தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாயும் ஒளி நீ எனக்கு என்ற மகாகவி பாரதியாரின் கவிதைகளை படத்தின் தலைப்பாக வைத்து அதற்கு அர்த்தம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் அத்வைத்.
பார்வை குறைபாடு உள்ள விக்ரம் பிரபுவுக்கு ஒளியாக இருப்பவர் நாயகி வாணி போஜன் என்கிறாரோ.?
கதைக்களம்…
சிறுவயதில் ஏற்பட்ட ஒரு விபத்தில் தன் தாய் தந்தையை இழக்கிறார் விக்ரம் பிரபு. அந்த விபத்தில் இவருக்கு பார்வை குறைபாடு வருகிறது. அதிக வெளிச்சம் இருந்தால் மட்டுமே காட்சிகளை காண முடியும் என்பது தான் அது.
அதன் பின்னர் தன் சித்தப்பா வளர்ப்பில் வளர்கிறார் விக்ரம் பிரபு. இவருக்கு வேண்டிய அனைத்து ஒளி அமைப்புகளையும் வீட்டில் ஏற்படுத்திக் கொடுக்கிறார் சித்தப்பா.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் நண்பருடன் இரவில் வெளியே செல்லும்போது இரு ரவுடிகள் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வதை அறிந்து அவர்களை அடித்து விரட்டுகிறார் விக்ரம்.
இது ஒரு புறம் இருக்க.. மற்றொரு புறம்.. ஒரு நேர்மையான அரசியல்வாதியான வேலராமமூர்த்தி இடத்திற்கு வர துடிக்கிறார் அவரது உதவியாளர் தனஞ்ஜெயா.
இந்த இரு கதைகளும் ஒரு கட்டத்தில் இணைய விக்ரம் பிரபுவுக்கு எதிரியாகிறார் தனஞ்செயா.
அதன் பிறகு என்ன நடந்தது.? பார்வை குறைபாடு உள்ள விக்ரம் பிரபு வில்லனை எப்படி ஜெயித்தார்.? விக்ரம் பிரபுவை தனஞ்செயா என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
பொதுவாக ஹீரோவுக்கு பெரிதாக சேலஞ்சிங் கேரக்டர்கள் அமைவதில்லை. ஆனால் பார்வை குறைபாடு என்ற சேலஞ்சிங்கான கேரக்டரை எடுத்து அதில் வெளுத்து கட்டி இருக்கிறார் விக்ரம் பிரபு. காதல் காட்சிகள் பெரிதாக இல்லை என்றாலும் ஆக்ஷன் காட்சிகளில் அடித்து நொறுக்கியிருக்கிறார்.
வில்லனாக தனஞ்ஜெயா மிரட்டி இருக்கிறார். இடைவேளை வரை இவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் அதன் பிறகு ஸ்கோர் செய்துள்ளார்.
பிளாஷ்பேக்கில் வரும் வேல ராமமூர்த்தி அசத்தியிருக்கிறார்.
காதலியாக வாணி போஜன்.. நாயகனுடன் கூடவே வருவதால் இவரை அதிகம் காண முடிகிறது.
அனிச்ச பூவே.. பாடலில் வாணி காஸ்ட்யூம்கள் கவரவில்லை. என்ன பிரச்சினையோ.?
விவேக் பிரசன்னா நண்பன் கேரக்டரை நிறைவாக செய்ய முயற்சித்துள்ளார்.
சித்தப்பாவாக நடிகர் ஆனந்த் நடித்துள்ளார். தன் கேரக்டரில் முத்திரை பதிக்கிறார்.
டெக்னீஷியன்கள்…
இயக்குநர் – கார்த்திக் அத்வைத்
பின்னணி இசை – சன்னி – சாகேத்
தயாரிப்பு – கார்த்திக் மூவி அவுஸ்
ஒளிப்பதிவு – ஸ்ரீதர்
படத்திற்கு பின்னணி இசை அதிக பலத்தை கொடுத்துள்ளது.. பாடல் காட்சிகள் ரசிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது…
ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் தன் பணியை நிறைவாக செய்திருக்கிறார்.. அதற்கு முக்கிய காரணம்.. ஒரே காட்சியை ரசிகர்களுக்கு வெளிச்சமாகவும் நாயகன் பார்வையில் மங்கலாகவும் காட்ட வேண்டும். அதற்காக இரண்டு விதமான ஒளியை அவர் பயன்படுத்தியுள்ளது அவரது சிரமத்தை புரிய வைக்கிறது.
வழக்கமான பழிவாங்கல் கதையாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து ஹீரோவுக்கு சேலஞ்சிங்கான கேரக்டரை கொடுத்து திரை அமைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் அத்வைத்.
ஆனால் அதை சொன்ன விதத்தில் அவரது தடுமாற்றம் தெரிகிறது. முக்கியமாக ஒரு படத்திற்கு கிளைமாக்ஸ் காட்சி பெரிதாக பேசப்பட வேண்டும். ஆனால் ஹீரோ பார்வையில் அந்த செட்அப் காட்சிகள் சரியாக இருந்தாலும் வில்லன் இப்படியா வந்து மாட்டிக் கொள்வார்.?!
ஆக பாயும் ஒளி நீ எனக்கு… பவர் இல்லாத ஒளி
paayum oli nee yenakku movie review and rating in tamil