தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாள திரை உலகில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள ‘கார்கி’ படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் டூடி நிறுவனமும் சக்திவேலனின் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.
அடுத்த வாரம் ஜூலை 15ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இன்று சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு.
அப்போது ஐஸ்வர்ய லட்சுமி பேசும்போது.. ‛‛கார்கி’ படம் சாய்பல்லவி இல்லாமல் சாத்தியமில்லை. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
மேலும் படத்தின் ரிலீஸ் தாமதம் குறித்தும் படத்திற்காக தான் இழந்த பணம் குறித்தும் தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும் பேசும்போது
ஐஸ்வர்ய லட்சுமி கண் கலங்கினார்.
இதனால் அருகில் இருந்த சாய் பல்லவி மற்றும் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் ஆகியோர் அவரை சமாதானம் செய்தனர்.
கூடுதல் தகவல்..
‘ஆக்ஷன்’ உள்ளிட்ட ஓரிரு தமி்ழ் படங்களில் நடித்துள்ளார் கேரளத்து நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி.
மேலும் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
Aishwarya lakshmi cried at the gargi press meet