தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓரிரு தினங்களுக்கு முன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார் ரஜினிகாந்த் என செய்திகள் வந்தன.
அதன்படி இன்று 12 ஜூலை தன் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் ரஜினி.
ராகவேந்திரா மண்டபம் செல்வதற்கு முன் ‘அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? மக்கள் மன்றத்தை கலைக்கலாமா? என ஆலோசனை செய்யவுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ரஜினி.
ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டார் ரஜினி.
“எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. மக்கள் மன்றம் கலைக்கப்படும். பழையபடி ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும்” என அறிவித்து அரசியலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.
இந்நிலையில், இது குறித்து நடிகை கஸ்தூரி தன் ட்விட்டரில்…
” இன்றைய அறிவிப்பில் யாருக்கும் புதிதாய் அதிர்ச்சியோ பெரிய ஏமாற்றமோ இருந்திருக்க வாய்ப்பில்லை.
அண்ணாத்தே வெளியீட்டிற்கு பின் இன்னொரு அறிவிப்பையையும் எதிர்பார்க்கலாம்.
ரஜினி காட்டிய வழியில் ரசிகர்களும் சொந்த வேலையை கவனிக்க போகலாம்” என கஸ்தூரி கூறியுள்ளார்.
தன்னுடைய அடுத்த ட்வீட்டில்…
கெட்டு போன சிஸ்டத்தை
சுத்தம் செய்ய
போர் வீரர்கள் தயார்.
படைக்கு தலைவர் யார்?
என பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.
Actress Kasthuri teases super star Rajinikanth