60 வயது மாநிறம் விமர்சனம்

60 வயது மாநிறம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்துஜா, குமரவேல், மதுமிதா மற்றும் பலர்.
இசை- இளையராஜா
ஒளிப்பதிவு- விவேக் ஆனந்தன்
இயக்கம்- ராதாமோகன்
பி.ஆர்.ஓ. – டைமண்ட் பாபு
தயாரிப்பு – கலைப்புலி எஸ் தாணு

கதைக்களம்…

படத்தின் தலைப்பிலேயே பாதி புரிந்திருக்கும். 60 வயது மதிக்கத்தக்க மாநிறம் கொண்ட ஒருவரை காணவில்லை.

தன் தந்தை பிரகாஷ்ராஜ் இருக்கும் போது அவரின் அன்பை உணராத ஒரு மகன் தன் அப்பாவை தொலைத்துவிட்டு தேடி அலையும் கதை.

மும்பையில் வேலை பார்க்கும் விக்ரம் பிரபு, தன் அப்பாவுக்கு அல்சைமர் நோய் (ஞாபக மறதி) இருப்பதால் ஒரு கேர் சென்டரில் பணம் கொடுத்த தங்க வைக்கிறார்.

ஒருநாள் அப்பாவை அழைத்து கொண்டு ஷாப்பிங் செல்கிறார். திரும்பி வந்து விடும் வேளையில் வாசலிலேயே கொண்டு விட்டு செல்கிறார்.

திசை மாறி போகும் பிரகாஷ்ராஜ் ஒரு கொலைக்கார (சமுத்திரக்கனி) கும்பலிடம் சிக்குகிறார்.

அவரை வைத்துக் கொண்டு குமரவேல் வீட்டில் தஞ்சம் புகுந்து கொள்கிறார் சமுத்திரக்கனி.

அதன்பின்னர் என்ன நடந்தது? மகனுக்கு அப்பா கிடைத்தாரா? சமுத்திரக்கனி போலீசில் சிக்கினாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

விக்ரம் பிரபுக்கு இது ஒரு வித்தியாசமான படம். ஆக்சனில் ஜொலிக்கும் அவர், இதில் சென்டிமெண்ட்டில் கலங்க வைக்கிறார்.

பெற்றோரை கவனிக்காமல் வேலை பிஸி என சுற்றுத் திரியும் மகன்களுக்கு இப்படம் நிச்சயம் ஒரு பாடத்தை கற்பிக்கும்.

நாயகன், நாயகி என எத்தனை கேரக்டர்கள் இருந்தாலும் 60 வயது முதியவராக பிரகாசிக்கிறார் பிரகாஷ்ராஜ்.

ஞாபக மறதியால் எல்லாவற்றையும் மறந்து நிற்கும் இவர் தன் அப்பாவித்தன நடிப்பால் அசத்திவிடுகிறார்.

இவர் நல்லவனா? கெட்டவனா? என்று தெரியாத அளவுக்கு சமுத்திரக்கனி. ஆனால் இவரது கேரக்டரில் கொஞ்சம் வலுவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவர் திடீரென திருந்துவது. கொலை செய்யும் தொழிலை கொள்ளும் இவர் மற்றவர்களை கொல்ல நினைக்க யோசிப்பது ஏன்..?

குரங்கு பொம்மையில் வில்லனாக மிரட்டிய குமரவேல் இதில் காமெடியில் கலக்கியிருக்கிறார். சீரியசான படத்தை சிரமம் கொடுக்காமல் கொண்டு செல்கிறார் இந்த மனிதர்.

கொலைக்கார கும்பலை விரட்ட ஒரு ஐடியா. நீ சம்பார் வை அவங்க எல்லாம் ஓடி போய்டுவாங்க என இவர் மதுமிதாவிடம் சொல்லும்போது, 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் அறிவித்த போது நான் கவலைப்படல. என்கிட்ட 100 ரூபாய் நோட்டு 2 இருந்துச்சி என சொல்லும்போது சிரிக்காமல் இருக்க முடியாது.

மேயாத மான் இந்துஜாவுக்கு இதில் நாயகி வேடம். தேவையான நடிப்பை கொடுத்து கதையோட்டத்துக்கு உதவியிருக்கிறார்.

இவர்களுடன் மதுமிதா, சமுத்திரக்கனி உதவியாளர், அவரின் காதலி அனைவரும் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விவேக் ஆனந்தனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

இளையராஜா இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் சிறப்பு.

அப்பா மகன் பாசத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் டைரக்டர் ராதாமோகன். ஆனால் முதல் பாதியில் இருந்த கலகலப்பு இடையில் இல்லாமல் போய்விடுவதால் கொஞ்சம் சலிப்பு ஏற்படுகிறது.

செட் 1, செட் 2, செட் 3 என்பதுபோல் காட்டிய இடங்களையே காட்டி கொண்டிருப்பதால் சோர்வை தருகிறது.

ஆனால் நிச்சயம் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு படத்தை கொடுத்துள்ள ராதா மோகனை பாராட்டியே ஆக வேண்டும்.

60 வயது மாநிறம்.. பாசத்தின் நிறம்

60 Vayadu Maaniram review rating

ஆருத்ரா விமர்சனம்

ஆருத்ரா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: பா விஜய், பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர், ஞானசம்பந்தம், ஒய்.ஜி.மகேந்திரன், விக்னேஷ், யுவா, சஞ்சனா சிங் மற்றும் பலர்.
இசை- வித்யாசாகர்
ஒளிப்பதிவு- பி.எல். சஞ்சய்
எடிட்டிங்- ஷான் லோகேஷ்
கலை-ராம்பிரசாத், ஸ்டண்ட்-கணேஷ்,
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்- பா.விஜய்.
பி.ஆர்.ஓ. – யுவராஜ்
தயாரிப்பு – வில் மேக்கர்ஸ் நிறுவனம்

கதைக்களம்…

தனது மாமா ஞானசம்பந்தம் உடன் இணைந்து அரிதான பழம்பொருட்களை விற்பனை செய்கிறார் பட நாயகன் பாடலாசிரியர் பாடகர் பா. விஜய். இவர்தான் படத்தின் இயக்குனரும் கூட.

மேலும் சமூக சேவையாக பள்ளிகளுக்குச் சென்று ‘குட் டச் பேட் டச்’ விஷயங்களையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்.

இவருக்கு அடுத்த அபார்ட்மெண்டில் புதிதாக குடும்பத்துடன் வந்து நுழைகிறார் டிடக்டிவ் ஏஜென்ட் பாக்யராஜ்.

அப்போது சிட்டியில் உள்ள மாபெருத் நகை கடை அதிபர் கடத்தப்படுகிறார். மேலும் அந்நியன் பட ஸ்டைலில் பல மர்ம கொலைகள் நடக்கிறது.

இதனால் போலீஸ் பாக்கியராஜிடம் உதவி கேட்கிறது.

இதனை துப்பறிய பாக்யராஜ் தனது அசிஸ்டண்ட் ராஜேந்திரன் மற்றும் மச்சினிச்சி தக்சிதா உடன் களம் இறங்குகிறார் பாக்யராஜ்.

அவருக்கு ஒரு சூழ்நிலையில் விஜய் மீது சந்தேகம் வருகிறது. அதன்படி அவரிடம் விசாரிக்க மரணத்திற்கு காரணமான பல முடிச்சுகளை அவிழ்க்கிறார் நாயகன்.

அப்படி என்ன நடந்தது..? கொலையாளி யார்? எதற்காக கொலை செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஸ்ட்ராபெரி படத்திற்கு பிறகு நடிகராக பளிச்சிடுகிறார் பா. விஜய். தங்கை மீது பாசம், நண்பன் மீது நம்பிக்கை என நம்மை கவர்கிறார்.

இறுதியில் கடவுள் மீது ஆக்ரோஷம் காட்டுவதிலும் அசத்தல். நடிகராக கவர்ந்தாலும் இயக்குனராக அதை மிஸ் செய்துவிடுகிறார்.

இவருடன் பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர், ஞானசம்பந்தம், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர்களின் பாத்திர படைப்புகளும் அவர்களின் நடிப்பும் ரசிக்க வைக்கிறது.

பாக்யராஜ் அசிஸ்டெண்ட் மொட்டை ராஜேந்தின் சில காட்சிகளில் சிரிப்பு மூட்டுகிறார். ஆனால் இவரின் முகத்தை க்ளோஸ் அப்பில் காட்டாமல் இருப்பது நல்லது.

வில்லனாக முன்னாள் ஹீரோ விக்னேஷ் வருகிறார். அவரின் பாத்திரப் படைப்பு கச்சிதம்.

பிளாஸ்பேக் காட்சிகளில் விஜய்யின் தங்கையாக வரும் யுவா ஆடியன்ஸிடம் அப்ளாஸ் வாங்கிடுவார். அவ்வளவு அழகு. அதே சமயம் இறுதியில் அனுதாபத்தையும் பெற்று விடுகிறார்.

மெகாலி, சோனி ஷ்ரிஸ்ட்டா, தக்சிதா, சஞ்சனா சிங் போன்றோர்களுக்கு பெரிதாக காட்சிகள் இல்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சஞ்சய் லோக்நாத்தின் ஒளிப்பதிவும், ஷான் லோகேஷின் எடிட்டிங்கிலும் குறையில்லை.

வித்யாசாகர் இசையில் ஆருத்ரா பாடல் மற்றும் ‘செல்லம்மா செல்லம்’ பாடல் இனிமையான ராகங்கள். புலி ஒன்னு வேட்டைக்கு போகுது பாடல் தேவையற்ற இடத்தில் வருவதை தவிர்த்திருக்கலாம்.

இரண்டாம் பாதியில் வரும் கிராமத்து காட்சிகள் படத்துடன் ஒன்ற வைக்கிறது. நம் குடும்பத்துடன் ஒன்றாக பழகும் சிலரே நம் வீட்டு சிறுமிகளை / பெண்களை பாலியல் தொல்லை செய்வார்கள் என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்கள்.

ஆனால் முதல் பாதியில் அந்நியன் பாணியில் கதை சொல்ல நினைத்து ஆருத்ராவை போரடிக்க வைத்துவிட்டார் டைரக்டர் பா. விஜய்.

ஜலசமாதி, சம்ஹாரம் என புராண கால கதைகளை சொல்லி கதையோட்டத்தை திருப்பி விட்டுள்ளார்.

அதுபோக ஒரு காட்சியில் சிறுவனை வைத்துக் கொண்டு பைக்கில் செல்கிறார் பா.விஜய். அதற்கு ஏன் க்ரீன்மேட்..? பனிமலை காட்சிகளில் கிராபிக்ஸ் அப்பட்டமாக தெரிகிறது.

சிறுமிகள் பாலியல் தொல்லை கதைக்களத்தை அருமையாக சொல்லியிருக்கலாம். அதை விடுத்து திரைக்கதையை கொண்டு சென்ற விதத்தில் கோட்டை விட்டுள்ளார் விஜய்.

இரண்டாம் பாதி கவர்ந்த அளவுக்கு முதல் பாதியில்லை என்பது ஏமாற்றம் தான்.

ஆருத்ரா… பாலியல் தொல்லைக்கு அபாய சங்கு

இமைக்கா நொடிகள் விமர்சனம்

இமைக்கா நொடிகள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப் (மகிழ்திருமேனி டப்பிங்), விஜய் சேதுபதி, ரமேஷ் திலக், ராஷி கண்ணா, மானஷ்வி (நடிகர் கொட்டாச்சி), உதய் மகேஷ் மற்றும் பலர்.
இயக்கம் – அஜய் ஞானமுத்து
இசை – ஹிப்ஹாப் ஆதி
ஒளிப்பதிவு – ஆர்.டி. ராஜசேகர்
எடிட்டிங் – புவன் ஸ்ரீனிவாஸ்
பி.ஆர்.ஓ. – சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : கேமியோ பிலிம்ஸ்

கதைக்களம்…

அடுத்தடுத்து கடத்தல், கொலைகள் நடக்கிறது. அதை நயன்தாரா தலைமையிலான சிபிஐ டீம் விசாரிக்கும்போது அது 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை பாணியில் ஒத்துப் போகிறது.

மேலும் கடத்தல்காரன் பணத்தை கேட்டு மிரட்டிவிட்டு பணம் கைக்கு வந்த உடன் ஆளை கொலை செய்துவிடுகிறான்.

அந்த கொலைக்காரன் ருத்ரா முன்பே இறந்துவிட்டான். அப்படி என்றால், அவன் பெயரில் கொலைகளை செய்வது யார்?

அவனின் சவால்கள் அனைத்தும் நயன்தாராவுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

ஒருமுறை பணத்தை கொடுத்து விட்டு மறைந்து இருந்து கண்காணிக்கிறது சிபிஐ. அந்த பணத்தை எடுத்து செல்கிறார் அதர்வா.

அதர்வா நயன்தாராவின் தம்பி. அப்படியென்றால் அவர்தான் கொலை செய்கிறாரா? என்ற பாணியில் களம் இறங்குகிறது சிபிஐ டீம்.

நயன்தாராவின் தம்பி அதர்வா என்பதால், நயன்தாரா மீது நம்பிக்கை இழக்கின்றனர். எனவே தேவன் தலைமையிலான அணி விசாரணையில் இறங்குகிறது.

அதன்பின்னர் என்ன ஆனது? அதர்வா ஏன் அப்படி செய்தார்? அவர் கொலை செய்ய காரணம் என்ன? நயன்தாரா பணி என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்தில் நயன்தாரா, அதர்வா ஆகிய பிரபலங்கள் இருந்தாலும் அவர்களை மிஞ்சிய நடிப்பில் வெளுத்து கட்டியிருக்கிறார் அனுராக் காஷ்யப்.

இவரை பார்த்தால் நமக்கே கோபம் வெறி வரும். ஐ லவ் கில்லிங் என்று இவர் சொல்லும்போது? என்னடா இவன் சைக்கோ மாதிரி பேசுறானே என கடுப்பேற்றுவார். அப்படியொரு அபாரமான நடிப்பை கொடுத்துள்ளார்.

கவர்ச்சியில்லாமல் ஆக்சனில் கவர்ந்திருக்கிறார் நயன்தாரா. மிரட்டல் பார்வை, மிடுக்கான தோற்றம் என ஈர்க்கிறார்.

முதல்பாதியில் லவ், ப்ரேக் அப் என வலம் வந்தாலும் இரண்டாம் பாதியில் ஆக்சனில் அதிரடி காட்டியுள்ளார் அதர்வா.

நயன்தாராவின் கணவராக சில காட்சிகளில் வருகிறார் விஜய்சேதுபதி. நடிப்பில் குறை இல்லையென்றாலும், இந்த சின்ன வேடத்திற்கு அவர் தேவையா? என கேட்கத் தோன்றுகிறது.

அனுராக் காஷ்யப்புக்கு டப்பிங் கொடுத்துள்ள மகிழ்திருமேனியை பாராட்டியே ஆக வேண்டும். மிரட்டல் குரல் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாராவின் மகளாக நடித்துள்ள மானஷ்வி க்யூட். பேச்சிலும்தான். இவர் நடிகர் கொட்டாச்சியின் மகள். ஆனால் சொட்டை சொருகிடுவேன் என ஒரு பெரியவரை பார்த்து பேசுவது எல்லாம் ரொம்பவே ஓவர்.
இதுபோன்ற படைப்புகளால் நம் வீட்டிலுள்ள பிள்ளைகளும் இப்படி பேசுவார்கள்தானே…

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இந்த த்ரில்லர் சப்ஜெக்ட்டுக்கு செம சாப்பாடு போட்டு இருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. (தீனி என்று சொன்னால் கொஞ்சமா இருக்கும்தானே… அதான் சாப்பாடு என்றோம்.. ஹிஹி..ஹி)

விளம்பர இடைவெளி ரெமான்டிக் என்றால், நீயும் நானும் அன்பே இதமான ராகம். காதலிக்காதே பாடல் ஆட்டம் போட வைக்கும் ரகம்.

ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. ஆனால் எடிட்டர் புவன் ஸ்ரீனிவாசன்தான் நம்மை சோதித்து விட்டார்.

படத்தில் அதர்வா ராஷிகண்ணா ரொமான்டிக்கில் கத்திரி போட்டு இருக்கலாம். நயன்தாராவுக்கு ஒரு ப்ளாஷ்பேக், அதர்வாவுக்கு ஒரு ப்ளாஷ்பேக், அனுராக் காஷ்யப்புக்கு ஒரு ப்ளாஷ் பேக். முடியலட சாமி.

ஒரு த்ரில்லர் கதைக்கு தேவையான அனைத்தையும் கொடுக்க முயற்சித்துள்ளார் அஜய் ஞானமுத்து. ஆனால் திரைக் கதையில் நிறைய லாஜிக்கை மறந்துவிட்டார்.

அதர்வாவை மாறி மாறி சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் உடம்பில் காயத்தையும் காட்டவில்லை. கட்டையும் காட்டவில்லை. சட்டை ஓட்டையை மட்டுமே காட்டியிருக்கிறார்கள்.

போலீஸ் படையே துரத்தும் போது அதர்வா சைக்கிள் ஓட்டியே காப்பாற்ற செல்வது எல்லாம் ரொம்பவே ஓவர் பாஸ். இன்னுமா? மக்களை இப்படி எல்லாம் ஏமாத்துறீங்க…?

இமைக்கா நொடிகள்… எடிட்டர் வெட்டினால் இமைக்காமல் பார்க்கலாம்

இமைக்கா நொடிகள் விமர்சனம் (வீடியோ)

கோலமாவு கோகிலா விமர்சனம்

எச்சரிக்கை விமர்சனம்

எச்சரிக்கை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டைம் லைன் சினிமாஸ்’ சார்பாக சி.பி.கணேஷ், சுந்தர் அண்ணாமலை இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’.

இதில் சத்யராஜ், வரலட்சுமி, கிஷோர், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இசை – சுந்தரமூர்த்தி,

ஒளிப்பதிவு – சுதர்ஷன் ஸ்ரீனிவாசன்,
படத்தொகுப்பு – கார்த்திக் ஜோகேஷ்,
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்,
எழுத்து, இயக்கம் – கே.எம்.சர்ஜுன். இவர் மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற முன்னணி இயக்குனர்களிடம் பணியாற்றியவர். மா, லட்சுமி உள்ளிட்ட பல குறும்படங்களையும் இயக்கி இருக்கிறார்.

கதைக்களம்…

தன் 19 வயதில் தந்தையை கொலை செய்த குற்றத்துக்காக சிறைக்கு சென்று 15 வருடங்கள் கழித்து வீடு திரும்புகிறார் கிஷோர்.

சிறுவயதில் அனாதையாக விடப்பட்ட தனது அக்கா மகன் விவேக் ராஜ்கோபாலை தேடி வருகிறார்.

அதன் பின்னர் இருவரும் சேர்ந்து ஒரு பெண்ணை (வரலட்சுமி) கடத்தி கோடிக்கணக்கில் பணம் பறித்து வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்று முடிவு செய்கின்றனர்.

கிஷோரின் தம்பி தன் காதலியான வரலட்சுமியை கடத்த திட்டமிடுகிறார். கிஷோருக்கு தன் தம்பியின் காதலி என்பது தெரியாது.

அதன்படி கடத்துகின்றனர். பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.

வரலட்சுமியின் தந்தை திறமையான ரிட்டயர்டு போலீஸ் அதிகாரி சத்யராஜை நாடுகிறார்.

ஆனால் சத்யராஜ்க்கோ மனைவியில்லை. வீட்டில் உடல் நிலை பாதிக்கப்ட்ட தன் மகள் மட்டுமே இருக்கிறாள். முதலில் மறுக்கும் அவர் வீட்டில் இருந்தபடியே உதவ நினைக்கிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? வரலட்சுமியை காப்பாற்றினாரா? தம்பி காதலியை கடத்தும் நோக்கம் என்ன? கிஷோர் என்ன ஆனார்? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்..

கடத்தல்காரனை பிடிக்க சத்யராஜ் போடும் திட்டங்கள் ரசிக்க வைக்கிறது. மகள் பாசம், கடமை என தடுமாறினாலும் அந்த கம்பீரம் செம.

தன் தம்பி தனக்கு தெரியாமல் போடும் திட்டத்தால் கடைசியில் தடுமாறும் கிஷோர் எடுக்கும் முடிவு நல்ல ட்விஸ்ட்.

கிஷோரின் தம்பியும் அவரது நடிப்பில் கச்சிதம். வரலட்சுமியை பெரும்பாலும் கட்டி போட்டு விட்டனர். எனவே அவரது கேரக்டரில் பெரிய சுவாரஸ்யம் இல்லை.

கடத்தல் விறுவிறுப்பான திரைக்கதையில் சில நேரங்கள் காதல் பாடல் சலிப்பை ஏற்படுத்துகிறது. அதை குறைத்திருக்கலாம்.

குறும்படங்களை இயக்கியவர் சர்ஜீன். இதில் க்ளைமாக்ஸில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

க்ளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம் என்றாலும் அது ரசிக்க வைக்கவில்லை.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பாடல்கள் சுமார். பின்னணி இசையில் ஜெயித்து விடுகிறார்.

ஒளிப்பதிவாளர் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்… ஒருமுறை பார்க்கலாம்.

லக்ஷ்மி விமர்சனம்

லக்ஷ்மி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casting : Prabhu Deva, Ditya Bhande, Aishwarya Rajesh

Directed By : Vijay

Music By : Sam C. S.

Produced By : Prateek Chakravorty, Shruti Nallappa, R. Ravindran

கதைக்களம்..

படித்தால், நடந்தால், சிரித்தால், கனவு கண்டால், படுத்தால்.. இப்படி எந்நேரமும் டான்ஸை பற்றியே சிந்திப்பவள் தித்யா. இவர்தான் இந்த படத்தில் லக்‌ஷ்மி யாக நடித்திருக்கிறார். இவருக்கு அப்பா கிடையாது.

ஆனால் இவரது அம்மா ஐஸ்வர்யா ராஜேஷ்க்கோ நடனம் என்றாலே பிடிக்காது.

எனவே அம்மாவுக்கு தெரியாமல் நடனம் கற்றுக் கொண்டு மேடையேற நினைக்கிறார்.

அதன்படி காபி ஷாப் வைத்திருக்கும் பிரபுதேவாவின் உதவியை நாடுகிறார். அவரும் இவருக்கு உதவுகிறார்.

ஒருவழியாக அம்மா முதல் பள்ளி ஆசிரியர்களை ஏமாற்றி நடனம் கற்றுக் கொண்டு மும்பையில் நடைபெறும் ப்ரைட் ஆப் இந்தியா டான்ஸ் போட்டியில் பங்கேற்கிறார்.

ஆனால் அங்குள்ள லைட்டிங் வெளிச்சத்தில் நடனம் ஆட முடியாமல் லக்ஷ்மி சொதப்பி விடுகிறார்.

இதனால் இவருடைய சென்னை அணியே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

அப்போது அவரை சேர்க்க சொல்லி மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டு வருகிறார் பிரபுதேவா.

அவர் சொன்ன உடன் அந்த நடுவர் குழுவே கேட்கிறது. அப்படி என்றால், பிரபுதேவா யார்? அவர் சொன்னால் அவர்கள் கேட்பது ஏன்? இந்த லக்‌ஷ்மி மீது பிரபுதேவாவுக்கு அப்படி என்ன அக்கறை..? என்பதே மீதிக்கதை.

இறுதியில் நடன போட்டியில் பரிசை வென்றாரா லக்‌ஷ்மி? என்பதே க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

நடனத்தில் ஜொலித்த பிரபுதேவா இதில் நடிப்பிலும் ஜொலிக்கிறார்.

இசையில்லாமல் ஒலிக்கும் அசையும் யாவும் வரிகளுக்கு நடன அமைப்பு அருமை. அந்த வரிகளுக்கு ஏற்ப பிரபுதேவாவும் குழந்தைகளும் ஆடுவது அற்புதம்.

இறுதிப் போட்டியில் இங்கே யார் தோற்றார்கள் என்பது இல்லை. நடனம் மட்டுமே ஜெயித்தது என்று சொல்லி அனைத்து நடன பிரியர்களையும் அழ வைத்துவிட்டார்.

தித்யா… நடனத்தில் நீ செம தில்-ய்யா… இந்த சிறுமியை குட்டி பிரபுதேவா என்று கூட சொல்லாம். இவரை சுற்றி திரியும் அந்த குண்டு பையனும் அர்ஜீனும் செம க்யூட். இவர்கள் செய்யும் குறும்பு ரசிக்க வைக்கிறது.

ஆனால் இந்த வயதிலேயே ஒரு பெண்னுக்காக அந்த பையன்கள் மாறி மாறி ஏதாவது செய்வது நெருடலாக உள்ளது.

படத்தில் யாருமே சிரிக்க கூடாது என டைரக்டர் விஜய் சொல்லிவிட்டாரோ? கோவை சரளாவை தவிர எல்லாரும் செம டென்சன் முகத்துடன் காணப்படுகிறார்கள்.

பிரபுதேவா, டான்ஸ் மாஸ்டர் சோபியா, கருணாகரன், ஐஸ்வர்யா ராஜேஷ், நடுவர், தித்யா என அனைவரது முகத்திலும் கொண்டாட்டமே இல்லை. இதனால் நமக்கே புன்னகை வர மறுக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் அமைதியாக வருகிறார். நடன மாஸ்டர் சோபியா அழகாக வருகிறார். அவ்வளவே.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இந்த நடன படத்திற்கு சாம் சி.எஸ். இசை பக்க பலம். அதிரடி பாடல் முதல் இதமான இசை என வெளுத்து கட்டியிருக்கிறார்.

பின்னணி இசையிலும் கை கொடுத்துள்ளார்.

ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் கச்சிதம். இரண்டிலும் குறை சொல்ல முடியாது. ஆனால் ஓவராக எடிட்டிங் செய்துவிட்டாரோ? என்னவோ?

அல்லது படத்தில் டைரக்டர் விஜய் ப்ளாஷ்பேக் காட்சிகள் வைக்கவில்லையோ? பிரபுதேவா & ஐஸ்வர்யா காதலில் உணர்வும் இல்லை. அழுத்தமும் இல்லை.

டைரக்டர் விஜய் ஒரு நடன படத்தை கொடுக்க வேண்டும் நினைத்து அதில் ஸ்கோர் செய்துள்ளார். ஆனால் படம் முழுக்க நடனத்தையும் மையப்படுத்தியே காட்சிகள் அமைத்து விட்டதால் மற்ற காட்சிகளில் கவனம் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடி ஆட்டம், சென்னை 28 படத்தில் கிரிக்கெட் இருந்தாலும் மற்றவைக்கும் சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இதில் அது இல்லை.

நிறைய டான்ஸ் ரியால்ட்டி ஷோக்களை ஒன்று சேர்த்து விட்டது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது.

முக்கியமாக தித்யா மேடையில் நடனம் ஆடும்போது பயிற்சியாளர் பிரபுதேவா கீழே நின்று நடன அசைவுகளை சொல்லி கொடுக்கிறார். அது எப்படி சாத்தியம்?

ப்ரைட் ஆஃப் இந்தியா பட்டம் வெல்ல அப்படி ஒரு அனுமதி உண்டா? என்ன-? அது டைரக்டருக்கே வெளிச்சம்.

லக்‌ஷ்மி… நடன இளவரசி

First on Net மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

First on Net மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா, அபு வளையன்குளம், ஆண்டனி வாத்தியார், தேனி ஈஸ்வர் மற்றும் பலர்.
இயக்கம் – லெனின் பாரதி
இசை – இளையராஜா
ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்
எடிட்டிங் – காசி விஸ்வநாதன்
பி.ஆர்.ஓ. – நிகில் முருகன்
தயாரிப்பு : நடிகர் விஜய்சேதுபதி

கதைக்களம்…

தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் மக்களின் வாழ்க்கை பதிவுதான் இப்படம்.

மலையடிவாரத்தில் வசிக்கும் நாயகன் ஆண்டனி, தினமும் உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேலே செல்கிறார்.

போகும் வழியில் சின்ன சின்ன சேவைகளையும் மற்றவர்களுக்கு உதவிடும் வகையில் பொருட்களை கொண்டு செல்வதும் அங்கிருந்து கீழே கொண்டு வருவதும் கூலிக்கு மூட்டை சுமப்பதும் தான் இவரது வாழ்க்கை.

எப்படியாவது தான் உழைத்த பணத்தில் நிலம் வாங்கி, விவசாயம் செய்து முன்னேறி விட வேண்டும் என அயராது உழைக்கிறார்.

இதனிடையில் ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள் யுனியன் பிரச்சினை என தலையிடுவதால் சிறைக்கு செல்ல நேரிடுகிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? நிலம் வாங்கினாரா? சிறைக்கு சென்று வந்த பின்னர் வாழ்க்கை எப்படி திசை மாறியது? இதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்திற்கு நாயகன் நாயகி வேண்டும் என்பதால், ஆண்டனி மற்றும் காயத்ரி இருவரும் நடித்துள்ளனர்.

இருவரும் அருமையான நடிப்பை கொடுத்துள்ளனர். தன் மகனுக்கு தன் நிலத்தை காட்ட வேட்டி கட்டுவது, ஏலக்காய் மூட்டை சாய்வது, விவசாயம் நஷ்டத்தை தருவது என ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றவாறு முக பாவனைகள் கொடுத்துள்ள இவரது சிறப்பு.

ஜோக்கரில் பார்த்த அதே காயத்ரி. இவருக்கு நடிக்க தெரியாது. வாழ மட்டும்தான் தெரியும் என நிரூபித்துள்ளார்.
மற்றபடி படத்தில் உள்ள அனைத்தும் கேரக்டர்களும் வாழ்ந்திருக்கிறார்கள்.

அங்குள்ள மனிதர்கள் அவர்களின் யதார்த்தமான வாழ்க்கையை முறையை அவர்களுக்கே தெரியாமல் கேமரா வைத்து படமாக்கியுள்ளது போல் தோன்றும்.

அப்படியொரு படத்தை நமக்கு கொடுத்துள்ளார் லெனின் பாரதி.

எந்த வயதிலும் உழைத்து வாழ வேண்டும் என ஏலக்காய் மூட்டை சுமந்து செல்லும் பெரியவர், அங்கு டீ கடை வைத்து வியாபாரம் செய்யும் பெண்மணி, உரக்கடை அதிபர், யுனியன் தலைவர் என இப்படியாக எல்லாரையும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

சிட்டியில் வாழும் ஏன், கிராமத்தில் வாழும் மக்களே இந்த படத்தை பார்த்தால் மலை பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை தெரிந்துக் கொள்ளலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

என்னடா? கேமரா ஆங்கிள் இது? என சினிமாவை திட்டினால் இந்த படத்தை நிச்சயம் நீங்கள் பார்க்க வேண்டும்.
அப்படியொரு அழகான பல கோணங்களில் இந்த பதிவை செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.

மூட்டை சுமக்கும் ஒரு பெரியவர் நடந்துக் கொண்டே தன் வேலையை சொல்லிக் கொண்டே போகும் போது கேமரா செல்லும் அந்த ஒவைட் ஆங்கிள், இறுதியாக அந்த காற்றாழை காத்தாடிகள் இப்படியொரு ஆங்கிளை பார்த்து இருக்க மாட்டீர்கள்.

மு. காசி விஸ்வநாதன் தேவைக்கு ஏற்றவாறு எடிட்டிங்கை மேற்கொண்டுள்ளார்.

இளையராஜா இசையில் வலம் வந்தால் இந்த மேற்குத் தொடர்ச்சி மலையை எந்த சோர்வும் இன்றி நாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அப்படியொரு பின்னணி இசையை கொடுத்துள்ளார்.

ஒரு அழகான பாடலையும் பாடி ரசிகர்களை பரசவப்படுத்தியுள்ளார்.

இயக்கம் பற்றிய அலசல்…

ஒவ்வொரு வெள்ளந்தி மனிதனையும், அவர்களின் உழைப்பையும் அழகாக உரித்து வைத்துள்ளார் டைரக்டர் லெனின் பாரதி.

இப்படிப்பட்ட மனிதர்களில் யார்? வில்லனாக இருக்க முடியும் என்பதற்கு இயற்கை, சூழ்நிலைகள் எப்படியெல்லாம் மாறி நாயகன் வாழ்க்கை மாற்றுகிறது என்பதை எல்லாம் உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்.

க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத ஒன்று.

தான் ஒரு முன்னணி நடிகர் என்றாலும் இப்படத்தில் தலை காட்டாது, கமர்சியல் விஷயங்கள் எதையும் சேர்க்காமல் படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்ட விஜய்சேதுபதியை பாராட்டியே ஆக வேண்டும்.

மேற்குத் தொடர்ச்சி மலை… குடும்பச் சுற்றுலாவுக்கு ஏற்ற மலை

Merku Thodarchi Malai movie review rating

More Articles
Follows