கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்

கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சூரி, ஸ்ரீமன், சௌந்தரராஜா, இளவரசு, யுவராணி, பானுப்ரியா, விஜி சந்திரசேகர் மற்றும் பலர்.
இயக்கம் – பாண்டிராஜ்
ஒளிப்பதிவு – வேல்ராஜ்
இசை – இமான்
எடிட்டர் – ரூபன்
தயாரிப்பு – 2டி எண்டர்டெயின்மெண்ட் சூர்யா
பிஆர்ஓ. – ஜான்சன்

கதைக்களம்…

குடும்பத் தலைவர் சத்யராஜ். பெண் குழந்தைகளாகவே பிறப்பதால் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கிறார். எனவே 2வது மனைவியாக பானுப்ரியா வருகிறார்.

அதற்குள் இந்த தம்பதிக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்துவிடுகிறது. இறுதியாக கடைக்குட்டி சிங்கமாக கார்த்தி பிறக்கிறார்.

இவர் படிக்கவில்லை. ஆனால் விவசாயம் மூலம் நல்ல வருமானம் பார்த்து தன் பெரிய குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்கிறார்.

சத்யராஜின் 5 மகள்களில் ஒருவரின் மகன்தான் சூரி. ஒருவருக்கு குழந்தையே இல்லை. மற்ற 3 மகள்களுக்கும் பெண் குழந்தை பிறக்கிறது.

சில வருடங்களுக்கு பிறகு இருவருக்கு வயதுக்கு வந்த மகள்கள் இருக்கிறார்கள். ஒருவர் பிரியா பவானி சங்கர். மற்றொருவர் அர்த்தா பினு.

இவர்கள் இருவரும் தாய்மாமன் கார்த்தியை மணக்க ஆசைப்படுகிறார்கள்.

ஆனால் அக்கா மகள்களை மணக்க விருப்பமில்லாமல் நாயகி சாயிஷாவை காதலிக்கிறார். அவரும் இவரை காதலிக்கிறார்.

அக்கா மகளை மணக்க கார்த்தி சம்மதிக்கவில்லை என்பதால் இந்த பெரிய குடும்பத்தில் பிரச்சினை வெடிக்கிறது.
இறுதியில் கார்த்தி என்ன முடிவு செய்தார்? குடும்ப பிரச்சினையை எப்படி முடிவுக்கு கொண்டு வந்தார்? யாரை திருமணம் செய்தார்?

கேரக்டர்கள்…

விவசாயி கேரக்டருக்கு கார்த்திக் செம கச்சிதம். முதல் காட்சியிலே ரேஸில் கலந்துக் கொண்டு தன் அண்ணன் சூர்யாவுடன் நடித்து விட்டார்.

தன் வெற்றிக்கு காரணமான இரண்டு காளைக்கும் சூர்யாவிடம் மாலை இடச் சொல்வது கைத்தட்டலை அள்ளுகிறது.

சென்டிமெண்ட் போல ஆக்க்ஷனிலும் அதிரடி காட்டியுள்ளார் கார்த்தி.

ஊருக்கே சோறு போடும் விவசாயியும் கடவுளை போல ஒரு படைப்பாளிதான் என அவர் பேசும் வசனங்களுக்கு விசில் பறக்கிறது.

தான் தோளில் வளர்த்த அக்கா மகளை எப்படி மனைவியாக்கி கட்டி அணைத்து கொள்வது? என கார்த்தி கேட்கும்போது அக்கா மகளை மணந்த பலருக்கு உறுத்தலாக அமையும்.

கூட்டுக் குடும்பமாக வாழ நினைப்பது, குழந்தையில்லாத அக்காளுக்கு மகனாக வாழ்வது என கார்த்தி ஸ்கோர் செய்கிறார்.

சூரியும் அவ்வப்போது கலகலப்பு கொடுத்து கார்த்திக்கு ஈடு கொடுக்கிறார்.

என்ன ஆனாலும் தன் குடும்பம் பிரிந்து விடக்கூடாது என குறியாக இருக்கும் சத்யராஜ் கேரக்டர் சூப்பர். தன் மாப்பிள்ளை இவரை அவமானப்படுத்தும் போது தன் மகள்களுக்காக பொருத்துக் கொள்வதில் மாமனாரின் மனது தெரிகிறது.

பிரியா பவானி சங்கர், அர்த்தனா ஆகியோரை பார்க்கும் போது பலருக்கும் தங்கள் அத்தை மகள்கள் நினைவில் நிச்சயம் வந்து செல்வார்கள். இருவரின் நடிப்பும் அவர்களை போல செம க்யூட்.

இவர்களுடன் பானுப்ரியா, விஜி, கார்த்தியின் 5 அக்காஸ் அவர்களின் புருசர்கள் என அனைவரும் கச்சிதம். எந்த கேரக்டரையும் டம்மியாக்காமல் எல்லாருக்கும் சம பங்களிப்பு கொடுத்துள்ளார்.

வில்லனாக வரும் சந்துரு (படத்தில் கொடியரசு) செம மிரட்டல். இவருக்கு டப்பிங் கொடுத்துள்ள ஆர்.கே.சுரேஷின் வாய்ஸ் அசத்தல்.

ஜான்விஜய், பொன் வண்ணன், சௌந்தரராஜா ஆகியோரும் மனதில் நிற்கிறார்கள்.

படத்தில் எல்லா கேரக்டர்களுக்கும் அழகான தமிழ் பெயர் சூட்டியிருப்பது படக்குழுவினரின் தமிழ் பற்று தெரிகிறது. (இதன் தெலுங்கு டப்பிங்கில் எப்படி எனத் தெரியவில்லை)

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் பாடல்கள் படத்துடன் ஒன்றிச் செல்வது சிறப்பு. சண்டக்காரி, செங்கதிரே பாடல்கள் ரசிக்கலாம்.
வேல்ராஜின் ஒளிப்பதிவும் சூப்பர் சுப்பராயனின் சண்டையும் படத்திற்கு வலு சேர்கிறது.

பாண்டிராஜ் இயக்கம் பற்றிய அலசல்…

தங்கள் மகளுக்கு தாய் மாமனை மணக்கும் ஆசை இருக்குமா? என்பதை எண்ணி பிள்ளைகளை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும் எனவும் ஒரு அட்வைஸ் செய்துள்ளார் டைரக்டர்.

அக்காக்களுடன் பிறந்த எல்லா தம்பிகளுக்கும் இந்த படத்தை அர்ப்பணிக்கலாம். தினம் உணவருந்தும் நாம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்.

படத்தின் எல்லா கேரக்டர்களும் கச்சிதம் இருந்தாலும் படத்துடன் ஒன்றாத ஒரே கேரக்டர் சாயிஷா தான். இவரது முகம் இந்த கிராமத்து காவியத்திற்கு பொருந்தவேயில்லை.

புகழ்பெற்ற இளம் புது ஹீரோயின் என பார்க்காமல் படத்திற்கு இவர் பொருந்துவாரா? என்பதை டைரக்டர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இந்த பீட்சா, பர்கர் காலத்துக்கு இது செட்டாகுமா? என யோசிக்காமல், செட்டாகும் வகையில் ஒரு பக்கா கதையை கொடுத்துள்ளார் பாண்டிராஜ்.

நாம் சோறு சாப்பிடும் வரை எந்த காலத்துக்கும் விவசாய குடும்பக் கதை செட்டாகும் என உறுதியுடன் நம்பி களமிறங்கியுள்ளார் தயாரிப்பாளர் சூர்யா.

கடைக்குட்டி சிங்கம்… கர்ஜிக்கும் விவசாய கடவுள்

தமிழ்ப்படம் 2 விமர்சனம்

தமிழ்ப்படம் 2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

இப்படத்தின் கதை… ஏம்ப்பா.. இதுக்கு எல்லாம் கதை இருக்கா? என்ன? அது டைரக்டருக்கே தெரியாது.

தமிழ் சினிமாவின் நாம் ரசித்த காட்சிகளையும் வெறுத்த காட்சிகளையும் இதில் தொகுத்து உள்ளனர்.

பல லொள்ளு சபாக்களின் கிண்டலே இதன் பாணி.

முதல் பாகத்தில் டி என்ற வில்லனை தேடி செல்லும் சிவா இந்த முறை வில்லன் பி யை தேடி செல்கின்றார்.

அந்த பி யை சிவா பிடித்தாரா? என்பதை எப்படி எல்லாம் கலாய்க்கும் படி செய்ய முடியுமோ அப்படி செய்துள்ளார் சி.எஸ்.அமுதன்.

Dhv8PEdUYAINkGu

கேரக்டர்கள்…

தமிழ் சினிமாவின் எல்லா ஹீரோக்களையும் சேர்த்து அகில உலக சூப்பர் ஸ்டார் என பட்டப் பெயருடன் வந்துள்ளார் சிவா.

டைட்டில் கார்ட்டிலேயே ரஜினி லோகோவுடன் சிவா பெயர் வருகிறது.

படம் முழுவதுமே இவர் ஒருத்தர் தான் எனலாம்.

ஓபிஎஸ், சின்னம்மா சசிகலா முதல் தமிழிசை, எச் ராஜா வரை அரசியல்வாதிகளையும் கலாய்த்துள்ளார்.

சிவா பேசினால் ஏன் பார்த்தால் கூட ஆடியன்ஸ் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

கலாய்ப்பது தான் கான்செப் என்பதால் நோ லாஜிக்.

மற்றபடி சிவா முகத்தில் எந்தவித ரியாக்சனும் வேறு மாதிரியாக இல்லை. ஒரே மாதிரிதான். ஓவர் ரியாக்சன் என்றால் முகத்தை மூடிக்கொள்கிறார்.

சதீஷ் கேரக்டர் செம. 2.0 அக்‌ஷய்குமார் கெட்டப்பெல்லாம் போட்டு கலாய்த்து விட்டார். நல்ல வேளை அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகலை. இல்லேன்னா இன்னும் நிறைய காட்சிகள் இருக்கும் போல.

போய் புள்ள குட்டிய படிக்க வைங்கடா…ஆனா இன் ஜினியரிங் மட்டும் படிக்க வைக்க வேண்டாம் என்ற வசனத்திற்கு பயங்கர கைத்தட்டல். நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் போல.

சிவா அகில உலக சூப்பர் ஸ்டார் என்பதால் ஹாலிவுட் படங்களையும் கலாய்த்துள்ளனர்.

DhY7F9ZWsAA5tj1

ஸ்பீட், கேம் ஆப் தோரன்ஸ் போன்ற படங்களையும் விட்டு வைக்கவில்லை.

பாகுபலி, கபாலியின் உல்டா காட்சிகளை ரசிக்கலாம். வேதாளம், விவேகம் காட்சிளுக்கும் பஞ்சமில்லை.

ஆனால் ஓவர் டோஸ் ஒடம்புக்கு ஆகாது என்பது போல் சில நேரங்களில் சலிப்பு தட்டுகிறது.

கலாய்ச்ச்சிட்டே இருந்தா? எப்படியா? என எண்ணத் தோன்றுகிறது.

தேவை இல்லாமல் வரும் பாடல்கள் படத்தின் மைனஸ். சில பாடலை கட் பண்ணிவிட்டு படத்தை ஓட்டியிருக்கலாம். பின்னணி இசை ஓகே.

ஒளிப்பதிவாளர் மற்றும் ஆர்ட் டைரடக்ரை பாராட்டலாம்.

சிஎஸ். அமுதன் கலாய்ப்பதில் சின்சியர் என பட்டம் வாங்கிவிட்டார். ஆனால் சீரியஸ் ஆக ஒரு படம் எடுப்பாரா? என்பதை பார்ப்போம்.

பெரும்பாலும் ஹிட் அடித்த படங்களையே கலாய்த்துள்ளனர். எனவே அந்த படங்களை நீங்கள் பார்த்து இருந்தால் எல்லா காட்சிகளும் புரியும்.

தமிழ்ப்படம் 2.. கலாய்ச்சிட்டாரம்மா (நம்ம ஹீரோஸ் மைண்ட் வாய்ஸ்)

காசு மேலே காசு விமர்சனம்

காசு மேலே காசு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: மயில்சாமி, ஷாரூக், காயத்ரிகோவை சரளா, நளினி, லொள்ளு சபா சாமிநாதன், மதுமிதா, கே.எஸ். பழனி மற்றும் பலர்.
இயக்கம் – கேஎஸ். பழனி
ஒளிப்பதிவு – சுரேஷ் தேவன்
இசை – பாண்டியன்
தயாரிப்பு – ராகவ் மூவி எண்டர்டெய்ன்மெண்ட் P.ஹரிஹரன்
பாடல்கள் – கருப்பையா
பிஆர்ஓ. – ராஜ்குமார்

கதைக்களம்…

மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர் மயில்சாமி. தன் மகன் ஷாரூக்கை பணக்கார பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் நாமும் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என நினைக்கிறார்.

இவரின் மகனுக்கு பெண் கொடுக்க வரும் உறவினர்களான அக்கா நளினியையும், மச்சான் சாமிநாதனையும் இதனாலேயே தவிர்க்கிறார்.

தன் திட்டப்படி ஊரில் மிகப்பெரிய பணக்கார வீட்டை தேர்ந்தெடுக்கிறார்.

அந்த வீட்டில் இருந்து வரும் காயத்ரியை காட்டி அவளை தன் மகனிடம் காதலிக்க சொல்கிறார்.

ஆனால் காயத்ரியோ அந்த வீட்டில் வேலை செய்யும் பெண் என்பது இவர்களுக்கு தெரியாது. மேலும் பிச்சைக்கார தம்பதி பழனி மற்றும் மதுமிதாவின் மகள்தான் அந்த காயத்ரி என்பது கூடுதல் ரகசியம்.

அப்பாவின் ப்ளான் படி ஷாருக்கும் காயத்ரியை காதலிக்கின்றனர்.

கல்யாணம் நடந்ததா-? பிச்சைக்காரன் மகளுக்கு மயில்சாமி மகனை கொடுத்தாரா? ரகசியம் தெரிந்தா?

அதன்பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே இப்படத்தின் கதை.

kasu mela kasu audio launch

கேரக்டர்கள்..

சில படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றிய கே எஸ் பழனி முதல் முறையாக இயக்கியுள்ளார்.

இவரும் மயில்சாமியும் செம போட்டி போட்டு நடித்திருக்கின்றனர்.

படத்தில் இளம் ஜோடிகள் இருந்தாலும் இவர்கள்தான் மெயின் கேரக்டர்கள்.

பழனியின் அதிரடி நடிப்பாலும் வசனங்களாலும் தியேட்டர்களில் சிரிப்பு மழை. ஒரு காமெடி முடியும் முன்னே அடுத்த காமெடி தொடங்கி விடுகிறது.

மயில்சாமி படம் முழுக்க காமெடியால் தெறிக்கவிட்டுள்ளார்.

பழனியின் 2வது மனைவியாக வரும் ஜாங்கிரி மதுமிதாவும் படத்திற்கு கூடுதல் சுவை சேர்த்துள்ளார். பிச்சைக்காரி வேடத்திற்கும் அவர் பேச்சுக்கும் செம பிட்டாகியிருக்கிறார்.

காதலர்களாக ஷாரூக் மற்றும் காயத்ரி. இளமை துள்ளலுடன் கூடிய நடிப்பு.

kasu mela kasu pair

கடத்தல் கும்பலாக வரும் அந்த மூதேவி குழுவினரும் செம சாய்ஸ். தங்கள் பங்களிப்பை சிரிப்பாக செய்துள்ளனர்.

நளினி மற்றும் லொள்ளு சபா சாமிநாதன் சில காட்சிகளிலே வந்தாலும் அதிரடி. காமெடி சரவெடி.

காமெடியை நம்பியே களம் இறங்கியுள்ளனர்.

எனவே படத்தின் ஒளிப்பதிவிலும் பாடல்களிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். அது பெரும் குறையாக உள்ளது.

சின்ன பட்ஜெட் படம் என்றாலும் கொடுத்த காசுக்கு மேல சிறப்பாக செய்துள்ளனர்.

படத்தில் மொத்தமே 20 கேரக்டர்கள்தான். அவர்களை சுற்றியே காட்சிகளும் கட்டிடங்களும் வருவதால் கொஞ்சம் சலிப்பு ஏற்படலாம்.

கோவை சரளா இறுதி காட்சியில் வந்து சிநேகிதியே என பாடி அவர் செய்யும் அமர்க்களம் செம.

படத்தின் இயக்குனர் பழனிக்கு இனி பட வாய்ப்புகள் குவியும். நடிப்புக்கும் சேர்த்து தான் சார். வாழ்த்துக்கள்

காசு மேலே காசு… கொடுத்த காசுக்கு மேலே காமெடி

Kasu mela kasu aka Kaasu Mela Kaasu movie review rating

Mr சந்திரமௌலி விமர்சனம்

Mr சந்திரமௌலி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா காசன்ட்ரா, வரலட்சுமி, சதீஷ், மகேந்திரன், சந்தோஷ், ஸ்டன்ட் சில்வா மற்றும் பலர்.
இயக்கம் – திரு
ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம் நாதன்
இசை – சாம் சி.எஸ்
தயாரிப்பு – தனஞ்செயன்
பிஆர்ஓ. – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

நவரச நாயகன் கார்த்திக் தான் சந்திரமௌலி. அவரது சொந்த மகன் கௌதம் கார்த்திக்கே இதிலும் மகன். மகனின் காதலி ரெஜினா.

கௌதம் கார்த்திக் ஒரு குத்துச்சண்டை வீரர்.

இதனிடையில் பைரவி (வரலட்சுமி) என்ற இளம் பெண் உடன் நட்புக் கொள்கிறார் சந்திரமௌலி. இது கௌதமுக்கு தெரியாது.

ஒரு நாள் திடீரென்று நிகழும் கார் விபத்தில் சந்திரமௌலி கொல்லப்படுகிறார்.

அந்த விபத்தில் கௌதமின் கண் பார்வை பாதியாக பறி போகிறது.

தன் தந்தையை கொன்றவர் யார்? எனபதை தன் பார்வை குறைபாடுடன் கண்டுபிடிப்பது தான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக். பழைய பார்மில் இல்லையென்றாலும் அவரின் வழக்கமான மேனரிசத்தில் குறை வைக்கவில்லை.

பத்மினி கார் மீது காதல், மகன் மீது அன்பு, மருமகள் மீது பாசம், பைரவி மீது நேசம் என அனைத்திலும் கார்த்திக் அவர்கள் கச்சிதம்.

இதுநாள் வரை கௌதம் அவரது படங்களில் ஆக்சன், ரொமான்ஸ் மட்டுமே செய்து வந்தார். ஆனால் இதில் பாசம், அழுகை என வெரைட்டி காட்டியிருக்கிறார்.

தந்தை இறந்த பிறகு அவர் அழுதுக் கொண்டே பேசும் காட்சி கண்ணீரை வரவழைக்கும்.

வரலட்சுமி சில காட்சிகளிலே வந்தாலும் நம்மை ஈர்க்கிறார். இவருக்கும் கார்த்திக்கு உள்ள உறவுதான் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.

அது கள்ளம் இல்லாத உறவாக இருந்தாலும் அப்பா என அழைக்கமாட்டேன் என்கிறார். வயதில் மூத்தவரை பெயர் சொல்லி அழைப்பது நெருடல்தான்.

நடிப்பு, அழகு என ரெஜினா ஸ்கோர் செய்கிறார். அதிலும் ஏது ஏதோ ஆனானே பாடலில் வெர்ஜின் பசங்க சாபத்தை வாங்கி கொள்கிறார் ரெஜினா.

காமெடியுடன் குணச்சித்திர கேரக்டரிலும் சதீஷ் சபாஷ் பெறுவார்.

மகேந்திரன், மைம் கோபி, ஸ்டன்ட் சில்வா, போலீசாக விஜி ஆகியோரின் பாத்திர படைப்பு ரசிக்கும் விதம்.

வித்தியாசமான வில்லனாக சந்தோஷ். தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் ஸ்டைலிஷ் வில்லன் இவர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகளிலும் நாயகிகளின் அழகும் செம.. ஒளிமயமான ஒளிப்பதிவில் ரசிக்க வைக்கிறார்.

ஆக்சன் காட்சிகளில் நாயகன் என்ட்ரீ கொடுக்கும் போது பின்னணி இசையில் சாம் சி.எஸ் பின்னி எடுத்துள்ளார்.
ராஜாதி ராஜா பாடல் ஆட்டம் போட வகை என்றால், இடைவேளைக்கு பின்னர் வரும் தீராதோ வலி சோக பாடல் மனதிற்கு இதம்.

திரைக்கதை பற்றிய அலசல்…

ஜாலியான ஒரு படம், அதில் ஒரு மெசேஸ், ஆக்சன் த்ரில்லர் டைரக்டர் திருவும் தயாரிப்பாளரும் தனஞ்செயனும் என கலந்து கொடுத்துள்ளனர்.

நான் சிகப்பு மனிதனில் ஹீரோவுக்கு ஒரு குறை வைத்திருப்பார். இதிலும் ஒரு குறை வைத்துள்ளார். அது அவரின் பார்முலா? என தெரியவில்லை.

ஒரு கால் டாக்சி அக்கௌண்ட்டில் இருந்து மற்றொரு நிறுவன டிரைவருக்கு பணம் பரிவர்த்தனை நடக்கிறது. இதை கூடவா இவ்வளவு ஓபனாக செய்வார்கள்? அதிலும் இப்போது எல்லாம் ஆதார் கார்டு, பான் கார்டு என எதையும் மறைக்க முடியாது. அதை டைரக்டர் கவனித்திருக்கலாம்.

பாக்சிங் போட ஸ்பான்சர் கிடைத்தவுடன் அன்று மிகப்பெரிய அளவில் பார்ட்டி நடக்கிறது. (ராஜாதி ராஜா பாடல்). ஸ்பான்சருக்கே பணம் இல்லாதவர்களுக்கு பார்ட்டிக்கு ஏது அவ்வளவு பணம்..?

ஒருவேளை அது கனவு பாட்டாக இருந்தால், போட்டோ எடுக்க முடியாது. போட்டோவை காட்டும் ஒரு காட்சி வேற படத்தில் இருக்கிறதே? அது எப்படி?

கால் டாக்ஸி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நடக்கும் போர். அதில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான் என ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் டைரக்டர். அதற்காகவே அவரை பாராட்டலாம்.

மிஸ்டர் சந்திரமௌலி…. சபாஷ் சந்திரமௌலி

செம போத ஆகாதே விமர்சனம்

செம போத ஆகாதே விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: அதர்வா, மிஷ்டி, அனைகா, கருணாகரன், ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, யோகி பாபு, அஸ்வின் ராஜா மற்றும் பலர்.
இயக்கம் – பத்ரி வெங்கடேஷ்,
ஒளிப்பதிவு – கோபி அமர்நாத்
இசை – யுவன் சங்கர் ராஜா
எடிட்டிங் – பிரவீன் கே.எல்.
தயாரிப்பு – அதர்வா
பிஆர்ஓ. : நிகில் முருகன்

கதைக்களம்…

நாயகன் அதர்வாவும், நாயகி மிஷ்டியும் பிரிந்துவிடுகின்றனர். மிஷ்டியை பிரிந்த துக்கத்தில் இருக்கிறார் அதர்வா. தன் நண்பன் அதர்வாவுக்கு ஆறுதல் சொல்ல ஒரு விபச்சாரியை அழைத்து வருகிறார் கருணாகரன்.

அவருடன் அதர்வா இணையும் போது குறுக்கிடுகிறார் பக்கத்து பிளாட் தேவதர்ஷினி.

அதாவது அவருடைய மாமனாருக்கு ஹார்ட் அட்டாக், வரவே அதர்வாவை உதவிக்கு அழைக்கிறார்.

எனவே அந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து விட்டு ஆஸ்பிட்டல் செல்கிறார்.

பின்னர் வீட்டுக்கு திரும்பும் போது அந்த விபச்சாரி பெண் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறார்.

அதன்பின் நடக்கும் விறுவிறுப்பான திருப்பங்களே இந்த படத்தின் மீதிக்கதை

கேரக்டர்கள்…

பானா காத்தாடி படத்திற்கு பிறகு மீண்டும் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடித்துள்ளார் அதர்வா. ஜாலியான இளமையான கேரக்டர் என்பதால் அதர்வா அதகளம் பண்ணியிருக்கிறார்.

அதர்வா கருணாகரன் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. கருணாகரனின் காமெடிக்கு நிறைய கைத்தட்டல்களை கேட்க முடிகிறது.

மிஷ்டிக்கு தமிழில் இது தான் முதல் படம். மாடர்ன் பெண் கேரக்டரில் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

அனைகா சோதியின் கேரக்டர் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினாலும், படத்தில் அதுதான் முக்கிய கேரக்டர்.

இவர்களுடன் ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, யோகி பாபு, அஸ்வின் ராஜா ஆகியோரின் கேரக்டர் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

காமெடி கலந்த த்ரில்லர் பாணியில் படத்தை இயக்கியிருக்கிறார் பத்ரி வெங்கடேஷ். ஆனால் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கலாம். படம் ஏதோ போதையிலே தள்ளாடுவது போல கதையுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கும். அதுவும் ஐட்டக்காரன் பாடல் அதிரடி.

பின்னணி இசையிலும் குறை வைக்கவில்லை யுவன்.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.

மொத்தத்தில் `செம போத ஆகாதே… தெளியாத போதை

Semma Botha Aagathey review and rating

அசுரவதம் விமர்சனம்

அசுரவதம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சசிகுமார், நந்திதா, வசுமித்ரன் மற்றும் பலர்.
இயக்கம் – மருதுபாண்டியன்,
ஒளிப்பதிவு – எஸ்ஆர். கதிர்
இசை – கோவிந்த மேனன்
தயாரிப்பு – லீலா லலித்குமார்
பிஆர்ஓ. : சுரேஷ் சந்திரா ரேகா

கதைக்களம்…

வில்லன் வசுமித்ரன் ஒரு மளிகை கடை வைத்திருக்கிறார். இவருக்கு அடிக்கடி ஒரு நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்துக் கொண்டே இருக்கிறது. அதுவே அவருக்கு செம எரிச்சலை உண்டாக்குகிறது.

அதன் அடுத்த கட்டமாக பேச ஆரம்பிக்கிறது அந்த குரல். அவர்தான் சசிகுமார். உன்னை கொல்லப் போகிறேன் என மிரட்டுகிறார்.

இதன் பின்னரும் எப்போதும் சாவு பயத்தை காட்டுவது போல ஏதாவது ஒன்றை செய்துக் கொண்டே இருக்கிறார். அடிக்கடி பின் தொடர்கிறார்.

அவன் யார்? எதற்காக கொல்ல வேண்டும்? என்பது புரியாமலே தவிக்கிறார்.

இதனையடுத்து ஆட்களை செட் செய்ய, அவர்களையும் அடித்து துவைக்கிறார் சசி. அதன்பின்னர் போலீஸ் உதவியை நாட ரவுண்ட் கட்ட ஆரம்பிக்கின்றனர்.

அதன்பின்னர் என்ன நடந்தது..? போலீஸ் வலையில் சிக்கினாரா.? வசுமித்ரனை கொன்றாரா? என்பதுதான் ‘அசுரவதம்’ பட மீதிக்கதை.

கேரக்டர்கள்…

வழக்கமான சசிகுமார் படம் என்றால் குடும்பம், நட்பு, சென்டிமெண்ட், ஆக்சன் என அனைத்தும் கலந்திருக்கும். மேலும் நிறைய காட்சிகளில் சசிகுமார் அடிக்கடி அட்வைஸ் செய்துக் கொண்டு பேசிக் கொண்டே இருப்பார்.

ஆனால் இதில் ஆக்சனை தவிர மற்றவை மிஸ்ஸிங். சீரியசனா மனிதராக சிறப்பான ஆக்சனை வெளிப்படுத்தியுள்ளார். குடும்பம் இருந்தாலும் அதில் அலட்டிக் கொள்ளாத நடிப்பு.

ஒரு முறை போனில் பேசிக்கொண்டே சசிகுமார் கதறும் காட்சி சபாஷ் பெறுகிறது. மற்ற இயக்குனர்கள் அந்த காட்சியை வழக்கமாக எடுத்திருப்பார்கள். அப்போது வன்முறை இல்லாமல் அதை அருமையாக காட்டியுள்ளனர். (படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும்)

வசுமித்ரனுக்கு சசிகுமார் கொடுக்கும் டார்ச்சர்கள் செம. அவர் எதற்காக டார்ச்சர் கொடுத்தார் என்பது தெரிய வரும்போது அவனை எல்லாம் சும்மாவிட கூடாது என அந்நியன் போல கோபம் வருவது நிச்சயம்.

வசுமித்ரனால் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஒரே காட்சியின் மூலம், சொல்லியிருக்கும் விதம் சூப்பர்.

இவர்களைத் தவிர படத்தில் நந்திதா, அவரது மகள், போலீஸ்கார் என பலர் இருந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

சசிகுமாரின் மகளாக வரும் அந்த சிறுமி நம்மை ஈர்க்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும், கோவிந்த் மேனனின் இசையும் படத்திற்கு பெரிய பலம். அந்த லாட்ஜ் பைட் சீன் அதனை தொடர்ந்து வரும் வயல்வெளி காட்சிகள் மிரட்டுகிறது.

க்ளைமாக்ஸ் பைட்டில் பின்னணி இசையே நம்மை பயமுறுத்தும். சூப்பர் ஜி.

பைட் மாஸ்டர் தீலிப் சுப்பராயன் அனல் பறக்க செய்திருக்கிறார்.

இரண்டாம் பாதியில் கதையை சொன்ன டைரக்டர் முதல்பாதியை கொஞ்சம் கவனித்திருக்கலாம். பயம், டார்ச்சர், பயங்கர கத்தல் என அப்படியே கொண்டு செல்வது பயங்கர போரடிக்கிறது.

ஆக்சன் ரசிகர்களுக்கு படத்தை பிடிக்கும்படி செய்துவிட்டார். ஆனால் க்ளைமாக்சில் ஒரு மெசேஜ் சொல்லி தன்னை காப்பாற்றிவிட்டார்.

அசுரவதம்… அலட்டிக் கொள்ளாத அசுரன்

Asuravadham movie review rating

More Articles
Follows