தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
இவரது படங்களில் பிரித்து பார்க்க முடியாத கலைஞர் ஒளிப்பதிவாளர் கண்ணன்.
கோலிவுட்டில் மூத்த கலைஞர்களுள் இவரும் ஒருவர்.
பாரதிராஜா இயக்கிய 38க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இவர் மொத்தம் 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.
‘அலைகள் ஓய்வதில்லை’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’ நாடோடித் தென்றல், பொம்மலாட்டம் என் பாரதிராஜா இயக்கிய படங்களுக்கு தன் ஒளிப்பதிவால் மெருகூட்டியவர் கண்ணன்.
மேலும் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.
இவரை பாரதிராஜாவின் கண்கள் என்றும் திரையுலகினர் அழைப்பர்.
பாரதிராஜா அளித்த பேட்டியொன்றில், “நான் படப்பிடிப்புக்குச் செல்லும்போது கேமராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனுடைய இரண்டு கண்களை மட்டும்தான் எடுத்துச் செல்வேன்.” எனக் கூறியிருக்கிறார்.
கடந்த சில நாட்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் கண்ணன்.
இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் கண்ணன். அவருக்கு வயது 69.
பிரபல இயக்குநர் பீம்சிங்கின் மகனான இவர் எடிட்டர் லெனினின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் நெருங்கிய நண்பரை இழந்துள்ள பாரதிராஜாவுக்கும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள். கண்ணன் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாரதிராஜாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Attachments area