ரெய்டு விமர்சனம்.. ரௌடியிச ரெய்டு

ரெய்டு விமர்சனம்.. ரௌடியிச ரெய்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரவுடிகளை ரெய்டு அடித்து வேட்டையாடும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை தான் இந்த படம்.

கதைக்களம்…

போலீஸ் பிரபாகரன் (விக்ரம் பிரபு) ஒரு நேர்மையான அதிகாரி. ரவுடிகளை எந்தவித தயக்கமும் இன்றி என்கவுண்டர் மற்றும் அரிவாளால் போட்டுத் தாக்கும் பலே அதிகாரி இவர். போலீஸ் என்றாலும் காசு கொடுத்துதான் டீ குடிப்பார் இவர்.

இவரின் காதலி டெட்டின்ஸ்ட் ஸ்ரீதிவ்யா. இவரின் தங்கை அனந்திகா.

ஒரு கட்டத்தில் தன் காதலியை எதிரிகள் போட்டுத் தள்ள அவரது தங்கையை காப்பாற்ற இவர் நடத்தும் ரெய்டு தான் மீதிக்கதை.

வேலு பிரபாகரன் மெயின் ரவுடி. இவருக்கு அடுத்து ரிஷி அவரது சகோ டேனியல் மற்றும் சௌந்தரராஜா மூவரும் கேங்ஸ்டர் கும்பல். இவர்களுடன் மோதும் போலீஸ் விக்ரம்பிரபு.

ஸ்ரீதிவ்யாவை ரவுடி கும்பல் கொல்ல என்ன காரணம்? இருவருக்கும் என்னதான் பிரச்சனை? என்பதை படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

மீசையில்லாத முகம்.. கம்பீரமான தேகம்.. உயரமான உருவம் கனிவான கண்கள் என பிரபாகரன் கேரக்டரில் விக்ரம் பிரபு.

காதலியை கண்டால் கூட கடமையே தன் லட்சியம் என இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் வழக்கம் போல பட்டையை கிளப்பி இருக்கிறார். ஒரு சென்டிமீட்டர் கூட சிரிக்க கூடாது என பிடிவாதமாக பிரபாகரன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஸ்ரீ திவ்யா. இவரின் காட்சிகளை எடிட்டர் வெட்டி விட்டாரோ? என நாம் தியேட்டரை விட்டு எழுந்திருக்கும் போது திடீரென ஸ்ரீதிவ்யா என்ட்ரி கொடுக்கிறார். அரை மணி நேரம் என்றாலும் அவருக்கும் இரண்டு டூயட் என ரசிக்க வைத்திருக்கிறார். அவரைக் கண்டதும் தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டலை கேட்க முடிந்தது. (ரசிகர்கள் பாவம்.. அடிக்கடி தமிழில் நடிங்க அம்மணி)

நாயகி தங்கையாக தமிழில் அறிமுகம் ஆகிறார் அனந்திகா. இனி இவருக்கு நிறைய படங்களில் ஹீரோயின் வேடம் கிடைக்கும். அந்த அளவிற்கு துறுதுறு பெண்ணாக அழகால் இளைஞர்களை சுண்டி இழுக்கிறார்.

விமல் நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சௌந்தரராஜா இதில் முற்றிலும் மாறுபட்டு நீண்ட தாடி வளர்த்த ரவுடியாக மிரட்டி இருக்கிறார். அதிலும் கவிதை எழுதும் ரவுடியாக வித்தியாசமான வேடம் ஏற்றுள்ளார்.

அண்ணன் தம்பி ரவுடியாக ரிஷி மற்றும் டேனியல். இருவரும் இதுவரை ஏற்காத வேடம் என்பதால் மெனக்கெட்டு வில்லத்தனம் காட்டுயிருக்கின்றனர்.

வாய்ஸ் ஓவர் கொடுத்து பாசம் மிக்க மாமாவாக நடிகர் செல்வா நடித்திருக்கிறார். இவருகளுடன் வேலு பிரபாகரன் & ஜீவா ரவி உள்ளிட்டோரும் உண்டு.

டெக்னீசியன்கள்ஸ்…

இசை : சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : கதிரவன்
படத்தொகுப்பு : மணிமாறன்
காஸ்டியூம் டிசைன் : மாலினி பிரியா

கதிரவனின் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகளில் அனல் தெறிக்கிறது..

சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் சுமார் ரகமே. பின்னணி இசையில் ரசிக்க வைத்தாலும் நிறைய இடங்களில் காட்டுகத்து எரிச்சல் தான்..

எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் ரெய்டு படத்தை தயாரித்துள்ளது. ‘கொம்பன்’ பட முத்தையாவின் தங்கை மகன் கார்த்தி என்பவர் ரெய்டு படத்தை இயக்கியிருக்கிறார்.

முத்தையா படங்களில் இருக்கும் உணர்வு பூர்வமான எமோஷன் காட்சிகள் இதில் இல்லை என்பது வருத்தமே.. வெறும் ஆக்சனை மட்டும் நம்பி களமிறங்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்தி.
வசனங்களும் கவரவில்லை.

இந்த படத்தை என்ன நினைத்து எடிட் செய்தாரோ தெரியவில்லை.. ஒவ்வொரு வில்லனுக்கும் ஹீரோ நாயகி ஆகியோருக்கும் தனித்தனியாக ஃப்ளாஷ் பேக்.. ஒன்றன்பின் ஒன்றாக வருவதால் திரைக்கதையில் குழப்பம் மிஞ்சுகிறது.

ஒரு காட்சியில் விக்ரம் பிரபு கையில் கன் இருக்கும்போது எதிரே நிற்கும் வில்லன் என் கையில் அருவா இருக்குது. இப்படி யாராவது சொல்வார்களா.? துப்பாக்கியால் எங்கிருந்தாலும் சுட்டு விட முடியும்.. ஆனால் அருவா அருகே வந்தால் மட்டுமே வெட்ட முடியும்.. இதை கூடவா வசனகர்த்த கவனிக்கவில்லை..

ஆக.. ரௌடியிச ரெய்டு

ரெய்டு

raid movie review and rating in tamil

கிடா விமர்சனம்.. மறிக்காத மனிதநேயம்

கிடா விமர்சனம்.. மறிக்காத மனிதநேயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பிரம்மாண்ட படங்களுக்கு மத்தியில் கிடா போன்ற சில படங்கள் பிரம்மாண்ட கதையை நம்பி களமிறங்கும் என்பதற்கு இது சான்று.

தீபாவளி பண்டிகைக்கு இலட்சக்கணக்கில் செலவு செய்யும் மக்கள் மத்தியில் ரூ.500-க்கி வழியில்லாத சாமானியனின் கதை தான் இது.

பூ ராமு – பாண்டியம்மாள் இவர்கள் பெற்றோரை இழந்த தங்கள் பேரனை வளர்த்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் விளம்பரத்தில் பார்த்த ஒரு விலை உயர்ந்த ஆடையை வாங்கி கேட்கிறான் பேரன். அதை வாங்க இவர் போராடும் கதை ஒரு பக்கம்.

மற்றொரு பக்கம் ஆட்டுக்கறி வெட்டும் தொழிலை செய்பவர் காளி வெங்கட். ஒரு கட்டத்தில் அவரது முதலாளியிடம் பிரச்சனை ஏற்படவே தீபாவளி என்று தானே தனியாக ஒரு கடையை திறப்பேன் என சவால் விடுகிறார்.

இந்த இரண்டு கதைகளையும் இணைத்து ஒரு உணர்வுபூர்வமான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ரா வெங்கட். அது என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

கேரக்டர்கள்..

நடிகர் பூ ராமு தற்போது மறைந்து விட்டாலும் அவரது இந்த கேரக்டர் என்றும் மனதில் நிற்கும். கிடா மூலம் தன் கம்பீர நடிப்பை கொடுத்திருக்கிறார்.. பேரனுக்காக அவர் செய்யும் ஒவ்வொன்றும் இப்படி ஒரு தாத்தா நமக்கு இல்லையே என்று குழந்தைகளை ஏங்க வைக்கும்.

அநீதி படத்தில் தங்க புள்ளையாக வந்து தங்கமாக ஜொலித்த காளி வெங்கட் இதில் கறி வெட்டும் கேரக்டரில் நம் உள்ளங்களை துண்டாக்கி இருக்கிறார். எங்குமே மிக இல்லாத நடிப்பை கொடுத்து நம்மை கவர்ந்திருக்கிறார்.

அதுபோல பூராமின் மனைவியாக பாண்டியம்மா.. பேரனாக மாஸ்டர் தீபன் ஆகியோரும் நாங்களும் நடிப்பில் குறைந்தவர்கள் இல்லை என நிரூபித்துள்ளனர். கிளைமாக்ஸ் காட்சியில் மாஸ்டர் தீபன் காட்டும் திருட்டு முழி ரியாக்ஷன் சூப்பர்.

க்ளைமாக்ஸ் காட்சியில் பூ ராமின் கையில் காளி வெங்கட் பணத்தை கொடுக்கும் காட்சி மனிதநேயம் மரணிக்கவில்லை என்பதற்கான சாட்சி.

காளி வெங்கட்டின், மகன், மகனின் காதலி, காளி வெங்கட்டின் நண்பர் ஆகியோரும் சிறப்பு.

டீக்கடைக்காரன் பாண்டியாக கருப்பு கலகலப்பு. காளி வெங்கட் மனைவி லோகியும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

இவர்களுடன் திருடர்களாக ஆனந்த், ஜெய், தேவா மற்றும் சங்கிலி நால்வரும் கலகலப்புக்கும் கதைக்கும் கை கொடுத்துள்ளனர்.

ஒரு சினிமா என்றால் காதல் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமா.?
காதலர்கள் பாண்டி & ஜோதி இருவரும் கச்சிதம்.

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் எம்.ஜெயப்பிரகாஷ் நம்மை மதுரைக்கு அழைத்துச் சென்றது போல ஒரு உணர்வு. அந்த மக்கள் வாழ்வியலை அழகாக படம் பிடித்துள்ளார்.

தீசனின் பின்னணி இசை கதைக்கு உயிர் ஊட்டியுள்ளது எனலாம். எடிட்டர் ஆனந்த் ஜெரால்டின் எடிட்டிங் சிறப்பு.

இயக்குனர் ரா.வெங்கட்டிற்கு இது முதல்படம் என்று அவரே சொன்னால் கூட நம்மால் நம்ப முடியாது. அப்படி ஒரு நேர்த்தியான படைப்பை கொடுத்திருக்கிறார்.

என்னதான் நல்லவர்களுக்கு காலம் இல்லை என்று ஆயிரம் பேர் சொன்னாலும் ஏதோ ஒரு நல்லவர், ஏதோ ஒரு மனிதநேயமிக்கவர் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு ‘கிடா’ போன்ற படங்களே உதாரணம்.

Kida movie review and rating in tamil

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்.; ஜிகர்தண்டா என்றாலே ருசிதானே

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்.; ஜிகர்தண்டா என்றாலே ருசிதானே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகவா லாரன்ஸ் & எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.

இதில் நிமிஷா சஜயன், ஷைன் டாம் சாக்கோ, நவீன் சந்திரா, பவா செல்லதுரை உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஃபைவ் ஸ்டார் கிரியேஷனுடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் தன் ஸ்டோன் பென்ச் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார்.

கதைக்களம்…

1973 – 1975 ஆகிய காலகட்டங்களில் கதை தொடங்கி நகர்கிறது.. தன் தந்தையின் ஆசைப்படி போலீசாக வேண்டும் என நினைக்கிறார் எஸ் ஜே சூர்யா. ஒரு கல்லூரி விழாவில் செய்யாத குற்றத்திற்காக 4 பேரை கொன்றதாக கைது செய்யப்படுகிறார் எஸ் ஜே சூர்யா.

இவரது போலீஸ் ஆசை குறித்து அறியும் உயரதிகாரி மதுரையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் (ஜிகர்தண்டா பேமஸ் லாரன்ஸ்) ஒருவனை நீ கொன்று விட்டால் அடுத்த நாளே உனக்கு போலீஸ் போஸ்டிங் தருகிறேன் என வாக்குறுதி அளிக்கிறார்.

பயந்த சுபாவம் கொண்ட எஸ் ஜே சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க அந்தக் கட்டத்தில் தான் லாரன்ஸுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளிர் விடுகிறது. நல்ல கதை வைத்துள்ள இயக்குனர் தன்னை அணுகலாம் என லாரன்ஸ் விளம்பரம் கொடுக்கிறார்.

எனவே தன்னை ஒரு சினிமா இயக்குனர் என கூறிக்கொண்டு தன் நண்பன் சத்யனுடன் மதுரைக்கு செல்கிறார் எஸ் ஜே சூர்யா.

அதன் பிறகு என்ன நடந்தது.? ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் சினிமாவில் நடிகர் ஆனாரா.? வெள்ளை ஹீரோக்கள் இருந்த காலத்தில் கருப்பு ஹீரோவுக்கு அறிமுகம் கிடைத்ததா? எஸ் ஜே சூர்யா யார் என்று தெரிந்து கொண்டாரா லாரன்ஸ்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஜிகர்தண்டா2 படத்தில் ஹீரோ யார்? வில்லன் யார்? என்று தெரியாத அளவிற்கு லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். ஒரு காட்சியில் இவர் ஸ்கோர் செய்தால் அடுத்த காட்சியில் அவர் ஸ்கோர் செய்கிறார்.

காந்த கண்கள்.. சுருளான தலைமுடி.. கறுப்பு தோல்.. வாட்டசாட்டமான தேகம் என தோற்றத்திலும் வெளுத்துக்கட்டி இருக்கிறார் லாரன்ஸ். சந்திரமுகி 2 படத்தில் கூட இப்படி ஒரு வேட்டையனை நாம் பார்க்கவில்லையே.. என்பதால் நம்மிடையே கூடுதல் கவனத்தை ஈர்க்கிறார்.. தன் நடிப்பிலும் ஜொலிக்கிறார்.

முதல் பாதி சினிமா ஷூட்டிங் என்று காட்சிகள் நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் சேட்டானியுடன் மோதல் மலைவாழ் மக்களுக்கான போராட்டம் என கதையை நகர்த்தி இருப்பது புத்திசாலித்தனம்.

16 வயதினிலே உள்ளிட்ட பல படங்களில் 1970களில் நாம் பார்த்த ஹீரோக்களை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.. MGR காலத்து மீசை.. சோடாபுட்டி கண்ணாடி.. தொடை நடுங்கி.. பயத்தை வெளியே காட்டாத கம்பீரம் என கெத்து காட்டி இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

லாரன்ஸின் மனைவியாக நிமிஷா சஜயன். இவர் சமீபத்தில் வெளியான சித்தா என்ற படத்தில் சித்தார்த்தின் காதலியாக நடித்து நம் கவனத்தை ககவர்ந்திருந்தார். இந்த படத்தில் பழங்குடியின பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். அவர் பேசும் பேச்சு கூட நம்மை ரசிக்க வைக்கிறது.

கர்ப்பிணியாக இருக்கும்போது முகபாவனை தோற்றம் என மாற்றிய நிமிஷா பிரசவித்த பின் முகப்பொலிவை கூட அழகாக காட்டியிருக்கிறார்.

இயக்குனர் பவா செல்லத்துரையின் அசிஸ்டன்ட் சத்யன்.. ஒரு கட்டத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு அசிஸ்டெண்டாக மாறி அவர் செய்யும் காமெடி வேற லெவல்.. “உன்னால் லாரன்ஸை கொல்ல முடியாது.. 25 வருடங்கள் நீ சூட்டிங் எடுத்துக் கொண்டே இருந்தால் ஒரு நாள் அவர் இறந்து விடுவார் என்று கூறும்போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது”

இவர்களுடன் இளவரசு, போலீஸ் அதிகாரி, சேட்டானி, தமிழக பெண் முதல்வர் உள்ளிட்ட பலரும் கைத்தட்டல்களை அள்ளுகின்றனர். அதிலும் அரசியல்வாதிகள் போடும் ஆட்டம் அப்போதே இருந்திருக்கிறது என்பதையும் அப்பட்டமாக காட்டுகிறது.

1975-ல் தமிழகத்திற்கு ஆண் முதல்வர் தான் இருந்தார்.. ஆனால் பெண் முதல்வரை காட்டி இருப்பது ஏனோ.?

டெக்னீசியன்கள்…

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஆல்ரெடி சூப்பர் ஹிட்.. ‘மாமதுரை வா மதனி..’ என்ற பாடல் ரசிகர்களை எழுந்து நின்று ஆட வைக்கிறது. மேலும் மற்ற பாடல்களும் 1970 காலகட்டத்திற்கு நம்மை இழுத்துச் செல்கிறது.

சந்தோஷ நாராயணனின் பின்னணி இசையும் நம்மை டைம் ட்ராவல் போல 1970களுக்கு கொண்டு செல்கிறது

இன்றைய கால பாடங்களை படம்பிடிப்பது எளிது.. ஆனால் 1970 காலகட்டங்களை கண்முன் நிறுத்துவது சவாலான விஷயம். அதை நிறைவாக கொடுத்திருக்கிறார் கலை இயக்குனர்.

எஸ் ஜே சூர்யா வின் கெட்டப் முதல் தியேட்டர்.. தியேட்டரில் ஸ்கிரீன்.. கார் என அனைத்தையும் அருமையாக கொடுத்திருக்கிறார்.

பேட்டை படத்திற்குப் பிறகு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை கார்த்திக் சுப்புராஜ்.. ஜகமே தந்திரம் படம் அவரை கைவிட்ட நிலையில் தன்னுடைய ராசியான ஜிகர்தண்டா படத்தின் மூலம் மீண்டும் அடுத்த வெற்றியை கொடுத்திருக்கிறார்.

கேங்ஸ்டர் மற்றும் காடுவளம் அதில் அரசியல் என அனைத்தையும் கலந்து தீபாவளிக்கு ஒரு பக்கா ட்ரீட் கொடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

அதிலும் யானையுடன் சேட்டானி மோதும் கிராபிக்ஸ் காட்சிகள் நிச்சயம் குழந்தைகளை கைத்தட்ட (மிரள) வைக்கும்.

ஒரு மூன்று மணி நேரம் திரைப்படத்தால் 30 வருட அரசியல்வாதியின் வாழ்க்கையை காலி செய்ய முடியும் என்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத ஒன்று. அதிலும் ஹாலிவுட் படங்களின் காட்சிகளை இணைத்து வித்தியாசமான விருந்தளித்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

Jigarthanda Double X movie review and rating in tamil

ஜப்பான் விமர்சனம்.; கார்த்தியின் 25வது படம் எப்படி.?

ஜப்பான் விமர்சனம்.; கார்த்தியின் 25வது படம் எப்படி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’.

இதில் அனு இமானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில், கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர், பவா செல்லதுரை உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க எஸ்.ஆர்.பிரபுவின்
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
தயாரித்துள்ளது.

கதைக்களம்.?

அரசியல்வாதி கே எஸ் ரவிக்குமாருக்கு சொந்தமான ஒரு நகைக்கடையில் 200 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடிக்கிறார் ஜப்பான் (கார்த்தி). இதனால் அரசியல்வாதியின் கட்டளை பேரில் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் இறங்குகின்றனர்.

தென்னிந்திய முழுவதும் தேடப்படும் மிகப்பெரிய கொள்ளைக்காரன் ஜப்பான் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவில் முதலீடு செய்து படங்களையும் வீடியோக்களையும் எடுத்து இணையதளங்களில் பதிவிட்டு மக்களிடையே பிரபலமாகி வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் ஜப்பானுடன் தொடர்பு இருப்பதாக ஒரு நபரை விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர்.. அவரோ மனைவி குழந்தை மீது அதிக பாசம் கொண்டவர்.. அந்த அப்பாவியின் நிலை என்ன?

இந்த நிலையில் போலீசில் சிக்கும் ஜப்பான் மீது செய்யாத குற்றத்திற்காக மற்றொரு வழக்கும் போடப்படுகிறது. அப்படி என்றால் அந்த குற்றத்தை செய்தவர் யார்? ஜப்பானுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு?

தென்இந்தியா முழுவதும் தேடப்படும் குற்றவாளி ஜப்பான் உண்மையில் யார்? அவனது பின்னணி என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

சிறுத்தை படத்திற்குப் பிறகு பக்கா திருடனாக ஜப்பானாக ஜொலிக்கிறார் கார்த்தி.. எந்த இடத்திலும் கார்த்தியை வெளிப்படுத்தாத வண்ணம் குரலை மாற்றி வித்தியாசமாக முயற்சித்து இருக்கிறார். ஆனால் சில இடங்களில் மட்டும் சத்தமாக பேசும் காட்சிகளில் குரல் மாற்றம் தெரியல.

அதேசமயம் தாய் பாசத்திற்காக ஏங்கும் நாயகனாகவும் நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் சொல்லப்படும் அந்த மீன் கதை உயிரோட்டமாக இருந்தாலும் படத்தின் நீளத்திற்காக குறைத்து இருக்கலாம்.

கார்த்தியின் 25வது படத்தில் தான் நாயகி என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம் அணு இம்மானுவேல் மற்றபடி அவரது காட்சிகள் அணு அளவே உள்ளது.

அரசியல்வாதி கே.எஸ்.ரவிக்குமார்.. போலீஸ் அதிகாரி.. சுனில் & விஜய்மில்டன் ஆகியோர் தங்களது பங்களிப்பில் குறை வைக்கவில்லை.. எழுத்தாளர் பவா செல்லத்துரை-யின் கேரக்டரில் வலுவில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாகை சந்திரசேகர் மனதில் நிற்கும் படியான கேரக்டரை கொடுத்திருக்கிறார்.

கார்த்தி கும்பலில் இருக்கும் ஜித்தன் ரமேஷ் கேரக்டர் திடீரென மாறுவது எதிர்பாராத ஒன்று. இவர்களின் மோதல் சண்டைக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. நுங்கு பாம் வித்தியாசமான கற்பனை.

டெக்னீசியன்கள்…

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்ய ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் பின்னணி இசைக்கு கொடுத்த ஆர்வத்தை பாடல்களிலும் கொடுத்திருக்கலாம். பாடல்கள் ஈர்க்கவில்லை என்பது வருத்தம்.

ஒளிப்பதிவாளர் தன் பங்களிப்பில் நேர்த்தி. ஆனால் எடிட்டர் பொறுமையை சோதித்து விட்டார்.. மீன் கதை.. ஹீரோயின் ஷூட்டிங் காட்சிகள் உள்ளிட்டவைகள் நீளம்.

மிகப்பெரிய கொள்ளைக்காரன் கார்த்தி பெரிய அளவில் யாரையும் கூட வைத்துக் கொள்ளாதது நம்பும் படியாக இல்லை. . போலீஸால் தேடப்படும் ஒரு திருடன் சினிமா எடுப்பது வீடியோ பதிவிடுவது எல்லாம் நம்ப முடியாத லாஜிக் ஓட்டை.

லாஜிக்கை எல்லாம் மறந்து கொள்ளை மேஜிக்கை காண நினைத்தால் இந்த படத்தை பார்க்கலாம்.. ஜோக்கர் குக்கூ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் எடுத்த ராஜூமுருகன் இதில் தன் பாதையை மாற்றி கமர்சியலுக்கு தாவியுள்ளார்.

அதேசமயம் அரசியல்வாதிகளையும் காவல்துறையையும் தன்னுடைய நையாண்டி மூலம் கலாய்த்திருப்பது சிறப்பு.

ஒரு மெசேஜ் அனுப்பினால் அதை ஒரு நிமிடத்தில் ஆயிரம் பேருக்கு ஃபார்வேர்டு செய்வார்கள்.. வதந்தியை நம்பும் வாட்ஸ்அப் மக்கள் கூட்டம் என்றும் ஜனங்களையும் கலாய்த்து இருக்கிறார்.

தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா போன்ற எந்த மாநிலம் என்றாலும் காவல்துறையிலும் கருப்பு ஆடுகள் இருப்பதால்தான் திருடர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுற்றுகிறார்கள் என்பதையும் அப்பட்டமாக காட்டி இயக்குனர் ராஜூமுருகன்.

ஜப்பான்

japan movie review and rating in tamil

AGE IS JUST NUMBER… கபில் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்.

AGE IS JUST NUMBER… கபில் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீனி சௌந்தரராஜன்.. இவரே இந்தப் படத்தின் கதையின் நாயகனாக நடித்து இயக்கி தயாரித்திருக்கிறார். தனது நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி இந்த திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.

கதைக்களம்…

ஸ்ரீனி சௌந்தர்ராஜன் இவரது மனைவி நிமிஷா. இவர்களுக்கு 12 வயதில் ஜான் என்று ஒரு மகன்.

ஸ்ரீனி ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார் அசோக் (ஸ்ரீனி). இவருக்கு கார் ஓட்ட தெரியாது பைக் ஓட்ட தெரியாது.. எனவே ஆபீசுக்கு வையாபுரி ஓட்டும் ஆட்டோவில் தான் செல்கிறார்..

இப்படியான சூழ்நிலையில் ஒரு நாள் தன் மகனுக்கு விபத்து ஏற்படவே திடீரென அவசர அவசரமாக காரை ஓட்டி செல்கிறார். இதனால் மனைவிக்கு சந்தேகம் வருகிறது.

மற்றொரு நாள் காய்கறி விற்க்கும் நாகரத்தினம் சீனியை பார்த்து நீ கபில்தானே எப்படி இருக்கிறாய்.? என்கிறார். இதனால் மேலும் குழப்பம் அடையும் மனைவி நிமிஷா.. உங்களின் பிளாஷ்பேக் என்ன? நீங்கள் யார்? என பல கேள்விகளை கேட்கிறார்.

உண்மையில் அசோக் (சீனி சௌந்தரராஜன்) யார்? அவரது பெயர் கபில்.? அவருக்கு கார் ஓட்ட தெரியும் என்றால் தினமும் ஆட்டோவில் செல்வதற்கு காரணம் என்ன உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை அளிக்கிறது கபில் ரிட்டன்ஸ்.

கேரக்டர்கள்..

ஸ்ரீனி சௌந்தரராஜன்.. இது இவரது முதல் படம் என்றாலும் நல்ல ஒரு கதை களத்தை தேர்ந்தெடுத்து சாதிக்க வயது தடையில்லை என திரைக்கதையில் சொல்லி இருக்கிறார் முக்கியமாக கிரிக்கெட் விளையாட்டில் இவர் மேற்கொள்ளும் பயிற்சிகள் நம்மை கூட விளையாட வைக்கும்.

சில காட்சிகளில் நாடகத் தன்மை தென்பட்டாலும் புதுமுகம் என்பதால் பொறுத்துக் கொள்ளலாம்.

நம் வீட்டுப் பெண்களைப் போல நிமிஷா. யதார்த்த நடிப்பில் நம்மை கவர்கிறார்.

காய்கறி விற்கும் நாகரத்தினமா வரும் வருண் என்பவர் சின்ன வேடம் என்றாலும் கதையின் திருப்புமுனைக்கு உதவி இருக்கிறார். அவர் காட்டும் ஆச்சரியங்களும் நண்பனின் ஆர்வத்திற்கு கொடுக்கும் உற்சாகமும் நட்புக்கு அப்ளாஸ்.

சிறு வயது ஸ்ரீனி செளந்தரராஜன் வேடத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் பரத் மற்றும் ஸ்ரீனியின் மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் ஜான் இருவரும் ஓகே ரகம். சிறுவனுக்கு பில்டப் சாங் ரொம்ப ஓவர்.. அதுவும் அவனுக்கு பொருந்தாத குரலில் கொடுத்திருப்பது வருத்தமே..

இவர்களுடன் வையாபுரி & சரவணன் உள்ளிட்டோரும் உண்டு..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஸ்ரீனி புதுமுகம் என்றாலும் எடிட்டர் கேமரா மேன் இசையமைப்பாளர் பாடல் ஆசிரியர்கள் அனைவரையும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுப்பது தேர்ந்தெடுத்திருப்பது சிறப்பு.

ஒளிப்பதிவாளர் ஷியாம் ராஜ். இசையமைப்பாளர் ஆர்.எஸ்.பிரதாப் ராஜ் இசையில், சினேகன், பா.விஜய், அருண்பாரதி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இடைவேளைக்கு முன்பு 4-5 பாடல்கள்.. பிறகும் 4 பாடல்கள் என பாடல் போட்டு.. இது பாட்டா நம் பொறுமைக்கு வைக்கும் வேட்டா? என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த கதை கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை வைத்திருக்கலாம். ஆனால் பல காட்சிகளில் கிரீன் மேட் பயன்படுத்தி உள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

ஒரு படம் எடுக்கும்போது கிராபிக்ஸ்க்கு செலவு செய்யும் காட்சிகளை கொஞ்சம் காட்சியமைப்பிலும் காட்டி இருந்தால் ரசிக்க தோன்றும் அல்லவா?

கிரிக்கெட் மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் சாதிக்க வயது ஒரு தடை இல்லை என கபில் ரிட்டன்ஸ் மெசேஜ் சொல்லுகிறது.

Kapil Returns movie review and rating in tamil

பெண்ணுக்கு கிடைக்குமா GUN.?..; லைசென்ஸ் விமர்சனம்

பெண்ணுக்கு கிடைக்குமா GUN.?..; லைசென்ஸ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாட்டுப்புறப் பாடகி ராஜலட்சுமி ‘லைசென்ஸ்’ என்ற படத்தின் மூலம் கதையின் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

கதைக்களம்..

சிறு வயதிலேயே தன் உடன் பிறவா சகோதரியை பாலியல் தொந்தரவால் இழக்கிறார். தன் தந்தை ராதாரவி ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தும் அவரால் உதவ முடியவில்லை என்பதால் அவருடன் பேசாமல் வாழ்ந்து வருகிறார்.

தன்னுடைய லட்சிய கனவான போலீஸ் பணியை இதனால் வெறுக்கும் ராஜலட்சுமி ஒரு கட்டத்தில் ஆசிரியராக பணிபுரிகிறார்.

அப்போதும் பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைக் கண்டு ஆவேசம் அடைகிறார். இதனால் குற்றவாளிகளை போட்டுத் தள்ள துப்பாக்கி லைசென்ஸ் கேட்கிறார். போலீஸ் மறுக்கவே இதற்காக கோர்ட்டு வரை செல்கிறார் ராஜலட்சுமி.

இறுதியில் என்ன ஆனது? அவருக்கு லைசென்ஸ் கிடைத்ததா? காவல்துறை என்ன செய்தது? நீதித்துறை என்ன செய்தது? நினைத்ததை சாதித்தாரா பாரதி ( ராஜலக்ஷ்மி) என்பதுதான் மீதிக்கதை.

நடிகர்கள்…

Rajalakshmi Senthil, Radhravi, N.Jeevanandam, Abi Nakshatra, Vaiyapuri, Namo Narayanan, Geetha Kailasam, Pazha Karuppaiah

முதல் படம் என்றாலும் பாரதி என்ற கேரக்டர் பாரத்தை தன் தோளில் சுமந்து போராடி இருக்கிறார் ராஜலட்சுமி. தன்னால் முடிந்தவரை நடிப்புக்கும் முயற்சித்துள்ளார்.. நேரில் இவரை பார்த்ததை விட முதிர்ச்சியான தோற்றத்தை ஏற்று வலு சேர்த்து உள்ளார்.

இளம் வயது பாரதியாக அபி நட்சத்திரா நடித்துள்ளார். சிறு வயது முதலே போலீசாக வேண்டும் என எண்ணும் அபி ஒரு கட்டத்தில் அதனை வெறுத்து தன் தந்தை ராதாரவியுடன் சண்டை போடும் போது அடடா அருமையான நடிப்பு என்று கைதட்ட வைக்கிறார்.

என்.ஜீவானந்தம், நீதிபதியாக நடித்திருக்கும் கீதா கைலாசம், பழ கருப்பையா, வையாபுரி, நமோ நாராயணன், தன்யா அனன்யா உள்ளிட்டரும் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

ராஜலட்சுமிக்காக வாதாடும் வக்கீலும் அழுத்தமான வசனங்களை பேசி நம்மை கவனிக்க வைக்கிறார். மேலும் போலீஸ் யூனிபார்ம் எதற்கு ? என அபி நட்சத்திர ராதாரவி இடம் சண்டை போடும்போது வசனங்கள் கைதட்ட வைக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

Directed By : Ganapathy Balamurugan

Music By : Baiju Jacob

Produced By : JRG Productions – N Jeevanandam

காசி விஸ்வநாதனின் ஒளிப்பதிவு & இசையமைப்பாளர் பைஜூ ஜேக்கப்பின் பின்னணி இசையும் பாடல்களும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

இடைவேளைக்குப் பிறகு வரும் கோர்ட்டு காட்சிகள் பரபரப்பை உண்டாக்குகிறது.

பெண்களை பாதுகாக்க துப்பாக்கி லைசென்ஸ் கொடுக்கலாம்.. ஆனால் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு நீங்கள் யார்? அதற்கு காவல்துறை இருக்கிறது என போலீஸ் அதிகாரிகள் செல்லும் போது வருத்தம் அடையும் ராஜலக்ஷ்மி, இறுதியாக எடுக்க முடியும் வித்தியாசமான ஒன்று.

அதேசமயம் பாலியல் வன்முறை செய்யும் சிலருக்கு இயக்குனர் கொடுத்த தண்டனையும் எதிர்பாராத திருப்புமுனை.

காலங்காலமாக குற்றவாளிகளை தண்டிக்க காவல்துறை இருந்தாலும் தவறுகள் தொடர்ந்து கொண்டே இருப்பது வேதனையான ஒன்று. இதனை தடுக்க கடுமையான சட்டங்களும் தேவை என்பதை வலியுறுத்தி இருக்கிறார் இயக்குனர் கணபதி பாலமுருகன்..

Licence movie review and rating in tamil

More Articles
Follows