அதர்மத்தை சுளுக்கு எடுப்பான்..; சுல்தான் விமர்சனம்

அதர்மத்தை சுளுக்கு எடுப்பான்..; சுல்தான் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ படத்திற்கு பிறகு அதாவது 5 ஆண்டுகளுக்கு பிறகு பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் தான் ‘சுல்தான்’.

நடிகர்கள் : கார்த்தி, ராஷ்மிகா, நெப்போலியன், லால் யோகிபாபு, KGF கருடன் புகழ் ராமச்சந்திர ராஜு மற்றும் பலர்.
ஒளிப்பதிவு : சத்யன்
இசை : விவேக் – மெர்லின்
பிண்ணனி இசை : BGM கிங் யுவன்
இயக்கம் : பாக்யராஜ் கண்ணன்
தயாரிப்பு : ட்ரீம் வாரியர்ஸ்

கதைக்களம்…

கார்த்திக்கும் விவசாயத்துக்கும் அப்படியொரு கனெக்சனுக்கு எப்போதுமே உண்டு.. அதை மையப்படுத்தி கொஞ்சம் ரவுடியிசம் கலந்து கொடுத்துள்ளார் பாக்யராஜ் கண்ணன்.

கார்த்தி (சுல்தான்) அப்பா நெப்போலியன். இவர் ஒரு மாபெரும் ரௌடி கூட்டத்தின் தலைவர்.

அம்மாவை இழந்தவர் கார்த்தி. மும்பையில் ரோபோட்டிக்ஸ் என்ஜினியராக இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் போலீஸ் நடத்திய என்கவுன்டரில் நெப்போலியன் மரணிக்கிறார்.

ஒரு கிராமத்தினருக்கு அப்பா கொடுத்த வாக்கை காப்பாற்றவும் அந்த 100 ரவுடிகளின் கேங்கை காப்பாற்றவும் வருகிறார் கார்த்தி.

ஆனால் அடியாட்கள் போல பயன்படுத்தாமல் அவர்களை நல்வழிப்படுத்த நினைக்கிறார் கார்த்தி.

ஆனாலும் அவருக்கு கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம் விவசாய பிரச்சினை வருகிறது.

மோசமான ரவுடியிடம் (கே.ஜி.எஃப். படம் புகழ் ராம்) இருந்து தங்கள் நிலத்தை காக்குமாறு விவசாயிகள் சுல்தானிடம் கேட்கின்றனர்.

அதன் பின் கார்த்தி என்ன செய்தார்.? என்ன நடந்தது என்பதே மீதிக்கதை கதை.

கேரக்டர்கள்…

கமர்ஷியல் படங்களில் உள்ள மாஸ் ஹீரோக்கள் செய்யும் அனைத்தையும் செய்திருக்கிறார் கார்த்தி.. ஆக்சன் காட்சிகளில் அசத்தல்.

ருக்மணி (ராஷ்மிகா) இடையேயான காதல் காட்சிகள் சிறப்பு. ரஷ்மிகா காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தாலும் நிறைய காட்சிகள் இல்லை. ராஷ்மிகா ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

யோகி பாபு, சென்ராயன் காமெடி ஆங்காங்கே நம்மை சிரிக்க வைக்கிறது.

நெப்போலியன் & லால், அபிராமி காட்சிகள் கச்சிதம். பொன்வண்ணன், ரமா, சிங்கம்புலி, மயில்சாமி, மாரிமுத்து ஆகியோரும் உண்டு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தின் பெரிய பலம். சுல்தானுக்கு சரியான பில்டப் கொடுத்து வெறியேத்துகிறார்.

ஒளிப்பதிவில் குறைவில்லை. எடிட்டர் தான் நம்மை சோதிக்கிறார்.

ரவுடியிசம், விவசாயம், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்து ஒரு பக்கா மசாலா படத்தை கொடுத்திருக்கிறார் டைரக்டர் பாக்யராஜ்.

முதல் பாதியும் இடைவேளையும் ரசிகர்களை வெகுவாக கவரும்.

இரண்டாம் பாதி படம் மிகவும் நீளம். அதை குறைத்திருக்கலாம்.

விவசாயம் என்ற வாழ்வாதாரத்தை இன்றைய இளைஞர்களும் புரியும்படி தந்துள்ளார்.

ஆக…. விவசாயத்தை அழிக்க வரும் கார்ப்பரேட்டுகளை நிச்சயம் சுளுக்கு எடுப்பான் சுல்தான்.

Karthi in Sulthan Movie review in Tamil

காடு இல்லேன்னா நாடு இல்ல..; காடன் விமர்சனம்

காடு இல்லேன்னா நாடு இல்ல..; காடன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – ராணா டகுபதி, விஷ்ணு விஷால், ஜோயா ஹுசைன்
இயக்கம் – பிரபு சாலமன்
இசை – ஷாந்தனு மொய்த்ரா
தயாரிப்பு – ஈராஸ் மோஷன் பிக்சர்ஸ்

கதைக்கரு…

அசாமின் மாநிலத்தில் நடந்த உண்மைச் சம்பவமே ‘காடன்’.

அங்கு பாரஸ்ட் மேன் ஆப் இந்தியா என்றழைக்கப்பட்ட ஜாதவ் பாயன்ங் என்பவர் சுமார் 1200 ஏக்கர் பரப்பளவிற்கு மரங்களை நட்டு பெரிய காட்டை உருவாக்கினார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கதைக்களம்…

கோவை அருகே உள்ள காட்டுப் பகுதியில் லட்சம் மரங்களை நட்டு, அங்குள்ள யானைகள் உள்ளிட்ட மிருகங்களுக்கும் காவலனாக இருக்கிறார் காடன் (வீரபாரதி) ராணா டகுபதி.

அந்த இடத்தில் ஒரு ரிஷார்ட் டவுன்ஷிப்பை உருவாக்க முயற்சிக்கிறார் மத்திய அமைச்சர்.

எனவே அதை எதிர்த்து தடை வாங்குகிறார் காடன்.

இதனால் கோபம் அடையும் அமைச்சர் அவர் மீது வீண் பழி சுமத்தி சிறையில் அடைக்கிறார்.

அவர்கள் சிறையிலிருந்து வருவதற்குள் யானைகள் செல்லும் வழியை தடுத்து 60 கிலோ மீட்டருக்கு காம்பவுண்டு சுவரைக் கட்டி விடுகிறார்கள்.

ஜெயிலிருந்து காட்டுக்கு திரும்பும் காடன் மீண்டும் போராடுகிறார்.

அதன்பின் என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

காடன் கேரக்டரை உணர்ந்து
உடல் மொழியிலும் வெளிப்படுத்தியிருக்கிறார் ராணா.

தன்னுடைய வித்தியாசமான நடிப்பில் மிரள வைக்கிறார்.

கும்கி யானை பாகனாக விஷ்ணு விஷால். இவரின் கேரக்டர் கொஞ்ச நேரமே என்றாலும் அவருக்கும் நமக்கும் மறக்க முடியாத கேரக்டர்.

விஷ்ணு விஷால் இரண்டாம் பாதியிலும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

விஷ்ணு விஷால் மற்றும் ராணா டகுபதியை தவிர மற்ற நடிகர்கள் அனைவரும் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

ஜோயா ஹுசைன் & ஸ்ரியா பில்காவ்ன்கர் என படத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனர். ஆனால் பெரிதாக கவரவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

வனப்பகுதியின் அழகை அப்படியே தாரை வார்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.அசோக்குமார்.

யானைகள் மற்றும் காடுகளின் அழகுகளை மிக நேர்த்தியாகவும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் ஒலிக்கலவையும் சிறப்பு.

கோவையில் நடக்கும் கதை போல காண்பிக்கப்படுகிறது. ஆனால்

கோவை மாவட்டம் என்கின்றனர். இருந்தாலும் படத்தில் வரும் சில காட்சிகள் வட இந்தியாவில் காட்சிகளை படமாக்கியது தெரிகிறது. போலீஸ் அதிகாரிகள் உடை கூட அப்படித்தான்.

காட்டின் நலன் குறித்த கதையை அழகாக சொல்லியிருக்கிறார் பிரபு சாலமன். கிளைமாக்ஸில் காட்டை அழித்தல் நமக்கேது வாழ்வு என அறிவுரை வழங்கியிருக்கிறார் இயக்குனர்.

ஆக… காடு இல்லேன்னா நாடு இல்ல..

எங்களின் செய்திகளை உடனுக்குடன் Telegram ஆப்பில் பெற https://t.me/s/filmistreet

Kaadan movie review and rating in Tamil

அன்பே இனிது…; அன்பிற்கினியாள் விமர்சனம் 3.25/5

அன்பே இனிது…; அன்பிற்கினியாள் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

கோகுல் இயக்கத்தில் அருண் பாண்டியன், பிரவீன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘ஹெலன்’ என்ற மலையாள படத்தை மகளுக்காக தமிழில் மறுஉருவாக்கம் செய்திருக்கிறார் அருண் பாண்டியன்.

*எல்ஐசி ஏஜன்ட் அருண் பாண்டியன். இவரின் மகள் கீர்த்தி பாண்டியன்.

வெளிநாட்டுக்கு சென்று நிறைய சம்பாதித்து அப்பாவின் கடனை அடைக்க நினைக்கிறார்.

கனடா வாய்ப்பு வரும் வரை (நர்சிங் படித்திருந்தாலும்) ஒரு மாலில் உள்ள ரெஸ்டாரென்டில் வேலை செய்கிறார்.

கனடாவுக்குச் செல்ல IELTS தேர்வும் எழுதி அதில் தேர்ச்சியும் பெறுகிறார்.

ஒருநாள் கீர்த்தி பிரவீன் என்பவரை காதலிக்கும் விஷயம் அருண் பாண்டியனுக்கு தெரிய வருகிறது.

இதனால், கீர்த்தியுடன் பேசாமல் இருக்கிறார் அருண் பாண்டியன்.

ஒரு கட்டத்தில் அவரது ரெஸ்டாரென்டில் உள்ள சிக்கன்களை வைக்கும் ப்ரீசர் ரூமுக்கு செல்ல மற்றொரு ஊழியர் இவர் உள்ளே இருப்பது தெரியாமல் ப்ரீசரை மூடி செல்கிறார்.

மகளைக் காணாமல் அப்பா மற்றும் கீர்த்தியின் காதலன் ஆகியோர் காவல் நிலையம் செல்கின்றனர்.

இறுதியில் கீர்த்தி கிடைத்தாரா? போலீஸ் என்ன செய்தனர்.? காதலை ஏற்றுக் கொண்டாரா அருண்பாண்டியன்? கனடாவிற்கு சென்று அப்பாவின் கடனை அடைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கலைஞர்கள்…

கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் தன் மகளுக்காக ரீ-என்ட்ரீ கொடுத்துள்ளார் அருண் பாண்டியன்.

இதுவரை ஆக்சன் பாத்திரங்களில் மட்டுமே இவரை பார்த்துள்ளோம்.

இதில் மகள் மீது அன்பை பொழியும் அப்பாவாக அருணாக வாழ்ந்துள்ளார்.

அவரது குரலில் அதே கம்பீரம் இப்போது உள்ளது. இவர் போலீஸ் ஸ்டேசனில் கெஞ்சினாலும் மிரட்டலாகவே உள்ளது.

கீர்த்தி பாண்டியன் இதற்கு முன் ‘தும்பா’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

அப்பாவிற்கு மிகையான நடிப்பை கொடுத்துள்ளார் கீர்த்தி பாண்டியன்.

குடும்ப கடனை அடைக்க முயலும் பொறுப்பான மகளாகவும், அப்பாவின் சிகரெட் பழக்கத்தை கண்டிக்கும் யதார்த்த பெண்ணாகவும் நம்மை கவர்கிறார்.

உறைய வைக்கும் குளிர் ப்ரீசர் காட்சியில் ரசிகர்களின் அனுதாபத்தை அள்ளிவிடுவார்.

கீர்த்தியின் காதலன் பிரவீன் புதுமுகம் என்றாலும் தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்.

உண்மையாக நேசித்த காதலியே முக்கியம் என்று வேலையை விட்டு விட்டு வரும் பிரவீன் நிச்சயம் காதலிக்கும் இளம் பெண்களை கவருவார்.

இயக்குநர் கோகுலும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஜெயராஜ் கோலிக்கோடு, அடிநாட் சசி, பூபதி ராஜா ஆகியோரும் தங்கள் பத்திரங்களை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

திமிர் பிடித்த சப் இன்ஸ்பெக்டர் ரவீந்திர விஜய் என்பவர் ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ப்ரீசர் அறைக்குள்தான் பாதி படம் என்பதால் அதை போரடிக்காமல் சரியாக செய்துள்ளனர்.

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு காட்சிகளுடன் உறைய வைக்கிறது.

ஜாவித் ரியாஸின் இசை படத்திற்கு தேவையான அளவுக்கு விறுவிறுப்பு சேர்த்துள்ளது.

ரீமேக் என்றாலும் திரைக்கதை தமிழக ரசிகர்கள் ரசிக்கும் படி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கோகுல்.

இரண்டாம் பாதியில் சில காட்சிகள் நம்மை இருக்கை நுனியில் அமரவைக்கும்.

ஆக… அன்பிற்கினியாள்… அன்பே இனிது

Anbirkiniyal movie review and rating in Tamil

பேய்கள் மரிப்பதில்லை.. ; நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்

பேய்கள் மரிப்பதில்லை.. ; நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பல தடைகளை தாண்டி 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று செல்வராகவனின் பிறந்த நாளில் படம் வெளியாகியுள்ளது.

*ஒரு பணக்கார தம்பதி எஸ்ஜே சூர்யா & மனைவி நந்திதா ஸ்வேதா. இவர்களுக்கு ஒரு குட்டி மகன்.

இவர்கள் காட்டு பங்களாவில் நான்கு வேலைக்காரர்களுடன் வசிக்கின்றனர்.

இவர்களின் செல்ல மகனைப் பார்த்துக் கொள்ள பராமரிக்க வேலையில் சேருகிறார் ரெஜினா கெசன்ட்ரா.

இங்கு கிடைக்கும் சம்பளம் மூலம், தான் சிறுவயது முதல் வளர்ந்த ஆசிரமத்திற்கு உதவ நினைக்கிறார் ரெஜினா.

நிறைய பணம்.. கொஞ்சம் சைக்கோ… கொஞ்சம் காமம் கலந்த குணம் கொண்ட சூர்யாவிற்கு ரெஜினா மீது ஆசை.

எனவே மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் ரெஜினாவை பாலியல் பலாத்காரம் செய்து , கொல்கிறார்.

(பின்னர் என்ன… வழக்கமான பேய் கதை தான். இதை விட பெரிதாக பேய் கதையில் என்ன இருந்து விடப் போகிறது..?)

ரெஜினா பேய் அவர்களை எப்படி பழி தீர்த்து கொல்கிறது என்பதுதான் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

இந்த படத்தின் ஹீரோ & வில்லன் என இரண்டையும் கலந்தே செய்துள்ளார்.

ராமசாமி என்று சொன்னால் பிடிக்காது… அதனால் ராம்சே என்கிறார் சூர்யா. அந்த ராம்சே கேரக்டரை பலமாக உருவாக்கியுள்ளனர்.

இப்படியெல்லாம் கூட மனுசங்க இருப்பாங்களா? என யோசிக்க வைக்கும் அளவுக்கு வெளுத்து கட்டியிருக்கிறார் ராம்சே.

அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான அன்பிற்கினியாள் பட விமர்சனம் (3.25/5)

ரெஜினா கசன்ட்ரா & நந்திதா இருவரும் இதற்கு முன் பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளனர்.
அந்த படங்களை விட அவர்களின் இந்த படத்தை நம் நெஞ்சம் மறப்பதில்லை

தொழில்நுட்ப கலைஞர்கள்…

செல்வராகவன் படம் என்றாலே யுவன் ராஜ்யம்தான். இவர்களுக்குள் உள்ள கெமிஸ்ட்ரி இந்த முறையும் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

யுவனின் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டத்தை கொடுத்துள்ளது.

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் திகிலூட்டுகின்றன.

வழக்கமான கதை என்றாலும் அதை உருவாக்கிய விதம் ரசிக்க வைக்கிறது. ஆனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு 2ஆம் பாதியில் மிஸ்ஸிங்.

பேய் படம் என்றாலே வேறு கதைகளை வைக்கவே முடியாதா? இல்லை தமிழ் இயக்குனர்களுக்கு வேறு கதை தெரியலையா? என்பதே செல்வராகவனின் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

பேய் படங்களை கொஞ்சம் காலம் பார்க்காமல் இருந்தவர்கள் இதை பார்த்து நெஞ்சத்தை தேற்றிக் கொள்ளலாம்.

Nenjam Marappathillai movie review and rating in Tamil

விஷாலின் ஆக்‌ஷன் அல்வா..; சக்ரா விமர்சனம்

விஷாலின் ஆக்‌ஷன் அல்வா..; சக்ரா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பு – விஷால், ரோபோ சங்கர், கே ஆர் விஜயா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா
இயக்கம் – எம்.எஸ்.ஆனந்தன்
இசை – யுவன்ஷங்கர் ராஜா
தயாரிப்பு – விஷால் பிலிம் பேக்டரி

கதைக்களம்..

ஆகஸ்ட் 15… சுதந்திர தினத்தன்று சென்னையில் முதியவர்கள் வசிக்கும் 50 வீடுகளில் ஒரே நாளில் திட்டமிடப்பட்டு கொள்ளை நடக்கிறது.

கொள்ளையர்கள் விஷாலின் அப்பா பெற்ற சக்ரா விருதையும் கொள்ளை அடிக்கின்றனர்.

விஷாலின் குடும்பமே நாட்டிற்காக உயிர் வாழ்பவர்கள்.

இவரின் தாத்தா, தந்தை ராணுவத்தில் பணிபுரிந்து உயிர்தியாகம் செய்தவர்கள். எனவே விஷாலும் ராணுவத்தில் இணைந்து தாய் நாட்டிற்காக பணியாற்றி வருகிறார்.

விஷாலின் தந்தையான நாசர் இந்திய அரசால் அசோக சக்ரா விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர்.

இந்த கொள்ளை வழக்கை விசாரிக்க வருகிறார் விஷாலின் காதலியான ஏ எஸ் பியான ஷ்ரதா ஸ்ரீநாத்.

தன் காதலிக்காகவும் தன் தந்தைக்காகவும் விஷாலும் இந்த வழக்கில் நுழைகிறார்.

கொள்ளையர்கள் யார் என்பதை விஷால் & ஷ்ரத்தா கண்டுபிடித்தார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கலைஞர்கள்…

ஆக்‌ஷன் கதை என்றாலே விஷாலுக்கு அல்வா சாப்பிடுவது போல.. அவரது உயரத்திற்கு ஏற்ப மிலிட்டரி ஆபீசர் கேரக்டர் செம பிஃட்.

இன்வஸ்டிகேஷன், ஆக்‌ஷன் என இரண்டிலும் முறுக்குத்தனம் காட்டியிருக்கிறார்.

ஷ்ரதா ஸ்ரீநாத், போலீஸ் அதிகாரியாக தோன்றி அசர வைத்திருக்கிறார். இவர் செய்ய வேண்டிய பாதி வேலைகளை விஷாலே செய்துவிடுவதால் இவருக்கு பெரிதாக வேலையில்லை.

காமெடி பெயரில் சங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறார் ரோபோ சங்கர். கமிஷனர் எதிரிலேயே அவரை பற்றித் தப்பாக பேச முடியுமா?

ரெஜினா கேஸண்ட்ரா முக்கியமான கேரக்டரில் லேட்டாக வருகிறார். வில்லத்தனத்தை கொஞ்சம் காட்டியிருக்கிறார்.

மனோ பாலா & ஸ்ருஷ்டி டாங்கே வருகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு (விஷாலின் பாட்டியாக) வருகிறார் கேஆர் விஜயா.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பின்னனி இசையில் யுவன் குறை வைக்கவில்லை. படத்தில் ஒரே ஒரு பாடல்தான் என்பதால் கொஞ்சம் ஆறுதலும் கிடைக்கிறது.

பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவில் வேகத்தை கலந்து கொடுத்துள்ளார்.

டிஜிட்டல் முறைகேடுகளை முன்வைத்து நமக்கு நிறைய விழிப்புணர்வை எடுத்துள்ளார் இயக்குனர் ஆனந்தன்.

மேலும் சில சமூக வலைத்தளங்களில் நம் தனிப்பட்ட தகவல்களை கொடுத்தால் எப்படியெல்லாம் சிக்குவோம் என்பதை அப்பட்டமாக சொல்லியுள்ளார் ஆனந்தன்.

கிளைமாக்ஸ் காட்சியில் டாக்டரிடம் ரெஜினா பேசும் வசனங்கள் தாங்கல.. பல காட்சிகளில் செயற்கையான நாடகத்தன்மை இருப்பதால் ரசிக்க முடியவில்லை.

ஆக… ‘சக்ரா’… விஷாலின் ஆக்‌ஷன் அல்வா

Vishal’s Chakra movie review and rating in Tamil

கல்வியா.? காதலா.?.; கமலி FROM நடுக்காவேரி விமர்சனம்

கல்வியா.? காதலா.?.; கமலி FROM நடுக்காவேரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தஞ்சாவூர் மாவட்ட நடுக்காவேரி என்றொரு கிராமத்தில் படிக்கும் மாணவி கமலி (கயல் ஆனந்தி).

இவர் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது 12 தேர்வில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்த ஒரு மாணவனை அஸ்வினை (ரோஹித் சராப்) டிவி-யில்பார்த்து காதல் கொள்கிறார்.

அந்த மாணவனை சந்திக்க வேண்டும், காதலிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் அஸ்வின் சேர்ந்த சென்னை ஐஐடி’யில் சேர விரும்புகிறார்.

அதற்காக, பிரதாப் போ
த்தனிடம் டியூசன் கற்று நன்றாக படித்து, நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெறுகிறார்.

ஆனால் கமலியின் தந்தை அழகம் பெருமாளுக்கு மகளை யாருக்காவது திருமணம் செய்து கொடுத்தால் போதும் என்று நினைப்பவர்.

ஒரு வழியாக ஐஐடியில் சேர்ந்த கமலி… காதலில் வென்றாரா? கல்வியில் வென்றாரா..? இரண்டிலும் வென்றாரா? என்பதே மீதிக்கதை.

கலைஞர்கள்...

பள்ளி மாணவியானாலும் கல்லூரி மாணவியானாலும் நன்றாக பொருந்தும் முகம் கயல் ஆனந்தி… தன் கேரக்டரை உணர்ந்து அதற்கு உயிரூட்டியிருக்கிறார..

கல்வி, காதல், சோகம், விரக்தி, என பன்முக பாவனைகளில் கலக்கியிருக்கிறார்.

டியூசன் மாஸ்டர் பிரதாப் போத்தன் நல்ல நடிப்பு.

நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு அவர் கொடுக்கும் டிப்ஸ் படிக்கும் எல்லாம் மாணவர்களுக்கு பயன்தரும்.

கமலின் தோழியாக வரும் ஸ்ரீஜாவின் நடிப்பு யதார்த்தம்.

இவர்களுடன் அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், அபிதா வெங்கட் ஆகியோரும் நல்ல தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தீன தயாளனின் இசை கதையோடு பயணிக்கிறது.

ஜெகதீசனின் ஒளிப்பதிவு கலர்புல். நடுக்காவேரி கொள்ளை அழகை கொடுத்து இருக்கிறார்.

இயக்குனர் ராஜசேகர் துரைசாமியை நன்றாகவே பாராட்டலாம்.

பெற்றோர் கஷ்டப்பட்டு படிக்க வைத்தால் கல்வியை கவனிக்காமல் காதலை கவனிக்கும் சிலருக்கு இந்த படம் ஒரு பாடம்.

கல்வியா? காதலா..? என தவிக்கும் இளம்பெண் கமலி எடுக்கும் முடிவு மாணவ, மாணவிகளுக்கு நல்லதொரு பாடத்தை கொடுக்கும்.

அடுத்து என்ன நடக்கும் என்பதை சில இடங்களில் கணிக்க முடிவது படத்தின் மைனஸ்.

ஆக… கல்வியா.? காதலா.?.; கமலி FROM நடுக்காவேரி

Kamali from Nadukaveri movie review in Tamil

More Articles
Follows