எங்களைப் பாதுகாத்த காஷ்மீருக்கு நன்றி.; கமல் – சிவகார்த்திகேயன் பட இயக்குநர் பதிவு

எங்களைப் பாதுகாத்த காஷ்மீருக்கு நன்றி.; கமல் – சிவகார்த்திகேயன் பட இயக்குநர் பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்துக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் .

இப்படத்திற்கு ‘எஸ்கே21’ என்று அழைக்கப்படும்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருகிறார்.

சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 75 நாட்களாக ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தற்போது ‘எஸ்கே21’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ‘மீண்டும் சந்திப்போம், காஷ்மீர்! எங்களை பாதுகாத்ததற்கு நன்றி. இந்த 75 நாட்கள் படப்பிடிப்பும் கனவு போல இருக்கிறது. படக்குழு அயராத உழைப்பும், காஷ்மீர் காவல்துறை, கமல்ஹாசன், எங்கள் ஹீரோ சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் ஆகியோரது ஆதரவும்தான் இதனை சாத்தியமாக்கியுள்ளது” என்று
கூறியுள்ளார்.

எஸ்கே21

Sivakarthikeyan’s sk21 movie 75 days kashmir schedule shoot wrapped

‘ஜவான்’ ட்ரைலரை வெளியிட துபாய் பறக்கும் ஷாருக்கான் & படக்குழு

‘ஜவான்’ ட்ரைலரை வெளியிட துபாய் பறக்கும் ஷாருக்கான் & படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’.

இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் நடிகர்கள் ஷாருக்கான், விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் அனிரூத், இயக்குனர் அட்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், ‘ஜவான்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடத்தில் நடைபெறவுள்ளது.

Shahrukh Khan & crew fly to Dubai to release ‘Jawan’ trailer

‘ஜெயிலர்’ போல மல்டி ஸ்டார்ஸ்.? ‘தலைவர் 170’ படத்தில் ‘பாகுபலி & அநீதி’ பிரபலங்கள்

‘ஜெயிலர்’ போல மல்டி ஸ்டார்ஸ்.? ‘தலைவர் 170’ படத்தில் ‘பாகுபலி & அநீதி’ பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் சமீபத்தில் வெளியாகி உலகளவில் ரூ 550 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் ரஜினிகாந்த்.

சமீபத்தில் இந்தப் படத்திற்கான பூஜை சென்னையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றதாக வந்த தகவல்களை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

லைக்கா தயாரிக்கும் இந்த படத்தை ‘ஜெய்பீம்’ புகழ் ஞானவேல் இயக்க உள்ளார் .

இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியார் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மேலும் பாகுபலி வில்லன் ராணா மற்றும் சார்பட்டா பரம்பரை & அநீதி படப் புகழ் துஷாரா விஜயன் ஆகியோரும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

Rana and Dushara Vijayan is part of Thalaivar 170 movie.?

தவறாக நினைக்க வைத்து இருந்தால் மன்னிச்சிடுங்க… – குஷ்பூ

தவறாக நினைக்க வைத்து இருந்தால் மன்னிச்சிடுங்க… – குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் குஷ்பூ.

இவர் தற்போது விஜய் ஸ்ரீ இயக்கி வரும் ‘ஹரா’ படத்தில் மோகன் உடன் இணைந்து நடித்து வருகிறார். இவருக்கான காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை.

இந்த நிலையில் குஷ்பூ ஓரிரு தினங்களுக்கு முன் தலைமுடியை வெட்டி குட்டையாக்கிய போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

உடனே பலரும் புதிய படத்தின் தோற்றமா? அல்லது முடியை வெட்டி விட்டீர்களா ? கேள்வி கேட்டனர்.

இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள குஷ்பு வெளியிட்ட பதிவில்..

“நான் தலைமுடியை குட்டையாக வெட்டிக்கொண்டதாக நினைத்து நிறைய பேர் எனக்கு குறுந்தகவல்கள் அனுப்பினர். நான் அதை ஒரு போதும் செய்ய மாட்டேன்.எனது புதிய படத்தின் தோற்றத்துக்காக அப்படி குட்டையான தலைமுடி வைத்து பார்க்கப்பட்டது.

தலைமுடியை ஒருபோதும் வெட்ட மாட்டேன். உங்கள் அன்புக்கு நன்றி.

எனது முந்தையை பதிவு உங்களை தவறாக நினைக்க வைத்து இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் குஷ்பூ.

Khushboo apology for her recent photo shoot

ரஜினி டயலாக்கை பதிவிட்டு இன்ஸ்டாவில் இணைந்த நயன்தாரா

ரஜினி டயலாக்கை பதிவிட்டு இன்ஸ்டாவில் இணைந்த நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக, இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார்.

நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நொடியில், உலகம் முழுவதிலிருந்து, ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

தென்னிந்திய திரையுலகில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்தவர் “சந்திரமுகி” படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, அவர் தொடந்து நடித்த அனைத்துப் படங்களும் ப்ளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன.

ரஜினி, விஜய், அஜித், தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் என சூப்பர்ஸ்டார் நடிகர்களின் முதல் சாய்ஸாக மாறினார் நயன்தாரா. முன்னணி டாப் நடிகர்கள் அனைவருடனுடன் இணைந்து ப்ளாக்பஸ்டர் படம் தந்த பெருமை கொண்ட நயன்தாரா, தென்னிந்திய சினிமாவிமன் நம்பர் 1 நடிகையாக புகழப்பட்டார்.

நாயகர்களுக்கு சமமாக பெண் கதாப்பாத்திரங்களை மையமாக கொண்ட கதைகளில் அவர் நடித்த, மாயா, அறம், கோலமாவு கோகிலா படங்கள் ப்ளாக்பஸ்டர் படங்களாக வெற்றி பெற்றன.

நாயர்களுக்கு இணையாக நயன்தாராவிற்கென தனி மார்க்கெட் உருவானது. அனைவராலும் லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டார் நயன்தாரா.

20 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய திரையுலகின் முடிசூடா ராணியாக விளங்கி வருகிறார் நயன்தாரா.

தற்போது பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் ஜோடியாக ‘ஜவான்’ படத்தில் நடித்து பாலிவுட்டில் கால் பதித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் பிரமாண்ட பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள ஜவான் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

தற்போது தன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவர்களுடன் தொடர்ந்து உரையாடும் நோக்கில் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

உலகம் முழுக்கவுள்ள ரசிகர்கள் நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்து அவரது சமூக வலைத்தள பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர்.

கபாலி படத்தில் ரஜினி பேசிய ‘நான் வந்துட்டேன் சொல்லு…’ என்ற டயலாக்கை பதிவிட்டுள்ளார் நயன்தாரா. அதில் தன்னுடைய இரட்டைக் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா

Lady Superstar Nayanthara joins to Instagram

மீண்டும் ரெட் கார்டு.? வேல்ஸ் நிறுவனம் தொடந்த வழக்கில் சிம்புவுக்கு வந்த சிக்கல்

மீண்டும் ரெட் கார்டு.? வேல்ஸ் நிறுவனம் தொடந்த வழக்கில் சிம்புவுக்கு வந்த சிக்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2021-ம் ஆண்டு “கொரோனா குமார்” என்ற படத்தில் நடிக்க நடிகர் சிம்பு ரூ. 9.5 கோடி சம்பளமாக பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ரூ. 4.5 கோடி வரையிலான தொகையை பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு, படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று வேல்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டு இருக்கிறது.

எனினும், “கொரோனா குமார்” படத்தில் நடிக்க நடிகர் சிம்புவுக்கு ரூ. 1 கோடி முன்பணமாக வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளன.

நடிகர் சிம்பு “கொரோனா குமார்” படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் நடித்து வருவதால், வேல்ஸ் நிறுவனம் நடிகர் சிம்புவுக்கு எதிராக மனுதாக்கல் செய்து இருந்தது.

இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணையில் தான், சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சிம்பு ரூ. 1 கோடிக்கான உத்தரவாதம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் அதில், நடிகர் சிம்பு செப்டம்பர் 19-ம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும், அளிக்கவில்லை எனில், அவர் மற்ற படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

High Court orders actor Simbu to deposit Rs 1 crore in ‘Corona Kumar’ movie case

More Articles
Follows