கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் சூறையாடி உள்ளனர்.
அங்கிருந்த காலா பேனர்களையும் அவர்கள் கிழித்துள்ளனர்.
இந்த படங்கள் வீடியோக்கள் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.