ரஜினி சொன்னபடியே நடந்தது.; 4 நாளில் ரூ. 400 கோடி.. 2.0 உலக சாதனை

ரஜினி சொன்னபடியே நடந்தது.; 4 நாளில் ரூ. 400 கோடி.. 2.0 உலக சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajiniகடந்த நவம்பர் 29ஆம் தேதி ரஜினியின் 2.0 படம் உலகமெங்கும் 15,000 தியேட்டர்களில் வெளியானது.

ஷங்கர் இயக்கிய இப்படத்தை லைகா நிறுவனம் 600 கோடி செலவில் தயாரித்து இருந்தது.

3டியில் படமாக்கப்பட்ட இப்படத்தை அனைவரும் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

ஹாலிவுட் தரத்திற்கு தமிழர்களாலும் படம் எடுக்க முடியும் என்பதை ஷங்கர் நிரூபித்துள்ளார் என பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

இப்படம் வெளியாகும் முன்பு படத்திற்கான புரமோசன் சரியில்லை. போதுமான வரவேற்பு கிடைக்காது என பலரும் கூறினர்.

ஆனால் இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் இப்படத்தை புரோமோட் செய்வார்கள் என ரஜினிகாந்த் சென்னையிலும் ஐதராபாத்திலும் மேடையில் தெரிவித்தார்.

அவர் சொன்னப்படியே இப்போது நடந்து வருகிறது. படத்தை அனைவரும் பாராட்டி வருவதால் அதுவே தற்போது விளம்பரமாகி உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

முதல்நாளில் உலகமெங்கும் 120 கோடியை வசூலித்து இருந்தது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் நான்கு நாட்களில் ரூ.400 கோடி வரை வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான லைகா, டுவிட்டரில் அறிவித்துள்ளது.

குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளதால் இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இவையில்லாமல் படத்தின் சேட்டிலைட் ரைட்ஸ் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

2.0 படத்தின் அடுத்த டார்கெட் சீனா; பாகுபலி வசூலை முந்துமா.?

2.0 படத்தின் அடுத்த டார்கெட் சீனா; பாகுபலி வசூலை முந்துமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In 2019 February Lyca plans to release 2pointO in China countryஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து ஓரிரு தினங்களுக்கு முன் வெளியான 2.0 படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

உலகின் பல நாடுகளிலும் இப்படம் திரையிடப்பட்டாலும் மக்கள் தொகை அதிகமுள்ள சீனாவில் இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

எனவே அடுத்த 2019 வருடம் பிப்ரவரி மாதம் சீனாவில் 2.ஓ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாம் தயாரிப்பு லைகா.

பாகுபலி படமும் இதுபோல்தான் சில மாதங்களுக்கு பின் சீனாவில் வெளியானது. அங்கு பல சாதனையை படைத்தது.

2.ஓ படம் பாகுபலி2 சாதனையை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

In 2019 February Lyca plans to release 2pointO in China country

தளபதி 63 படத்தில் விஜய்யை மிரட்டும் வில்லனாக பாலிவுட் நடிகர்

தளபதி 63 படத்தில் விஜய்யை மிரட்டும் வில்லனாக பாலிவுட் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bollywood Villain Actor may join with Vijay in Thalapathy 63சர்கார் படத்தை அடுத்து மீண்டும் மெர்சல் இயக்குனர் அட்லியுடன் இணைகிறார் விஜய்.

தளபதி 63 என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் இயக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

நாயகியாக நயன்தாரா நடிக்க, காமெடி கேரக்டரில் விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஜனவரி மாதம் சூட்டிங் தொடங்கவுள்ள நிலையில் தற்போது செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மற்றொரு கேரக்டரில் டேனியல் பாலாஜியும் நடிக்கிறாராம். ஏற்கெனவே `பைரவா’ படத்தில் விஜய்யுடன் டேனியல் பாலாஜி நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Bollywood Villain Actor may join with Vijay in Thalapathy 63

நிறைய நடிகர்களுக்கு சமூக அக்கறையே இல்லை.. : ரஞ்சித் பேச்சு

நிறைய நடிகர்களுக்கு சமூக அக்கறையே இல்லை.. : ரஞ்சித் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Many actors does not care about Society says Pa Ranjithசென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் டைரக்டர் ரஞ்சித்.

அப்போது அவர் செய்தியாளர்களிடையே பேசியதாவது…

இங்குள்ள ஓட்டு அரசியல் எல்லா சமூகத்தையும் தனித்தனியாக பிரித்து இருக்கிறது.

தலித்தில் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என எல்லா சாதிகளிலும் தனி பிரிவுகள் உருவாக்கியுள்ளது.

பெரியாரிய இயக்கங்கள் இங்கு எல்லோரையும் ஒன்றாக்கியது. ஆனால் தற்போது உடைப்பதற்கான நிறைய வேலைகள் இங்கு நடக்கிறது.” என்றார்.

அதனையடுத்து நடிகர்களுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை பற்றிய கேள்விக்கு அவர் கூறியதாவது…

‘விஜய்சேதுபதி உள்ளிட்ட நிறைய நடிகர்கள் மக்களுக்காக உதவி செய்து வருகிறார்கள், சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்பது வருத்தமளிக்கிறது” என்று கூறினார்.

Many actors does not care about Society says Pa Ranjith

வறுமையின் கொடுமையில் வாழ்ந்தோம்..; செல்வராகவன் உருக்கம்

வறுமையின் கொடுமையில் வாழ்ந்தோம்..; செல்வராகவன் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Selvaraghavan talks about his family poor conditionதமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்பாளிகளில் ஒருவர் செல்வராகவன்.

இவர் தனுஷின் அண்ணன் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் தனுது கடந்த காலத்தை பற்றி பதிவிட்டுள்ளார்.

அதில் “கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவர்கள் நாங்கள். இருவேளை உண்டால் அரிது.

அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயினும் சமூகம் கேலி செய்யும். நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என. எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர். அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்” என பதிவிட்டுள்ளார்.

Director Selvaraghavan talks about his family poor condition

ஆரி-ஐஸ்வர்யா தத்தா இணையும் படத்தில் காதலுடன் காதல் மோதல்

ஆரி-ஐஸ்வர்யா தத்தா இணையும் படத்தில் காதலுடன் காதல் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aari Vs Aishwarya Dutta starring new movie updatesஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னை முகபேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் துவங்கியது.

படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உண்டு. 60’களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது .80’களில் ஜாதி தடையாக இருந்தது.

2000-த்தில் அந்தஸ்து காதலுக்கு தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக எல்லா தரப்பினரையும் கவரும் கதை களம் தான் இப்படம்.

இந்த படத்தில் கடந்து போன காதலையும் பார்க்கலாம் இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் பார்க்கலாம். உங்க காதலை பார்க்க தயாராகுங்கள். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் கதை கவிதை நயம் கொண்ட காதல் கதை.

“அய்யனார்” படத்தை இயக்கிய S.S.ராஜமித்ரன் இப்படத்தை இயக்குகிறார். A.G.மகேஷ் இசை அமைக்க, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ புகழ் தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் B. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

மற்ற நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப குழு மற்றும் தலைப்பு குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்.

Aari Vs Aishwarya Dutta starring new movie updates

More Articles
Follows