காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்

காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஜெய்வந்த், ஐரா, ஆடுகளம் நரேன், யோகி தேவராஜ் மற்றும் பலர்.
இயக்கம் – யுரேகா
ஒளிப்பதிவு – மணி பெருமாள்
இசை – விஜய் சங்கர்
தயாரிப்பு : வி.ஜி. ஜெய்வந்த்
பிஆர்ஓ : நிகில் முருகன்

கதைக்களம்…

ஒரு சேட் வட்டி தொழில் செய்கிறார். அவர் நிறுவனத்தின் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் அவரது ஊழியர்களின் வாகனங்கள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகிறது.

இது தங்களது எதிரி கம்பெனிகளின் சதியாக இருக்கும் என நினைக்கின்றனர்.

ஆனால் இதை ஒரு சைக்கோ ஒருவர்தான் செய்கிறார் என தெரிய வருகிறது. அந்த சைக்கோ யார்? எதற்காக குறிவைத்து ஒரு நிறுவனத்தின் வாகனங்களை எரிக்கிறார்? என்பது புரியாமல் போலீசை நாடுகின்றனர்.

இதை விசாரிக்க ஒரு காட்டுப்பய தான் வேண்டும் என்பதால் காட்டுத்தனமான போலீஸ் காளியை நாடுகிறார் உயர் அதிகாரி ஆடுகளம் நரேன்.

காளி என்ன செய்தார்? எப்படி கண்டு பிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

போலீஸ்க்கு உரித்தான முரட்டுத்தனமாக இருக்கிறார் நாயகன் ஜெய்வந்த்.

அதிலும் காட்டுத்தனம் என்பதால் ரொம்பவே காட்டியிருக்கிறார். ஆனால் க்ளைமாக்சில் இவர் காட்டும் அந்த 15 நிமிட டயலாக் ரொம்பவே ஓவர்.

ஐரா படத்தின் நாயகி. அனாதை பெண்ணாக வந்து இறுதியில் கம்பீரம் காட்டியிருக்கிறார். படத்தில் இவருக்கான காட்சிகள் குறைவே.

வில்லன்களாக சி.வி.குமார், அபிஷேக், மூணாறு ரமேஷ்,மாரிமுத்து அனைவரும் தங்களது கேரக்டர்களில் கச்சிதம்.

ஒரு சஸ்பென்ஸ் கலந்த திரில்லரை சமூக பொறுப்புடன் கொடுக்க என நினைத்திருக்கிறார் யுரேகா.

இதனால் தேவையில்லாத பாடல்களை இடையில் சொல்லி வெறுப்பேத்தி விட்டார்.

லோன் என்ற பெயரில் அப்பாவிகளிடம் வங்கிகள் செய்யும் மோசடியை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

அதற்காக சேட் லோன் என நீண்ட திரைக்கதையுடன் சொல்லி கொஞ்சம் குழப்பிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் மீது இருக்கும் அன்பு, வடநாட்டினர் மீது இருக்கும் ஆதங்கம் ஆகியவற்றை வலுக்கட்டயமாக திணித்திருக்கிறார் டைரக்டர் யுரேகா.

சொல்லவேண்டிய விஷயத்தை ஆணித்தரமாக சொல்லியிருக்கலாம். ஆனால் வலுவில்லாத திரைக்கதையால் தடுமாற்றத்துடன் சொல்லியிருக்கிறார்.

காட்டுப்பய சார் இந்த காளி… ஆனால் கெட்டிக்காரத்தனம் இல்லையே

Kattu Paiyan Sir Intha Kaali movie review and posting

எங்க காட்டுல மழை விமர்சனம்

எங்க காட்டுல மழை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: மிதுன் மகேஸ்வரன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், அப்புக்குட்டி, மிலோ, கார்த்தி, சாம்ஸ், அருள்தாஸ், மதுமிதா மற்றும் பலர்.
இயக்கம் – ஸ்ரீபாலாஜி
ஒளிப்பதிவு – ஏஆர். சூர்யா
இசை – ஸ்ரீவிஜய்
தயாரிப்பு : சி. ராஜா
பிஆர்ஓ : நிகில் முருகன்

கதைக்களம்…

குள்ளநரி கூட்டம் என்ற அழகான வெற்றிப் படத்தை இயக்கிய ஸ்ரீ பாலாஜியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் இது.

நாயகனாக மிதுன் மகேஸ்வரன் நாயகியாக சுருதி ராமகிருஷ்ணன் நடித்துள்ளனர்.

மிதுன் மகேஸ்வரன், தனது நண்பன் அப்புக்குட்டியை தேடி சென்னை வருகிறார். ஆனால் அவரின் முகவரி தெரியாமல் தன்னுடன் பயணிக்கும் ஒருவருடன் நட்பாகி அவர் அப்பார்ட்மெண்டிலேயே வசிக்கிறார்.

இதனிடையில் நாயகி ஸ்ருதிக்கு உதவி செய்ய, இருவருக்கும் காதல் உண்டாகிறது.

இதனிடையில் போலீஸ் அருள்தாஸிடம் சின்ன பிரச்சினை ஏற்படுகிறது.

அதன்பின்னர் அப்புக்குட்டியை சந்திக்க, அவருடன் ஒரு பழைய இடிந்துப் போன கட்டிடத்தில் தங்குகின்றனர்.

ஒருநாள் போலீஸ் அருள்தாஸை பழிவாங்க, அவரிடம் இருக்கும் ஒரு பையை திருடி வருகிறார் மிதுன்.

அதன்பின்னர்தான் அந்த பையில் கோடிக்கணக்கான பணம் இருகிறது என்பது தெரிய வருகிறது.

அந்த பணத்தை தங்களின் பழைய கட்டிடத்தில் புதைத்து வைக்கின்றனர். அதில் உள்ள கொஞ்ச பணத்தை எடுத்து வெளியூர்களுக்கு சென்று என்ஜாய் செல்கின்றனர்.

திரும்பி வந்து பார்த்தால், அந்த இடத்தில் ஒரு போலீஸ் ஸ்டேசனே உருவாகி நிற்கிறது.

இதனால் பணத்தை அங்கிருந்து எடுக்க திட்டமிடுகின்றனர்.

காவல் நிலையத்திலிருந்து பணத்தை எப்படி எடுத்தார்கள்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகன் மிதுன் மகேஸ்வரன் சில நேரங்களில் பார்ப்பதற்கு நடிகர் சேது போலவே இருக்கிறார்.

எங்கேயும் எப்போதும் படத்தில் அறிமுகமாகி, சில படங்களில் நடித்தவர்தான் இந்த மிதுன் மகேஸ்வரன்,
நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணனுடன் ரொமான்ஸ் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். நடிப்பில் இன்னும் கவனம் தேவை.

ஸ்ருதிக்கு பார்த்த மாப்பிள்ளையாக உள்ள சாம்ஸிடம் இவர் செய்யும் குறும்புத்தனங்கள் ரசிக்க தக்கவை.

நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஜில்லென்று வந்து ரசிகர்களை சூடேற்றுகிறார். அழகான நடிப்பையும் வெளிப்படுத்துகிறார்.

மிடுக்கான போலீசாக அருள்தாஸ் அருமை. சில காட்சிகளில் வந்தாலும் சாம்ஸ் சபாஷ் போட வைக்கிறார்.

அப்புக்குட்டிக்கு இந்த படத்தில் நிறைய காட்சிகள் உள்ளது. எனவே அவரும் கிடைத்த காட்சிகளில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் அப்புக்குட்டி & மதுமிதா காட்சிகள் மனதில் ஒட்டவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

குள்ளநரி கூட்டம் படத்திற்கு பின்னர் 7 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை காமெடியாக கொடுக்க நினைத்துள்ளார்.

அதில் ஓரளவே முயற்சித்துள்ளார்.

பணப்பை காணாமல் போனது முதல் பரபரப்பை கூட்ட முயற்சித்துள்ளார் டைரக்டர் ஸ்ரீ பாலாஜி. ஆனால் அடுத்தடுத்து காட்சிகளை யூகிக்க முடிவதால் சுவாரஸ்யம் இல்லை.

ஸ்ரீ விஜய்யின் இசையில் மெலோடி பாடல் ரசிக்கலாம். சூர்யா ஏ.ஆர். ஒளிப்பதிவில் காட்சிகள் படத்திற்கு கூடுதல் அழகை சேர்க்கிறது.

ஆனால் திரைக்கதையில் ட்விஸ்ட்டும் இல்லை. ஆக்சனும் இல்லை என்பதால் தொய்வு ஏற்படுகிறது.

இதற்கு நடுவில் இரண்டு நாய்கள் காதல் கதை வேற. அதற்கு வாய்ஸ் ஓவர் வேற கொடுத்துள்ளனர்.

அந்த பணம் நாயகனுக்கு கிடைக்கும்போது, அதை நல்லவிதமாக முடிக்காமல் நாய் வாயில் பையை வைத்து ஏதோ குழப்பி விடுகிறார் டைரக்டர்.

எங்க காட்டுல மழை… ஆனால் ரசிகர்கள் காட்டுல…?

கடிகார மனிதர்கள் விமர்சனம்

கடிகார மனிதர்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கிஷோர், லதாராவ், கருணாகரன், செரிலின் பில்லக்கள், பாலாசிங், சிசர் மனோகர் மற்றும் பலர்.
இயக்கம் – வைகறை பாலன்
ஒளிப்பதிவு – சங்கர் நாராயணன்
இசை – சாம் சி.எஸ்
தயாரிப்பு : பிரவீஸ் பிரதீப்ஜோஸ்

கதைக்களம்…

பேக்கரியில் பெறும் கேக், பிஸ்கட்டுகளை ஒவ்வொரு கடையாக சென்று போடும் வேலை செய்துவருகிறார் கிஷோர்.

இவரது மனைவி லதாராவ். இவர்களுக்கு 2 ஆண், 1 பெண் குழந்தை.

சென்னையில் வாடகை வீடு தேடுகிறார்கள். புரோக்கர் சிசர் மனோகர் குறைந்த வாடகையில் இவருக்கு வீடு பார்த்துச் சொல்லும்போது 2 குழந்தைகள் என சொல்லிவிடுகிறார்.

இதனால் வீட்டு ஓனர் பாலாசிங்கிடம் தன் 1 குழந்தையை மறைத்து மறைத்து வாழ்கிறார்.

இதே காம்பவுண்டில் பாலாசிங்கின் மகள் செரிலினை கரெக்ட் செய்ய குடியேறுகிறார் கருணாகரன். அவர்களுக்குள் காதலும் மலர்கிறது.

இதனால் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார் செரிலின்.

இதனிடையில் கிஷோரின் மகனை மறைக்கும் விஷயமும் ஓனருக்கு தெரிய வருகிறது.

அதன் பின்னர் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஒரு நடுத்தர குடும்பம், வாடகை வீடு என பல பிரச்சினைகளை அப்படியே பிரதிபலிக்கிறார்கள் கிஷோர் மற்றும் லதா ராவ் தம்பதிகள். உண்மையை சொல்லிவிடலாமா? என இவர்கள் தவிக்கும் காட்சிகள் அருமை.

கருணாகரன் செரிலின் காட்சிகளில் ரொமான்ஸ சுத்தமாக இல்லை. இதில் கருணாகரனுக்கு காமெடியும் இல்லாமல் போய்விட்டது வருத்தம்தான்.

மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவாக லதா ராவ். நடுத்தர பெண்ணாக கணவரின் நிலை உணர்ந்து நடித்திருக்கிறார். வீடு தேலையும் அலையும் காட்சிகளில் கூட அசதியாக காணப்படுவது யதார்த்தம்.

சினிமாவில் சான்ஸ்க்கு அலையும் அந்த மலையாளி நடிகரும் கவர்கிறார். சரக்கு கொடுத்துவிட்டு பின்பே அவரே அதை வாங்கிச் செல்வது செம.

வீட்டு உரிமையாளர் பாலாசிங் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். அவரின் பார்வையே மிரட்டலாக உள்ளது.

புரோக்கராக வரும் சிசர் மனோகர் கச்சிதம். போனில் பேசிக்கொண்டே அவர் செய்யும் காரியங்கள் ரசிக்க வைக்கிறது. இங்க நல்லவங்களா வாழ முடியாது என அவர் கூறுவதும் செய்வதும் ரசிக்கலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

உமா சங்கரின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்-ன் இசையும் ரசிக்கும் ரகமே. ஆனால் ஒரு பாடல் பிட்டு பிட்டாக அடிக்கடி வந்து நம்மை சோதிக்கிறது.

வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னை என்பார்கள். ஆனால் சென்னையில் வசிக்கும் மக்களுக்கே அதன் கஷ்டங்கள் தெரியும்.

வாடகை வீடு, அதிகபட்ச கரண்ட் யுனிட், இயந்திர வாழ்க்கை என பலவற்றை கூறிக் கொண்டே போகலாம்.

ஹவுஸ் ஓனர் போடும் நிபந்தனைகள் அதற்கு பயந்து வாழும் சென்னை வாசிகள் என அனைத்தையும் மிக யதார்த்தமாக சொல்லியுள்ளார் டைரக்டர்.

சென்னைக்கு வேலைத் தேடி வரும் நபர்களுக்கு இந்த படம் ஒரு பாடம். சில காட்சிகள் சோர்வை தந்தாலும் யதார்த்தம் மீறாமல் படத்தை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம்.

கடிகார மனிதர்கள்… வாடகை வீடு மனிதர்கள்

Kadikara Manithargal Movie Review and rating

மணியார் குடும்பம் விமர்சனம்

மணியார் குடும்பம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: தம்பி ராமையா, உமாபதி, மிருதுளா முரளி, பவன், ஜெயப்பிரகாஷ், சமுத்திரக்கனி, ரதாராவி, விஜய்டிவி புகழ் ராமர், பழனி, தங்கத்துரை, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி மற்றும் பலர்.
இயக்கம் – தம்பி ராமையா
ஒளிப்பதிவு – விகே. வர்மா
இசை – தம்பி ராமையா
தயாரிப்பு : தேன்மொழி

கதைக்களம்…

வேலைக்கு செல்லாமல் வீட்டில் அமர்ந்து அதிகாரம் செய்யும் ஒரு தந்தையின் அடாவடித்தனம்தான் இந்த மணியார் குடும்பம்.

தன் தாத்தா, அப்பா சேர்த்த சொத்துக்களை விற்று சாப்பிடும் அப்பா (தம்பி ராமையா) அவரை தாங்கும் மனைவி, அம்மா, மனைவியுடன் ஒட்டிக் கொண்ட தம்பி (மச்சான்), தம்பிராமையாவின் மகன் உமாபதி என ஒரே குடும்பமாக வாழ்கின்றனர்.

உமாபதிக்கு உறவுக்கார பெண் மிருதுளாவை கேட்கின்றனர். வேலை வெட்டியில்லாத பையனுக்கு பெண் தர மறுக்கிறார் ஜெயப்பிரகாஷ்.

எனவே காற்றாலை (வின்ட் மில்) தொழில் தொடங்க நினைக்கின்றனர். அதன்படி ஊரில் உள்ளவர்களை பங்குதாரர்களாக சேர்க்க, எல்லாரிடமும் பணம் வாங்குகின்றனர்.

ஆனால் அந்த பணம் கொள்ளை போகிறது. இதனால் ஊரே இந்த மணியார் குடும்பத்திற்கு எதிராக திரும்புகிறது.

அதன்பின்னர் என்ன ஆனது? பணத்தை யார் கொள்ளையடித்தார்? காற்றாலை நிறுவனம் என்ன ஆனது? உறவுக்கார பெண்ணை மணந்தாரா உமாபதி? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நடிப்பு, பாடல், இசை, இயக்கம் என பல பொறுப்புகளை தாங்கியிருக்கிறார் தம்பிராமையா.

அவருக்கே உரித்தான அப்பாவித்தனத்தில் கலக்கியிருக்கிறார் தம்பி ராமையா. இசையில் நம்மை அறியாமல் தாளம் போட வைக்கிறார்.

இவர் திடீரென திருந்துவதாக காட்சிகள் நம்பும் படியாக இல்லை. அதில் பல தத்துவங்களை பேசுகிறார்.

நாயகன் உமாபதி நடனத்தில் அவரது உயரத்திற்கு ஏற்ப உச்சம் தொடுகிறார். வளைந்து வளைந்து ஆடி நடன பிரியர்களை கவர்கிறார்.

பொறுப்பான மாமன் மகளாக மிருதுளா முரளி மிளிர்கிறார். காதலனுக்கான இவர் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் பாராட்ட வைக்கிறது.

அப்பாவி கணவருக்கு மனைவியாக ஸ்ரீரஞ்சனி கச்சிதம்.

நடிகர் பவன் காட்சிகளில் இன்னும் பலம் சேர்த்திருக்கலாம். மிரட்டல் வில்லனாக இவரையே கடைசி வரை காட்டியிருந்தால் பக்காவாக இருந்திருக்கும்.

படத்தில் பல கலைஞர்களின் நடிப்பு வீணடிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக ஜெயப்பிரகாஷ், சமுத்திரக்கனி, ரதாராவி, விஜய்டிவி புகழ் ராமர், பழனி, தங்கத்துரை, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி ஆகியோரின் கேரக்டர்கள்தான்.

தக்காளி பழமே பாடலில் வந்து ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார் யாஷிகா ஆனந்த்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தனது டைரக்சனை தொடங்கியுள்ளார் தம்பி ராமையா. அதில் தனது மகனை ஆடவைத்திருக்கிறார். நடிப்பில் இன்னும் முயற்சிகள் தேவை. செயற்கையாக இருக்கிறது.

பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தம்பி ராமையா கவர்கிறார். பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.

பாட்டி கதை ஞாயிறு… இந்த காட்சிகளை எல்லாம் நம்மை சோதிக்கிறது.

மணியார் குடும்பம்… இயக்குனர் தம்பி ராமையா தடுமாற்றம்

Maniyar Kudumbam review and rating

கஜினிகாந்த் விமர்சனம்

கஜினிகாந்த் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஆர்யா, சாயிஷா, சதீஷ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், சம்பத், நீலிமா ராணி மற்றும் பலர்.
இயக்கம் – சந்தோஷ் பி ஜெயக்குமார்
ஒளிப்பதிவு – பல்லு
இசை – பாலமுரளி பாலு
தயாரிப்பு : ஞானவேல்ராஜா

கதைக்களம்…

ஆர்யாவின் அப்பா ஆடுகளம் நரேன். அவர் ஒரு ரஜினி வெறியர். தனது மனைவியுடன் தர்மத்தின் தலைவன் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, தியேட்டரில் மனைவிக்கு பிரசவம் ஆகிறது.

ஆர்யா பிறக்கிறார். எனவே அவருக்கு ரஜினிகாந்த் என்று பெயர் வைக்கிறார்.

ஆர்யா வளர வளர, அவருடன் தர்மத்தின் தலைவன் ரஜினியை போல் மறதி நோயும் அவருடனே வளர்கிறது.

ஒரு வேலையில் ஆர்யா இருக்கும்போது மற்றொருவர் பேசினாலோ அல்லது மற்ற வேலையில் அவர் ஈடுப்பட்டாலோ முதலில் செய்த வேலையை மறந்துவிடுவார்.

அவருக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். பெண் பார்க்கும் வரும் நேரத்தில் ஏதாவது வேலை வந்தால் அந்த விசேஷத்தை மறந்துவிடுகிறார்.
இதனால் அவருக்கு திருமணம் நடைபெறாமல் இருக்கிறது.

இதனால் அவரை எல்லாரும் சார்ட் டேர்ம் மெமரி லாஸ் கஜினியை சேர்த்து கஜினிகாந்த் என அழைக்கின்றனர்.
ஒரு முறை சாயிஷாவின் அப்பா சம்பத்தை சந்திக்கிறார். இவரின் ஞாபக மறதியால் ஆர்யாவை வெறுக்க ஆரம்பிக்கிறார் சம்பத்.

இதனிடையில் சாயிஷாவை சந்திக்கிறார் ஆர்யா. இருவரும் காதல் கொள்கின்றனர்.

அதன் பின்னர் என்ன நடந்தது? காதல் கை கூடியதா? சம்பத் என்ன செய்தார்? ஆர்யாவின் மறதிக்கு விடை கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அலட்டிக் கொள்ளாத நடிப்பில் ஆர்யா ஸ்கோர் செய்கிறார். மறந்துவிடுவதும் அதனால் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளை நினைத்து அழுவதும் என ரசிக்க வைக்கிறார்.

சாயிஷாவுடன் காதல் கொண்டாலும் பாடல் காட்சிகளில் மட்டுமே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது.

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த லேட்டஸ்ட் லூசுப்பெண் சாயிஷா. எதை சொன்னாலும் நம்பி விடுகிறார். கொஞ்சி பேசும் போது கொள்ளை அழகு.

வில்லனாக மிரட்டிய ஆடுகளம் நரேன் இதில் காமெடி அதகளம் செய்திருக்கிறார். இனி இவரும் மன்சூர் அலிகான் ஆனந்த்ராஜ் போல் வந்துடுவார்.

சதீஷ் மற்றும் கருணாகரன் காமெடி சில இடங்களில் மட்டுமே ஒர்க்அவுட் ஆகிறது.

உமா பத்மநாபன், சம்பத் காளி வெங்கட், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் ரசிக்க வைத்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாலமுரளி பாலு இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கலாம். பல்லு ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை. ரசிக்க வைக்கிறது.

தனது முதல் இரண்டு அடல்ட் காமெடி படங்கள் மூலம் இளைஞர்களை கவர்ந்தவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

இந்த முறை குடும்பங்களை கவர முயற்சித்துள்ளார். இது எப்படியிருந்தாலும் இந்த படம் ஓடலேன்னா மறுபடியும் அடல்ட் பக்கம் சென்றுவிடுவார். எனவே ரசிகர்கள் கையில்தான் இப்படம் உள்ளது.

நீலிமாவுக்கு பிரசவம் வேகத்தடை காட்சிகள் எல்லாம் ரொம்ப பழசு. சம்பத்திடம் வேலை தேடி செல்லும் காட்சிகள் எல்லாம் போரடிக்கிறது.

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ஆள் மாறாட்டம் காட்சியில் கார்த்திக் கவுண்டமணி கலக்கியிருப்பார்கள்.

இதில் ஆர்யா சதீஷ்க்கு அனுபவம் போதவில்லை. ஏதோ முயற்சி செய்துள்ளனர்.

சில இடங்களில் காமெடி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

ஞாபக மறதியை வைத்து இந்த படத்தை இன்னும் நகைக்சுவையாக கொடுத்திருக்கலாம். ஒருவேளை இரட்டை அர்த்த காமெடியில்தான் டைரக்டர் கலக்குவாரோ? எனத் தெரியவில்லை.

கஜினிகாந்த்… ரஜினி-கஜினி பெயரை கெடுக்க ஒரு முயற்சி

ஜுங்கா விமர்சனம்

ஜுங்கா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஜய்சேதுபதி, சாயிஷா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், மடோனா, சுரேஷ் மேனன் மற்றும் பலர்.

இயக்கம் – கோகுல்
ஒளிப்பதிவு – டட்லி
இசை – சித்தார்த் விபின்.
தயாரிப்பு : விஜய்சேதுபதி

கதைக்களம்…

படத்தின் ஒன்லைன் சொல்ல வேண்டுமென்றால் மாணிக்கம் இதில் பாட்ஷாவாக மாறுகிறார்.

ஜுங்கா விஜய்சேதுபதியின் தன் குடும்ப வரலாறு தெரியாமல் வளர்கிறார். அவரை அப்படி வளர்க்கிறார்கள் அம்மா சரண்யா, ஜுங்கா பாட்டி.

தான் ஒரு டான் பேமிலி வம்சத்தில் இருந்து வந்தவர் என்பதால் தானும் டானாக மாற ஆசைப்படுகிறார்.

அதற்காக தன் சொத்தை அபகரித்த வில்லன் சுரேஷ் மேனனின் மகள் சாயிஷாவை கடத்த நினைக்கிறார்.

அதன்பின்னர் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

DjFJdARUcAAgaACaa

கேரக்டர்கள்…

விஜய்சேதுபதி தன் வழக்கமான பேச்சால் ரசிகர்களை ஈர்க்கிறார். ஆனால் அதுவே வினையாகிவிடுகிறது.

யோகிபாபு இல்லையென்றால் படம் மோசமான நிலையை எட்டியிருக்கும். ஜுங்காவிற்கு பலமே அவர்தான். இவருடன் டான் அம்மா மற்றும் டான் பாட்டி கவர்கிறார்கள்.

ப்ரிட்ஜில் வைத்த திராட்சையாக சாயிஷா ரசிக்க வைக்கிறார்.

படத்தின் ப்ளஸ்…

யோகிபாபு

டான் அம்மா

டான் பாட்டி

படத்தின் மைனஸ்…

விஜய்சேதுபதியின் ஓவர் பேச்சு

தேவையில்லாத பாடல்கள்

மடோனா கேரக்டர்

ராதா ரவி, சுரேஷ் மேனன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மொட்டை ராஜேந்திரனும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லை. ஆனால் பின்னணி இசை ஓகே.

டுட்லியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு.

சண்டைக் காட்சிகளில் கேமரா விளையாடியிருக்கிறது.

ஜுங்கா… நீ டான் அழவே கூடாது

More Articles
Follows