தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காலா படத்தின் ஆடியோ வெளியீட்டை சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திறந்தவெளி அரங்கில் வெளியிட உள்ளனர்.
தனது அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு மிகப் பெரிய அளவில் ரஜினி நடத்தும் விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி 10 ஆயிரம் பேருக்கு “ரஜினி மக்கள் மன்றம்” அழைப்பிதழும், விழா நுழைவு அனுமதி அட்டையையும் அனுப்பி வைத்துள்ளது.
இந்த 10 ஆயிரம் பேரில் 7,500 பேர் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகிறார்கள். சென்னையை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அதிக பட்சமாக 2,500 அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
காலா பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 10 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டு இருப்பது, ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக கொள்ள போவதும் ரஜினியும் அவரது ரசிகர்களும்தான். அவர்களைத் தவிர வேறு யார்? இருக்க போகிறார்கள்.?