பள்ளி திறந்த முதல்நாளே தன் மகனை வைத்து மரக்கன்று நட்ட சௌந்தரராஜா.; நாமும் செய்யலாமே!

பள்ளி திறந்த முதல்நாளே தன் மகனை வைத்து மரக்கன்று நட்ட சௌந்தரராஜா.; நாமும் செய்யலாமே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சுந்தரபாண்டியன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தர்மதுரை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘பிகில்’, ‘சங்கத் தமிழன்’, ‘ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சௌந்தரராஜா.

இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் “கட்டிஸ் கேங்” என்ற மலையாள படத்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார்.

பொதுவாக இயற்கை மீது அதிக ஆர்வம் கொண்ட நடிகர் சௌந்தரராஜா மரங்கள் நடுவது பற்றியும் அதனை பாதுகாப்பது பற்றியும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 “கட்டிஸ் கேங்” படக்குழுவினரோடு சேர்ந்து மரக்கன்றுகள் நட்டு இயற்கை மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை சௌந்தரராஜா வலியுறுத்தி உள்ளார்.

சௌந்தரராஜா

இந்த நிலையில் இன்று ஜூன் 12-ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திறக்கப்பட்டு வருகின்றன.

இதனை முன்னிட்டு மதுரையில் தனது அண்ணன் மகன் படிக்கும் பள்ளியில் இன்று ஒரு மரக்கன்றை நட்டு அதனை படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்து உள்ளார் சௌந்தரராஜா.

இதுவரை 110+க்கும் மேற்பட்ட மரங்களை இந்த மாணவன் நட்டு வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘நம் மண்ணுக்கு மக்களுக்கும்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் சௌந்தர்ராஜா இதன் மூலம் மாணவர்களிடையே இயற்கை வளம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் பள்ளிகளோ அல்லது தங்கள் வீடுகளிலோ இதுபோன்ற மரங்களை நட்டு இயற்கை வளத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.

நாமும் நம் பிள்ளைகளுக்கு இது போன்ற ஒரு செயலை செய்யச் சொல்லி அறிவுறுத்தலாமே.. தினமும் பள்ளிக்குச் செல்லும் மாணவன் அந்த மரங்களை பார்ப்பதன் மூலம் அவரின் மனமும் மகிழும் தானே..

சௌந்தரராஜா

Actor Soundararaja makes nature awareness with students

25 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரீ கொடுக்கும் ரஜினியின் ரீல் சிஸ்டர்

25 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரீ கொடுக்கும் ரஜினியின் ரீல் சிஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் தமிழ் படங்களின் நடித்து வந்தவர் நடிகை செண்பகம். இவரது இயற்பெயர் கீதா சிங்கா.

பின்னர் தன் பெயரை செண்பகா என மாற்றிக் கொண்டு சில படங்களிலும் நடித்து வந்தார்.

சரத்குமாருடன் ஐ லவ் இந்தியா என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் பிரபு, விஜயகாந்த் உள்ளிட்டோரும் இவர் நடித்துள்ளார்.

முக்கியமாக ரஜினியின் ‘பாட்ஷா’ படத்தில் மூத்த தங்கையாக இவர் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழகமெங்கும் பிரபலமானார் செண்பகா.

அதன் பின்னர் சில படங்களில் நடித்து வந்த இவர் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் தன் கணவருடன் செட்டிலானார்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இவர் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் இது தொடர்பாக சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

கீதா சிங்கா

Baashaa fame Shenbaga is back in Kollywood

தமிழில் அறிமுகமாகும் அமிதாப்பச்சன்.; 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் கூட்டணி

தமிழில் அறிமுகமாகும் அமிதாப்பச்சன்.; 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ என்ற படத்திலும் நடித்து வந்தார் ரஜினிகாந்த்.

இந்த படங்களைத் தொடர்ந்து லைக்கா தயாரிக்கும் ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த்.

இந்தப் படத்தை ‘ஜெய் பீம்’ புகழ் ஞானவேல் இயக்க உள்ளார். இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக முதலில் விக்ரம் நடிப்பார் என கூறப்பட்டது. அதன் பின்னர் அர்ஜுன் நடிப்பார் என தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் முக்கியமான கேரக்டரில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அமிதாப் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் 1991 இல் வெளியான ‘ஹம்’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.

தற்போது 32 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது அமிதாப் நடிக்கும் நேரடி தமிழ் படமாகும். ஒருவேளை இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் அமிதாப் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன் அமிதாப் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து ஒரு நேரடி தமிழ் படத்தில் நடித்தனர். அந்தப் படத்திற்கு ‘உயர்ந்த மனிதன்’ என்றும் தலைப்பிட்டு இருந்தனர். ஆனால் அந்த படம் டிராப் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

After 32 years Amitabh Bachchan and Rajini will act together in Thalaivar 170

ஆகஸ்டில் பான் இந்தியா லெவலில் ‘ரேவ் பார்ட்டி’ ; ஆர் யூ ரெடி டூ என்ஜாய்.?

ஆகஸ்டில் பான் இந்தியா லெவலில் ‘ரேவ் பார்ட்டி’ ; ஆர் யூ ரெடி டூ என்ஜாய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போனகானி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராஜு போனகானி தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ரேவ் பார்ட்டி’.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, பின்னணி வேலைகள் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஐஸ்வர்யா கவுட கதாநாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில் கிரிஷ் சித்திபாலி, ரித்திகா சக்ரவர்த்தி, ஐஸ்வர்யா கவுடா, சுச்சந்திர பிரசாத், தாரக் பொன்னப்பா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மைசூர், உடுப்பி, பெங்களூர், மங்களூரு போன்ற பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட ‘ரேவ் பார்ட்டி’ திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெறும் 35 நாட்களில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘பான் இந்தியா’ திரைப்படமான ‘ரேவ் பார்ட்டி’ வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜு போனகானி கூறுகையில்….

“ஒரே கட்டமாக சுமார் 35 நாட்களில் படத்தை முடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் படத்தை ஒரே கட்டமாக முடிக்க உதவிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றது.

பொதுவாக உடுப்பி, கோவா போன்ற இடங்களில் ரேவ் பார்ட்டிகள் கொண்டாடப்படுவது வழக்கம். எனவே ஒரு புதிய மற்றும் கலகலப்பான தோற்றத்தை கொடுக்க, இந்த அழகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்.

இது போன்ற பார்ட்டிகள் எப்படி தொடங்குகின்றன. ரேவ் பார்ட்டிகள் என்று அழைக்கப்படும் இதுபோன்ற நிகழ்வுகளில் யார் ஈடுபடுகிறார்கள்? மற்றும் ஒரு ரேவ் பார்ட்டி இளைஞர்களுக்கு என்ன சேதத்தை ஏற்படுத்துகிறது என்பது இந்த படத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

கதைக்களம் மற்றும் திரைக்கதை இளைஞர்களுக்கு பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.” என்றார்.

Rave Party wraps up shoot to hit theatres in August

Artist’s..

Kriah siddipalli.
Rittika chakraborty.
Aishwarya Gowdaa
Suchendra prasad.
Tarak ponnaappa.

Technical team:-
DOP :-Venkat mannam.
MUSIC DIRECTOR:-
Dilip Bandari.
ART DIRECTOR:-Venkat Aare.
EDITOR:- Ravi kumar K.
CO-DIRECTOR:- Nagaraju D.
CHORIOGRAPHY:-Raj paidi.
PRO:-Harish-Dinesh
PUBLICITY DESIGNER:-Lucky

Writen&Director- Raaju Bonagaani.
Producer-Raaju Bonagaani.
Co-producers-
Jayaram D R
Narayanaswamy S
Laxmikanth N R
Seetarama Raju G S

17 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தாராம் வைரமுத்து..! பிரபல பாடகி அதிர்ச்சி பேட்டி

17 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தாராம் வைரமுத்து..! பிரபல பாடகி அதிர்ச்சி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியான வலம்வபவர் சின்மயி.

சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது ‘மீ டு’பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்மீது குற்றம் சாட்டினார்.

கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். சின்மயி மட்டுமல்லாமல் பலர் வைரமுத்து மீது குற்றம்சாட்டினர்.

அதன்பிறகு, சினிமா துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல் தொடர்பான பல விஷயங்கள் வெளியே வந்தது.

சில தினங்களுக்கு முன்னர் கூட பாடகி சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்துவிற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி கனிமொழி ஆகியோருக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது பிரபல பாடகி புவனா சேஷனும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இது குறித்து புவனா சேஷன் அளித்துள்ள பேட்டியில், “17 பெண்கள் வைரமுத்திற்கு எதிராக பாலியல் குற்றசாட்டை முன் வைத்திருக்கின்றனர். ஆனால் 4 பேர் மட்டும்தான் தைரியமாக தங்களது பெயரையும் முகத்தையும் வெளி உலகத்திற்கு காட்டியுள்ளனர். பாலியல் வன்கொடுமை சூழ்நிலையில் இருந்து வெளியே வருவது என்பது மிகவும் கடினமான ஒன்று. என்னுடைய கதையை நான் பகிர்வதற்கான நோக்கம் இளம் பாடகர்களின் கனவுகள் நசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. எனக்கு நேர்ந்ததை போல பிற பெண்களுக்கு நடக்க நான் விரும்பவில்லை. பிரபல பாடகியான சின்மயி தொடர்ந்து வைரமுத்து மீதான குற்றசாட்டுகளை முன்வைக்கும் போது அவர் பலரால் விமர்சனம் செய்யப்பட்டார். சின்மயின் தைரியம் என்னை வியக்க வைக்கிறது. இந்த சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இது குறித்தான விசாரணை என்பது நடக்கபோவதில்லை, நடத்தவும் விடமாட்டார்கள்” என்று பேசினார்.

17 women have made allegations against vairamuthu said bhuvana shesan

‘போர் தொழில்’ போன்ற அருமையான படங்களில் நடிக்கனும்.; சரத்குமாருக்கு K.T.குஞ்சுமோன் பாராட்டு

‘போர் தொழில்’ போன்ற அருமையான படங்களில் நடிக்கனும்.; சரத்குமாருக்கு K.T.குஞ்சுமோன் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் – கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்தவகையில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் இந்த வாரம் நேற்று (ஜூன்-9) வெளியாகியுள்ள படம் ‘போர் தொழில்’. படம் பார்த்த அனைவருமே படம் குறித்து பாசிடிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள்..

குறிப்பாக சரத்குமாரின் நடிப்பு இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய தூணாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..

இந்த நிலையில் பிரமாண்ட படங்களை தயாரிப்பதற்கு பெயர்பெற்ற மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன்
‘போர் தொழில்’ படத்தில் சரத்குமாரின் நடிப்பு ரொம்பவே யதார்த்தமாக இருந்தது என பாராட்டியுள்ளார்.

“இந்தியாவிலேயே யதார்த்தமாக நடிக்கும் சில நடிகர்களில் சரத்குமாரும் ஒருவர். அவர் தொடர்ந்து இதுபோன்ற அருமையான படங்களில் நடிக்கவேண்டும் என வேளாங்கண்ணி அன்னையை பிராத்திக்கிறேன்” என பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் சரத்குமாருக்கு தெரிவித்துள்ளார் K.T.குஞ்சுமோன்.

நடிகர் சரத்குமார் தமிழ்சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் அவரிடம் இருந்த திறமையைக் கண்டு அப்போதே அவரை ஊக்குவித்தவர் தான் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன்.

அவரது தயாரிப்பில் வெளியான ‘வசந்த கால பறவை’, ‘சூரியன்’ ஆகிய வெற்றி படங்கள் குறுகிய காலத்தில் சரத்குமாரை தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்திற்கு உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது.

KT Kunjumon praises performance of Sarathkumar in Por Thozhil movie

More Articles
Follows