‘தடம்’ தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ்; அருண்விஜய் யார்.?

‘தடம்’ தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ்; அருண்விஜய் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivetha Pethuraj plays lead role in Thadam Telugu remakeமகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் சூப்பர் ஹிட் படம் ‘தடம்’.

இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

கிஷோர் திருமலா என்பவர் இந்தப்படத்தை இயக்க நடிகர் ராம் பொத்தினேனி அருண்விஜய் கேரக்டரில் நடிக்கிறார்.

வித்யா பிரதீப் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். அவரின் வேடத்தில் நிவேதா பெத்துராஜ் நடிக்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nivetha Pethuraj plays lead role in Thadam Telugu remake

மேனேஜர்கள் யூனியன் தயாரிப்பாளருக்கு உதவியாக இருக்கனும்.. – சங்க விழாவில் நாசர் பேச்சு

மேனேஜர்கள் யூனியன் தயாரிப்பாளருக்கு உதவியாக இருக்கனும்.. – சங்க விழாவில் நாசர் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Launch of South Indian film Casting Directors and Celebrity Managers Association திரைப்படங்களின் கதையின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிகர் நடிகைகளை வழங்கி வந்த கேஸ்டிங் டைரக்டர்கள் எனப்படும் நடிப்பு இயக்குனர்கள், தென்னிந்தியாவில் ஒன்றிணைந்து ‘தென்னிந்திய திரைப்பட நடிப்பு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கத்திணை’ தங்களுக்கென உருவாக்கியுள்ளனர்.

மேலும் இச்சங்கத்தில் முன்னணி திரை நட்சத்திரங்களுக்கு மேலாளராக பணியாற்றுபவர்கள் இதில் ஒரு அங்கமாக உள்ளனர்.

இச்சங்கமானது வரும் காலங்களில் திரைத்துறையில் புதிதாய் வாய்ப்பு தேடுவோர் மற்றும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் ஆகியோருக்கு ஒரு நல்ல உறுதுணையாக அமையும் என தெரிவித்துள்ளனர்.

இதனை வழி நடத்த திரைத்துறையின் ஜாம்பவான்களான நடிகர் மற்றும் இயக்குனர் திரு கே.பாக்யராஜ் அவர்கள் கௌரவ வழிகாட்டியாகவும், கௌரவ ஆலோசகர்களாக இயக்குனர் பிரபு சாலமன், தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் திரு. டி ஜி தியாகராஜன், நடிகை ‘ஊர்வசி’ அர்ச்சனா மற்றும் மக்கள் தொடர்பாளர் திரு டைமண்ட் பாபு ஆகியோர் இச்சங்கத்தில் இணைந்துள்ளனர்.

இச்சங்கத்தின் தலைவராக திரு மனோஜ் கிருஷ்ணா, செயலாளராக ஜெனிஃபர் சுதர்சன், பொருளாளராக வேல் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் துவக்கவிழா சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் நாசர் பேசும்பொழுது

நடிக்க வாய்ப்பு தேடுகிறவர்களுக்கும், நடித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் மேனேஜர்கள் மிக அவசியம், அப்படிப்பட்ட மேனேஜர்கள் யூனியனாக செயல்படுவது தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

நடிகர்களுக்கும், தயாரிப்பு நிறுவங்களுக்கும் பாலமாக இருப்பவர்கள், அதுபோல கேஸ்ட்டிங் டைரக்டர் பணி தமிழ் சினிமாவில் இன்னும் முக்கியத்துவமானதாக இல்லை, இனி அந்த வேலையும் முக்கியமானதாக இருக்கும். இந்த சங்கத்தினருக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு என்றார்.

விழாவில் நடிகர் நாசர், பாக்யராஜ், ராதாரவி, அஸ்வின், அசோக், கவுதமி, தேஜாஸ்ரீ, நமீதா, சாக்‌ஷி அகர்வால், அர்ச்சனா, உள்ளிட்ட திரைத்துறை நடிகர் நடிகைகள் பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

Launch of South Indian film Casting Directors and Celebrity Managers Association

Launch of South Indian film Casting Directors and Celebrity Managers Association

விஜய்-அஜித் படங்களை ரிலீஸ் செய்ய பிரபல தியேட்டர் மறுப்பு

விஜய்-அஜித் படங்களை ரிலீஸ் செய்ய பிரபல தியேட்டர் மறுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We wont release Vijay and Ajith movies says Ramba theatreதீபாவளிக்கு விஜய்யின் பிகில் படம் ரிலீசானால் மற்ற படங்களுக்கு தியேட்டர் கிடைக்குமா? என பலர் ஏமாற்றத்துடன் காத்திருக்க, விஜய் படத்தை திரையிட மாட்டோம் என திருச்சியில் உள்ள ரம்பா தியேட்டர் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தியேட்டர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

திருச்சியில் உள்ள பல தியேட்டர்களில், பிகில் படம்தான் வெளியாகிறது.

எனவே ஒரே படத்தை ரிலீஸ் செய்யாமல் கார்த்தியின் கைதி படத்தை ரிலீஸ் செய்கிறம்.

மேலும் பட ரிலீசின் போது விஜய் அஜித் பெரும் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

தியேட்டரிலும் அடாவடித்தனம் தாங்க முடியவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.

தியேட்டர் சீட்டுக்களை நாசப்படுத்தி விடுகின்றனர். இதனால் மீண்டும் மீண்டும் செலவு செய்ய வேண்டியுள்ளது.

எனவே அவர்களின் படங்களை திரையிடுவதை தவிர்க்கிறோம்.” என கூறப்பட்டுள்ளது.

We wont release Vijay and Ajith movies says Ramba theatre

இணையங்களில் உருவாகும் பொய் காதலில் சிக்கும் பெண்கள்

இணையங்களில் உருவாகும் பொய் காதலில் சிக்கும் பெண்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karuthukkalai Pathivu Sei movie deals with Internet LoveSSR.ஆர்யன் நாயகனாக நடிக்க, உபாசனா R.C நாயகியாக நடிக்க ஜித்தன் 2 படத்தை இயக்கிய ராகுல் பரமகம்சா இயக்கத்தில் உருவாகியுள்ள “கருத்துகளை பதிவு செய்” படம் சென்சாருக்காக அனுப்பப்பட்டது.

சமூக வலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே கதை, அப்படி மாட்டிக்கொண்ட ஒரு அப்பாவி பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார், அந்த நயவஞ்சக கும்பல்களை என்ன செய்கிறார், என்பதே இந்த “கருத்துகளை பதிவு செய்” திரைப்படம்.

இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு தலைமை அதிகாரி இம் மாதிரியான படங்கள் இந்த கால தலைமுறைக்கு அவசியம் என்று சொல்லி பாராட்டி எனக்கு வாழ்த்தி கூறினார் என படத்தின் இயக்குனர் ராகுல் பரமகம்சா தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கு U/A சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தின் சமூக வலைதளங்களில் மூலம் உருவாகும் முக்கிய பிரச்சனையை மையமாக வரும் இப்படத்தின் இணை தயாரிப்பு JSK கோபி.

தயாரிப்பு – RPM சினிமாஸ்
கதை, திரைக்கதை, வசனம் – ராஜசேகர்
இசை: கணேஷ் ராகவேந்திரா,
பின்னணி இசை: பரணி,
பாடல்கள் – சொற்கோ
எடிட்டர்: கணேஷ்.D
ஒளிப்பதிவாளர்: மனோகரன்

இவர்களின் கூட்டணியில் உருவான “கருத்துகளை பதிவு செய்” திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகிறது.

Karuthukkalai Pathivu Sei movie deals with Internet Love

ராம்கோபால் வர்மா & SJ சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்’

ராம்கோபால் வர்மா & SJ சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ram Gopal Varma and SJ Surya launched Cinderella teaserஉலகெங்கும் தேவதைக் கதைகளில் உலாவரும் மிகவும் புகழ்பெற்ற பெயர் ‘சிண்ட்ரெல்லா’ . இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில் ஹாரர் பேய்ப் படம் உருவாகி இருக்கிறது.

ராய்லட்சுமி பிரதான வேடம் ஏற்றிருக்கும் இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார் . இவர் மல்டிமீடியா படித்த பெங்களூர்க்காரர். சில ஆண்டுகள் எஸ் .ஜே .சூர்யாவிடம் பணிபுரிந்து சினிமா கற்றவர்.

படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் பேசும் போது,

“இது ஒரு பேய்ப் படம் தான் .ஆனால் பேய்ப் படங்களுக்கு இங்கே போடப்பட்டுள்ள ஹைதர் காலத்து பார்முலாவில் இருந்து விலகி அனைத்து அம்சங்களும் கலந்து ஒரு விறுவிறுப்பான படமாக உருவாகி இருக்கிறது.

ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள இமேஜை உடைக்கும் படி இருக்கும்.

அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரை ஒரு கவர்ச்சிப் பதுமையாகப் பார்த்த ரசிகர்களுக்கு இப்படப் பாத்திரம் எதிர்பாராத தோற்ற மாற்றம் தரும். நடிப்பிலும் அவருக்கு உரிய இடத்தை பெற்றுத் தரும் படமாக ‘சிண்ட்ரெல்லா’ இருக்கும் .

சாக்ஷி அகர்வால் ஒரு எதிர்பாராத எதிர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் ஏற்றுள்ள வில்லி பாத்திரம் திரையில் தீப்பிடிக்க வைக்கும்படியான பரபரப்புடன் இருக்கும்.

இவர்கள் தவிர ரோபோ சங்கர், ‘கல்லூரி’ வினோத், பாடகி உஜ்ஜயினி, கஜராஜ், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘காஞ்சனா 2’ படத்திற்கு இசை அமைத்த அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார்.

தெலுங்கில் ‘லட்சுமி என்டிஆர் ‘ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் .இது ஒரு பேய்ப் படம் தான் .ஆனால் வழக்கமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிற சூத்திரங்களில் இருந்து விலகி புதுப் பாணியில் புதுவித பாதையில் பயணிக்கிற கதையில் உருவாகியிருக்கிற படமாக ‘சிண்ட்ரெல்லா ‘இருக்கும். சிண்ட்ரெல்லா என்கிற பெயரில் ஆங்கிலத்தில் நிறைய படங்கள் வந்துள்ளன .

சிண்ட்ரெல்லா என்கிற பெயர் குழந்தைகளிடம் மிகவும் பரிச்சயமானது. இப்படம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது இந்த ‘சிண்ட்ரெல்லா’வை ரசித்து அனைவரும் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன் “என்கிறார் இயக்குநர் வினோ வெங்கடேஷ்.

படம் பார்க்கும் ரசிகர்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதில்லை கதையையும் கதை சொல்லல் முறையையும்தான் பார்க்கிறார்கள். அந்த வகையில் பொழுது போக்கிற்கு நம்பிக்கை தரும் படமாக உருவாகியுள்ள இப்படத்துக்கு ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்று கூறலாம்.

இதன் டீசரை இந்திய அளவில் புகழ்பெற்றவரும் பரபரப்புக்குப் பெயர் பெற்றவருமான இயக்குநர் ராம்கோபால் வர்மாவும் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவும் இன்று மாலை 7.30 க்கு வெளியிட்டார்கள்.

இருவருமே இளமையும் திறமையும் கொண்ட இந்தப் படக் குழுவினரை வாழ்த்தியிருக்கிறார்கள். மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறது படக் குழு .

டீசர் வெளியான சில நொடிகளிலேயே ஹிட்களை அள்ளிக் கொண்டிருக்கிறது.

Ram Gopal Varma and SJ Surya launched Cinderella teaser

இதோ டீசர் லிங்க்

ஃபேஷன் ஷோ மூலம் விவசாயிகளுக்கு நீர் கொடுக்கும் நடிகர் பிரபாகரன்

ஃபேஷன் ஷோ மூலம் விவசாயிகளுக்கு நீர் கொடுக்கும் நடிகர் பிரபாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhakaran plans to donate fund for farmers from Fashion Showஃபேஷன் உலகில் தலைசிறந்த முன்னணி அமைப்பாக விளங்கும் PRAAWOLION EVENTZ சென்னையில் சமுகநல நோக்கத்துடன் மிகப்பெரும் ஃபேஷன் ஷோ “PRAWLION FASHION WEEK” ஒன்றை சென்னையில் அரங்கேற்றுகிறது.

ஃபேஷன் உலகின் மிகப்பெரும் டிசைனர்கள், திறமையாளர்கள் கலந்து கொள்ளும் இவ்விழா விவசாயிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்படுகிறது.

இதனை முன்னிட்டு ஷோ நடத்தும் அமைப்பாளர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

பன்முக திறமையாளர், நடிகர் பிரபாகரன் PC பேசியது…

ஃபேஷன் உலகை பொறுத்தவரை சென்னை எப்போதும் திறமையாளர்களுக்கு முக்கியமான தளமாக இருக்கிறது. இங்கு நிறைய புதுமைகளும் திறமைகளும் அரங்கேறி வருகிறது. அதில் PRAAWOLION EVENTZ மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது.

நாங்கள் நடத்த உள்ள இந்த ஃபேஷன் விழாவின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் இதன் மூலம் கிடைக்கும் தொகையை விவசாயிகளின் நலனுக்கு அளிக்கப்பட உள்ளது என்றார்.

ஃபேஷன் ஒருங்கிணைப்பாளர் கருன் ராமன் கூறியதாவது…

இது எங்களுக்கு ஒரு குடும்ப விழா போன்றது. இந்நேரத்தில் எங்களுடன் இணைந்த Naturals குமரவேலன் அவர்களுக்கு மிகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். ஃபேஷன் உலகின் மிகப்பெரும் பிரபலங்கள் கலந்து கொள்ளும் இவ்விழா வரும் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்கள் பிரமாண்டமாக நடக்க உள்ளது.

தீபிகா பிள்ளை, பந்தனா நெருலா ஆகிய இருவரும் முதல் நாள் விழாவில் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் ஃபேஷன் உலகின் மிக முக்கிய விழாவாக இது இருக்கும்.

குமரவேலன் கூறியதாவது…

இவ்விழாவை சென்னையில் ஒருங்கினைக்கும் பிரபாகரனுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். கருன் ராமனுடன் மிக நீண்ட காலமாக பழகி வருகிறேன் இந்தத்துறையில் வெளியில் இருந்து மிக எளிதாக குறை கூறி விடலாம் ஆனால் இதில் உள்ள சிக்கல்களும் உழைப்பும் மிக மிக கடினமானது. அதை நேரில் கண்ட பிறகு நானும் இதில் பங்கு கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

மேலும் விவசாயிகளுக்கு உதவுவது பெருமையான ஒன்று. தீபிகா மற்றும் பந்தனா போன்றவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள் அவர்களுக்கு நன்றி. ஃபேஷன் உலகில் சென்னை தற்போது வெகு வேகமாக முன்னேறி வருகிறது. இவ்விழா அதில் முன்மாதிரியாக இருக்கும்.

ஃபேஷன் டிசைனர் பந்தனா நெருலா கூறியது…

தற்போது தான் இவ்விழாவின் நோக்கம் பற்றி அறிந்தேன் இப்படியான விழாவில் பங்கு கொள்வதில் பெருமை கொள்கிறேன். சென்னை ஃபேஷன் உலகில் பின்னே இருப்பதாக கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட விழாக்கள் நடப்பது அந்தப் பெயரை மாற்றுவதாக இருக்கும்.

டிசைனர் தீபிகா பிள்ளை கூறியதாவது…

சிறு இடைவேளைக்கு பிறகு ஃபேஷன் உலகிற்கு வருகிறேன். இந்த விழா என் திறமைக்கு தீனி தருமென நம்புகிறேன். பல புதிய டிசைன்கள் இவ்விழாவில் அறிமுகப்படுத்த உள்ளோம். இவ்விழா திறமையாளர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்

PRAAWOLION EVENTZ Fashion Show Press Meet

Prabhakaran plans to donate fund for farmers from Fashion Show

PRAAWOLION EVENTZ Fashion Show Press Meet

More Articles
Follows