ரஜினிக்கு மும்பை.. விஜய்க்கு காஷ்மீர்..; வச்சி செய்த கே.ராஜன்

ரஜினிக்கு மும்பை.. விஜய்க்கு காஷ்மீர்..; வச்சி செய்த கே.ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலுதாஸ் இயக்கத்தில் விமல் நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படம் செப்டம்பர் 1 தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது….

“பெரிய படங்கள் வெற்றி பெற்றால் அதில் கிடைக்கும் கட்டுக்கட்டான பணம் மீண்டும் திரையுலக்கிற்கு வருவதில்லை.

ஆனால் இதுபோன்ற சின்ன படங்கள் வெற்றி வரும்போது அந்த பணம் மீண்டும் அடுத்த படத்திற்காக இங்கேயே புழக்கத்தில் இருக்கும். சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு என ஒரு ஹீரோ இருக்கிறார் என்றால் அது விமல் தான்.

ரஜினியின் கடந்த சில படங்கள் மும்பையில் தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அங்குள்ள தொழிலாளர்கள் தான் அந்த படத்தில் வேலை பார்த்தார்கள். ஆனால் வசூல் மட்டும் தமிழ்நாட்டில் இருந்து வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற ஒரு படத்தின் படப்பிடிப்பு அங்கே ஏதோ பிரச்சனை என்பதால் நிறுத்தப்பட்டு இங்கே சென்னையில் செட் போட்டு எடுத்தார்கள்.. அது சாத்தியம் என்கிற போது இங்கே தமிழ்நாட்டிலேயே படம் எடுக்கலாமே” என்று கூறினார்.

K Rajan questions Rajini and Vijays outdoor shooting

யூடியுபர்ஸ் என்னை கொன்னுட்டாங்க.; வீட்டில் கஷ்டப்படுறாங்க.. – ரோபோ சங்கர்

யூடியுபர்ஸ் என்னை கொன்னுட்டாங்க.; வீட்டில் கஷ்டப்படுறாங்க.. – ரோபோ சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலுதாஸ் இயக்கத்தில் விமல் நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படம் செப்டம்பர் 1 தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது..

“கடந்த ஆறு மாத காலத்திற்குள் நான் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புவதற்குள் ஒரு குறிப்பிட்ட சில யூடிபர்கள் என்னை பலமுறை கொன்று விட்டார்கள். என் வீட்டில் எவ்வளவு வேதனையை அனுபவித்திருப்பார்கள்.

மற்றவர்களை மகிழ்விக்கும் ஒரு கலைஞனை இப்படி காயப்படுத்தலாமா ?” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

Youtubers spreading rumours says Robo Shankar

சினிமா புரமோஷன் பெயரில் புட் ரிவ்யூ..; கடுப்பாகி இர்ஃபானை இழுத்த நடிகர் டேனி

சினிமா புரமோஷன் பெயரில் புட் ரிவ்யூ..; கடுப்பாகி இர்ஃபானை இழுத்த நடிகர் டேனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலுதாஸ் இயக்கத்தில் விமல் நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படம் செப்டம்பர் 1 தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற இயக்குநர் திருமலை பேசும்போது…

“பத்து பேர் மட்டுமே திரையுலகை ஆள வேண்டும் என நினைக்கின்றனர். எல்லோரும் ஒன்று சேர்ந்து இதை தடுக்க வேண்டும்.

தயாரிப்பாளர் கே.ராஜன் தனியாளாக இதற்காக போராடுகிறார். நூறு பேர் ஒன்று சேர்ந்தால் தான் இந்த பத்து பேரை விரட்ட முடியும்” என்று கூறினார்.

நகைச்சுவை நடிகர் டேனி பேசும்போது…

“ஜெயிக்கிற படத்தில் ஜெயிக்கிற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்.. நானும் சிம்புவும் ஒரு விளம்பர படத்தில் நடித்தோம். அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வருவதற்கு முன் மிகப்பெரிய பிரச்சனையும் சலசலப்பும் ஓடிக்கொண்டு இருந்தது.

ஆனால் அவர் வந்ததும் கப்சிப் ஆகி வேலைகள் சரியாக நடக்கத் துவங்கின. இப்போது வெளியாகும் படங்களில் நடித்துள்ள பெரிய நடிகர்கள் கூட பிரமோஷன் என்கிற பெயரில் உணவு விமர்சனம் செய்ய இறங்கி விட்டதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது” என்று கூறினார்.

Actor Dani trolls irfans food review with stars

ஆரோக்கியமில்லாத உணவு.; யூடியூப்பர்களால் மீடியாவுக்கு பிரச்சனை – சௌந்தரராஜா

ஆரோக்கியமில்லாத உணவு.; யூடியூப்பர்களால் மீடியாவுக்கு பிரச்சனை – சௌந்தரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

40 வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘துடிக்கும் கரங்கள்’. தற்போது ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை தயாரிப்பில் அதே டைட்டிலில் உருவாகி இருக்கும் படத்தில் விமல் நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தை இயக்குநர் வேலுதாஸ் இயக்கியுள்ளார். மேலும் வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இருவரும் இணை தயாரிப்பாளர்களாக இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளனர்.

கதாநாயகியாக மிஷா நரங் நடித்துள்ள இப்படத்தில் சதீஷ், சுரேஷ் மேனன், சவுந்தர்ராஜா, இயக்குநர் சண்முகம், சங்கிலி முருகன், பில்லி முரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மணி சர்மாவின் சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை ராம்கோபால் வர்மா படங்களில் பணியாற்றிய ராமி கவனித்துள்ளார்.

படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோரும் கலை வடிவமைப்பை எஸ்.கண்ணனும் சண்டைப் பயிற்சியை சிறுத்தை கே.கணேஷ்குமாரும் மேற்கொண்டுள்ளனர். பாடல்களை விவேகா எழுதியுள்ளார்.

இந்த படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து துடிக்கும் கரங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக-23) மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர்கள் பேரரசு, வசந்தமணி, திருமலை நடிகர்கள் ரோபோ சங்கர், காளிவெங்கட் , டேனி போப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் நடிகர் சவுந்தர்ராஜா பேசும்போது…

“முன்பெல்லாம் குழந்தைகளிடம் படித்து என்னவாக போகிறாய் என்று கேட்டால் டாக்டராக, கலெக்டராக ஆகப்போகிறேன் என்று சொல்வார்கள். ஆனால் இன்றுள்ள குழந்தைகளிடம் கேட்டால் பெரிய யூடியூபராக வரப் போகிறேன் என்று சொல்லும் அளவுக்கு மீடியா பவர்ஃபுல்லாக மாறி உள்ளது.

அதே சமயம் எல்லோருமே மீடியா ஆகிவிட்டதால் நல்ல விஷயத்தை விட கெட்ட விஷயம் அதிக அளவில் சென்றடைகிறது.

வாட்ஸ் அப், யூட்யூப் சொல்லும் விஷயங்களை பெரும்பாலான மக்கள் அப்படியே நம்பி விடுகின்றனர். அதனால் சொல்லும் விஷயத்தை எந்த அளவிற்கு அதில் உண்மை தன்மை இருக்கு என்று தெரிந்து கொண்டு செல்வது நல்லது.

இந்த படத்தின் கதாநாயகன் விமல் ஒரு யூடியூபராக நடித்துள்ளார். இன்று சென்னைக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகம். அதனாலேயே இங்கே ஆரோக்கியம் இல்லாத உணவு, குறிப்பாக பிரியாணி அதிகப்படியாக பயன்பாட்டில் இருக்கிறது.

அதன் பின்னணியில் இருக்கும் சென்சிட்டிவான விஷயத்தை பொழுதுபோக்கு அம்சத்துடன் இயக்குனர் வேலுதாஸ் கூறியுள்ளார்.” என்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் சண்முகம் பேசும்போது…

“சினிமாவை நம்பி கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் வேலை செய்கின்றனர். அதனால் அரசாங்கம் இதன் மேல் கவனம் செலுத்த வேண்டும். இயக்குநர் வேலுதாஸ் என்னை ஒரு நடிகன் என நினைத்துக் கொண்டு இந்த படத்தில் நடிக்க அழைத்தார்.

முதல் நாளிலேயே எனக்கு செட்டாகவில்லை. ஆனால் இரண்டாவது நாளில் அவருக்கு ஏற்றபடி என்னை நான் மாற்றிக் கொண்டேன். ராம்கோபால் வர்மாவின் படங்களில் பணியாற்றியவர் என்பதால் ஒளிப்பதிவாளர் ராமியின் கேமரா கோணங்கள் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது.

தலைப்புச் செய்தியாக வரவேண்டிய ஒரு விஷயத்தை இதில் கையில் எடுத்துள்ளார் இயக்குநர் வேலுதாஸ்.

இயக்குநர் வேலுதாஸ் படத்திற்கான கருவை நன்றாகவே தேடிப் பிடிக்கிறார். வருங்காலத்தில் மிகப்பெரிய இயக்குனராக வருவார். அதேபோல பட்ஜெட்டில் எந்த சமரசமும் செய்து கொள்ள விரும்பாதவர் வேலுதாஸ்.

500 டெம்போக்களை வைத்து எடுக்க வேண்டிய காட்சியில் முதல் நாள் குறைவான வாகனங்களே வந்ததால், அன்று படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மறுநாள் அந்த காட்சியை பிரமாண்டமாக படமாக்கினார்” என்று கூறினார்.

Healthy foods not available in chennai says Soundararaja

RECORD MAKER தலைவர் நிரந்தரம்.; ரூ 525 கோடியை அள்ளிய ரஜினியின் ‘ஜெயிலர்’

RECORD MAKER தலைவர் நிரந்தரம்.; ரூ 525 கோடியை அள்ளிய ரஜினியின் ‘ஜெயிலர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரஜினியின் ஸ்டைல்.. சூப்பர் ஹிட் பாடல்கள்.. நெல்சனின் பிளாக் காமெடி.. மோகன்லால் மற்றும் சிவராஜ் குமாரின் ஆக்‌ஷன்.. வில்லன் விநாயகனின் வெறித்தனமான நடிப்பு என அனைத்தையும் கலந்து இந்த படத்தை ரசிகர்களுக்கு படக்குழு வழங்கியிருந்தனர்.

இந்த படத்திற்கு பெரிய பிரமோஷன் இல்லை.. ரிலீஸ் நாளில் விடுமுறை இல்லை.. பண்டிகை தினம் இல்லை ஆனாலும் தொடர்ந்து இரண்டு வாரங்களாக பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது ‘ஜெயிலர்’.

வார நாட்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் வசூல் பற்றி அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளளவில் இதுவரை ரூ. 525 கோடியை வசூல் செய்துள்ளது என அறிவித்துள்ளனர். மேலும் ரஜினிகாந்த் ரெக்கார்ட் மேக்கர் எனவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர்

Record Maker Rajini Jailer collected Rs 525cr Box office

இந்திய நடிகர்களுக்கு கிடைக்காத பெருமையை தட்டிச் சென்ற மீனா

இந்திய நடிகர்களுக்கு கிடைக்காத பெருமையை தட்டிச் சென்ற மீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை மீனா. அப்போது தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளின் சூப்பர் ஸ்டாரர்களுக்கு இவர் தான் ஆஸ்தான ஜோடி.

திருமணத்திற்கு பின் நடிக்காமல் ஒதுங்கி இருந்த மீனா அவ்வப்போது ஓரிரு படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 2023ம் ஆண்டிற்கான ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பாரிஸில் மீனா துவங்கி வைத்திருக்கிறார்.

இதன் மூலம் உலககோப்பை கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்த முதல் இந்திய நடிகர் என்ற பெருமைக்கு மீனா சொந்தக்காரர் ஆகிவிட்டார் எனலாம்.

இது தொடர்பான படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு , “ எந்தவொரு இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெருமைக்குரிய அங்கீகாரம் எனக்கு கிடைத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்” என்று பதிவிட்டு இருக்கிறார் நடிகை மீனா.

Meena becomes 1st Indian actor to Officially Launch Mens Cricket World Cup Trophy

More Articles
Follows