தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நந்தா இயக்கத்தில் விமல் – சூரி நீண்ட நாட்களுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள படம் ‘படவா’.
ஜான் பீட்டர் தயாரித்து இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பேரரசு பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம். ஜான் பீட்டர் இப்படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி இசையமைப்பாளரும் தான். பாடல்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அருமையாக இருக்கிறது. நடிகர் விமல் வெற்றி அடைந்துக்கொண்டே இருக்க வேண்டும். ‘படவா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த திரைப்படம் விவசாயத்தை பற்றியது. ‘கடைசி விவசாயி’ தேசிய விருது பெற்றது, டிரைலரை பார்க்கும் போது அது போன்ற திரைப்படமாக தான் ‘படவா’ இருக்கும் என்று தோன்றுகிறது.
விவசாயத்தைப் போற்றிய கடைசி விவசாயி என்ற படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அந்த படத்தின் இயக்குனர் மணிகண்டனுக்கு யாரும் ஒரு விழா நடத்தவில்லை. பெரும்பாலும் எவரும் பாராட்டும் தெரிவிக்கவில்லை.
ஆனால் ஜெய்பீம் படத்திற்கு ஏன் தேசிய விருது கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜெய்பீம் நல்ல படம் தான்.்
விருது தேர்வுக்கு அரசியல் உள்ளதாக பலரும் சொல்கின்றனர். அப்படி பார்த்தால் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்திற்கு கடந்த முறை 5 விருது கிடைத்ததே” என்று ஆவேசமாகபேசினார் பேரரசு.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன் பேசியதாவது :
‘படவா’ திரைப்படம் தயாரிப்பாளர் ஜான் பீட்டருக்கு பெரிய வெற்றியை கொடுக்கும், விமல் அவர்களுக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
திருமதி ரதீ சங்கர் பேசியதாவது :
இந்த ப்ராஜெக்ட் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும். அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் வானம் கொட்டட்டும் என்ற பாடலை நான் பாடியுள்ளேன்.
கதாநாயகி ஸ்ரீதா பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம்,. மேடையில் உள்ள அனைவருக்கும் நன்றி. இயக்குநர் நந்தா அவர்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எனக்கு சுத்தமாக தமிழ் தெரியாது. அவரால் தான் நான் தமிழ் வசனம் பேசி கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். அனைவருக்கும் நன்றி .
Perarasu speech about National award politics