தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘சுந்தரபாண்டியன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தர்மதுரை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘பிகில்’, ‘சங்கத் தமிழன்’, ‘ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சௌந்தரராஜா.
இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படத்தில் நடித்திருந்தார்.
தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் “கட்டிஸ் கேங்” என்ற மலையாள படத்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார்.
பொதுவாக இயற்கை மீது அதிக ஆர்வம் கொண்ட நடிகர் சௌந்தரராஜா மரங்கள் நடுவது பற்றியும் அதனை பாதுகாப்பது பற்றியும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.
உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 “கட்டிஸ் கேங்” படக்குழுவினரோடு சேர்ந்து மரக்கன்றுகள் நட்டு இயற்கை மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை சௌந்தரராஜா வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் இன்று ஜூன் 12-ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திறக்கப்பட்டு வருகின்றன.
இதனை முன்னிட்டு மதுரையில் தனது அண்ணன் மகன் படிக்கும் பள்ளியில் இன்று ஒரு மரக்கன்றை நட்டு அதனை படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்து உள்ளார் சௌந்தரராஜா.
இதுவரை 110+க்கும் மேற்பட்ட மரங்களை இந்த மாணவன் நட்டு வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘நம் மண்ணுக்கு மக்களுக்கும்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் சௌந்தர்ராஜா இதன் மூலம் மாணவர்களிடையே இயற்கை வளம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் பள்ளிகளோ அல்லது தங்கள் வீடுகளிலோ இதுபோன்ற மரங்களை நட்டு இயற்கை வளத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
நாமும் நம் பிள்ளைகளுக்கு இது போன்ற ஒரு செயலை செய்யச் சொல்லி அறிவுறுத்தலாமே.. தினமும் பள்ளிக்குச் செல்லும் மாணவன் அந்த மரங்களை பார்ப்பதன் மூலம் அவரின் மனமும் மகிழும் தானே..
Actor Soundararaja makes nature awareness with students