கைகொடுத்தது மன்னர் வகையறா.; படங்களை குவிக்கும் விமல்

கைகொடுத்தது மன்னர் வகையறா.; படங்களை குவிக்கும் விமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Mannar Vagaiyar Actor Vimal confirmed 5 moviesகடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்திருந்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியானது.

குடும்ப உறவுகளின் மேன்மையை கலகலப்பான பொழுபோக்கு அம்சங்களுடன் சொல்லியிருந்த இந்தப்படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

அதுமட்டுமல்ல ஒரு படத்தின் ஆயுட்காலம் முதல் வாரத்துடன் முடிந்துவிடுகிற இந்த கடினமான சூழலில் இப்போதும் சுமார் 50 தியேட்டர்களில் ‘மன்னர் வகையறா’ ஓடிக்கொண்டு இருப்பதே இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான சான்று.

இதனால் அளவற்ற மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் இருக்கிறார் தயாரிப்பாளரும் நடிகருமான விமல்

“இந்தப்படம் நிச்சயம் எனக்கு வெற்றிப்படமாக அமையும், அதன்பின் தான் புதிய படங்களை ஒப்புக்கொள்வேன்” என்று சொல்லி இந்தப்படத்திற்கு தனது முழு உழைப்பயும் தந்து காத்திருந்தார் விமல்… அவரது காத்திருப்பு வீண்போகவில்லை..

ஆம்.. ‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து விமல் 5 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

‘வெற்றிவேல்’ இயக்குனர் வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குனர் விஜய் உட்பட இன்னும் இரண்டு இயக்குனர்களின் படங்களில் நடிக்கவுள்ளார்.

இதுதவிர சற்குணம் டைரக்சனில் ‘K2’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்துவரும் ‘கன்னிராசி’ படம் வரும் மார்ச் மாதம் ரிலீஸாக இருக்கிறது.

ஆக இந்த வருடம் அடுத்தடுத்து விமலின் படங்கள் வெளியாக இருக்கின்றன.

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விமல்..?

After Mannar Vagaiyar Actor Vimal confirmed 5 movies

சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா டீசர் வெளியீட்டு தேதி

சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா டீசர் வெளியீட்டு தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala teaser may be released on 18th February 2018ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கியுள்ள படம் காலா.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை ஏப்ரல் 27ல் ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழுவினர் சில தினங்களுக்கு முன் அறிவித்தனர்.

எனவே படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்களை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

அதன்படி டீசரை முதலில் வெளியிட இருக்கிறார்களாம்.

அதாவது வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி இதன் டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடந்து மார்ச்சில் பாடல்களையும், ஏப்ரல் முதல் வாரத்தில் ட்ரைலரையும் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

Kaala teaser may be released on 18th February 2018

காதலர்களுக்காக நாய் பாடலை வெளியிடும் அனிருத்-விக்னேஷ்சிவன்

காதலர்களுக்காக நாய் பாடலை வெளியிடும் அனிருத்-விக்னேஷ்சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anirudh and Vignesh shivan launching Julie dog song on valentines dayநாளை காதலர் தினம் உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது.

இதனை கொண்டாட காதலர்கள் தயாராகி வருகின்றனர்.

எனவே காதலர்களை மகிழ்விக்க திரையுலகமும் தயாராகிவிட்டது.

அதன்படி தங்கள் படங்களின் டீசர், காதல் பாடல், சிங்கிள் ட்ராக் என தடபுடலா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தும், பாடலாசியரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனும் இணைந்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர்.

ஜீலி என்று பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை நாளை பிப்ரவரி 14 மாலை 7 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

அதன்படி முதற்கட்டமாக இன்று ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதில் ஒரு நாய் கழுத்தில் ஜீலி என்ற பெயர் கொண்ட ப்ளேட் மாட்டப்பட்டுள்ளது.

எனவே இது நாய் காதலா? நாயின் மீது காதலா? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

Anirudh and Vignesh shivan launching Julie dog song on valentines day

julie dog anirudh

மீடியாக்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வேன்..; பொங்கும் அமலாபால்

மீடியாக்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வேன்..; பொங்கும் அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amala paul stillsகொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அழகேசன் தனக்கு பாலியல் ரீதியான அணுகுமுறையில் பேசியதாக அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி புகார் அளித்தார்.

இதனால் அழகேசனை போலீஸார் 1 மணி நேரத்தில் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தைச் சார்ந்த பல்லாவரம் பாஸ்கர் என்பவரும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அமலாபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

கடந்த ஜனவரி 31ம் தேதி சென்னையின் ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் நான் நடன பயிற்சியில் ஈடுபட்ட போது அங்கு வந்த ஒருவர், என்னை அணுகி, மலேசியாவில் பிப்ரவரி 3ம் தேதி நடக்கும் விழாவுக்கு பிறகு, அவருடன் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தார்.

அப்படி என்ன விஷேசமான டின்னரா என நான், அவரை குறுக்கு கேள்வி கேட்டேன். அதற்கு அவர், அலட்சியமாக உனக்கு தெரியாதா? என்ற பாணியில் பேசினார். நான் என் நலம் விரும்பிகள், வேலையாட்களிடம் என்னை மீட்க அழைத்தேன். என்னுடைய ஆட்கள் அவரை நோக்கி சென்றபோது, அவர் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க, ‘’அவளுக்கு விருப்பமில்லைனா, இல்லை’’’’னு சொல்லலாமே, இது என்ன பெரிய விஷயமா?” என்றார்.

பின்னர் அங்கிருந்து, எங்கள் குழுவினரை தள்ளி விட்டு, தப்பியோட முயன்றார். அவரை பிடித்து ஸ்டுடியோவில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அவரின் செல்போனில் என்னுடைய சமீபத்திய மொபைல் நம்பர் மற்றும் அந்த விழாவில் கலந்து கொள்ளும் நடிகைகளுடைய விபரங்கள் அனைத்தும் இருந்தன. அவரை மாம்பலம் போலீசில் ஒப்படைத்தோம். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நானும், காவல் நிலையம் விரைந்து சென்றேன்.

இந்த பிரச்னையில் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விசாரணையில் பல்வேறு ஆதாரங்களை திரட்டியதோடு, இந்த மோசடியில் அச்சாணியாக செயல்பட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். சந்தேகத்தின் பிடியில் இருக்கும் இன்னும் சிலரை கைது செய்ய பிடி வாரண்டுகளும் தயார் நிலையில் உள்ளன. அதோடு, அவர்களது விசாரணையை மேலும் துரிதப்படுத்தி, இந்த மோசடியில் யாரெல்லாம் உடந்தை என்பதையும் வெளி கொண்டு வர வேண்டுகிறேன்.

ஒரு சில மீடியாக்கள் அந்த நாளில் என்ன நடந்தது என்பதையும், யார் குற்றவாளி என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளாமலேயே, என்னை பற்றியும், என் மேலாளரை பற்றியும் தவறான செய்தியை பரப்புகிறார்கள். விசாரணை நடந்து வருகிறது, அதற்கு தடையாக நான் இருக்க கூடாது என்பதாலேயே, நான் அமைதி காத்து வருகிறேன்.

ஆனால் அந்த மாதிரி கீழ்த்தரமாக செய்தி வெளியிடும் மீடியாக்கள், மீது அவதூறு வழக்கு தொடரவும் தயங்க மாட்டேன். இந்த அறிக்கை கூட, சென்னை காவல் துறையின் விசாரணையில் எங்கள் குழு மீதோ, மேலாளர் பிரதீப் குமார் மீதோ எந்த தவறும் இல்லை என்பதை அறிவிப்பதற்காக தான் வெளியிடுகிறேன்.

பிரியா வாரியரின் ஆசையை நிறைவேற்றுவாரா துல்கர்..?

பிரியா வாரியரின் ஆசையை நிறைவேற்றுவாரா துல்கர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oru Adaar Love fame actress Priya warrior new dreamசினிமாவில் பத்து படங்களில் நடித்திருந்தாலும் கூட சில நடிகர்களை நமக்கு தெரியாது.

ஆனால் ஒரே படம் ஒரே பாடல் எல்லாருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார் இந்த பிரியா வாரியர்.

Oru Adaar Love படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்க மலராய பூவே…’ என்ற ஒரு பாடலில் தன் புருவங்களை உயர்த்தி இளைஞர்களை வசியம் செய்துவிட்டார் இந்த பிரியா.

எனவே முந்திக் கொண்டு அவரிடம் மீடியாக்கள் பேட்டி எடுத்து வருகின்றன.

ஒரு பேட்டியில் உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க ஆசை? என கேட்டுள்ளனர்.

துல்கர் சல்மானோடு நடிக்கவேண்டும் என்பதே என் கனவு” என தெரிவித்துள்ளார்.

துல்கர் இந்த நடிகையின் ஆசையை நிறைவேற்றுவாரா?

Oru Adaar Love fame actress Priya warrior new dream

படம் பார்ப்பேன் ஆனால் நடிக்கமாட்டேன்; சத்யராஜ் மகள் விளக்கம்

படம் பார்ப்பேன் ஆனால் நடிக்கமாட்டேன்; சத்யராஜ் மகள் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

divya sathyarajநடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. ஊட்டச்சத்து நிபுணரான இவர் கடந்த 7 ஆண்டுகளாக சென்னையிலுள்ள இரண்டு மருத்துவமனைகளில் ஊட்டசத்து நிபுணராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திவ்யா சினிமாவில் நடிக்க இருப்பதாக சில சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவ, இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் திவ்யா.

அதில், ‘‘நான் சினிமாவில் நடிக்க ஆர்வமாய் இருப்பதாக வெளியாகிய தகவல்களில் சிறிதும் உண்மையில்லை. நான் கடந்த 7 ஆண்டுகளாக ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறேன்.

மேலும் ஊட்டச்சத்து பிரிவில் ‘PHD’ உயர் படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன். சினிமா மீது எனக்கு அதீத மரியாதை இருக்கிறது.

படங்களை பார்த்து ரசிப்பேனே தவிர படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பியதில்லை.

ஊட்டச்சத்து சம்பந்தமான ஒரு ஆவண படத்தில் மட்டும் நடித்திருக்கிறேன். ஆனால் அது படம் அல்ல!’’ என்று தன் விளக்கத்தை அளித்துள்ளார்.

More Articles
Follows