தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத் தமிழன், பொதுவாக எம்மனசு தங்கம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ்.
அவ்வப்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இவரும் பிரபுதேவாவும் இணைந்து நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.
இந்த நிலையில் இவருக்கு டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.
அதில், ஸ்விகி ஆன்லைன் உணவு டெலிவரி செயலி மூலம் உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார்.
அதை திறந்தபோது கரப்பான்பூச்சி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் நிவேதா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நிவேதா பெத்துராஜ் கூறியிருப்பதாவது..
“உணவு டெலிவரி நிறுவனம் மற்றும் உணவகங்கள் என்ன தரத்தை பின்பற்றுகின்றன.
எனக்கு இரண்டு முறை உணவில் கரப்பான் பூச்சி வந்துள்ளது.
அந்த உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் அளித்தும் நிவேதா பெத்துராஜ் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இதனையடுத்து நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த புகாரின் பேரில் பெருங்குடியில் உணவகம் செயல்பட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
3 நாட்களுக்குள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுட்டிக் காட்டிய குறைகளை நிவர்த்தி செய்ய அந்த உணவகத்திற்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
Actress Nivetha Pethuraj complains food delivery company