தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பேராண்மை படத்தில் அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே ரஜினியுடன் நடித்தவர் தன்ஷிகா.
இவரது நடிப்பில் காலக்கூத்து விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில் தன் சமீபத்திய பேட்டியில் ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார். அதில்…
“என் நடிப்பை வெகுவாக பாராட்டினார் ரஜினி சார்.
கபாலிக்கு பிறகு எனக்கு நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று சொன்னார். அதுபோலவே நடந்து வருகிறது.
ரசிகர்களை ரஜினி சார் உயர்வாக நினைக்கிறாரு.
ரசிகர்கள்தான் நம்ம சொத்து அவங்க இல்லேன்னா நாம இல்ல என்பார்.
சூட்டிங் முடித்துவிட்டு எவ்வளவு டயர்டா இருந்தாலும், ரசிகர்களுக்காக போட்டோவுக்கு போஸ் கொடுத்து நிப்பாரு.
நம்மள பார்க்க ரொம்ப தூரத்துல இருந்து வர்றாங்க. அவங்களுக்கு மரியாதை கொடுக்கனும்னு சொல்வார்.
இதுபோல நிறைய விஷயங்கள அவருக்கு இருந்து கத்துகிட்டேன். இப்பவும் அடிக்கடி போனில் பேசிக் கொள்வோம்”
என்றார் கபாலி மகள் ‘யோகி’.