தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
முக்கோணக் காதலில் சிக்கிக் கொள்கிறான் நாயகன் ஆனந்த் நாக்.. அவனை ஒருத்தியும் அவன் இன்னொருத்தியையும் காதலிக்கும் சூழல் நேர்கிறது.
தன்னைக் காதலிப்பவள் முதலாளியின் மகள் என்ற போதிலும் காதலை ஏற்க மறுக்கிறார் நாயகன். இப்படியான நாயகன் ஆனந்துக்கு மூன்று நண்பர்கள்.
இவர்கள் நான்கு பேரும் நான்கு விதமான நல்ல வேலை பார்த்தாலும் கிடைக்கும் வருமானத்தில் தங்கள் தேவைக்கு போக மீதியை தங்கள் குப்பத்தில் உள்ள முதியவர்களுக்கும் மாணவர்களுக்கு கொடுத்து உதவுகின்றனர்.
ஒரு கட்டத்தில் வைரங்கள் பதுக்கி வைக்கப்பட்ட தலைக்கவசம் ஒன்று இவர்களின் கையில் கிடைக்கிறது. அதில் உள்ளே என்ன இருக்கிறது என தெரியாமல் இவர்கள் அதை பயன்படுத்த பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.
இறுதியில் என்ன ஆனது.? தலைக்கவசத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்களா.? வைரம் என்ன ஆனது.? நண்பர்கள் என்ன செய்தார்கள்.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை
கேரக்டர்கள்…
நாயகன் ஆனந்த் நாக்.. ஸ்மார்ட்டாக இருக்கிறார். நட்பு காதல் தொழில் பக்தி விசுவாசம் புத்திசாலித்தனம் சமூக சேவை என அனைத்தையும் உணர்ந்து நடித்திருக்கிறார்.
நண்பர்களாக புதுமுகங்கள் ராஜேஷ், ஶ்ரீஜித், விக்கிபீமா ஆகியோரும் கவனிக்க ஙைக்கின்றனர்.
நாயகிகள் : ரேணுகா பதுளா & ஸ்வேதா டாரதி. இருவரும் வழக்கமான டூயட் நாயகி போல அல்லாமல் கதையுடன் பயணிப்பது சிறப்பு.. இடைவேளை வரை மட்டுமே இருவரும் முழுக்க வருகிறார்கள்.
அரசியல்வாதியாக ஓஏகே.சுந்தர், வில்லனாக இயக்குநர் ரத்னவேல் மற்ற பாத்திரங்களில் தளபதி தினேஷ், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், மீசை ராஜேந்திரன், போலீஸ் மணிமாறன் ஆகியோரும் உண்டு.
டெக்னீஷியன்கள்…
ஒளிப்பதிவு – சீனு ஆதித்யா, இசை – ராஜ்பிரதாப், படத்தொகுப்பு – சேதுரமணன், சண்டைப் பயிற்சி – தளபதி தினேஷ், பாடல் – அருண்பாரதி
இயக்குநர் வி.எம். ரத்னவேல். (சுந்தர்.சி.யின் சிஷ்யர் இவர்.)
ராஜ்பிரதாப் இசையில் அருண்பாரதியின் வரிகளில் ஒரு காதல் பாடல்.. ஒரு குத்து பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
முதல் பாதி முழுவதும் காதலை காட்டிய இயக்குனர் இரண்டாம் பாதியில் காதலை துளி அளவு கூட காட்டாமல் கதைக்குள் சென்றுள்ளார். படத்தின் ஒளிப்பதிவு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
எடிட்டிங்கில் முதல் பாதியில் சில காட்சிகளை வெட்டி இருந்திருக்கலாம்.
சுந்தர் சி யின் உதவியாளராக பணிபுரிந்த ரத்தினவேல் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து காமெடி காட்சிகளை இணைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
தமிழ் சினிமாவில் சேரிப்பகுதி என்றாலே ரவுடி, கடத்தல், கஞ்சா சிகரெட் மது மாது உள்ளிட்டவைகள் அதிகமாக காணப்படும். இது ஒரு எழுதப்படாத விதியாக இருந்தது.
ஆனால் இதில் 4 சேரி இளைஞர்களை காட்டினாலும் அவர்கள் படித்து முன்னேறி, தங்கள் பகுதியை முன்னேற்றச் செய்ய எடுக்கும் நடவடிக்கைகள் சிறப்பு.
சின்ன பட்ஜெட் படம் என்றாலும் அதற்கான தரத்தை கொடுத்திருப்பது ரத்தினவேலின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.
ஆக தலைக்கவசமும் 4 நண்பர்களும்.. குப்பத்தை மாற்றும் தலைவன்
Thalai Kavasamum 4 Nanbargalum Movie review and rating in tamil