தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது லைகா.
இதற்கு முன்பே ஷங்கர் இயக்கிய ரஜினியின் 2.0 படத்தையும் லைகா தயாரித்து இருந்தது.
அப்போது 2.0 பட தயாரிப்பு பணிக்காக லைக்கா நிறுவனத்திற்கு, 12 கோடி ரூபாயை கடனாக வழங்கியதாகவும், அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயை வழங்க வேண்டி இருப்பதால், அந்த தொகையை வழங்காமல் தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மலேசியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு சில தினங்களுக்கு முன் நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, லைக்கா நிறுவனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது.
அதில், மலேசியா நிறுவனத்துக்கு லைக்கா நிறுவனம் எந்த கடன் பாக்கியும் வைக்கவில்லை எனவும், மனுதாரர் தான் தங்கள் நிறுவனத்திற்கு 1 கோடியே 45 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், தங்கள் நிறுவனம் பெற்ற கடனுக்கு காலா படத்தின் சிங்கப்பூர் வெளியிட்டு உரிமையை மலேஷிய நிறுவனத்திற்கு அளித்ததாகவும் அதில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு தரவேண்டிய தொகைக்கு பதிலாக காலா படத்தின் சிங்கப்பூர் உரிமையை அளித்ததற்கான எந்த ஒப்பந்தம் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, லைகா நிறுவனம் தற்போது 4 கோடியே 90 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி உத்தரவாதம் அல்லது வங்கியில் டெபாசிட் செய்யும் வரை தர்பார் திரைப்படத்தை மலேசியாவில் மட்டும் ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், 4 கோடியே 90 ஆயிரம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்யும் பட்சத்தில் தர்பார் திரைப்படத்தை மலேஷியாவில் படத்தை வெளியிடலாம் எனவும் நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Rajinis Darbar banned to release in Malaysia