தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ராதிகா, கோவை சரளா, தம்பி ராமையா, மதுமிளா, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, கௌசல்யா, மயில்சாமி, சரவண சுப்பையா மற்றும் பலர்.
இயக்கம் : ஐக்
இசை : விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவாளர் : சத்யன் சூரியன்
எடிட்டர்: டிஎஸ் சுரேஷ்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : ஏ பார் ஆப்பிள் சார்பாக இயக்குனர் அட்லி
கதைக்களம்…
வழக்கமா ஒரு பேய் கதையில் என்ன இருக்கும்..?
பேய் பங்களா அங்கே ஒரு குடும்பம். பேய்க்கு ஒரு ப்ளாஷ்பேக், பேயின் ஆசையின் நிறைவேற்ற சில நபர், சமாதானம் ஆன பேய் மறையும். இதானே.
இந்த கதையும் அப்படித்தான். இதில் சற்று வித்தியாசமாக உறவினர்கள் அடித்துக் கொள்ள கூடாது. குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பேய் ஆசைப்படுகிறது.
அத்துடன் வாடகையில் வீட்டிலேயே வசிக்கும் ராதிகாவுக்காக சொந்த வீடு வாங்க ஆசைப்படும் மகன் ஜீவாவின் கேரக்டர் புதுசு.
கேரக்டர்கள்…
அலட்டிக் கொள்ளாத நடிப்பில் ஜீவா. ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞனாக வருகிறார். இவருடன் சூரி.
சந்தானத்திற்கு அடுத்து ஜீவாவிற்கு சூரியுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் என நம்பலாம்.
ஸ்ரீதிவ்யா அழகில் ரசிக்க வைக்கிறார். நடிப்பில்…? அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை பாவம்.
பின்னணி இசையில் பயமுறுத்தும் படத்தில் சூரியின் காமெடி கொஞ்சம் ரசிக்கலாம்.
முக்கியமாக வாஷிங் மெஷின் காமெடி இனி பாப்புலராக பேசப்படும்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ராதாரவிக்கு நிறைய காட்சிகள். இடைவேளைக்கு பிறகு அவரே பேயாட்சி நடத்துகிறார்.
ஒரு பாசமான அம்மாவாக ராதிகா அசத்துகிறார். தாய்மாமனாக வரும் இளவரசு நாயகனுக்கு கைகொடுக்கிறார்.
தம்பி ராமையா, தேவதர்ஷினியின் ரொமான்ஸ் காட்சிகள் காம நெடி.
மதுமிளா, கௌசல்யா, மயில்சாமி, சரவண சுப்பையா ஆகியோரின் கேரக்டர்களில் அழுத்தமில்லை.
இவர்களைத் தவிர பேய் படத்தில் யாரு எல்லாம் இருப்பாங்க..?
கோவை சரளா, தேவதர்ஷினி, மொட்டை ராஜேந்திரன் தானே.. அவங்க எல்லாம் இருக்காங்க.. நல்ல வேளை இந்த டெம்ப்ளேட்டில் மனோபாலா இல்லை.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலம். இந்த இசையை பேய் வரும் பயத்தை உண்டாக்குகிறது.
சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு ஓகே. ஒரு பங்களாவை சுற்றியே காட்சிகள் நகருவதால் சில காட்சிகள் போரடிக்கிறது.
முதல் பாதி ரசிக்க வைக்கும் அளவுக்கு இரண்டாம் பாதி கைகொடுக்கவில்லை.
புதிய கதையுடன் டைரக்டர் ஐக் களம் இறங்கியிருந்தால், இன்னும் ஆச்சரியப்பட்டு இருக்கலாம்.
சங்கிலி புங்கிலி கதவ தொற… திறந்தாலும் பயமில்லை