ரெஜினா விமர்சனம் 3.25/5.. நடுவிரல் நாயகி

ரெஜினா விமர்சனம் 3.25/5.. நடுவிரல் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பு – சுனைனா, நிவாஸ் ஆதித்தன், ஆனந்த் நாக், பவா செல்லத்துரை, கஜராஜ் & பலர்.

இயக்கம் – டொமின் டிசில்வா

இசை & தயாரிப்பு – சதீஷ் நாயர்

தன் கணவனை கொன்றவனை பழிவாங்க புறப்பட்ட ஒரு சிங்க பெண்ணின் கதை இந்த ரெஜினா.

கதைக்களம்…

சிறுமியாக இருக்கும் போதே தன் தந்தை சில மர்ம நபர்களால் கொல்லப்படுவதை பார்த்து விடுகிறார் சுனைனா (ரெஜினா).

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் ரெஜினா பித்து பிடித்தவள் போலவே காணப்படுகிறார்.

வளர்ந்து குமரியான பிறகு தன் காதலன் ஜோ (ஆனந்த் நாக்) மூலம் சகஜ நிலைக்கு திரும்புகிறார். அவரை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார்.

சில மாதங்களில் பேங்க் கொள்ளையர்களால் கொல்லப்படுகிறார் சுனைனாவின் கணவன் நாக் ஆனந்த்.

எனவே இதனை முறையாக விசாரிக்க காவல்துறையை நாடுகிறார் சுனைனா.

பல மாதங்கள் ஆனாலும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறையின் அலட்சியத்தால் கணவனை கொன்றவர்கள் யார்? என்பதை அறியப் புறப்படுகிறார்.

அதன் பின்னர் என்ன நடந்தது.? கொள்ளையர்கள் யார்.? கணவனை ஏன் கொன்றார்கள்? அவர்களை எப்படி கண்டுபிடித்தார்? என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

முதலில் நாம் அன்றாடம் பார்க்கும் இல்லத்தரசியாக அப்பாவியாக வருகிறார் சுனைனா. அதன் பின்னர் ஆக்சன் அவதாரம் எடுக்கிறார். ஆனாலும் சினிமா தனம் இல்லாமல் எதார்த்தமாக பழிவாங்கும் ஒரு பெண்ணாகவே தன் கேரக்டரை நிமிரச் செய்திருக்கிறார்.

கணவன் ஆனந்த் நாக் ஒரு டூயட் பாட்டு சில காட்சிகள் மட்டுமே வருகிறார். இந்த ரொமான்டிக் பாடலில் சுனைனா இளசுகளை சூடேற்றுகிறார்.

எழுத்தாளர் பவா செல்லத்துரை ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் அனுதாபத்தை அள்ளி இருக்கிறார்.

விவேக் பிரசன்னா, சாய் தீனா, கஜராஜ் ஆகியோரது கேரக்டர்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. இது போன்ற திறமையான நடிகர்களை இன்னும் கூடுதலாக பயன்படுத்தி இருக்கலாம்

மாடர்ன் மங்கையாக ரித்து மந்த்ரா. சுனைனா கவர்ச்சி காட்டாத காரணத்தினால் இவர் பயன்படுத்தப்பட்டுள்ளாரோ.?

கவர்ச்சியால் இளைஞர்களை சூடேத்துகிறார் ரித்து மந்த்ரா. இவரும் சுனைனாவும் நெருங்கி பழகும் போது ஆஹாங் இது லெஸ்பியன்.? என்று நினைக்கத் தோன்றுகிறது.

நிவாஸ் ஆதித்தன், அப்பாணி சரத், ரஞ்சன், பசுபதி ராஜ், ஞானவேல் ஆகியோரும் உண்டு்.

டெக்னீஷியன்கள்…

பவி கே பவனின் ஒளிப்பதிவு கதைக்கான பங்களிப்பைச் செய்துள்ளது. இசையமைப்பாளரே இந்த படத்தின் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார்.

சதீஷ் நாயகரின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.. ஒரு தென்றல் புயலானது போல ரெஜினாவின் விவேகத்திற்கு ஒரு பாடலை போட்டு ரசிகர்களை முறுக்கேற்றியுள்ளார்.

மலையாள இயக்குநர் – டொமின் டி’சில்வா.. ஒரு பழி வாங்கும் பெண்ணின் உணர்வை யதார்த்தமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

அதே சமயம் படம் ஒரு பாதையில் பயணிக்கின்ற போது கிளைக் கதைகளை சொருகி இருப்பது வேகத்தை தடுமாறச் செய்கிறது. இறுதியாக ட்விஸ்ட்டுகள் வைத்த பெயரில் கிளைக் கதைகளுக்கு காரணம் சேர்த்தாலும் திடீரென அதனுடன் ஒன்ற முடியவில்லை.

தன் இழப்புக்கு ஈடு செய்ய எவரையும் நம்ப கூடாது. தன்னால் எதையும் செய்ய முடியும் என இறுதியாக நாயகியின் நடுவிரலை காட்டி கதையை முடித்துள்ளார் இயக்குனர்.

ஆக இந்த ரெஜினா… நடுவிரல் நாயகி

regina movie review and rating in tamil

அஸ்வின்ஸ் விமர்சனம் 2.5/5.; வீக் ஸ்டோரி.. மிரட்டல் மியூசிக்

அஸ்வின்ஸ் விமர்சனம் 2.5/5.; வீக் ஸ்டோரி.. மிரட்டல் மியூசிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்கதை…

இந்தியப் புராண இதிகாசமான அஸ்வினி குமாரர்களுக்கும் இக்கதைக்கும் தொடர்புப்படுத்தி இந்த பேய் கதை சொல்லியுள்ளனர். ( இப்போ தெரிஞ்சிருக்குமே ஏன் இந்த டைட்டில்..?!!)

கதைக்களம்..

லண்டனின் இந்தியத் தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் விநோத சடங்குகள் மூலம் பலரைக் கொன்றுவிடுகிறார்.

ஒரு கட்டத்தில் அவரும் இறந்திருக்கிறார்.

இதை அறியாத ஒரு டியூயுப் சேனல் குழுவை அந்த இடத்திற்கு போக சொல்கிறார் ஒருவர்.

அதன்படி பணத்துக்காக ‘Found Footage’ வீடியோ எடுக்க அர்ஜுனும் (வசந்த் ரவி) அவரது தோழிகளும் நண்பர்களும் செல்கின்றனர்.

இதற்கு பிளாக் டூரிசம் (Black Tourism) என்கின்றனர். அதாவது பேய் பிசாசுகள் இருக்கும் இடங்களைத் தேடி சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகளைக் குறிப்பிடுகிறது.

அங்கு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நல்ல குணம் தீய குணம் கொண்ட இரு கேரக்டர்களை வசந்த ரவியும் அருமையாக வெளிப்படுத்தி தன்னுடைய நடிப்பாற்றலை கொடுத்துள்ளார். மேக்கப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

வசந்த் ரவியின் மனைவியாக சாராஸ் மேனன் & நண்பர்களாக சிம்ரன் பரீக், முரளிதரன், உதயதீப் ஆகியோர் அச்ச உணர்வை ஏதோ கொடுத்துள்ளனர்.

சிறப்புத் தோற்றத்தில் விமலா ராமன்.. இந்த பேயை (கதையை) நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறார்.

டெக்னீஷியன்கள்…

பேய் பட வரிசையில் இந்த படம் நிச்சயமாக பேசப்படும். அதற்கு முக்கிய காரணம் இசையமைப்பாளர் விஜய் சித்தார்த் தான். மேலும் இந்த படத்தின் இயக்குனர் அருண் தேஜா சவுண்ட் எஃபெக்ட்ஸ் படித்தவர் என்பதால் இருவரும் கூடுதல் கவனம் செலுத்தி தங்களது பங்களிப்பை நேர்த்தியாக செய்துள்ளனர்.

பேய் படங்கள் என்றாலே மிரள வைக்கும் இசை அவசியம். அப்படி ஒன்று இருந்தால் தான் ரசிகர்கள் பயந்து கொண்டே சீட்டு நுனியில் உட்கார்ந்திருப்பார்கள்.

அதை சரியாக செய்திருந்தாலும் வெறும் இசை மட்டுமே பேய் படத்திற்கு உதவாது திரைக்கதையும் கொஞ்சமாவது திருப்புமுனை காட்சிகளும் இருந்தால்தான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை இயக்குனர் கவனிக்கவில்லையா?

இடைவேளை சமயத்தில் வரும் “ராட்சஷ்ஷா” என்ற கரகரக்குரல் பாடல் அதிர வைக்கிறது.

படத்தொகுப்பாளர் வெங்கட்ராஜன் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் படம் ஆரம்பத்தில் காட்டப்படும் காட்சிகளை மீண்டும் வருவது எரிச்சலை உண்டாக்குகிறது.

லண்டன் செல்லும்போது காட்டப்படும் மிகப்பெரிய ஆறும் அது நடுவே ரோடும் திகில்.. ஒளிப்பதிவாளர் ஏ.எம்.சாக்கே அப்படி ஒரு அமானுஷ்ய உணர்வினை நமக்குள் கடத்தியிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் தருண் தேஜா. வசந்த ரவிக்கு வேறுபட்ட கதாபாத்திரங்களை கொடுத்து அவரிடம் நன்றாகவே வேலை வாங்கி இருக்கிறார்.

திடீரென கத்துவது.. ஓடுவது.. விளக்குகள் அணைவது, கதவுகள் திறப்பது மூடுவது, சவுண்ட் எஃபெக்ட்ஸ் அலறவைப்பது.. என பேய் பட டெம்ப்ளேட்டிலும் இதுவும் தப்பவில்லை.

ஆக அஸ்வின்ஸ்’ வீக் ஸ்டோரி.. மிரட்டல் மியூசிக்

Asvins movie review and rating in tamil

தண்டட்டி விமர்சனம் 4/5.; தங்க மகனின் தங்க பொண்ணு

தண்டட்டி விமர்சனம் 4/5.; தங்க மகனின் தங்க பொண்ணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் வயதான பெண்மணிகள் அணியும் ஓர் வகையான காதணி தான் ‘தண்டட்டி’.

இந்த டிஜிட்டல் உலகத்தில் யாரும் தண்டட்டி-யை மறந்து விடக்கூடாது என இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ராம் சங்கையா.

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக லக்ஷ்மன் தயாரித்துள்ளார்.

கதைக்களம்…

தங்க பொண்ணு ஆக ரோகிணி… இவர் தன் காதலர் கொடுத்த தண்டட்டி-யை தன்னுடைய இளம் வயதிலேயே அவரது நினைவாக அணிந்தவர். இவருக்கு நான்கு மகள்கள் ஒரு மகன்.

ஒரு கட்டத்தில் தன் 58 வயதில் வீட்டிலிருந்து மாயமாகி விடுகிறார். எனவே அவரது பேரன் போலீஸ் பசுபதி உதவியுடன் தன் பாட்டியை கண்டுபிடிக்கிறார்.

அப்போது இறுதி ஊர்வலத்திற்காக ரோகிணியை வைத்திருக்கும் நிலையில் இரவில் விலை உயர்ந்த தண்டட்டி காணாமல் போகிறது.

தண்டட்டியை திருடியவர் யார்? என தெரியாமல் பிணத்தை எடுக்கக் கூடாது என பிரச்சனை செய்கிறார் ரோகிணியின் குடிகார மகன் விவேக் பிரசன்னா.

இறுதியில் என்ன ஆனது? தண்டட்டியை எடுத்தது யார்? போலீஸ் எப்படி கண்டுபிடித்தார்? என்ன செய்தார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகனாக பசுபதி. சினிமா போலீஸ் போல இல்லாமல் யதார்த்த போலீசாக தன் சுப்ரமணி என்ற கேரக்டரை சூப்பராக செய்திருக்கிறார் பசுபதி.

கிளைமாக்ஸ் காட்சியில் தன் பக்குவப்பட்ட நடிப்பால் நம்மை கண்கலங்க வைத்து விடுகிறார் பசுபதி.

வயதான பெண்மணி தங்கப் பெண்ணாக ரோகிணி கொடுத்த பாத்திரத்திற்கு தன் அனுபவ நடிப்பை வழங்கி இருக்கிறார். ஆனால் 58 வயதான தரோகிணிக்கு இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியான மேக்கப் போட்டிருக்கலாம்.

இளவயது ரோகினியாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார். தன்னுடைய அழகான கண்களாலும் உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்.

குடிகார மகனாக விவேக் பிரசன்னா.. அசல் ஒரு குடிகாரனை கண் முன் நிறுத்தி இருக்கிறார். இவரது வசனங்கள் ரிப்பீட் மோடில் வந்தாலும் குடிகாரர்களின் பாஷை அப்படித்தானே இருக்கும் என்பதால் பொறுத்துக் கொள்ளலாம்.

அது போல பேரனாக நடித்திருக்கும் முகேஷ் சிரிக்கவும் கண்கலங்கவும் வைத்திருக்கிறார். இவர்தான் மண்டேலா படத்தில் யோகி பாபு உடன் நடித்தவர்.

தீபா சங்கர், செம்மலர் அன்னம் உள்ளிட்ட ரோகிணியின் மகள்கள் ஒவ்வொருவரும் தண்டட்டிக்காக அடித்துக் கொள்ளும் பாத்திரத்தை தடாலடியாக செய்துள்ளனர்.

அதுபோல கிடாரிப்பட்டி கிராமத்து மக்கள் ஒவ்வொருவரும் யதார்த்த மனிதர்களாக படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்

போலீஸ் பசுபதியைக் கலாய்த்துக் கொண்டே அவரது தொப்பியைத் தலையில் வைக்கும் கோளாறு பாட்டியின் நடிப்புக்கு திரையரங்குகள் அதிரும்.

டெக்னீசியன்கள்…

மதுரை உசிலம்பட்டி ஆண்டிப்பட்டி பகுதிகளின் இயற்கை அழகை நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி.

கிராமத்து மண்வாசனையுடன் தன் இசையை கலந்த கூடுதல் சுவை கூட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் கே எஸ் சுந்தரமூர்த்தி. பாடல்களும் பின்னணி இசையும் படத்துடன் ரசிகர்களை ஒன்ற வைக்கிறது.

சிம்பு தேவன் உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராம்சங்கையா இந்த தண்டட்டி படத்தை இயக்கியிருக்கிறார்.. தன்னுடைய முதல் படத்தில் எந்த கமர்சியலையும் கலக்காமல் கிராமத்து வாழ்வியலோடு கலந்து சொல்லி இருக்கிறார்.

தண்டட்டி என்ற ஒரு கதையை மட்டும் சொல்லாமல் அதனுடன் ஒரு காதலையும்.. கிராமத்து மனிதர்களின் ஜாதி வெறியையும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ராம் சங்கையா.

ஆக இந்த தண்டட்டி… தங்கமகனின் தங்க பொண்ணு

Thandatti movie review and rating in tamil

பாணி பூரி விமர்சனம்.; காதலும் கல்யாணமும்

பாணி பூரி விமர்சனம்.; காதலும் கல்யாணமும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாம் சுவைக்கும் ஒரு வகையான உணவை தான் பானி பூரி என்கிறோம். ஆனால் இந்த படத்தை பொருத்தவரை வேறு.

நாயகியின் பெயர் பூர்ணிமா. அவரை பூரி என அழைக்கிறார் நாயகன். லிங்காவின் பெயர் சித்தார்த் தண்டபாணி. அவரை பாணி என அழைக்கிறார். இந்த இருவரின் பெயர் கலவை தான் பாணி பூரி.

கதைக்களம்…

நாயகன் லிங்கா நாயகி சாம்பிக்கா இருவரும் காதலிக்கின்றனர். ஒருநாள் தன்னுடைய தோழி தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்து சில மாதங்கள் ஆன நிலையில் விவகாரத்து செய்கிறார்.

இதனால் சாம்பிகாவும் திருமணம் செய்ய பயப்படுகிறார். இந்த சூழ்நிலையில் சாம்பிகாவின் அப்பா இளங்கோ குமரவேலை சந்தித்து தன் காதலை சொல்கிறார் லிங்கா.

இதனால் லிங்காவுக்கும் சாம்பிக்காவுக்கும் மோதல் முற்றுகிறது. எனவே அவரது தந்தை ஒரு ஐடியா கொடுக்கிறார். நீங்கள் இருவரும் ஒரு வாரம் லிவிங் டு விதரில் ஒன்றாக இருங்கள். ஒரு வாரத்திற்கு பிறகு முடிவு செய்வோம் என்கிறார்.

இந்த ஒப்பந்தத்தின்படி உறவு கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ தொடங்குகின்றனர்.

அதன் பிறகு என்ன ஆனது.? ஒரு வாரத்திற்கு பிறகு எந்த முடிவை காதலர்கள் எடுத்தார்கள்.? இணைந்தார்களா என்பது தான் இந்தப் பாணி பூரியின் கதை.

கேரக்டர்கள்…

இதுவரை பல படங்களில் லிங்காவை முரட்டு கிராமத்து நாயகனாகவும் வில்லனாகவும் பார்த்திருக்கிறோம். இந்த படத்தில் ஒரு சாக்லேட் பாய் போல வந்துள்ளார்.

பெரும்பாலும் வசனங்கள் ஆங்கிலத்திலேயே இடம் பெற்றுள்ளன. எனவே இது பாமர மக்களைச் சென்றடையுமா என்பது சந்தேகம் தான்.

கொழு கொழு பேபியாக வருகிறார் சாம்பிக்கா. மேனேரிசம் என்ற பெயரில் அடிக்கடி கூந்தலை சரி செய்கிறார். அது நிறைய காட்சிகள் ரிப்பீட் ஆகிறது.

இவரின் கண்களும் உதடுகளும் ஹேர் ஸ்டைலும் இவருக்கு கூடுதல் அழகை கொடுத்துள்ளன.

வினோத் சாகர் கேரக்டர் கொஞ்சம் கலகலப்புக்கு உதவியுள்ளது. லிங்காவின் அண்ணியாக கனிகா நடித்துள்ளார். அவர் கதை ஓட்டத்திற்கு பக்கபலமாக இருந்துள்ளார்.

பெரிய பலத்தை கொடுத்துள்ளார் இளங்கோ குமரவேல். பிராக்டிகல் டாடியாக தன்னுடைய கேரக்டரை வெளுத்து கட்டி இருக்கிறார். இவரும் விவகாரத்து ஆனவர் என்பதால் இவர் நடந்து கொள்ளும் விதம் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் அப்பார்ட்மெண்டில் காட்டப்படும் கேரக்டர்கள் நல்ல தேர்வு. ஆனால் காமெடி என்ற பெயரில் சில இடங்களில் மொக்கை போட்டு உள்ளனர்.

உதாரணமாக.. அப்பார்ட்மெண்ட் செகரட்டரியிடம் ஒருவர் பைப்பில் தண்ணி வரவில்லை என கம்ப்ளைன்ட் செய்கிறார்.

எனக்கு கூட தான் சின்ன வயசுல கணிதம் வரவில்லை.. நான் என்ன உன்கிட்டயா கம்ப்ளைன்ட் சொன்னேன்.. என மொக்கை ஜோக் போடுகிறார்.

டெக்னீஷியன்கள்…

வெப் சீரிஸ் என்றால் மெதுவாக தான் நகரும்.. ஆனால் இதற்கு மொத்தமே 5 எபிசோடுகள் போதுமானது. தேவையில்லாமல் 8 எபிசோடுகள் எடுத்து கட்டிங் போட மறந்துவிட்டார் எடிட்டர்.

ஒரு படத்தை நாம் பார்க்க முக்கிய காரணமாக அமைவது ஒளிப்பதிவு தான். அதனை சிறப்பாகவே கொடுத்துள்ளார்.

அதுபோல பாடல்களும் பின்னணி இசையும் இந்த பானி பூரிக்கு சுவை கூட்டி உள்ளன.

எட்டு எபிசோடுகளை இந்த பாணி பூரி கொண்டுள்ளது. சீரியல் போல தான் இதை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.

ஆனால் 15 நாட்களில் எப்படி முழு வெப் சீரிஸ் முடித்தார்? என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. மொத்தமே 5 – 10 கேரக்டர்களை வைத்து இரண்டு வீடுகளை காண்பித்து ஒட்டுமொத்த படத்தை முடித்து விட்டார்.

இந்த சூட்டிங் நாட்களில் 20 – 30 உடைகளை மாறச் செய்து சூட் செய்து இருப்பார் போல. அனைத்தையும் முடித்துவிட்டார். அதற்காக அவரை பாராட்டலாம்.

ஆக இந்த பாணி பூரி.. காதலும் கல்யாணமும்…

Paani poori movie review and rating in tamil

பொம்மை விமர்சனம் 3.25/5.. கற்பனை காதல்

பொம்மை விமர்சனம் 3.25/5.. கற்பனை காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தன்னுடைய சிறு வயதில் தன் பள்ளித் தோழி நந்தினி (நாயகி ப்ரியாவை) தொலைத்து விடுகிறார் நாயகன் எஸ் ஜே சூர்யா. (ராஜகுமாரன்).

அவள் கடத்தப்பட்டு விடுகிறார் என்பதை அறியும் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இதற்காக ஒரு மாத்திரையை அவர் தினமும் எடுத்துக் கொள்கிறார்.

வளர்ந்து பெரியவன் ஆன பிறகு ஜவுளிக்கடையில் மாடலுக்கு வைக்கப்படும் பொம்மைகள் செய்யும் ஃபேக்டரியில் ஓவியராக பணிபுரிகிறார் எஸ் ஜே சூர்யா.

சில தினங்களில் மாத்திரை சாப்பிடாத அவருக்கு திடீரென கண்முன்னே ஒரு பொம்மையாக வந்து செல்கிறார் தொலைந்து போன நந்தினியான பிரியா.

ஒரு நாள் மாத்திரை சாப்பிட்டால் அவள் தன் கனவில் பொம்மையாக வருவதை நிறுத்தி விடுகிறார். மாத்திரை சாப்பிடாத அன்று மட்டும் பொம்மை உருவில் நாயகி வந்து செல்கிறார்.

இந்த சூழ்நிலையில் பிரியா அனுமதியுடன் தன் சொந்த ஊருக்கு செல்கிறார் எஸ் ஜே சூர்யா. திரும்பி வரும் போது அவருடைய சூப்பர்வைசர் அந்த பொம்மையை ஒரு கடைக்கு விற்று விடுகிறார் ய.

எந்த கடைக்கு விற்றீர்கள் என சூரியா கேட்கும்போது பொம்மையை கேவலமாக பேசி விடுகிறார் சூப்பர்வைசர.

எனவே ஆத்திரத்தில் அவரை கொன்று விடுகிறார் சூர்யா. அதன் பின்னர் சென்னையில் தெரு தெருவாக கடை கடையாக அலைந்து பொம்மை என்ற ப்ரியாவை கண்டுபிடித்து வருகிறார்.

அந்த ஜவுளி கடையில் வேலைக்கும் சேர்ந்து விடுகிறார். என்னால் இங்கு இருக்க முடியாது என்னை உன் வீட்டிற்கு கொண்டு போ என்கிறார் பிரியா.

அந்த ஜவுளிக்கடை பொம்மையை விலைக்கு கேட்கிறார் எஸ் ஜே சூர்யா. அந்த கடைக்காரர் தர மறுக்கிறார்.

அதன் பிறகு என்ன ஆனது? போலீஸ் விசாரணையில் எஸ் ஜே சூர்யா கண்டுபிடிக்கப்பட்டாரா? பொம்மையை வீட்டுக்கு கொண்டு சென்றாரா? கனவில் வந்த தோழியின் காதல் கைகூடியதா? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

எஸ் ஜே சூர்யாவ தன் ராஜகுமாரனை நன்றாகவே பிரதிபலிக்கிறார்.

பொம்மைக்காக ஏங்குவதும் ஆத்திரத்தில் கொலை செய்வதும் மற்றொரு நாயகி சாந்திணியுடன் பேசுவதும் என கலகலப்பு செய்கிறார்.

பொம்மை எது? பிரியா பவானி சங்கர் எது? என்பது தெரியாது போல அச்சு அசலாக பொம்மையாகவே வருகிறார் பிரியா.

பொம்மைக்கு ப்ரியாவுக்கும் பொருந்துமாறு காஸ்டியூம் டிசைன் செய்த வரை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். அப்படி ஒரு பொருத்தம். பிரியாவும் அழகு பொம்மையாக அழகு சிலையாக நம் மனதில் நிறைகிறார்.

சூர்யாவின் நண்பராக வரும் டவுட் செந்தில் கொஞ்சம் கலகலப்புக்கும் உதவியுள்ளார்.

சூப்பர்வைசர் கேரக்டர் மற்றும் போலீஸ் ஆகியோரும் தங்கள் கேரக்டர்களில் பலிச்சிடுகின்றனர்.

டெக்னீஷியன்கள்…

மதன் கார்க்கியின் வரிகளில் முத்தம் முதல் முத்தம் என்ற பாடல் ரசிக்கு வைக்கிறது.. 43 வகையான முத்தத்தை அதில் குறிப்பிடுகிறார்.. ஆனால் பாடல் காட்சியில் ஒரு முத்தம் கூட இடம்பெறவில்லை என்பது பெரும் சோகம்.

யுவனின் பாடலும் பின்னணி செய்யும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. என்னதான் விதவிதமான புதிய புதிய டியூன்கள் போட்டாலும் இளையராஜா இசையில் உருவான கமலின் ‘உல்லாச பறவைகள்’ படத்தில் இடம்பெற்ற ‘தெய்வீக ராகம்…’ என்ற பாடல் மட்டும் தான் நாம் தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் முணுமுணுக்க வைக்கிறது.

மொழி பயணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இந்த படத்தை வித்தியாசமான கோணத்தில் இயக்கியிருக்கிறார். ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்படும் பிரியா – சூர்யா உதட்டு முத்தக்காட்சி சரியாக பொருந்தவில்லையே.

இதில் முத்த காட்சி தான் மிகவும் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. அப்படி இருக்கையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

படத்தின் ஒளிப்பதிவு படத்தொகுப்பம் நேர்த்தியாக உள்ளது.

வித்தியாசமான கற்பனை கதை தான் என்றாலும் மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் ஒரு கற்பனை கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராதா மோகன்.

ஆக.. பொம்மை.. கற்பனை காதல்

bommai movie review and rating in tamil

சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ் விமர்சனம் 2.5/5 … கண்ணாமூச்சி விநாயகர்

சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ் விமர்சனம் 2.5/5 … கண்ணாமூச்சி விநாயகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தெய்வ பக்தி நிறைந்தவர் ஊர்வசி. இவரது கணவர் குரு சோமசுந்தரம். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். இவர்களின் மகன் நாயகன் பாலு வர்கீஸ். மாலை கண் நோய் உடையவர்.

தன் குடும்ப கோயிலில் கைவிடப்பட்ட புராதான விநாயகர் சிலையை வைத்து ஒரு கோயில் கட்ட நினைக்கிறார் ஊர்வசி.

ஒரு கட்டத்தில் அந்த புராதான சிலையை தன்னுடைய வீட்டில் இருந்து திருடி அதை வைத்து புதிய தொழில் தொடங்க நினைக்கிறார் பாலு.

எனவே அந்த சிலையை விற்க திருடன் கலையரசனின் உதவியை நாடுகிறார்.

அதன் பின்னர் என்ன நடந்தது.? விநாயகர் சிலையை எப்படி விற்றார்கள்.? புராதான விநாயகர் சிலை என்ன ஆனது? சார்லஸ் என்ற கலையரசன் விற்றுக் கொடுத்தாரா? ஊர்வசி என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

பக்குவப்பட்ட நடிப்பில் பளிச்சிடுகிறார் ஊர்வசி. மாலைக்கண் உடைய மகனுக்காக கண்கலங்குவதும் விநாயகர் சிலைக்காக ஏங்குவதும் என தன் அனுபவ நடிப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.

குரு சோமசுந்தரம் ஏதோ ஓரிரு காட்சிகளில் வந்து செல்கிறார்.

கலையரசன் திருடனாக காட்டப்பட்டாலும் அவருடைய காட்சிகள் படத்திற்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன. மெதுவாக நகரும் திரைக்கதையில் கலையரசனின் நடிப்பு களை கட்டி உள்ளது.

ஸ்பெஷல் கண்ணாடி அணிந்து தான் நினைத்ததை சாதிக்கிறார் நாயகன் பாலு வர்கீஸ்.. இவரது காட்சிகளில் கொஞ்சம் வேகம் கூட்டி இருந்தால் திரைக்கதையில் வேகம் எடுத்து இருக்கும்

சிலைக்கு விலைபேசும் அபிஜா சிவகலா, அவர் உதவியாளர் மணிகண்டன் ஆச்சாரி, கலையரசன் ஜோடியான மிருதுளா ஆகியோர் கவனம் ஈர்க்கின்றனர்.

டெக்னீஷியன்கள்…

ஸ்வரூப் பிலிப்பின் ஒளிப்பதிவு கேரள பகுதியை சென்னையாக காட்ட முயற்சித்திருக்கிறது. இதுதான் படத்தை ரசிகர்களிடம் ஒன்ற விமுயற்சித்துள்ளது.

முழுக்க முழுக்க இது கேரளாவை காட்டி இருக்கலாம் அல்லது கேரள எல்லை பகுதியான கன்னியாகுமரி உள்ளிட்டவைகளை காட்டி இருக்கலாம். சென்னை கேரளா என எங்கோ செல்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது நெருடலாக உள்ளது.

இசையமைப்பாளர் சுப்ரமணியன் கே.வி-இன் இசை படத்திற்கு பலம் சேர்க்க முயற்சித்துள்ளது

அச்சு விஜயணின் படத்தொகுப்பு தொகுப்புதான் இந்த திரைக்கதைக்கு மைனஸ் ஆக அமைந்துள்ளது. தேவையற்ற காட்சிகளை நீக்கி இருந்தால் படத்தை பார்ப்பதற்கு போதுமானதாக அமைந்திருக்கும்

விநாயகர் சிலையை மையமாக வைத்து சமூக நீதி கருத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியம்.

என் பெயரில் கடை வைக்கலாம், ஆனால் நான் தான் இங்கு கடை வைக்க முடியாது. காரணம் நான் திருடன்.. என கலையரசன் பேசும் வசனங்கள் கவனிக்க வைக்கிறது.

அடுத்தவர் வீட்டில் திருடுவது என்றால் கடினம். தன் வீட்டில் எளிதாக திருடி இருக்கலாம்.. காருக்குள் சிலையை வைப்பது.. சிசிடிவி இருப்பதால் பின்னர அதை எடுக்க முடியாமல் தவிப்பது என காட்சிகளை நீட்ட்ட்ட்ட்டி இருப்பதால் போர் அடிக்கிறது மேலும் அதில் பெரிதாக சுவாரசியமும் இல்லை என்பது தான் வருத்தம்.

ஆக இந்த சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்.. கண்ணாமூச்சி விநாயகர்

Charles Enterprises movie review and rating in tamil

More Articles
Follows