வட்டகரா விமர்சனம் 3.25/5..; ரசிகர்களை வட்டமடிக்கும்

வட்டகரா விமர்சனம் 3.25/5..; ரசிகர்களை வட்டமடிக்கும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

காசு துட்டு மணி என நிறைய பெயர்கள் பணத்திற்கு உண்டு.. கிட்டத்தட்ட 1000 – 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வட்டகரா என்ற ஒரு பெயரும் பணத்திற்கு உண்டு.

அழிந்துபோன அந்த தமிழ் சொல்லை இந்தப் படத்தின் மூலம் உயிர் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் பாரதி கண்ணன்

கதைக்களம்…

(1) தன் பேத்தியின் சிகிச்சைக்காக பணம் தேவைப்படும் ஒரு நபர்.. (2) ஒரு விபத்தில் கண்களை இழந்த அங்காடித்தெரு மகேஷ்… (3) காதலியின் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு இளைஞன்.. (4) விவசாயத்திற்காக உயிரை விட்ட ஒரு தந்தையின் மகன்.. என நான்கு நபர்கள் ஒரு காரில் சந்தர்ப்ப சூழ்நிலையால் சந்திக்கின்றன.

அவர்கள் அதில் பயணிக்கும் போது எல்லாருக்கும் பணம் உடனடி தேவையாக இருப்பதை உணர்கின்றனர். எனவே அறிமுகமில்லாத இவர்கள் இதுவரை செய்யாத கொள்ளையடிக்கும் திட்டத்தை போடுகின்றனர்.

அதில் ஜெயித்தார்களா என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

சரனேஷ் குமார், கண்ணன் மாதவன், ஹுமாய், டாக்டர் சீனிவாசன், சம்பத் ராம், கஜராஜ், ஆர்எஸ். சிவாஜி, போராளி திலீபன், பெஞ்சமின் ஆகியோர் நடித்துள்ளனர்.

எவருமே மிகை இல்லாத நடிப்பை தந்துள்ளனர். பெஞ்சமின் மட்டும் ஒரு சில காட்சிகளில் நகைச்சுவை என்ற பெயரில் ஓவர் ஆக்டிங் செய்துள்ளார். அதை குறைத்து இருக்கலாம்.

பிளாஷ்பேக் காட்சியில் வரும் மலர் என்ற பெண்ணும் தன் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்.

தாஜ்நூர் இசையில் 2 பாடல்கள் அருமை… உன்னிடம் ஒன்று சொல்ல நினைக்கிறேன் என்ற காதல் பாடல் ரசிகர்களை கவரும்.

அம்மாவுக்கு நிறைய பாடல்கள் இருக்கிறது. அப்பாவுக்கு பாடல் இல்லையே என்ற ஏங்கியவர்களுக்கு அப்பா பாடல் ஒரு வரப்பிரசாதம். தந்தைக்கு ஒரு கோயில் இல்லை என்ற பாடல் வரிகள் சிறப்பு.

பாடல்களை சினேகன் & இளையகம்பன் நிமேஷ். எழுதியுள்ளனர்.

கே.பாரதி கண்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார். பணத்தேவை என்பது எல்லாருக்கும் ஒரு அவசியமான ஒன்று. அதை சிலர் நல்ல வழியிலும் சில தீய வழியிலும் சம்பாதிக்கின்றனர்.

அதை மையமாக வைத்து கதையை பயணிக்க வைத்திருப்பது சிறப்பு. சிறிய பட்ஜெட் படம் என்பதால் படத்தின் தரம் குறைவாக உள்ளது.

ஒளிப்பதிவு – ஜேசன் வில்லியம்.

நால்வர் சந்திப்பது அவர்கள் பின்னணி என சில காட்சிகள் சற்று சோர்வை தருகின்றன. ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் ஒரு எதிர்பாராத ஒன்றுதான்.

ஆக இந்த ‘வட்டகரா’.. ரசிகர்களை வட்டமடிக்கும்.

வட்டகரா

Vattagara movie review and rating

சீதா ராமம் விமர்சனம் 4.25/5.; காதலிக்காதவர்களையும் காதலிக்க செய்யும்!

சீதா ராமம் விமர்சனம் 4.25/5.; காதலிக்காதவர்களையும் காதலிக்க செய்யும்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

1960 காலக் கட்டங்களில் நடந்த கடிதம் மூலம் உருவான காதல். கிட்டத்தட்ட ‘காதல் கோட்டை’ படம் போல ஆரம்பித்து பின்னர் காதல் ரோஜா-வாக மாறிய களம்.

கதைக்களம்..

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரிகேடியர சச்சின் கடேகர். இவரின் பேத்தி (அஃப்ரின்) ராஷ்மிகா… சில காரணங்களால் இந்தியாவையே வெறுக்கும் கேரக்டர் ராஷ்மிகாவுக்கு.

ஆனால் ஒரு கட்டத்தில் தன் தாத்தாவின் நிறைவேறாத ஆசைக்காக நிறைவேற்ற 1985ல் இந்தியாவுக்கு வருகிறார் ராஷ்.

ஒரு காதல் கடிதத்துடன் ஒரு பெட்டகத்தை இந்தியாவில் உள்ள சீதா மகாலட்சுமி என்ற பெண்ணிடம் சென்று சேர்க்கும்படி இறப்பதற்கு முன் சொல்லி இருக்கிறார்.

முகவரியே இல்லாத யார் அந்த சீதா.? என தன் நண்பருடன் தேடி அலைகிறார்.

அந்தப் பயணத்தில் ராம் & சீதா இடையே ஏற்ப்பட்ட காதலை அறிகிறார்.

அந்த பெட்டகத்தில் என்ன உள்ளது.? அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது.? ராம் பின்னணி என்ன.? சீதா யார்.? எப்படி காதலித்தார்கள்? 1965ல் என்ன நடந்தது.?என்பமே மீதிக் கதை.

கேரக்டர்கள்..

லவ்வர் பாய் என்று சொன்னால் அது துல்கர் சல்மானுக்கு 100% பொருத்தமான ஒன்றுதான். இந்த படத்திற்கு பிறகு அவரை காதல் மன்னன் / இளவரசன் என்று கூட அழுத்திச் சொல்லலாம்.

சீதா எழுதும் கடிதத்தில் முகவரி இல்லாத காரணத்தினால் சீதாவுக்கு பதில் அனுப்ப முடியாமல் தவிக்கும் ராம ஆகட்டும்.. இந்திய ராணுவத்தில் லீவு எடுத்துக் கொண்டு அவர் சீதாவை தேடி அலைவதாகட்டும் ஒவ்வொன்றும் காதலின் வலியை உணர்த்தும்..

அதுபோல சீதா & ராம் இருவரும் சந்திக்கும் அந்த முதல் ரயில் பயணம்.. அடடடா அதற்காகவே படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்கலாம்.

சீதா மகாலட்சுமி என்ற ஐதராபாத் இளவரசி நூர்ஜகான் ஆக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். ஹிந்து பெண்ணாக இருக்கும் போதும்.. முஸ்லிம் பெண்ணாக இருக்கும் போதும்.. தன்னுடைய உடல் மொழிகளில் கூட கவனம் செலுத்தி நடித்திருக்கிறார். இவருக்கு ஆடைகளை வடிவமைத்த காஸ்ட்யூமர் ஷீத்தல் ஷர்மாவை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அவ்வளவு நேர்த்தியாக ஒவ்வொரு உடையும் செதுக்கி இருக்கிறார் என்று சொல்லலாம்.

தான் ஒரு முன்னணி நடிகை என்ற போதும் அதில் தனக்கு ஹீரோயின் கேரக்டர் இல்லை என்று தெரிந்த போதும் நடிக்க ஒப்புக் கொண்ட ராஷ்மிகாவை நிச்சயம் பாராட்ட வேண்டும். துல்கர் – மிருணாள் காதலை அறிந்து கொள்ள இவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நம்மை சீட்டு நுனியில் உட்கார வைக்கும்.

மேஜர் ஆக கவுதம் மேனன், துல்கரை வெறுக்கும் சக ராணுவ அதிகாரியாக சுமந்த் நடித்துள்ளனர்.

டெக்னிஷியன்கள்…

நீண்ட நாட்களுக்குப் பிறகு தென்றல் போல இசை கொடுத்திருக்கிறார் விஷால் சந்திரசேகர்.. அனைத்து பாடல்களும் நம்மை வருடி செல்கின்றன.

1960களில் மக்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்பதை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர். அது போல அந்த காலகட்டத்தில் உள்ள கார்கள் உடைகள் என அனைத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார் கலை இயக்குனர்.

ஆனால் 1980களில் ராஷ்மிகா அணிந்துள்ள உடை தான் சற்று நெருடலாக உள்ளது. 2000 ஆண்டுகளில வந்த ஆடை போலவே இருக்கிறது. மேலும் 1980களில் பெண்கள் அவ்வளவு அழகாக லூஸ் ஹேர் விடுவதில்லை. அதுவும் முஸ்லிம் மதத்தில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்திருக்கும். ராஷ்மிகாவை இன்றைய பெண்ணை பார்ப்பது போலவே உள்ளது.

இந்திய காரை அடித்து நொறுக்கும் ராஷ்மிகாவை காணும் போது நமக்கு கோபம் வருகிறது. அது படத்தின் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவை அவமானப்படுத்துவதாக உள்ளது.

அதைப் பார்க்கும்போது இந்தியர்களை உணர்வு எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து காட்சிகளை அமைத்திருக்கலாம்.

ஒளிப்பதிவாளர்கள் வினோத், ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, கலை இயக்குனர் வைஷ்ணவி ரெட்டி, பைசல் அலிகான் ஆகியோர் தங்கள் பணிகளை மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளனர்.

பெரும்பாலும் இயக்குனர்கள் கதைகளில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் அதை காட்சிகளில் கொண்டு வர சிரமப்படுவார்கள். ஆனால் ஒவ்வொரு பிரேமிலும் காட்சி அமைப்பிலும் தன் முழு கவனத்தையும் செலுத்தி ஒரு அழகான காதல் கதையை கொடுத்துள்ளார் இயக்குனர் ஹனு ராகவபுடி.

தயாரிப்பு – வைஜெயந்தி மூவீஸ். படம் 2 மணி நேரம் 45 நிமிடம் ஓடுகிறது. முதல் பாதியில் பத்து நிமிடங்களை வெட்டி இருக்கலாம்.

இது தெலுங்கு படம் என்றாலும் எங்கேயுமே தெலுங்கு வாசனை இல்லை. கடிதத்தில் காட்டப்படும் எழுத்துக்களும் தமிழிலே உள்ளன. வசனங்களும் தமிழ் வார்த்தைக்கு ஏற்ப உதட்டசைவுகளாக இருப்பதால் நம்மால் படத்துடன் ஒன்றி காதலிக்க முடிகிறது.

ஆக… சீதா ராமம்… காதலிக்காதவர்களையும் காதலிக்க செய்யும்!

Sita Ramam

Sita Ramam movie review and rating in Tamil

காட்டேரி விமர்சனம் – 2/5.; செம கடுப்பேறி

காட்டேரி விமர்சனம் – 2/5.; செம கடுப்பேறி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யாமிருக்க பயமேன் என்ற படத்தை இயக்கிய டிகே இயக்கியுள்ள படம் ‘காட்டேரி’.

இதில் வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி, சோனம் பஜ்வா, கருணாகரன் மைம்கோபி ரவி மரியா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது.

காமெடி- திகில்-திரில்லர் பாணியில் இந்த படம் உருவாகியிருக்கிறது.

இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க எஸ்.என். பிரசாத் இசையமைக்க பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஒன்லைன்…

வழக்கமாக பேய் பிசாசு கதைகளை போல் அல்லாமல் இதில் காட்டேரிகளை காட்டி நம்மை பயமுறுத்த முயற்சித்துள்ளனர்.

கதைக்களம்…

ஒரு புதையலை தேடி நாயகன் மற்றும் நாயகி தங்கள் நண்பர்களுடன் ஒரு கிராமத்திற்கு செல்கின்றனர். ஆனால் அந்த கிராமமே பேய் மயமாக உள்ளது. பேயாக மாற என்ன காரணம் என்பதை படத்தின் கதை.

கேரக்டர்கள்…

வைபவ்வின் முதல் இரவில் இருந்தே கதை ஆரம்பிக்கிறது. இவருடன் கருணாகரன் ரவி மரியா ஆகியோரின் காமெடியும் காம நெடியும் கலந்து பயணிக்கிறது.

மைம் கோபி வரலட்சுமி ஆகியோரின் பிளாஷ்பேக் கதை படத்திற்கு உயிர் ஊட்டும் வகையில் உள்ளது. அதன் மூலம் ஊர் எப்படி பேயாக மாறுகிறது என்பது காட்டப்படும் காட்சிகளும் ஓகே.

ஆத்மிகா & சோனம் பாஜ்வா ஆகிய இருவரும் ஆங்காங்கே கொஞ்சம் கவர்ச்சிக்கு தேவைப்பட்டுள்ளனர். இவர்களை கருணாகரன் ரவி மரியா ஊறுகாய் போல தொட்டு கொள்கின்றனர்.

குட்டி கோபியின் நகைச்சுவைக்கு சிரிப்பு வரவில்லை.

ஜான் விஜய், லொல்லு சபா மனோகர், பொன்னம்பலம் என அனைவரின் கதாபாத்திரமும் வலுவாக இல்லை.

டெக்னீசியன்கள்…

பி.எஸ். வினோத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ். எஸ்.என். பிரசாத்தின் இசை ஓகே. பிரவீன் கே.எல் எடிட்டிங் சொல்லும் அளவிற்கு இல்லை.

யாமிருக்கே பயமேன் எனும் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் டிகே. இந்த காட்டேரியில் நம்மை கடுப்பேற்றி உள்ளார்.

பெரிதாக திகிலும் இல்லை பயமும் இல்லை. ஆனால் இந்த சற்று வித்தியாசமாக காட்டேரிகளை காட்டியுள்ளது சிறப்பு. பல நடிகர்களுக்கு காட்டேரி போல மேக்கப் போட்டு நடிக்க வைத்துள்ளதை ரசிக்கலாம்.

ஆக.. இந்த காட்டேரி.. செம கடுப்பேறி..

Kaatteri movie review and rating in Tamil

குருதி ஆட்டம் விமர்சனம் 2/5.; அறுவை ஆட்டம்

குருதி ஆட்டம் விமர்சனம் 2/5.; அறுவை ஆட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விமர்சனம்..

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, ப்ரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஒன்லைன்..

பழிக்குப் பழி… பழிக்குப்பழி.. இதுவே கதை.

கதைக்களம்…

அதர்வா ஒரு கபாடி வீரர். ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறார். இவருக்கு பெற்றோர் இல்லை. ஒரு தங்கை மட்டுமே. இவரது கபடி அணியை வெல்ல பல எதிரணிகள் முயல்கின்றன.

இவர் பள்ளி ஆசிரியை பிரியா பவானி சங்கரை காதலிக்கிறார்.

ஊரில் பெரிய ரவுடி பெண் தாதா ராதிகா. அவரின் மகன் மற்றும் கூட்டாளிகளுடன் அடிக்கடி அதர்வாவுக்கு மோதல் நடக்கிறது. ஒரு கட்டத்தில் வெட்டு குத்து வழக்கில் அதர்வா கைதாகிறார்.

அப்போது ராதிகாவின் மகனே அதர்வாவை ஜாமீனில் எடுக்கிறார். இதனால் இருவரும் நெருக்கமான நண்பர்களாகி விடுகின்றனர்.

இவர்களின் நட்பை பிடிக்காத ஒரு கும்பல் அதர்வாவின் நண்பனை கொன்றுவிடுகிறது. மேலும் ராதிகாவை கொல்லவும் சிலர் திட்டமிடுகின்றனர்.

தன் நண்பனை இழந்த அதர்வா என்ன செய்தார்? அவர்கள் கொல்ல என்ன காரணம்? அவரது பின்னணியில் யார் என்பதே மீதி கதை.

கேரக்டர்கள்…

அதர்வாவுக்கு ஆக்சன் என்றால் அல்வா சாப்பிடுவது போல.. ஆக்ஷனில் பிரித்து மேய்ந்து இருக்கிறார். இந்த படத்தில் பெரிதாக ரொமான்ஸ் காட்சிகள் இல்லை.

பிரியா பவானி சங்கர் இருக்கிறார். அவ்வளவுதான். ஏற்கனவே பிரீயா கவர்ச்சி ஒன்றும் காட்ட மாட்டார். தன் நடிப்பால் மட்டுமே நம்மை கவர்வார். இதில் அது கூட இல்லை.

முக்கிய பாத்திரங்களில் கண்ணா ரவி மற்றும் வட்சன்.. இருவருமே தங்களுக்கு கொடுத்த வேலையில் கன கச்சிதம்.

ராதாரவியால் படத்தில் ஆங்காங்கே சிரிப்பலைகள் எழுவதை காண முடிகிறது. போட்டியாடா…துப்பாக்கி என்றால் அதற்கு டபுள் மீனிங் என்ற பொருள் படும் காட்சி உள்ளது.

வித்தியாசமான வில்லி வேடத்தில் ராதிகா. தன் மகனை இழந்த ராதிகா ஒரு சபதம் போடுகிறார். தன் மகனை கொன்றவரை கொன்றால் மட்டுமே கொல்லி போடுவேன் என்கிறார். ஆனால் அடுத்த காட்சியிலே கொல்லி போடுகிறார். கொலைக்காரன் உயிரோடுதான் இருக்கிறான். என்ன லாஜீக்?

அதுபோல ஒரு காட்சியில் ராதிகா தீ மிதிக்கும் போது ஒருவர் கொல்ல நினைக்கிறார். அப்போது தன் மகளுக்காக தான் ராதிகா தீ மிதிக்கிறார் என தெரிந்ததும் அவர் கொல்லவில்லை. ஆனால் அடுத்த நாள் காட்சியில் அருவாள் கொண்டு கொல்ல முயற்சிக்கிறார்.. இதுவும் எந்த லாஜிக்கு புரியல..

டெக்னீஷியன்கள்..

படம் முழுவதும் வெட்டு குத்து வெட்டு குத்து என ரத்தம் திரையில் தெறித்து நம் கண் முகத்தில் படுகிறது. நல்லவேளை 3டி தொழில்நுட்பம் இல்லை.

மிஷ்கின் உதவியாளர் ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கி உள்ளார். இவர்தான் எட்டு தோட்டாக்கள் படத்தை இயக்கியிருந்தார். அந்த நம்பிக்கையில் சென்றால் நம்மை ஏமாற்றி விட்டார்.

படத்தில் நந்தலாலா பிசாசு ஆகிய படங்களின் சாயல்கள் முக்கியமாக உணர்வுப்பூர்வமான காட்சிகளில் தெரிகிறது.

படத்தில் எடிட்டிங் என்ற பெயரில் பல காட்சிகளை வெட்டி வெட்டி அருவாள் வெட்டு போல நமக்கும் பல காயங்கள் ஏற்படுகிறது. ஒவ்வொரு காட்சிக்கும் அடுத்தடுத்து காட்சிகள் தொடர்பே இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்துடன் நம்மால் ஒன்றே முடியவில்லை.

பின்னணி இசையும் பாடல்களும் பெரிதாக ஈர்க்கவில்லை.. ஒளிப்பதிவும் சுமார் ரகமே. ஆக்ஷன் காட்சிகள் கிராபிக்ஸ் ஃபைட் போல அல்லாமல் எதார்த்தமான சண்டை காட்சிகளாக உள்ளது. எனவே அதனை பாராட்டலாம்.

ஆக மொத்தம்… இந்த ‘குருதி ஆட்டம்’.. குருட்டு ஆட்டம்.. அல்லது அறுவை ஆட்டம் எனலாம்.

Kuruthi Aattam movie review and rating in Tamil

பொய்க்கால் குதிரை விமர்சனம் 3.25/5.; பொய் இல்லாத குடும்ப பாசம்

பொய்க்கால் குதிரை விமர்சனம் 3.25/5.; பொய் இல்லாத குடும்ப பாசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தன் மகளுக்காக போராடும் ஒற்றைக்கால் நாயகனின் வாழ்க்கையும் வலியும்.!

கதைக்களம்…

ஒரு விபத்தில் தன் ஒரு காலை இழந்தவர் நாயகன் பிரபுதேவா. இவர் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும் பணியை செய்கிறார். இவரது நண்பன் ஜெகன்.

மனைவியை இழந்த பிரபுதேவாவுக்கு ஒரு மகள் இருக்கிறார். ஒரு கட்டத்தில் தன் மகளுக்கு இருதய பிரச்சனை இருப்பது தெரிய வருகிறது.

அதன் அறுவை சிகிச்சைக்காக ரூ.70 லட்சம் தேவைப்படுகிறது. இதற்காக பலரிடம் பணம் கேட்கிறார் பிரபுதேவா. ஆனால் எவரும் உதவவில்லை.

எனவே ஒரு பிரபல நிறுவனம் சார்பாக கிரவுட் ஃபண்டிங் மூலம் தன் மகளுக்காக பணம் திரட்டுகிறார். ஆனால் வசூலான கோடிக்கணக்கான பணத்தை எடுத்துக் கொண்டு அந்த கும்பல் எஸ்கேப் ஆகிறது.

இதனால் வெறுத்துப் போன பிரபுதேவா இனி நல்ல வழியில் சென்றால் தன் மகளை இழக்க நேரிடும் என்பதால் ஒரு தவறான வழிக்கு முயற்சி செய்கிறார்.

பெரிய கோடீஸ்வரியான வரலட்சுமி மகளை கடத்தி பணம் பறிக்க முயல்கிறார். அந்த குழந்தையை கடத்தும் போது வசமாக சிக்கி கொள்கிறார்.

அதன் பிறகு என்ன ஆனது.? தன் மகளைக் காப்பாற்றினாரா பிரபுதேவா? வரலட்சுமி என்ன செய்தார்? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்…

ஒற்றைக் காலால் நடிப்பதற்கே ஒரு பெரிய தைரியமும் தில்லும் வேண்டும். அதுவும் கோலிவுட் நாயகர்கள் சிலர் இதுபோன்ற விஷப்பரிட்சைகளில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.

ஆனால் இதை ஒரு சவாலாக ஏற்று நடித்திருக்கும் பிரபுதேவாவை கண்டிப்பாக பல மடங்கு பாராட்டலாம். ஒற்றைக் காலை வைத்துக் கொண்டு மகளுக்காக உருகுவதும்.. நடனமாடுவதும்.. பைட் செய்வதும் என அசத்திவிட்டார்.

ஒற்றைக்கால் நாயகனுக்கு உதவும் நண்பனாக ஜெகன். சில காட்சிகளில் அயன் பட நண்பர் பாத்திரத்தை நினைவுபடுத்துகிறார்.

படத்திற்கு நாயகி கேரக்டர் தேவைப்படும் என்பதால் ரைசா வில்சன் வருகிறார். அவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை.

மகளாக நடித்திருக்கும் ஆலியா பாராட்டுக்குரியவர். அப்பா மீது பாசம் காட்டும் மகளாக நம்மை கவர்கிறார்.

ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ள வரலட்சுமியை பாராட்டலாம். ஆனால் அவர் இவ்வளவு ஸ்பீடாக பேசுவது இன்னும் எத்தனை நாளைக்கு.?? நிறுத்தி நிதானமாக பேசினால் ரசிகர்களுக்கு புரியுமே..

வில்லனாக ஜான் கொக்கென். ஓகே தான். இவர் சார்பட்டா பரம்பரையில் நடித்தவர்.

பிரகாஷ்ராஜ் கேரக்டர் வலுவில்லாத ஒன்றாகும். அவரை நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.

டெக்னீஷியன்கள்…

இமானின் இசையில் “சிங்கிளு.. சிங்களு..” பாடல் ஆட்டம் போட வைக்கும். பின்னணி இசையிலும் தெறிக்கவிட்டுள்ளார்.

சென்டிமெண்ட் பாடலில் கார்க்கியின் பாடல் வரிகள் பக்க பலம்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமாரிடம் இருந்து இனி நல்ல படங்கள் வருவதற்கு அறிகுறியாக இந்த படம் அமைந்துள்ளது.

ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் வைப்பதாக எண்ணி ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் ட்விஸ்ட் என வைத்து போதும் என சொல்ல வைக்கிறார்.

ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்கள் பணிகளில் சிறப்பு.. (DOP – Ballu)

முக்கியமாக இந்த படத்தை எடிட்டிங் செய்திருப்பவர் தமிழ் சினிமாவின் முதல் பெண் படத்தொகுப்பாளர் பிரீத்தி மோகன். இது போன்ற துறைகளுக்கு பெண்கள் வருவது அரிது. துணிச்சலாக வருகை புரிந்துள்ள பிரித்தியை வெகுவாக பாராட்டலாம்.

எனிமி படத்தை தயாரித்த வினோத்குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒற்றைக்கால் நாயகனே நம்பி முதலீடு செய்த வினோத் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான தயாரிப்பாளர் தான்.

ஆக.. இந்த ‘பொய்க்கால் குதிரை’.. பொய் இல்லாத குடும்ப பாசம்

Poikkal Kuthirai movie review and rating

எண்ணித் துணிக விமர்சனம்.; வைரத்தை விட வைராக்கியமே!

எண்ணித் துணிக விமர்சனம்.; வைரத்தை விட வைராக்கியமே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rain Of Arrows என்டர்டைன்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் கதை எழுதி தயாரித்து ஒரு முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.

க்ரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் வழங்க ஜெய், அதுல்யா ரவி, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா நடிப்பில் எஸ் கே வெற்றிச் செல்வன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய படம்.

ஒன்லைன்…

தன் காதலியை சுட்டுக் கொன்ற கொள்ளையர்களை நாயகன் பழிதீர்க்கும் கதை.

கதைக்களம்…

ஜெய் – அதுல்யா காதல் ஜோடிகள். இவர்கள் தங்கள் திருமணத்திற்காக நகை எடுக்க செல்கின்றனர்.

மறுபுறம்… அமெரிக்காவில் உள்ள கொள்ளைக் கும்பல் தலைவன் (தயாரிப்பாளர்) சுரேஷ் சுப்ரமணியம் இந்தியாவில் உள்ள வம்சி கிருஷ்ணா மூலம் டைமண்ட் கொள்ளைகளை நடத்துகிறான் .

இதில் அமைச்சர் சுனில் ஷெட்டி தனக்கு சொந்தமான நகைக் கடை ஒன்றில் உள்ள சுமார் 2000 கோடி மதிப்புள்ள பத்து வைரங்களை வைக்கிறார்.

அந்த கடையில் கொள்ளை நடக்கும் போது..

அதுல்யா அங்கு இருக்கிறார்.

அதே சமயம்… தன் குழந்தை சிகிச்சைக்க்காக தன் நகைகளை விற்க அஞ்சலி நாயரும் வருகிறார்.

அப்போது இவர்களை கொள்ளையர்கள் கொல்கின்றனர்.

எனவே அவர்களை பழி தீர்க்க புறப்படுகிறார் ஜெய். இறுதியில் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஜெய் ஸ்மார்ட்டாக வருகிறார். அதுல்யாவுடன் கெஞ்சுகிறார். பயப்படும்போது அடிக்கடி எங்கேயும் எப்போதும் சீன்களை ஞாபகப்படுத்துகிறார்.

ஆக்சன் காட்சிகளில் அசத்தல். சில நேரம் ஓவர் பில்டப்.

அழகாக வருகிறார் அதுல்யா. பசுமைக்காக போராடுகிறார். ஆனால் முதல் படத்தில் பார்த்த முகப்பொழிவு இப்போ இல்லை.

அஞ்சலி நாயர். : அழகும் நடிப்பும் ஓகே. குழந்தைக்காக ஏங்கும் கேரக்டர்.

சரண்யா ரவி ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கவனிக்க வைத்து விடுகிறார். அவர் பேசும் கிழாமத்து பாஷை அழகு.

வித்தியாசமான வேடத்தில் வித்யா பிரதீப்.

ஸ்டைலிஷ் வில்லன் வம்சி கிருஷ்ணா. சாம் சுரேஷ் உள்ளிட்டோரும் கச்சிதம்.

அதிரடி சண்டைக் காட்சிகளில் ஜொலிக்கிறார் ஃபைட் மாஸ்டர் முருகன்.

சாம் சி எஸ் இசை, தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு, சாபு ஜோசப்பின் படத் தொகுப்பு அனைத்தும் சிறப்பு.. பாடல்களை விட பின்னணி நன்றாக அமைந்துள்ளது.

வெற்றிசெல்வன் இயக்கியுள்ளார். முதல் பாதி குழப்பமாக இருந்தாலும் 2ம் பாதியில் தெளிவாகி விட்டார். ஆனால் 10 வைரக்கல் ரூ 2000 கோடி என்பது நம்பும்படியாக இல்லை.

வைரக்கல்லை தேடா விட்டாலும் பழி தீர்க்க புறப்பட்ட ஜெய்யின் வைராக்கியமே ‘எண்ணித் துணிக’.

Yenni Thuniga movie review and rating in Tamil

More Articles
Follows