தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
பரத் வாணி போஜன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். மனைவி பயந்த சுபாவம் என்பதால் அதை நினைத்து கவலை கொள்கிறார் பரத்.
ஒரு கட்டத்தில் தன் மாமியார் மீராவிடம் இது பற்றி கூறுகையில்..” மாப்ள எங்கள் கிராமத்திற்கு வந்து குல தெய்வத்தை வழிபட்டால் சரியாகும் என்கிறார்.
எனவே கிராமத்திற்கு சென்று குலசாமியை வழிபடுகின்றனர். திடீரென பரத் தொழில் ரீதியாக உடனே திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே தன் மாமனார் கேஎஸ். ரவிக்குமாரிடம் சொல்லி விட்டு நடுராத்திரியில் மனைவி மற்றும் மகனுடன் காரில் பயணிக்கிறார்.
அப்போது எதிர்பாராத விதமாக கார் பிரேக் டவுன் ஆகிறது. அந்த சமயத்தில் பரத்தை மர்ம ஆசாமி ஒருவன் அடித்துப் போட்டுவிட்டு வாணியை கடத்திச் செல்கிறார்.
அந்த மர்ம ஆசாமி யார்? பரத்தை அடித்து போட என்ன காரணம்? வாணியை கடத்த என்ன காரணம்? அந்த இரவில் நடந்தது என்ன? என்பதே கிளைமாக்ஸ்.
கேரக்டர்கள்…
எந்த ஒரு ஹீரோ பந்தாவும் இல்லாமல் அமைதியாக கேரக்டருக்கு தகுந்தாற்போல் நடித்திருக்கிறார் பரத். இவருக்கு சரியான ஜோடி வாணி.
நாம் காணும் இல்லத்தரசியாக அழகாக வந்து செல்கிறார் வாணி. இவர்களை மிரட்டும் உருவத்தை காணும்போது இருவரும் பயந்து நம்மையும் பயப்பட வைத்துள்ளனர். அடுத்தது என்ன நடக்கும்.? என்ன நடக்கும்? என்ற பரிதவிப்பை தன் கண்களில் காட்டி இருக்கின்றனர்.
வாணியின் பெற்றோர்களாக கேஎஸ் ரவிக்குமார், மீரா கிருஷ்ணன் நடித்திருக்கிறார்கள்.
பரத்தின் நண்பராக ராஜ்குமார் நடித்துள்ளார். இவரின் கேரக்டர் ஏனோ தானோ என இருக்கிறதே என நினைக்கையில் ஒரு செம டெஸ்ட் கொடுத்து இருக்கிறார்கள்.. அதை சொன்னால் சுவாரசியம் குறைந்துவிடும்.
டெக்னீஷியன்கள்…
ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா இரவு காட்சிகளில் ரசிகர்களை மிரள வைத்துள்ளார். எஸ்என் பிரசாத்தின் பின்னணி இசை திடீர் திடீரென பயமுறுத்தி நம்மை பேய் படம் பார்க்கும் எண்ணத்தை கொடுத்துள்ளது.
இதுவும் வழக்கமான பேய் படம் தானா என்று நாம் நினைக்கும் போது கிளைமாக்ஸ் வித்தியாசமான ஒரு விஷயத்தை கொடுத்து மிரள வைத்துள்ளார் இயக்குனர் சக்திவேல்.
ஆனால் முதல் பாதியில் நீளத்தை கொஞ்சம் எடிட்டிங் செய்து இருக்கலாம் எடிட்டர்.
ஆக இந்த மிரள்.. குலசாமியும் குற்ற ஆசாமியும்..