தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் இயக்கத்தில் ‛பொன்னியின் செல்வன்’ நாவல் அதே பெயரில் பிரம்மாண்டமான திரைப்படமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.
“பொன்னியின் செல்வன் பாகம்-1” செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
‘பொன்னியின் செல்வன் பாகம்-1” படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று செப்டம்பர் 6, 2022 மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கியது.
டிடி (திவ்யதர்ஷினி) மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
படத்தில் பங்குபெற்றுள்ள ஒவ்வொரு கலைஞர்களும் அரங்கத்திற்கு வந்து கொண்டு இருந்தனர்.
சரத்குமார் மணிரத்னம் சுஹாசினி பிரபு உள்ளிட்டோர் முதலில் வந்து விட்டனர்.
பின்னர் பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், ஜெயம் ரவி, துருவ் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஏஆர். ரஹ்மான், கிஷோர் உள்ளிட்டோர் வந்தனர். பின்னர் சீயான் விக்ரம் வந்தார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் வந்தபோது அரங்கம் அதிர்ந்தது. மணிரத்னத்தை கண்டதும் துள்ளி குதித்து ஓடி வந்து கட்டி பிடித்துக் கண்டார் ஐஸ்வர்யா ராய்.
8 மணியளவில் ரஜினிகாந்த் அரங்கத்திற்குள் வந்தார். அவரை கண்டதும் ரசிகர்கள் எழுப்பிய கரவொலி உற்சாகம் விண்ணைப் பிளந்தது.
ரஜினியை கண்டதும் ஐஸ்வர்யா ராய் கட்டி பிடித்துக் கொண்டார். பின்னர் ரஜினி காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இதன்பின்னர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா உள்ளிட்டோர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். பின்னர் ரஜினி மணிரத்னத்தை வாழ்த்தி இருக்கையில் அமர்ந்தார்.
Aishwarya Vikram Karthi Ravi got blessing from Rajini at PS1 Audio Launch