தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
MLA சத்யராஜ் & சீதா தம்பதிகள். இவர்களுக்கு ஒரு மகள் (ஜோதிகா) ஒரு மகன்.
இவர்களின் மகன் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடி போய்விடுகிறார். தன் தம்பிக்காக 15 வருடங்கள் காத்திருக்கிறார் ஜோ. தன் தம்பி வரும்வரை திருமணம் செய்துக் கொள்ளாமலும் இருக்கிறார்.
இந்த நிலையில் கோவாவில் அடிப்பட்ட பிராடு கார்த்தியை உங்கள் மகன் கிடைத்துவிட்டான் என சொல்கிறார் போலீஸ் இளவரசு.
சத்யராஜீம் இவன் என் மகன் தான் என வீட்டிற்கு அழைத்து வருகிறார். ஆனால் கார்த்தி ஒரு திருடன் என்பது பாட்டி சௌகார் ஜானகிக்கு மட்டும் தெரிந்து விடுகிறது. ஆனால் இவரால் பேசவும் முடியாது. காதும் கேட்காது.
கார்த்தி வீட்டிற்குள் நுழைந்த பின் என்ன ஆனது? திருடன் என தெரிந்தும் கார்த்தியை சத்யராஜ்க்கு வீட்டுக்கு இளவரசு அனுப்பியது ஏன்? ஜோதிகா என்ன செய்தார்? கார்த்தி அங்கேயே தங்கினாரா? என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்கள்..
வீட்டில் கார்த்தி நுழைந்த பின் ஒவ்வொரு நபரையும் அவர்கள் யார்? என தெரிந்துக் கொள்ள அவர் செய்யும் முகபாவனைகள் சூப்பர். ஜோதிகாவின் பாசத்துக்காக ஏங்கும் காட்சிகளில் தம்பியாக ஜொலிக்கிறார். ஒரு பைட் தான் என்றாலும் சூக்சன் காட்சி ஓகே.
எப்போதும் ஜோதிகாவுடன் ஒட்டிக் கொள்ளும் குறும்பு புன்னகை இதில் மிஸ்ஸிங். ராட்சசி பட பிரின்ஸ்பால் போல இருக்கிறார். அதற்கு காரணம் க்ளைமாக்ஸில் உள்ளது. மற்றபடி கொடுத்த கேரக்டரில் குறையில்லை.
இவரது டியூசன் மாணவராக வரும் குட்டி பையன் அஸ்வத் நம் எல்லாரையும் கவர்ந்து விடுகிறான். சூப்பர் டா குட்டா. அதுபோல் அவனின் முடிவு யாரும் எதிர்பாராத ஒன்று.
நீண்ட நாளைக்கு பிறகு அரசியல்வாதியாக வில்லத்தனம் காட்டியிருக்கிறார் சத்யராஜ். சபாஷ் சார். அழகான அன்பான அம்மா சீதா.
வீல் சேரில் வந்தாலும் சௌகார் ஜானகி கேரக்டரில் நிற்கிறார். நாயகி நிகிலா விமல். படத்திற்கு நாயகி வேண்டும் என்கிற அளவில் மட்டுமே நிற்கிறார்.
சின்ன வயது ஜோதிகாவாக அம்மு அபிராமி நடித்துள்ளார். சில காட்சிகள் என்றாலும் நிறைவான நடிப்பு.
இளவரசு, கம்பீரமான போலீஸ் ஆன்சன் பால், பாலா, ஹரிஷ் பெராடி ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
கோவிந்த வசந்தா இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. முக்கியமாக பட ட்விஸ்ட் வேகத்தை பாடல்கள் குறைக்கிறது. பின்னணி இசை கவர்கிறது.
படத்தின் ஆரம்ப காட்சியில் 4 லாரிகள் நிற்பதும் அதனை கேமரா படம் பிடித்த விதமும் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் ஆர்.டி ராஜசேகர் பணியில் எந்த குறையும் இல்லை.
எடிட்டர் வினாயக் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட் இருந்தாலும் ஆமை வேக திரைக்கதை தான் மைனஸ்.
மலையாளத்தில் த்ரிஷ்யம் தமிழில் பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். எதிர்பாராத ட்விஸ்ட்டுக்களுடன் ஒரு குடும்ப கதையை கொடுத்துள்ளார்.
க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பாபநாசம் படத்தை நினைவுப்படுத்துகிறது.
கார்த்திக்கு அந்த வீட்டில் நடந்த சில பிரச்சினைகள் தெரிய வருகிறது. ஆனால் அது எப்படி? என்பதை சொல்லாமல் விட்டு விட்டார். மற்றபடி இந்த கிறிஸ்மஸ் விடுமுறைக்கு ஏற்ற குடும்ப படம் இது.
ஆக மொத்தம் இந்த தம்பி… ட்விஸ்ட் ப்ரோ..