தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒவ்வொரு சினிமாவிலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்று வருபவர் ரமேஷ்திலக்.
விஜய்சேதுபதியுடன் பல படங்களிலும், ரஜினியும் கபாலி படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது மீண்டும் ரஜினியுடன் இணைந்து காலா படத்தில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பதாவது…
ரஜினி சார் எதையும் ஞாபகம் வைத்திருக்கிறார். கபாலி சூட்டிங்கில் நான் நடித்தபோது ‘காக்கா முட்டை’ பட பற்றி கேட்டார்.
அதுபோல் காலா சூட்டிங்கில் கபாலி படத்தில் நான் நடித்த சின்ன ரோலை ஞாபகம் வைத்திருந்தார்.
இந்த உயரத்திலும் அவர் தன்னடக்கமாக உள்ளார். கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாதவர் தலைவர். நான் அவரின் ரசிகன் என்றார்.
அதன்பின்னர் விஜய்சேதுபதி குறித்து கூறியதாவது…
‘சூது கவ்வும்’ படத்தில் அவருடன் நடித்தேன். அன்றிலிருந்து எங்கள் நட்பு தொடர்கிறது. மிகவும் நேர்மையான மனிதர் அவர்.
எவ்வளவு பெரிய இடத்துக்குச் சென்றாலும் எப்போதும் போல்தான் பேசுவார். பழகுவார். ” என்றார் ரமேஷ் திலக்.
Actor Ramesh Thilak talks about Rajinikanth and Vijay Sethupathi