தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்..
கல்கி எழுதிய வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை 2 பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம்.
முதல் பாகம் இன்று செப்டம்பர் 30-ம்தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி உள்ளது.
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு: ரவிவர்மன்.
எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்.
————————————
கேரக்டர்கள் அறிமுகம்…
ஆதித்ய கரிகாலன் – விக்ரம்
வந்தியத் தேவன் – கார்த்தி
ராஜ ராஜ சோழன் – ஜெயம் ரவி
நந்தினி – ஐஸ்வர்யா ராய்
குந்தவை – த்ரிஷா
பெரிய பழுவேட்டரையர் – சரத்குமார்
சின்ன பழுவேட்டரையர் – பார்த்திபன்
ஆழ்வார்க்கடியான் நம்பி – ஜெயராம்
ரவிதாசன் – கிஷோர்
பூங்குழலி – ஐஷ்வர்ய லெட்சுமி
பார்த்திபேந்திரன் பல்லவன் – விக்ரம் பிரபு
பெரிய வேளார் – பிரபு
மலையமான் – லால்
சுந்தர சோழர் – பிரகாஷ் ராஜ்
மதுராந்தகன் – ரஹ்மான்
செம்பியன் மாதேவி – ஜெயசித்ரா
வானதி – சோபியா துலிபலா
(பாகுபலியோடு இப்படத்தை கம்பேர் செய்ய வேண்டாம்)
கதைக்களம்…
கமல்ஹாசன் குரலில் படம் தொடங்குகிறது.
சோழர் வம்சத்தை காக்கவும் எதிரிகளை பழி தீர்க்கவும் சியான் விக்ரம் & விக்ரம் பிரபு உடன் இணைந்து ஒரு போரில் எதிரி நாடுகளை கைப்பற்றி விடுகிறார்.
ராஷ்டிர நாட்டில் போரிட்டு வென்று தன்னுடைய சோழ நாட்டின் கொடியை நாட்டுகிறார்.
அதன் பின் விக்ரம் சொல்படி.. முக்கிய ஓலைகளை எடுத்துக் கொண்டு தஞ்சை புறப்படுகிறார் வந்தியத்தேவன்.
(பெரிய பழுவேட்டரையர், இளம் பெண்ணான நந்தினியை (ஐஸ்வர்யா ராயை) திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்.)
சுந்தரச் சோழரின் மகனான கரிகாலனும், பொன்னியின் செல்வனும் (ரவி) ராஜ பட்டத்தை ரகுமான் பெற கூடாது என்பதில் குறியாக உள்ளனர்.
இதனிடையில் மதுராந்தக சோழரை (ரகுமானை) அரசனாக்க திட்டம் தீட்டுகிறார்கள் பெரிய பழுவேட்டரையர் (சரத்) மற்றும் சின்ன பழுவேட்டரையர் (பார்த்திபன்) .
இதனை மறைந்து நின்று பார்த்த வந்திய தேவன், குந்தவையை சந்தித்து இந்த சதியை தெரிவிக்கிறார்.
இதனிடையில் ஒருபுறம் நந்தினி (ஐஸ்வர்யா ராய்) தன்னுடைய கணவன் வீர பாண்டியனை கொன்ற ஆதித்த கரிகாலனை கொல்லத் துடிக்கிறார்.
மற்றொரு புறம் அருண்மொழி வர்மனை (ரவியை) கொலை செய்ய பாண்டியர்களை அனுப்புகிறார் நந்தினி.
அதே நேரம் குந்தவை தன்னுடைய சகோதரன் அருண் மொழி வர்மனை தன்னிடம் அழைத்து வருமாறு வந்திய தேவனை இலங்கைக்கு அனுப்புகிறார்.
இவையில்லாமல் கரிகாலனும் பார்த்திபனை விட்டு அருள் மொழி வர்மனுக்கு அழைப்பு விடுகிறார்.
தன்னுடைய மகன் பத்திரமாக வர வேண்டும் என்கிற நோக்கத்தில் சுந்தர சோழன் (பிரகாஷ் ராஜ்) மகனை கொண்டு வர படையை அனுப்புகிறார்.
எனவே யாருடன் பொன்னியின் செல்வன் செல்வார்.? இப்படியாக கதை தொடர்கிறது..
இதற்கு மேல் சொன்னால் படத்தின் சுவாரஸ்யம் குறைந்துவிடும்.. எனவே இனி கேரக்டர்கள் பற்றி பார்ப்போம்..
கேரக்டர்கள்..
விக்ரம் வீரம் என்றால் கார்த்தி கலகலப்பு.. இருவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.
அது போல ஐஸ்வர்யா ராய் த்ரிஷா இருவரும் பேரழகில் உச்சம்.
இவர்களை பார்த்து மயங்காதவர்கள் இல்லை என்னும் அளவிற்கு அப்படி ஒரு அழகு. இவர்கள் சந்தித்து பேசும் வசனங்கள் பெண்களுக்கே உரித்தான அழகு. ஆண்களின் பலவீனம் கூட.
ஐஸ்வர்யா மற்றும் த்ரிஷாவிடம் கார்த்தி பேசும் வசனங்கள் சூப்பர். இருவரிடமும் கார்த்தி பேசும் வசனங்கள் (ஜொள்ளு) அழகான வழிதல்.. பெண்களை வசீகரிக்கும் வர்ணனைகள்..
ஜெயம் ரவி வந்தபின்னர் படம் மீதான எதிர்ப்பார்ப்பு வேற லெவலில் இருக்கும். தன் நடிப்பின் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்.
டெக்னீஷியன்கள்…
ரஹ்மானின் பாடல்கள்..பின்னணி இசை. தோட்டா தரணியின் பிரமாண்ட செட், என அனைத்து படத்திற்கு யானை பலம்..
பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட அனைத்து கலைஞர்களும் சிறப்பு.
தன்னுடைய நேர்த்தியான இயக்கத்தால் ‘பொன்னியின் செல்வன்: படத்தை தமிழர்கள் பெருமை படும் வகையில் கொடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. ஆனால் சரித்திரக்கதை என்றால் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் இன்றைய குழந்தைகளும் ரசிக்கும்படி சொல்லியிருப்பது மணிரத்னம் டச்.
படத்தின் கலை ஆர்ட் ஒர்க் அந்த காலக்கட்டத்திற்கே நம்மை பயணிக்க வைக்கிறது.
ஆக இந்த பொன்னியின் செல்வன்… தமிழர்களின் பெருமை